Showing posts with label மாற்று அரசியல். Show all posts
Showing posts with label மாற்று அரசியல். Show all posts

Wednesday, February 24, 2021

#பழகருப்பையா அரசியலில் ஜீரோதான்! #பழையவாசனை மீதமிருக்கிறதோ?

சீட்டாட்டத்தில் வேண்டுமானால் ஜோக்கருக்கு எங்கே இருந்தாலும் மரியாதை இருக்கலாம்! ஆனால் அரசியல் ஜோக்கர்களுக்கு கொஞ்சமாவது மரியாதை இருக்குமா என்பது சந்தேகமே! ஸ்தாபன காங்கிரசில் இருந்தவரை மரியாதையோடு இருந்தவர் பழ கருப்பையா. அவர்  போதாத காலம் கழகங்களுடைய அரசியலுக்குள் போனார். ஒரு கழகத்துடைய அரசியல் ஒத்துவராது என்று வெளியேறி இன்னொரு கழகத்துக்குப் போய்க் கொஞ்ச காலத்துக்குப் பிறகு முந்தைய கழகத்துக்கே போய், இன்று எங்கேபோவதென்று புரியாமல் திகைத்து நிற்கிறார். ஆனாலும் ஸ்தாபன காங்கிரசில் இருந்த பழைய நினைப்பு மனிதருக்குள் அவ்வப்போது வெளிப்படுவதைப் பார்க்கையில், பெருங்காயம் இருந்த டப்பா தான்! இப்போது காலி என்றாலும், பழைய வாசனை இருக்கத்தான் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வேதனையாக இருக்கிறது.



கமல் காசர் நடத்தும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கடந்த 11 அம தேதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பழ. கருப்பையா பேச்சை 10 நிமிடம், 14 நிமிடத் துண்டுகளாக முன்பே பார்த்திருந்தாலும் முழுதாயக கிடைக்கவில்லை இந்த 26 நிமிட வீடியோவைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டால், அவர் சொன்னதில் இருந்த ஆதங்கம், ஏக்கம் புரியும். சேரக்கூடாத கழகங்களுடன் சேர்ந்து, நம்பகத்தன்மை அறவே இழந்து போனாலும், பழைய ஸ்தாபன காங்கிரஸ் வாசனை இன்னமும் இருக்கத்தான் செய்கிறதோ?

பழ. கருப்பையா புகழ் பாட இந்த வீடியோவை இங்கே எடுத்துக்கொள்ளவில்லை.முந்தைய பதிவுகளில் நான்  வலியுறுத்திவரும் சில அடிப்படையான கேள்விகளை அவரும் எழுப்புகிறார். இரண்டு கழகங்களும் மிகவும் மோசமானவை என்று நன்றாகத்தெரிந்த பிறகும் கூட இதற்கு மாற்று அதுதான் என்று ஏதோ ஒரு கழகம் நம் தலையை மொட்டையடிக்க ஏன் விட்டுவிடுகிறோம்?  


இந்த 9 நிமிட வீடியோவின் முதல் 1.20 முதல் 1..50 நிமிடத்தில் கமல் காசர் கூட்டணிக்காகத்  தங்களிடம் தூது வந்ததைப்பற்றிச் சொல்கிறார். ஆனால் நேரடியாகத் தன்னிடம் பேசியிருக்க வேண்டும் என்று சொல்வதையும் கொஞ்சம் கவனியுங்கள். மூன்றாவது அணிக்கான வாய்ப்பு குறித்தும் பேசியிருக்கிறார்.

மேலும் மேலும் என் தரப்பு வாதங்களை வைப்பதற்குப் பதிலாக, பழ கருப்பையாவின் ஆதங்கம், இரண்டு கழகங்களும் வேண்டாம் என்று சொல்கிற கமல் காசர். இவை மீதான உங்களுடைய புரிதல், கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.                   

மீண்டும் சந்திப்போம்   

Sunday, March 3, 2019

சண்டே போஸ்ட்! இன்னொரு மூணு!

