சென்னை புத்தகக் கண்காட்சியில் ரூ.21 கோடிக்கு புத்தகங்கள் விற்றுச் சாதனை; ஜனவரி 4-ம் தேதி தொட!ங்கிய கண்காட்சியில் 17 நாட்களில் 75 லட்சம் புத்தகங்கள் விற்பனை #chennaibookfair2018
பார்த்தது, கேட்டது, படித்தது! எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக!
Showing posts with label பதிப்பகங்கள். Show all posts
Showing posts with label பதிப்பகங்கள். Show all posts
Sunday, January 20, 2019
தமிழ்ப் பதிப்புத்துறையினர் மாறுவார்களா?
Tuesday, July 13, 2010
தமிழ்ப்பதிப்புத் துறைக்கு மதிப்புக் கிட்டுமா?
மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் இன்றைக்கு ஒரு சுவையான விவாத இழையைப் படித்தேன். தினமணி நாளிதழில் திரு எஸ் ரவீந்திரன் எழுதிய கட்டுரையைத் துவக்கமாக வைத்து தமிழ்ப் பதிப்புத் துறைக்கு மதிப்புக் கிட்டுமா என்ற ஒரு விவாதம் தொடங்கியிருக்கிறது. வழக்கம் போலவே, கொஞ்சம் கருத்து, நிறையக் கும்மி என்று ஆரம்பித்து, வேறு ஒரு இழையில் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் அங்கே ஓடிவிடுவது தான் நடக்கும் என்பது தெரிந்திருந்தாலுமே, வலைக் குழுமங்களில் இந்த விவாத இழைகள், வலைப்பதிவுகளில் நடப்பதை விடப் பயனுள்ளதாகப் பல தருணங்களிலும் பார்த்திருக்கிறேன்.
இந்த இழையில் விவாதிக்கப் பட்ட விஷயங்களைக் கொஞ்சம் படித்து விடுங்கள்! ஏனென்றால், இந்தப் பதிவு, அந்த இழையில் பேசப்பட்டதை ஒட்டியே அதையும் தாண்டிய கருத்தோட்டத்தைச் சொல்ல முனைகிறது.
"""உண்மையில் பல பதிப்பகங்களின் புலம்பலைக் கேட்பார் யாருமில்லை ஏனென்றால், "உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது", என்ற பழமொழிக்கேற்ப பதிப்பகங்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது.
அரசு நூலகங்களுக்கு நூல்களை அனுப்ப வேண்டும் என்றால் கையில் பணம் இருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும் எக்கச்சக்கமான விதி முறைகள் வேறு. ஒரு வழியாகப் புத்தகங்களை அவர்கள் கேட்கும் நிபந்தனைகளின்படி அச்சிட்டு அனுப்பினாலும் நூலுக்கான தொகை சில்லறையாக வந்து சேர ஓராண்டு ஆகிறது.
இதில் வேதனை என்னவென்றால் ஒரு நூலின் விலை ரூ. 40 என்றால் நூலகத் துறை நிர்ணயிக்கும் விலை ரூ. 20 அல்லது ரூ. 25 ஆகத்தான் இருக்கும். 160 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை சுமார் ஆயிரம் பிரதிகள் அச்சிடுவதற்கு ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் செலவழிக்க வேண்டும்.
ஆனால், நமக்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு தெரியுமா?
ரூ. 20 ஆயிரம் மட்டுமே!
மேலும், நூல்களை 30 மாவட்ட மைய நூலகங்களுக்கு அனுப்ப ஆகும் பார்சல் செலவு, பதிவஞ்சல் செலவு மற்றும் இதர செலவுகளைப் பதிப்பாளர்கள் செலவழிக்க வேண்டியுள்ளது.
இந்தத் தொகையை வைத்து பதிப்பகங்கள் எப்படி நடத்த முடியும்?"
இப்படிப் பதிப்பகங்களின் "பரிதாபமான" நிலையை தினமணி கட்டுரை நெஞ்சுருக விவரிக்கிறது. அகிலன், நா.பார்த்தசாரதி உட்பட பல எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் எழுத்தாளர்களுக்கு ராயல்டி தொகையைக் கொடுப்பதில் செய்யும் தகிடுதத்தங்களை, வெளிப்படையாகவே தங்கள் குமுறலைத் தங்கள் கதைகளிலேயே கொட்டியிருக்கிறார்கள். சமீபத்தில் சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவருமே கூட தங்கள் தளங்களில் தங்களுக்குக் கிடைக்கும் ராயல்டி தொகையை மிகுந்த அடக்கத்துடன் சொல்லப் போக ஒரு பதிப்பகம், அல்லது அதன் சார்பில் மாவு மெல்லுபவர் ஒருவர் முன்னவருக்கு ஒரு லட்சம், பின்னவருக்கு இரண்டு லட்சத்துக்குக் குறையாமல் வருடா வருடம் கிடைப்பதாக தகவல் சொல்லியிருந்தது எத்தனை பேர் கண்களில் பட்டது என்று எனக்குத் தெரியாது.
