Showing posts with label மனித வளம். Show all posts
Showing posts with label மனித வளம். Show all posts

Sunday, February 3, 2019

All for one! One for all! இந்த முழக்கத்தைக் கேட்டிருக்கிறீர்களா?

 அதென்ன முழக்கம்? Self what ? 

இப்படி மார்க் சன்பார்ன்  ஒரு பகிர்வில் எழுப்பி ருந்த கேள்வி, கொஞ்சம் யோசிக்க வைக்கிறது!

இந்தப் பதிவில் மார்க் சன்பார்ன் ஒரு முக்கியமான உளவியல் சார்ந்த கேள்வியை முன்வைக்கிறார். தன்னை மையப்படுத்தித் தன்னிலேயே மூழ்கிக் கிடப்பதும் (Self absorption), தன்னைப் பற்றிய சிந்தனையும் (Self reflection) ஒன்றாகிவிடுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

தன்னைப் பற்றிய யோசனைகளிலேயே மூழ்கிக் கிடப்பது என்பது ன்ன? தன்னைத் தவிர அது வேறெதையும் கணக்கில் எடுத்துக் கொள்வது ல்லை. எல்லாமே தான், தனது என்ற ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே முடிந்து போய் விடுகிறது! ஒரு பாயைச் சுருட்டி வைத்திருப்பது  போல சுருண்டு குறுகிக் கிடப்பது தான் என்கிறார். 

ஒரு உதாரணமாக,பயணம் செய்யும்போது, எவரும் அடுத்தவருக்கு இடைஞ்சலாக இருக்குமோ என்றெல்லாம் கவலைப்படாமல், அல்லது அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய சௌகரியங்களை மட்டும் நீட்டிக் கொள்ள முயற்சிப்பது போலத் தான்! இப்படிப்பட்ட மனோபாவம் சுருக்கமாகச் சொல்வதானால், தன்னுடைய சுயநலத்தை மட்டும் எல்லா வகையிலும் முன்னிறுத்திக் கொள்வது தான்!

சுற்றிக் கவனித்துப் பார்த்தோமேயானால், நம்மில் பெரும் பாலானோரிடம் இப்படிக் குறுக்கிக் கொள்கிற குணம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். கொஞ்சம் தன்னையே கவனிக்கப் பழகினோம் என்றால், இப்படிக் குறுக்குவதில் இருந்து விடுபடவும் முடியும்.

தன்னைக் கவனிப்பது, தன்னைப் பற்றிய சிந்தனை என்பது இந்த சுருண்டு விடுகிற அல்லது குறுக்கிக் கொள்கிற மனோ நிலைக்கு நேர் எதிரானது. தன்னை, மற்றவற்றோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க முடிகிற விசாலமான பார்வையாக, புரிந்துகொள்ள முயற்சிக்கிற விதமாகத் தன்னைக் கவனித்தல், தன்னைப் பற்றிச் சிந்தனை செய்தல் என்பது பரந்து விரிகிறது.  

தன்னை மையப் படுத்தித் தனக்குள்ளேயே சுருண்டு அல்லது குறுகிப் போய் விடுவதற்குச் சரியான மாற்றாக, தன்னை மற்றவற்றோடு சம்பந்தப்படுத்தி பார்க்கப் பழகிக் கொள்வது என்பது ஒரு விசாலமான பாதையை ஏற்படுத்துகிறது இல்லையா? 

இப்படி மார்க் சன்பார்ன் முத்தாய்ப்பாக இன்னொரு கேள்வியை முன்வைக்கிறார்.

சுயநலம் என்பது உயிர் வாழ்வதற்கு அடிப்படையான தேவையாக இருந்தது என்னவோ  வாஸ்தவம் தான்! ஆனால், தங்களுடைய சுயநலத்திலேயே ஒவ்வொருவரும் கண்ணாய் இருந்துவிட்டால் எவருமே ஜீவிக்க முடியாது. 

தனித் தீவுகளாகத் தங்களை மட்டுமே முழு உலகமாக நினைத்துக் கொண்டிருந்தோம் என்றால் தீவுகளிலேயே முழுகிப்போய் விட வேண்டியதுதான்! எல்லோரும் பிழைத்திருக்க வேண்டுமானால், கொஞ்சம் பொதுநலம் கலந்த சுயநலமாக உயர்ந்தால் தான் உண்டு.

ஆனால், நம்மைச் சுற்றி நடப்பதென்ன? கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்! நாமே எப்படி நடந்து கொள்கிறோம் என்பதையும் சேர்த்து யோசித்துப் பாருங்கள்!சுயநலம் ஒன்றை மட்டும் குறிவைத்துச் செயல்படுவதில், இருப்பதையும் பறிகொடுத்து விட்டு நிற்கவேண்டி வருகிற நிலைமையும் வருகிறதா என்பதையும் பாருங்கள்!