கவனிப்பதற்கு நம்மைச் சுற்றி நிறைய விஷயங்கள், தகவல்கள் புதிது புதிதாகச் சேர்ந்து வருவதை, எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? மாற்றங்கள் வேண்டுமென்கிற குரல்கள் ஒலிப்பது வாடிக்கைதான் என்றாலும், மாற்றத்துக்குத் தயார் செய்கிற தலைமை இல்லாமலும், மாறுவதற்குத் தயாராக இல்லாத ஜனங்களுமாக இருப்பதில்  மந்தைத்தனத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
கமல் காசர் கட்சியின் செயற்குழு உறுப்பினர், தொழிலதிபர்   CK குமரவேல், இங்கே கடலூரில் போட்டியிடுகிற ஆசையோடு இருப்பதொன்றும் ஆச்சரியம் தருகிற செய்தியல்ல. இங்கே மதுரையில் அங்கிங்கெனாதபடி ஆட்டோ சங்கம் முதல் ரஜினி முதலான நடிகர்கள் ரசிகர் மன்றம், லோக்கல் மாரியம்மன் கோவில்          நிர்வாகம் வரை எல்லா இடங்களிலும் கழகக் கண்மணிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரம், விஜயகாந்த் கட்சியை ஆரம்பித்தார்! கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் லோகல் திமுக  உபிக்களின் உறவுகள் தேதிமுகவுக்குப் பாய்ந்தோடினர்! அதில் ஒரு நபர் என்னிடம் சொன்னது, திமுகவிலேயே இருந்தால் ஜாதி/சொந்தக்கார வட்ட பிரதிநிதிகளுக்கு பின்னணி வாசிப்பதைத் தவிர மேலே வரவே முடியாது. புதுக்கட்சி  என்றால் விறுவிறுவென மேலே வந்துவிடலாம்! சொன்னவர் ஒரு ஆட்டோக்காரர்! சொன்ன மாதிரியே மாநகராட்சி தேர்தலில் மனைவிக்கு வேட்பாளராக இடமும் பிடித்து விட்டார்!  குமரவேல் மாதிரி பெரிய கோடீஸ்வர தொழிலதிபர்கள் அப்படியெல்லாம் இருப்பார்களா? மாட்டாரென்று ஒரு மய்ய உறுப்பினர் என்னிடம் கொஞ்சம் ஆவேசமாக மறுத்துப் பேசியதையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன்! 

மாற்று அரசியல்! இந்த வார்த்தையை காங்கிரஸ்காரன் சோஷலிசம் பேசிய கதையைப் போலவே இங்கு தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை அந்த இளைஞனிடம் சொல்வதற்கு அவகாசமே கொடுக்கவில்லை! கமல் காசர் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கிறார் என்று நிஜமாகவே நம்புகிறவர்கள் இங்கே வந்து காரணகாரியத்தோடு சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்!  

பாட்டாளி மக்கள் கட்சியைத் திருமாவளவன் தொடர்ந்து காய்ச்சி எடுப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இதைத் தவிர விசிகவுக்கு வேறு அஜெண்டாவே இல்லையா? அரை சதவீதம், முக்கால் சதவீதம் வாக்குவங்கிக்கே இத்தனை அலட்டலா?    

2016 இல் அன்புமணி ராமதாஸ் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று ஒரு வித்தியாசமான அரசியல் அணுகுமுறையோடு எல்லா சமூகத்தினருக்கும் இடம் கொடுத்து தமிழகமெங்கும் ஜனங்களை அணுகியதைப் பொய் என்று தள்ளிவிட முடியாது!  கூட்டம் சேர்ந்தது. ஆனால் அது வாக்குகளாகவோ, வன்னியர் பெல்ட்டைத் தாண்டி கட்சி வளர்ந்ததாகவோ ஆகவில்லை. அதில் ஏற்பட்ட ஏமாற்றம் அவர்களைப் பழையபடி வன்னியர் கட்சியாகவே ஆக்கிவிட்டது என்பதில் ஒரு நல்ல தலைமை வெளிப்படவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு ஜனங்களும் அன்புமணியின் மாற்று அரசியலுக்கு பாராமுகமாக அல்லது நம்பிக்கையில்லாமல் இருந்ததும்!

மறுபடியும் கமல் காசர் முன்னெடுப்பது என்னமாதிரி அரசியல் என்ற கேள்வியும், கூடவே  மாற்று என்பதை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுகின்றன.  