பக்கத்துக்கு சராசரியாக ஐம்பது பைசா என்று விலை வைத்து புத்தகங்களை விற்கிற அந்தப் பதிப்பகம் எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறது என்ற கணக்குமே கூட இங்கே நிறையப்பேருக்குப் புரியாத ஒன்று தான்!
மேலே தினமணி கட்டுரையில் போட்டிருக்கிற கணக்கின் படி அச்சிடும் செலவு ரூ.20, எழுத்தாளருக்கு ராயல்டி ரூ.2, வெளியீட்டுச் செலவு அல்லது விளம்பரம் ரூ.5, விற்பனையாளர் கழிவு ரூ.10, பதிப்பகத்தாருடைய ஆதாயம் ரூ.10, இதர செலவினங்கள் ரூ.3 என்று வைத்துக் கொண்டால் கூட புத்தகம் நாற்பதில் இருந்து ஐம்பதிற்குள் தான் வரும். ஆனால், இங்கே புத்தகங்களைக் கறார் விலையில் ஒரு பதிப்பகம் பக்கத்திற்கு ஐம்பது பைசா என்ற விலையில் அதாவது, இந்த எடுத்துக் காட்டில் உள்ள நூற்றறுபது பக்கப் புத்தகம் எண்பது அல்லது அதற்கும் மேலே விலை வைத்து விற்பதை, பரிதாபத்துக்குரிய நிலை என்றா சொல்ல முடியும்?
அச்சிடும் முறைகளில் இப்போது நிறைய மாற்றங்கள் வந்து விட்டன. மினி ஆப்செட்டில் அச்சிடும் போது குறைவாக ஆகும் அடக்கச் செலவு, டிமாண்டுக்குத் தகுந்தபடி, தேவையான பிரதிகளை மட்டும் அச்சிட்டுக் கொள்ளும் வசதி இப்படிப் பதிப்புத் துறையில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.
நூலகத் துறைக்கு விலை பேசும்போது, மொத்த விலை/bulk order என்ற வகையில், விளம்பரச் செலவு, விற்பனையாளர் கழிவு இதர செலவினங்கள் எல்லாம் இல்லை. அதைக் கழித்து விலை பேசப்படுவதில் என்ன குறை சொல்ல முடியும்? அதற்குப் பதிலாக, கையூட்டு என்று கூட சொல்ல வேண்டாம், ஆர்டர் கொடுப்பதற்குக் கொஞ்சம் கைம்மாறு, புத்தகத்திற்கான பணம் வந்து சேருவதில் தாமதம் என்று குறை சொல்பவர்கள் எதற்காக நூலகங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்? குறை சொல்லிக் கொண்டே விற்பனை செய்வதில் என்ன நுண்ணரசியல் இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசிப்பதற்காக எழுப்பப் படும் கேள்விகளே இவை.
பதிப்பகங்கள் பொது நூலகத் துறை ஆர்டரை எதிர்பார்த்து மட்டுமே இருப்பதாகச் சொல்லப் படுகிற நிலை மாறி நிறைய நாட்களாயிற்று. நூலகத் துறைக்கு விற்கப்படும் புத்தகங்கள் நேற்றைய நாட்களைப் போலக் குறைந்த பட்ச உத்தரவாதமாக இல்லை, இன்றைக்கு மாறி வரும் சூழலில் அதிகப்படி வருமானமாகவே இருக்கிறது.
ஆக பதிப்பகங்களுடைய பரிதாபமான நிலைமைக்கு, நூலகத் துறையை மட்டுமே குறை சொல்ல முடியாது. வேறு காரணங்களும் இருக்கின்றன.
முதலில் மக்களுடைய ரசனைக்கேற்றபடி, புத்தகங்களை வெளி இடுகிறார்களா? தங்களுடைய வெளியீடுகளைக் குறித்து குறைந்தபட்ச விவரங்களையாவது பொதுவெளியில் பதிப்பகங்களோ, ஆசிரியர்களோ பகிர்ந்து கொள்கிறார்களா? புத்தகத்தைக் குறித்த விமரிசனங்களை சேர்த்து அறியத் தருகிறார்களா?
அடுத்ததாக வாங்க நினைக்கும் வாசகருக்கு அருகாமையில் எந்த இடங்களில் எல்லாம் புத்தகம் விற்பனைக்குக் கிடைக்கும், இணையத்தின் வழியாக ஆர்டர் செய்து பெற முடியுமா, இப்படி விவரங்களைப் பரவலாக அறியச் செய்திருக்கிறார்களா?