மிருகங்களைப் போல தனியாக வாழ மனிதன் படைக்கப் படவில்லை. அதனால் தான், மனிதனை ஒரு சமூகப் பிராணி என்கிறோம். மண்ணில் பிறந்த தருணம் முதல், கடைசி வரை, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைச் சார்ந்தே, ஒரு சமுதாயமாக இயங்கும் வகையில் தான், மிருக நிலையில் இருந்து உயர்ந்து மனிதனாக மாறிய பரிணாமம் இருக்கிறது. ஒரு கூட்டமாக, கூட்டத்தின் நலன் தன்னுடைய நலனை விட முக்கியமானதாக உணரப்படும், செயல் படுத்தப்படும் தருணங்களில் எல்லாம், அந்தக் கூட்டமும் ஜெயித்திருக்கிறது, அதில் இருந்த தனி மனிதனுமே ஜெயித்திருக்கிறான்.

அலெக்சாண்டர் டூமா என்ற பிரெஞ்சுக் கதாசிரியர் எழுதிய The Three Musketeers கதையில் ஒரு முழக்கம்! All for one! One for all! என்று ஒரு கோஷம் வரும்! ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்த நாட்களில், தொழிற்சங்கத்தின் நோக்கமே இப்படித் தனிநபருக்காக அமைப்பும், அமைப்புக்காகத் தனிநபரும் என்ற அஸ்திவாரம் இருந்தால் தான் அந்த நோக்கமே நிறைவேறும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். 

ஒவ்வொரு தனி மனிதனுக்காகவும் அனைவரும்! அனைவருக்குமாக ஒவ்வொரு தனி மனிதனும்!

இப்படி இருவழிப் பாதையாக உயரும்போது  அது ராஜ பாட்டையாகிறது! மாறாக ஒருவழிப் பாதையாகக் குறுக்கிக் கொண்டே போனால், சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் முட்டுச் சந்தாகி முடங்கி விடுகிறது!

சுயநலம் வேண்டியது தான், பொதுநலத்தில் கலந்த சுயநலத்துக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல் படும்போது, அங்கே வெற்றிக்கான பாதை திறக்கிறது.

அப்புறம் என்ன! 

குறுகிய பார்வையைத் தவிர்த்து, ஜெயிக்கலாம் வாருங்கள்!

2010 இல் எழுதியதன் மீள்பதிவு 

Thursday, July 19, 2012

ஆலமரமும் விழுதுகளும்!



(சு)வாசிக்கப் போறேங்க என்ற தலைப்பில் புத்தக வாசிப்பில் எனக்குக் கிடைத்ததை சொல்கிற வலைப்பக்கங்களாக கொஞ்சம் எழுத ஆரம்பித்ததில் கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளி!புதிய பதிவுகள் எதுவுமில்லாமல் இருந்தாலும்  இந்த ஒருவருடத்தில், வந்து எட்டிப்பார்த்துவிட்டு, அப்படியே கொஞ்சம் பழைய பகிர்வுகளை (சு)வாசித்துச் சென்றவர்கள் கொஞ்சம்பேர் இருக்கிறார்கள்!வாசிப்பனுபவம் உள்ளவர்களால் கவனிக்கப்படுவதில் மகிழ்ச்சியே! அவர்களுக்கு  என்னுடைய நன்றிகலந்த வணக்கங்கள்.

2009 இல் என்னுடைய மகன் சென்னைப் புத்தகக் கண் காட்சிக்குப் போய் விட்டு வந்த அனுபவத்தைத் தொட்டு ஆரம்பித்ததில், புத்தகங்களை வாசிப்பது என்பது ஒரு அனுபவமாக வளராமல், நானும் புத்தகக் கண்காட்சிக்குப் போனேன், இத்தனை ஆயிரம் ரூபாய்க்குப் புத்தகங்களை வாங்கினேன், மூன்றாம் வருடம் வாங்கிய புத்தகங்களே இன்னமும் வாசிக்கப்படாமல் இருக்கின்றன என்று பெருமையாக டம்பம் அடித்துக் கொள்கிற போக்கைப் பார்த்தபோது,(சு)வாசிப்பது எப்படி என்றே நமக்குத் தெரியவில்லை என்ற உண்மை மிகப்பலமாக உறைத்தது.