குஷ்பூ பேசுகிற சிறுபிள்ளைத்தனமான அரசியலுக்கும் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராவுல் பாபா 15 வருடமாக அரசியலில் குப்பை கொட்டிப் பேசிக்கொண்டிருக்கிற சிறுபிள்ளைத்தனத்துக்கும் வித்தியாசம் எதுவுமில்லை. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேசத்தை, தலைமையேற்று வழிநடத்த பலமுறை வாய்ப்பளித்தாகிவிட்டது. இன்னும் ஒரு வாய்ப்பு கேட்பதோ கொடுப்பதோ எந்தவகையில் சரியாக இருக்கும்? சொல்லுங்களேன்!       

கொள்கை முடிவுகளை எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காத, வலிமையான மத்திய அரசை நிறுவுவதில், வாய்ப்பிருந்துமே கூடக் கோட்டை விட்டவர், இப்போதைய மாநிலக்கட்சிகளின் கூக்குரல்களுக்குக் காரணமாக இருந்தவர் தாத்தன் நேரு என்பதைக் கசப்போடு நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது!


1971 போரில் கிடைத்த வாய்ப்பைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒன்றுக்கு இரண்டாக பாகிஸ்தான் தலைவலியை நிரந்தரம் தானோ என்ற அளவுக்கு வளர்த்துவிட்டவர் இந்திரா. 

வாஜ்பாய் கூடக்  கிடைத்த வாய்ப்பை, ஓரளவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. 

இந்தப் பின்னணியில், நரேந்திரமோடியின் முதல் ஐந்தாண்டுகளை எடைபோட வேண்டியிருக்கிறது. ஆனால் மோடிக்கெதிரான கூக்குரல்களில் எதை எடைபோட்டு, எது முக்கியமானது என்று சொல்ல முடிகிறது?

நேரு, இந்திரா, ராஜீவ் மூவருக்கும் மெஜாரிடியுடன் வலுவான மத்திய அரசை நிர்வகிக்கக்   கூடிய வாய்ப்பும் கிடைத்தது. என்ன நடந்தது? தெளிவான பார்வை, இலக்கு எதுவுமில்லாமல் தாங்களும் கெட்டு, தேசத்தையும் பாழடித்தார்கள். 2004 முதல் 2014 வரை Defacto பிரதமராகப் பின்னிருந்து இயக்கிய சோனியா அண்ட் கோ பத்தாண்டுகளில் சாதித்தது வரிசையாக வெடித்துக் கிளம்பிய ஊழல்கள் மட்டுமே!

அரசியல் மாற்று, மாற்று அரசியல் எதுவானாலும் காங்கிரஸ் கட்சியையும்  அதன் கூட்டாளிகளையும் முழுமையாக  நிராகரிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது!

மாற்றத்துக்கான முதல்படி இதுவே!   

     

Sunday, February 24, 2019

அரசியல் களம்! கூட்டணி பாவமா? பரிதாபமா?

தமிழக அரசியல்களம் முன்னெப்போதும் இதுமாதிரிப் பரிதாபங்களாக அங்கங்கே ரீல் அறுந்துபோய்க் கிடந்ததில்லை! அலுமினிய குவளையைப் பார்த்து தகர டபபா சத்தமாக இளிக்கிற மாதிரி, இங்கே ஒவ்வொரு கூட்டணியும் கேலிக்கூத்தாக்கப் படுவதில், சமூக ஊடகங்கள், குறிப்பாக யூட்யூப் சேனல்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சொல்லிவைத்த மாதிரி இசுடாலின் ஆரம்பித்து வைத்த சூடு சொரணை இருக்கா முதற்கொண்டு கோபி பரிதாபங்கள் வரை! 


கூட்டணி பாவமா? பரிதாபமா? இந்தமாதிரி நக்கல் வீடியோக்கள், என்னமாதிரியான வாக்காளர்கள் மீது என்னமாதிரி தாக்கத்தை ஏற்படுத்தி விடுமென்று நினைத்துச் செய்கிறார்கள்? 200 ரூபாய் திமுக மாதிரி எங்களுக்கு வசைபாடத்தான் தெரியும்! விளைவு என்ன என்று கேட்டால் என்ன தெரியும் என்றா?