மூன்றாவதாக வருடந்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தி, திருவிழாக் கூட்டத்திற்கு வருகிற கூட்டம் கலர் அப்பளம், ரிப்பன் போலத் தேவை இல்லாததெல்லாம் வங்கி வருவதைப் போலப் புத்தகங்களை விற்பனை செய்வதை விடுத்து, இந்த மாதிரிக் கண்காட்சிகளில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப் படுத்தும் நிகழ்ச்சிகளாகவும், எழுத்தாளர்கள் தங்களது படைப்புக்களைப் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிற மாதிரியான நிகழ்வுகளாகவும் நடத்த பபாசி போன்ற புத்தக வெளியீட்டாளர்கள் அமைப்பு யோசிக்கத் தயாராயிருக்கிறதா? கண்காட்சி நடக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வித்தியாசமான தீம், வரலாற்றுப் புதினங்களுக்கு ஒரு நாள், அறிவியல் புனைகதைகளுக்கு ஒரு நாள் இப்படி வித்தியாசமாக சிந்திக்கவும் செயல் படுத்தவும் இங்கே கண்காட்சி ஏற்பாடு செய்பவர்களுக்கு மனமிருக்கிறதா?
காசு கொடுத்து வாங்கிப் படிக்கத் தயாராக இருக்கும் வாசகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட வாசகர்களை ஏமாற்றாமல், நேர்மையாக தங்களுடைய படைப்புக்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளப் பதிப்பாளர்கள் முன்வரும் போது, வாசகர்களுடைய ஆதரவு நிச்சயமாகப் பதிப்பகங்களுக்குக் கிடைக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கட்டுபடியாகக் கூடிய விலை! பதிப்பகங்கள் தங்களுடைய புத்தகங்களை ஜனங்களுக்குக் கட்டுபடியாகக் கூடிய விலையில் தரத் தயாராக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு புத்தகம் விற்பனைக்கு வந்து ஒரு ஆண்டுக்குப் பிறகோ அல்லது முதல்பதிப்பு வெளிவந்து விற்றுப் போன பிறகோ அடுத்து வருவது மலிவுப் பதிப்பாக இருப்பதை வழக்கமாகக் கொண்டாலே புத்தக விற்பனையை எதிர்பார்க்காத உயரங்களுக்குத் தமிழிலும் கொண்டுபோகலாம் என்பது என்னுடைய நம்பிக்கை.
உங்களுடைய கருத்துக்களையும் தெரிந்துகொள்ள ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.
Wednesday, June 16, 2010
நியாயத் தீர்ப்பு..! எண்டமூரி வீரேந்திரநாத்!
வெற்றிக்கு ஐந்துபடிகள் புத்தக வெளியீட்டு விழாவில் திரைப்பட நடிகர் நாகார்ஜுனன் மாலை அணிவித்துக் கட்டித் தழுவுகிறார்!
என்னுடைய இன்னொரு வலைப்பக்கங்களில், தமிழில் புத்தக வெளியீடு, பதிப்பாளர்களுடைய மனோபாவத்தைத் தொட்டு கொஞ்சம் எழுதி இருந்தேன். அதில் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய நியாயத் தீர்ப்பு என்ற ஒரு சிறு புத்தகம், மூன்று குறுங்கதைகளைக் கொண்டதைத் தொட்டுச் சொல்லியிருந்தது இங்கே மீள்பதிவாக.
புத்தகங்களைப் பகிர்ந்து கொள்கிற பதிவுகள் எல்லாம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவுமே கூட!
நாலாவது தூண் புத்தக விமரிசனமாக எழுதும்போது, இப்படிச் சொல்லி இருந்தது நினைவு வருகிறதா?
"கதை எழுத ஆரம்பிக்கும் போதே, ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது மூன்று திருப்பங்களையாவது வைத்துவிடுகிறார். கதையின் பிளாட் என்ன என்பதை நடுவிலேயே இந்தக் கதையில் மொத்தமாகவே சொல்லி விடுகிறார். வித்தியாசமான பாத்திரங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கதைக்களங்கள், என்று தேர்ந்த நெசவாளி சின்னச் சின்ன இழையாகப் பின்னிப் பின்னி ஒரு பட்டுப் புடவையை நெய்வதுபோல, கதையை கண்முன்னால் நிகழ்கிறமாதிரிக் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்!
நாலாவது தூண் புத்தக விமரிசனமாக எழுதும்போது, இப்படிச் சொல்லி இருந்தது நினைவு வருகிறதா?
"கதை எழுத ஆரம்பிக்கும் போதே, ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது மூன்று திருப்பங்களையாவது வைத்துவிடுகிறார். கதையின் பிளாட் என்ன என்பதை நடுவிலேயே இந்தக் கதையில் மொத்தமாகவே சொல்லி விடுகிறார். வித்தியாசமான பாத்திரங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கதைக்களங்கள், என்று தேர்ந்த நெசவாளி சின்னச் சின்ன இழையாகப் பின்னிப் பின்னி ஒரு பட்டுப் புடவையை நெய்வதுபோல, கதையை கண்முன்னால் நிகழ்கிறமாதிரிக் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்!
