இங்கே ஒவ்வொரு ஊடகத்திலும் எது தலைப்புச் செய்தி ஆகிறது அல்லது ஆக்கப்படுகிறது என்பதைக் கொஞ்சம் கவனித்தாலே அரசியலை மட்டுமல்ல, செய்திகளின் அரசியலையும் சேர்த்தே சரியாக எடை போட முடியும், சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்பது என்னுடைய அனுபவம்.
செய்திகளோ, செய்திகளின் அரசியலோ கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைகிற தூரிகைக் கனவு, கற்பனை மாதிரி இல்லை என்பதை நிச்சயமாகச் சொல்ல முடிகிற அதே நேரம் செய்திக்கும் தலைப்புச் செய்திக்கும் என்ன வித்தியாசம் என்று கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டாமா?
Great comment bro..
இந்த ட்வீட்டர் செய்தியையே எடுத்துக் கொள்ளுங்கள்! இதை ட்வீட் செய்த மிலிந்த் தியோரா, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன். 2006 இலிருந்து 2011 வரை இருமுறை மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக இருந்தவர். இந்திரா குடும்ப விசுவாசி! 2014 இல் இறந்த பிறகு, மகன் மிலிந்த் தியோரா மும்பை காங்கிரஸ் தலைவராக சமீப காலம் வரை இருந்தார். எதனால் இவருடைய இந்த ட்வீட் ஒரு தலைப்புச் செய்தியாகி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்தச் செய்திக்கு எதிர்வினையாக மறைந்த ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் உட்படப் பலரும் என்னென்ன மாதிரி விமரிசித்திருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கும்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
மீண்டும் சந்திப்போம்.