தேதிமுக வட்டாரம் கொஞ்சம் தெம்பாக இருக்கிற மாதிரித்தான் இப்போதுவரையிலான நிலவரங்கள் சொல்கின்றன. விஜய் காந்த் மகன் நன்றாகவே பேசக் கற்றுக் கொண்டுவிட்டார்! அதுமட்டும் போதுமா?
  
ஆக, தேதிமுக வில்  பிரேமலதா, விஜய் பிரபாகரன் என இரண்டு ஸ்டார் பேச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிற மாதிரி ஒவ்வொரு தொகுதியிலும் பழைய வலிமையோடு செயல்படுகிற தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டுமோ?

கிழக்கு பத்ரி ஏதோ ஒரு தொலைக்காட்சிவிவாதத்தில் பேசியதன் மீது சிலரால் தடித்த வார்த்தைகளில் விமரிசனம் செய்யப்பட்ட விஷயம் கொஞ்சம் தாமதமாகத் தான் தெரியவந்தது. இன்று தான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். விஜய் காந்தின் முக்கியத்துவத்தை  திமுகவும், அதிமுகவும் எந்த அளவில் மதிப்பிட்டிருக்கின்றன என்று பத்ரி சொல்வது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. அமமுக தினகரன், ம நீ ம கமல் காசர் இருவருடைய nuisance value குறித்துச் சொல்வதும்! 

    
தப்பும் தவறுமாகக் கணிப்பது, 2016 இல் பேசியதை அப்படியே உல்டா அடித்துப் பேசுவது, ஒன்றிரண்டு சீட்டுக்காக ஏதோ ஒரு கழகத்திடம் மண்டியிடுவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோகம் என்று அருணன் நினைக்கிறாரோ? பிட்டுப்பார்த்தால் உள்ளே அத்தனையும் சொத்தை என்றிருக்கிற அரசியல் சூழலில், கம்யூனிஸ்டுகளுடைய நிலைபாடு  என்ன பெரிய வித்தியாசமாக இருக்கிறது? அரசியலில் கிடைத்த வாய்ப்பைக் கோட்டை விட்டவர்கள் பட்டியலில் முதல் இடம் இந்திய கம்யூனிஸ்டுகளுக்குத் தான் என்பது அவர்களைத் தவிர எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது என்பது கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபம்!

பேச்சில் மட்டுமே இடதுகளாகவும், சமூக நீதிக் காவலர்களாகவும்  இருக்கும் விசிக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட   உதிரிகளைப் புறக்கணித்தால் மட்டுமே இவர்களுக்கு புத்தி வருமோ? 

புத்தி புகட்டுவதற்கான வாய்ப்பு விரைவிலேயே தேர்தல் வடிவத்தில் வருகிறது!  

  

Thursday, February 14, 2019

அரசியல் களம்! மாற்று அரசியல் என்றால் என்ன?

மாற்று அரசியல் என்ன? இடதுசாரிகளை நம்பலாமா? இதைத்தான் முந்தைய பதிவின் தலைப்பாக வைத்திருக்க வேண்டும்! மாற்று அரசியல்! இடதுசாரிகளை நம்பலாமா? என்று கேள்வியின் முதல்பகுதியை விட்டுவிட்டு நேரே இடதுசாரிகளிடம் போய்விட்டோமா?