திருப்பம், திருப்பத்திற்குத் திருப்பம், திடீர்த் திருப்பம், அதிரடித் திருப்பம் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அந்த ஒரு சுவாரசியத்தை, படிக்க வருகிறவர்களைக் கட்டிப்போடுகிற ஜாலத்தை எண்டமூரியின் அத்தனை கதைகளிலுமே பார்க்கலாம்.எண்டமூரி சுவாரசியத்திற்கு நான் காரண்டீ! போதுமா! "
எண்டமூரி வீரேந்திரநாத் என்ற அருமையான கதை சொல்லியின் திறமையை வியந்து எழுதிய வார்த்தைகள் அவை! கதை சொல்கிற நேர்த்தி, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு இப்போது மறுபடி படிக்க ஆரம்பித்தபோதும் மனதைக் கொள்ளை கொள்வதாக இருக்கிறது.
எண்டமூரி வீரேந்திரநாத் எழுதி, சுசீலா கனக துர்க்கா மொழிபெயர்ப்பில் வெளியான "நியாயத் தீர்ப்பு "என்று ஒரு புத்தகம். மூன்று குறுங்கதைகள். இதுவும் சென்னை, திருமகள் நிலையம் வெளியீடு தான்..1992 இல் வெளியானது வெறும் 191 பக்கங்கள் தான்.
முதல் கதை நாற்பத்தெட்டே பக்கங்கள் தான்! ஐந்து கதா பாத்திரங்கள். ஆறாவது கதாபாத்திரத்தைப் பற்றி பிரஸ்தாபம் மட்டுமே இருக்கிறது.
ஒருவன் தன்னுடைய மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்று அதற்காக இன்னொருவனிடம் இரண்டுலட்சம் ரேட் பேசி, ஒருலட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறான்.
அதை மூன்றாவதாக ஒருவன், அவன் தான் இந்தக் கதையின் நாயகன், கவனித்துக் கொண்டிருக்கிறான்! கொலைகாரனிடம் போய், அவனுடைய திட்டம் எல்லாம் தெரியும் என்று காட்டி, அட்வான்ஸ் தொகை ஒரு லட்சத்தையும் அடித்துக் கொண்டு வந்து விடுகிறான்.
அடுத்து, கொலை செய்ய ஏவியவனிடம் போகிறான். அங்கேயும் கதாநாயகன், தனக்குத் தெரிந்த ஆதாரங்களை எடுத்து வைக்கிறான். வேறு வழி இல்லாமல், ஏவியவன் நான்கு லட்சம் ரூபாயைக் கதாநாயகனுக்குக் கொடுக்கிறான்.
இரண்டு மனிதர்களையும் எப்படி எதிர்கொள்கிறான், அவர்களும் என்ன மாதிரியான நிர்பந்தத்திற்குப் பணிந்து போகிறார்கள் என்பது, அடுத்தடுத்த திருப்பங்களாக எண்டமூரி தனக்கே உரிய லாவகத்தோடு கதையைப் பின்னியிருக்கிறார்.
அதோடு கதை முடிவதில்லை அன்பர்களே! எண்டமூரியின் ஸ்பெஷாலிடியே, திருப்பத்துக்கு மேல் திருப்பம், கடைசியாக ஒரு பன்ச் வைத்து ஒரு அதிரடித் திருப்பம் தான்!
மனைவியைக் கொல்வதற்கு அலையும் அந்த மனிதனையே எப்படி அவளுக்கு செக்யூரிடி கார்டாக, கண்ணின் இமையாகக் காப்பாற்ற வைத்து விடுகிறான் என்பது அதிரடித் திருப்பம்! அதற்கும் மேல் ஒரு சூபர் பன்ச் இருக்கிறது-
எண்டமூரி வீரேந்திரநாத் என்ற அருமையான கதை சொல்லியின் திறமையை வியந்து எழுதிய வார்த்தைகள் அவை! கதை சொல்கிற நேர்த்தி, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு இப்போது மறுபடி படிக்க ஆரம்பித்தபோதும் மனதைக் கொள்ளை கொள்வதாக இருக்கிறது.
எண்டமூரி வீரேந்திரநாத் எழுதி, சுசீலா கனக துர்க்கா மொழிபெயர்ப்பில் வெளியான "நியாயத் தீர்ப்பு "என்று ஒரு புத்தகம். மூன்று குறுங்கதைகள். இதுவும் சென்னை, திருமகள் நிலையம் வெளியீடு தான்..1992 இல் வெளியானது வெறும் 191 பக்கங்கள் தான்.
முதல் கதை நாற்பத்தெட்டே பக்கங்கள் தான்! ஐந்து கதா பாத்திரங்கள். ஆறாவது கதாபாத்திரத்தைப் பற்றி பிரஸ்தாபம் மட்டுமே இருக்கிறது.
ஒருவன் தன்னுடைய மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்று அதற்காக இன்னொருவனிடம் இரண்டுலட்சம் ரேட் பேசி, ஒருலட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறான்.
அதை மூன்றாவதாக ஒருவன், அவன் தான் இந்தக் கதையின் நாயகன், கவனித்துக் கொண்டிருக்கிறான்! கொலைகாரனிடம் போய், அவனுடைய திட்டம் எல்லாம் தெரியும் என்று காட்டி, அட்வான்ஸ் தொகை ஒரு லட்சத்தையும் அடித்துக் கொண்டு வந்து விடுகிறான்.
அடுத்து, கொலை செய்ய ஏவியவனிடம் போகிறான். அங்கேயும் கதாநாயகன், தனக்குத் தெரிந்த ஆதாரங்களை எடுத்து வைக்கிறான். வேறு வழி இல்லாமல், ஏவியவன் நான்கு லட்சம் ரூபாயைக் கதாநாயகனுக்குக் கொடுக்கிறான்.
இரண்டு மனிதர்களையும் எப்படி எதிர்கொள்கிறான், அவர்களும் என்ன மாதிரியான நிர்பந்தத்திற்குப் பணிந்து போகிறார்கள் என்பது, அடுத்தடுத்த திருப்பங்களாக எண்டமூரி தனக்கே உரிய லாவகத்தோடு கதையைப் பின்னியிருக்கிறார்.
அதோடு கதை முடிவதில்லை அன்பர்களே! எண்டமூரியின் ஸ்பெஷாலிடியே, திருப்பத்துக்கு மேல் திருப்பம், கடைசியாக ஒரு பன்ச் வைத்து ஒரு அதிரடித் திருப்பம் தான்!
மனைவியைக் கொல்வதற்கு அலையும் அந்த மனிதனையே எப்படி அவளுக்கு செக்யூரிடி கார்டாக, கண்ணின் இமையாகக் காப்பாற்ற வைத்து விடுகிறான் என்பது அதிரடித் திருப்பம்! அதற்கும் மேல் ஒரு சூபர் பன்ச் இருக்கிறது-
அது தான் இந்தப் புத்தகத்தின் முதல் கதை. குயிலின் குஞ்சு!
ராபின் ஹூட் கதைகளை அல்லது அந்த மாதிரி உல்டா அடித்து வந்திருக்கும் ஏராளமான கதைகளில் ஒன்றையாவது படித்திருப்போம். இந்தக் கதையிலுமே ஒரு ராபின் ஹூட் டைப் ஆசாமி தான் கதாநாயகன்! இருப்பவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்பவன்!
ராபின் ஹூட் கதைகளை அல்லது அந்த மாதிரி உல்டா அடித்து வந்திருக்கும் ஏராளமான கதைகளில் ஒன்றையாவது படித்திருப்போம். இந்தக் கதையிலுமே ஒரு ராபின் ஹூட் டைப் ஆசாமி தான் கதாநாயகன்! இருப்பவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்பவன்!
அதிலும் கூடக் கொஞ்சம் நியாயம், தர்மம் என்று பார்ப்பதாக முடித்திருக்கும் கடைசி பதினைந்து-இருபது வரிகள் சூபர் பன்ச்!
3500 வார்த்தைகளுக்குள் இவ்வளவு டிவிஸ்டா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? படித்துப்பாருங்கள்!
வாசிப்பதில் தான் எத்தனை சுகம்! மலருக்கு மலர் தாவித் தேன் குடிக்கிற வண்டுகள் மாதிரி, ஒரு நல்ல வாசகனாக இருப்பதில் தான் எத்தனை ஆனந்தம்!
எனக்கு எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியதையும் படிக்கப் பிடிக்கிறது. வி.ச. காண்டேகர் முதல் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் ஜெயமோகன் வரை, எல்லாத் தளங்களையும் தொட்டு விட ஆசைதான்! ஒரு நல்ல வாசகனாக இருப்பதில் தான் எத்தனை ஆனந்தம்!
வாசகனாக, இது தொட்டு விட முடிகிற வானம் தான் என்பது நன்றாகவே தெரிகிறது.
இங்கே இன்னொரு விஷயத்தையும் தொட்டுச் சொல்லியாக வேண்டும்.
இணையத்தில் புத்தக அட்டைப்படங்களைத் தேடிய போது, எண்டமூரியின் பல புத்தகங்கள் தெலுங்கில் இன்றைக்கும் கூட முப்பது ரூபாயில் இருந்து எண்பது ரூபாய்களுக்குள் கிடைக்கிறது.