பரவாயில்லை! மாற்று அரசியலை இடதுசாரிகள் தான் முன்னெடுக்க முடியுமென்று,2014 ஆகஸ்டிலேயே பிரகாஷ் காரத் பேட்டி கொடுத்தது இங்கே    இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போனால் 1964 முதலே அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட நீங்கள் பார்க்க முடியும்! அரசியல் மாற்று! மாற்று அரசியல்! என்று வார்த்தைகளை மாற்றிப்போட்டுப்  பார்த்தால் இரண்டும் ஒன்றல்ல என்பதுமே கூட மெல்ல மெல்லப் புரியும். Some basic research and investigation by us in India Against Corruption earlier this year revealed that at least 15 senior ministers of the Union cabinet, including the prime minister, Pranab Mukherjee and P. Chidambaram had serious charges of corruption or worse pending against them. This malaise is representative of the entire political class என்று சஞ்சய்ராவத் 2012 இல் எழுதியதுமே கூட வெறும் வார்த்தைச் சிலம்பம்தான்! 
வாய்ச் சிலம்பத்திலேயே சோஷலிசம், செகுலரிஸம் இன்னபிற புரட்சிகளையும் சாதித்து விட்டதாக நம்ப வைப்பதில் இந்திரா காங்கிரசாக இருந்து இன்றைக்கு சோனியா ராகுல் பிரியங்கா என்று மட்டுமே ஆகி  முட்டுச் சந்துக்கு வந்து நிற்கும் காங்கிரஸ் ஓரளவுக்கு ஜெயித்து இன்றைக்கு அனைத்தையும் இழந்து நிற்கிற பரிதாப முதலியார்  கதையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்க்கலாம்.சுருக்கமாக Pseudo Left என்கிற அசிங்கமான நகலெடுக்கிற வேலையை முதலில் ஆரம்பித்தது காங்கிரஸ்தான்! இன்று மற்றவர்கள் அந்த வேலையில்  கைதேர்ந்தவர்களாகி காங்கிரசை ஓரங்கட்டி வைத்து விட்டார்கள்! 
இந்த வீடியோ சொல்வது உண்மைதானா? இதற்கு விடை இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடக் கூடியதுதான்! ஆனால் மார்க்சீயம், அம்பேத்கரியம், ஈவெராஈயம் எல்லாம் கலந்துகட்டி, தன்னையும் ஒரு மாற்றாகக் காட்டிக் கொள்கிற பேச்சு சாமர்த்தியம் விசிக வின் திருமாவளவனுக்கு கைவந்த கலையாகி விட்டது.
இருமுனைப்போட்டியா? மும்முனைப் போட்டியா? நான்கு முனைப்போட்டியா என்றே தெளிவாகாமல் இங்கே தேர்தல் களத்தை ஊடகங்கள் வீணாகக் குழப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் தந்தி டிவியின் அசைன்மெண்டாக இதுதான் இருக்கும் போல!
தேதிமுக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் இங்கே பிளந்து கட்டுகிறார்!

ஆனாலும் தனக்கு கிடைத்த                        நல்ல வாய்ப்பையும் வாக்கு வங்கியையும் கணிசமாக இழந்து நிற்பது என்னவோ மறுக்கமுடியாத கள யதார்த்தம்!

இவர்களில் எவராவது நிஜமான மாற்று அரசியலை முன்னெடுத்துப் பேசுகிறார்களா?இப்போதிருக்கும் அரசியலுக்கு சரியான மாற்று எது என்பது தெரிந்து தான் பேசுகிறார்களா?  

அந்த வகையில் ஒரு மாற்று அரசியலை முன்வைத்துக் களம் கண்டவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டும் தான்! 1964 இல் கட்சி உடைவதற்கு முன்னாலேயே, ஒருபகுதி மாற்றங்களுக்காக உழைப்பதை விட்டுவிட்டு அரசோடு இணக்கமாகப் போய்விட்டார்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாக அறியப் படுகிற CPIM, தன்னுடைய கொள்கை அறிக்கையையும் செயல் அறிக்கையையும் தெளிவாக அறிவிக்கவும் செய்தார்கள். அவர்களே கூட இங்கே ஒரு புரட்சிகர அரசே அமைந்தாலும் சோஷலிஸப் புரட்சியை சாதிக்க முடியாது, இடைக்கால ஏற்பாடாக மக்கள் ஜனநாயகப் புரட்சி நடந்தேறி, அதுநிலைத்த பிறகு தான் சோஷலிசப் புரட்சி என்பது சாத்தியம் என்று தெளிவாக வரையறுத்தார்கள். இங்கே பார்க்கவும் 

ஆனால் இந்திரா அரசியல் சாசன முகவுரையில் 42வது திருத்தம் கொண்டுவந்து "sovereign democratic republic" என்றிருந்ததை "sovereign, socialistsecular democratic republic" என்று மாற்றியவுடனேயே நாடு ஒரு சோஷலிச, மதச்சார்பற்ற ஜனநாயகமாக மாறிவிட்டது என்று கதைத்தால் நானும் ஒரு Pseudo Socialist என்பதற்கு மேல் வேறென்ன ஆகிவிட முடியுமாம்?

விடை தெரிந்தால் சொல்லுங்கள்! மேலும் கேள்விகள் கேட்போம்!   
  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)