தமிழில் வெளிவரும் சிறு புத்தகங்கள் கூட நூறு ரூபாய்களுக்கும் அதற்கு மேலும் இருப்பது வாசகர்கள் விலை கொடுத்து வாங்கிப்படிக்கத் தயாராக இருந்தாலும், பதிப்பாளர்கள் தயாராக இல்லாத நிலையைத் தான் காட்டுகிறது. இங்கே சரக்குக்குத் தகுந்த விலை என்று இருப்பதில்லை. அதுக்கும் கொஞ்சம் மேலே, ஓவராகத் தான் இருக்கிறது.
ஒரு கால கட்டத்தில், மலிவு விலைப் பதிப்புக்களாக, பிரேமா பிரசுரம் முதலில் மர்ம நாவல்களை ஆரம்பித்தது. பிரபல எழுத்தாளர்கள் எவருமே அதில் எழுத முனையவில்லை.நடுவில் ராணி முத்து என்று தினத்தந்தி குழுமத்தில் இருந்து சுருக்கப்பட்ட கதைகள் வெளிவந்தன. பின்னாட்களில், ஜி ஏ அசோகன் பாக்கெட் நாவல் என்று ஆரம்பித்தார். பாலகுமாரன் ஒருவர் தான் பாக்கெட் நாவலில் தொடர்ந்து தனது கதைகளை வெளியிட்டுக் கொள்ள அனுமதித்திருந்தார் என்பதை வைத்தே அவர் சுருங்கிப்போனதாக ஒரு விமரிசனமும் உண்டு.
நேசமுடன் வெங்கடேஷ் எழுதிய இந்தப் பதிவு தமிழ்ப் பதிப்புத் துறையை வேறு கோணத்தில் இருந்து பார்க்கிறது
கேரளத்தில் எழுத்தாளர்கள் கூடி, ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் வழியாகத் தங்கள் புத்தகங்களை ஜனங்கள் காசுகொடுத்து வாங்கிப் படிக்கும் விலையில் வைத்திருந்தார்கள்.
இங்கே தமிழ்நாட்டிலும் புத்தகங்கள் அந்த மாதிரி, கைக்கெட்டுகிற விலையில் கிடைக்கும் நாள் என்னாளோ?
3500 வார்த்தைகளுக்குள் இவ்வளவு டிவிஸ்டா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? படித்துப்பாருங்கள்!
வாசிப்பதில் தான் எத்தனை சுகம்! மலருக்கு மலர் தாவித் தேன் குடிக்கிற வண்டுகள் மாதிரி, ஒரு நல்ல வாசகனாக இருப்பதில் தான் எத்தனை ஆனந்தம்!
எனக்கு எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியதையும் படிக்கப் பிடிக்கிறது. வி.ச. காண்டேகர் முதல் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் ஜெயமோகன் வரை, எல்லாத் தளங்களையும் தொட்டு விட ஆசைதான்! ஒரு நல்ல வாசகனாக இருப்பதில் தான் எத்தனை ஆனந்தம்!
வாசகனாக, இது தொட்டு விட முடிகிற வானம் தான் என்பது நன்றாகவே தெரிகிறது.
இங்கே இன்னொரு விஷயத்தையும் தொட்டுச் சொல்லியாக வேண்டும்.
இணையத்தில் புத்தக அட்டைப்படங்களைத் தேடிய போது, எண்டமூரியின் பல புத்தகங்கள் தெலுங்கில் இன்றைக்கும் கூட முப்பது ரூபாயில் இருந்து எண்பது ரூபாய்களுக்குள் கிடைக்கிறது.
தமிழில் வெளிவரும் சிறு புத்தகங்கள் கூட நூறு ரூபாய்களுக்கும் அதற்கு மேலும் இருப்பது வாசகர்கள் விலை கொடுத்து வாங்கிப்படிக்கத் தயாராக இருந்தாலும், பதிப்பாளர்கள் தயாராக இல்லாத நிலையைத் தான் காட்டுகிறது. இங்கே சரக்குக்குத் தகுந்த விலை என்று இருப்பதில்லை. அதுக்கும் கொஞ்சம் மேலே, ஓவராகத் தான் இருக்கிறது.
ஒரு கால கட்டத்தில், மலிவு விலைப் பதிப்புக்களாக, பிரேமா பிரசுரம் முதலில் மர்ம நாவல்களை ஆரம்பித்தது. பிரபல எழுத்தாளர்கள் எவருமே அதில் எழுத முனையவில்லை.நடுவில் ராணி முத்து என்று தினத்தந்தி குழுமத்தில் இருந்து சுருக்கப்பட்ட கதைகள் வெளிவந்தன. பின்னாட்களில், ஜி ஏ அசோகன் பாக்கெட் நாவல் என்று ஆரம்பித்தார். பாலகுமாரன் ஒருவர் தான் பாக்கெட் நாவலில் தொடர்ந்து தனது கதைகளை வெளியிட்டுக் கொள்ள அனுமதித்திருந்தார் என்பதை வைத்தே அவர் சுருங்கிப்போனதாக ஒரு விமரிசனமும் உண்டு.
நேசமுடன் வெங்கடேஷ் எழுதிய இந்தப் பதிவு தமிழ்ப் பதிப்புத் துறையை வேறு கோணத்தில் இருந்து பார்க்கிறது
கேரளத்தில் எழுத்தாளர்கள் கூடி, ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் வழியாகத் தங்கள் புத்தகங்களை ஜனங்கள் காசுகொடுத்து வாங்கிப் படிக்கும் விலையில் வைத்திருந்தார்கள்.
இங்கே தமிழ்நாட்டிலும் புத்தகங்கள் அந்த மாதிரி, கைக்கெட்டுகிற விலையில் கிடைக்கும் நாள் என்னாளோ?
Subscribe to:
Posts (Atom)
இப்போது பார்த்துக் கொண்டிருப்பது
#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!
செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...
முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்
-
மஹாபாரதக் கதை மாந்தர்களில் சகுனி கொஞ்சமல்ல நிறையவே வித்தியாசமானவன் என்பது தெரிந்ததுதான். உண்மையைச் சொல்லப்போனால் பாரதக்கதையில் வரும் பாத்திர...
-
வைரமுத்துவுக்கு கேரளத்தின் ONV இலக்கியவிருது என்று அறிவித்த நேரம் மிகவும் பொல்லாத நேரமாகத்தான் இருக்க வேண்டும். ஏற்கெனெவே இடதுமுன்னணி அரசில...
-
இன்றைக்கு உலக புத்தக தினம்! முன்பு வலைப்பதிவுகள் எழுதிக் கொண்டிருந்த நண்பர்கள் பலர் முகநூல் மட்டுமே உலகம் என்று குறுகிப்போய், தங்கள் வீட்டில...
-
"வாசிப்பு அனுபவம் உள்ள எவருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் பரிச்சயமாகி இருப்பதில் அதிசயமில்லை!. கல்கிக்கு முன்னால் எத்தனை பேர் ...
-
சி ல மாதங்களுக்கு முன்பாக உடுமலைடாட்காமில் தி.ஜானகிராமன் புத்தகங்கள் சிலவற்றுக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன். ஆர்டர் கொடுத்ததில், மலர் மஞ்சம்...
-
தமிழக அரசியல்களத்தில் மிகவும் கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒருவராக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறார். காரணம், ...
-
2010 ஜூனில் அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் லட்லம், இன்னொரு எழுத்தாளரோடு சேர்ந்து எழுதிய The Hades Factor புதினத்தை அறிமுகப்படுத்துகிற மாதிரி எ...
-
நாளை தீப ஒளித்திருநாள்! அறியாமை அகங்காரம் ஆணவ இருளை விலக்கும் ஒளிவிளக்கை அகத்துக்குள் ஏற்றுவதான குறியீடே தீபாவளி! தீபங்களின் வரிசை என்றுதான...
-
தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவர் கயவர்களால் மானபங்கப்படுத்தப் பட்டதுடன் எரித்துக் கொலை செய்யப்பட்டதும் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்...
இப்படியும் வகைப்படுத்தலாம் Labels
அரசியல்
(327)
அனுபவம்
(253)
நையாண்டி
(113)
2019 தேர்தல் களம்
(91)
செய்திகளின் அரசியல்
(88)
எண்ணங்கள்
(49)
புத்தகங்கள்
(46)
மனித வளம்
(30)
செய்திகள்
(28)
எது எழுத்து
(23)
ரங்கராஜ் பாண்டே
(23)
சிறுகதை
(21)
தொடரும் விவாதம்
(18)
அரசியல் களம்
(16)
கமல் காசர்
(15)
விமரிசனம்
(15)
தேர்தல் சீர்திருத்தங்கள்
(14)
புத்தக விமரிசனம்
(14)
ஏன் திமுக கூட்டணி வேண்டாம்
(13)
Change Management
(12)
ஊடகப் பொய்கள்
(12)
திராவிட மாயை
(12)
பதிவர் வட்டம்
(12)
அக்கம் பக்கம் என்ன சேதி
(11)
ஊடகங்கள்
(11)
கூட்டணிப் பாவங்கள்
(10)
எண்டமூரி வீரேந்திரநாத்
(9)
காமெடி டைம்
(9)
புனைவு
(9)
ஸ்ரீ அரவிந்த அன்னை
(9)
ஆங்கிலப் புதினங்கள்
(8)
இடதுசாரிகள்
(8)
பானாசீனா
(8)
(சு)வாசிக்கப்போறேங்க
(7)
எங்கே போகிறோம்
(7)
ஏய்ப்பதில் கலைஞன்
(7)
கண்டு கொள்வோம் கழகங்களை
(7)
சுய முன்னேற்றம்
(7)
மீள்பதிவு
(7)
அன்னை எனும் அற்புதப் பேரொளி
(6)
ஏன் திமுக வேண்டாம்
(6)
சமூக நீதி
(6)
சாண்டில்யன்
(6)
திராவிடப் புரட்டு
(6)
தேர்தல் முடிவுகள்
(6)
படித்ததில் பிடித்தது
(6)
புத்தகம்
(6)
ராகுல் காண்டி
(6)
வாசிப்பு அனுபவம்
(6)
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
(6)
இர்விங் வாலஸ்
(5)
உதிரிகளான இடதுகள்
(5)
காங்கிரஸ்
(5)
தரிசன நாள்
(5)
நா.பார்த்தசாரதி
(5)
மாற்றங்களுக்குத் தயாராவது
(5)
மோடி மீது பயம்
(5)
Tianxia
(4)
அஞ்சலி
(4)
ஏன் காங்கிரசும் வேண்டாம்
(4)
ஒளி பொருந்திய பாதை
(4)
கவிதை நேரம்
(4)
சீனா
(4)
சீனா எழுபது
(4)
ஜெயகாந்தன்
(4)
தி.ஜானகிராமன்
(4)
பேராசையின் எல்லை எது
(4)
மாற்று அரசியல்
(4)
ஸ்ரீ அரவிந்தர்
(4)
உதிரிக் கட்சிகள்
(3)
காஷ்மீர் பிரச்சினை
(3)
குறுக்குவழி
(3)
சண்டே போஸ்ட்
(3)
சம நீதி
(3)
சரித்திரக் கதைகள்
(3)
ஜாக்டோ ஜியோ
(3)
ஞானாலயா
(3)
தலைப்புச் செய்தி
(3)
பதிப்பகங்கள்
(3)
பாரதியார்
(3)
பொதுத்துறை
(3)
ராமச்சந்திர குகா
(3)
லயோலா
(3)
வாசிப்பும் யோசிப்பதும்
(3)
CONகிரஸ்
(2)
Defeat Congress
(2)
February 21
(2)
The Sunlit Path
(2)
YSR
(2)
Yatra
(2)
அம்பலம்
(2)
கோமாளிகள் கையில் அரசியல்
(2)
சமுதாய வீதி
(2)
சிறுபான்மை அரசியல்
(2)
சுத்தானந்த பாரதியார்
(2)
செய்திக்கலவை
(2)
ஜெகசிற்பியன்
(2)
ஜெயமோகன்
(2)
தமிழ் வெப் சீரீஸ்
(2)
தலைமைப் பண்பு
(2)
தாலிபான்
(2)
திரைப்படங்கள்
(2)
நேரு
(2)
பழக்கங்களின் அடிமை
(2)
பிரியங்கா வாத்ரா
(2)
மம்மூட்டி
(2)
யாத்ரா
(2)
ராஜமுத்திரை
(2)
வரலாறும் படிப்பினையும்
(2)
வி.திவாகர்
(2)
CPIM
(1)
Darshan day message
(1)
EVM சர்ச்சை
(1)
The R Document
(1)
Three C's
(1)
accidental PM.
(1)
ma foi
(1)
ஆர்தர் ஹெய்லி
(1)
இன்ஸ்டன்ட் போராளிகள்
(1)
கணக்கன் கட்டுரைகள்
(1)
கந்துவட்டி ஏகாதிபத்தியம்
(1)
காந்தியா காண்டியா
(1)
காரடையான் நோன்பு
(1)
கிறித்தவம்
(1)
கொத்தமங்கலம் சுப்பு
(1)
சகலகலா வல்லி
(1)
சீனி விசுவநாதன்
(1)
சொன்னது சரிதானா
(1)
ஜமீன்
(1)
ஜெயிப்பதற்கு ஒரு எட்டு
(1)
ஜெயிப்பது நிஜம்
(1)
திருக்குவளைச் சோளர்கள்
(1)
ந.பிச்சமூர்த்தி
(1)
நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி
(1)
படித்தான் பரிந்துரை
(1)
பிரிவினைக் கும்பல்கள்
(1)
புதுமைப் பித்தன்
(1)
புத்தக்ங்கள்
(1)
புள்ளிராசா வங்கி
(1)
பொய்கள்
(1)
மான நஷ்டம்
(1)
மாற்றங்களை எதிர்கொள்வது
(1)
மு.வரதராசன்
(1)
ராபர்ட் லட்லம்
(1)
ஹிந்து காஷ்மீர்
(1)