வலைப்பதிவுகளை வாசிப்பவர்களில் பெரும்பாலானோர்  நீளமான பதிவுகளை வாசிப்பதில்லை, அப்படியே வாசிக்கிற பதிவுகளிலும் மிக மேலோட்டமான வாசிப்புத்தான் என்பதும், வாசித்த விஷயத்தில் பாதியைக் கூட உள்வாங்கிக் கொள்வதில்லை. பின்னூட்டங்களில் பெரும் பாலானவை கூட, பதிவில் அங்கே இங்கே ஓரிரு வரிகளை உருவி எடுத்துப்போட்டு, ஆஹா! அருமை என்றோ இல்லை என்றோ முடித்து விடுகிற அவசரத்தின் அள்ளித்தெளித்த கோலம் தான்! 
எதையும் முழுமையாக வாசிப்பதில்லை என்பது போய், ஒரே நேரத்தில் ஒரு நூறு இடங்களில் எதையாவது பின்னூட்டமாக எழுதித் தங்களுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதென்பதே, வாசித்ததாகக்கருதப்படுகிறது! இதெல்லாம் நன்றாகத்   தெரிந்த விஷயம் தான் என்றாலும், இந்த போலித் தனத்தின் முழுப் பரிமாணத்தைக் காணும் போது நிறையவே அதிர்ச்சியாக இருக்கிறது.

தவிர, ஒரு வலைப்பதிவு என்பது, ஒரு மனிதன் தன்னுடைய எண்ணங்களைத் தன்னுடனும், பிறருடனும் ஒரேசேரப்பகிர்ந்து கொள்கிற ஒரு பொது வெளி! Open and Loud thinking!இந்தக் கருத்துடன் உடன்பட முடிகிறதோ இல்லையோ,பதிவுகள் நிச்சயமாக ஒரு கை ஓசை அல்ல!ஒரு கருத்துடன், உடன் படுகிறவர்கள் அல்லது முரண்படுகிறவர்கள் என்று எப்படியானாலும் ஒரு விவாதத்தை முன்வைப்பது தான் வலைப்பதிவுகளின் சாரமே!

ஏதோ ஒரு ஆவல் உந்த, ஒரு வலைப்பதிவைத் தொடர ஆரம்பித்து விடுகிறோம், சரி!இப்படிப் பின்தொடர்பவர்களாக இருந்து, அல்லது இத்தனை  நூறு அல்லது ஆயிரம் பின்தொடர்பவர்களைப் பெற்ற பதிவராக இருந்து விடுவதால் மட்டும் என்ன இருக்கிறது?பின்தொடர்கிறவர்கள் என்றால் எதில்? எதுவரை?

தொடர்பவர்களுக்கும் தொடரப்படுகிறவர்களுக்கும் ஒரு நேரடியான உரையாடல், ஒரு உயிரோட்டமான தொடர்புகள் இல்லாமல் இந்த ஃபாலோயர்ஸ்  பட்டியல் அல்லது எண்ணிக்கையில் ஒரு பயனும் இரு தரப்புக்குமே இல்லை!அப்படியானால், நாம் பதிகிற பதிவுகளால், ஒரு சிறிய சிந்தனை, உரையாடல், தாக்கத்தைக் கூட ஏற்படுத்த முடியவில்லை என்றால் எழுத்து நம் கைவசப் படவில்லை என்று ஒப்புக் கொண்டு, மௌனமாக இருந்து விடவேண்டியது தானா?

வால் நீளமாக இருப்பது நல்லது என்று ஆரம்பித்து ஒரு பதிவு, சுமார் முப்பது மாதங்களுக்கு முன்னால் எழுதியதை மீள்வாசிப்புச் செய்ததில், பல விஷயங்கள் தெளிவாகின.

எந்த ஒரு பெரிய சாதனை, முயற்சி, வெற்றி என்று சொல்லப்படுவதற்கும் பின்னால், இந்த மாதிரி ஆயிரம் உண்மையான பின்தொடர்ந்து வரும் நண்பர்களைச் சம்பாதிப்பதில் தான் ஆரம்பமாகிறது. ஆயிரம் என்பது ஒரு எண்ணிக்கை. இப்படிப்பட்டவர்களை உங்களோடு இணைத்துக் கொள்வதில் இருந்துதான், அவர்கள் நீங்கள் காட்டும் பாதையை ஏற்றுக்கொள்வதும், உங்களோடு கூட வருவதுமான வெற்றிப் பயணம் ஆரம்பிக்கிறது.

கெவின் கெல்லி தன்னுடைய பதிவில் இப்படி ஆரம்பிக்கிறார்:

"வால் நீண்டு கொண்டே போவது இரண்டு  விதமான தரப்பை ரொம்பவுமே மகிழ்ச்சியடையச் செய்யும். அதிர்ஷ்டக்காரர்களான சந்தையைக் கைப் பற்றுகிறவர்கள், சந்தையில் வாங்குகிறவர்கள் இப்படி இரண்டு தரப்பையுமே!"



வரப்புயர நீர்  உயரும்னு தானே நாமெல்லாம் படிச்சிருக்கோம்! கெவின் கெல்லி கொஞ்சம் வித்தியாசமா, வால் நீள, தலை நிமிரும்னு சொல்லியிருக்காரு! படத்தைப் பாருங்க!வாலைத் தேடவேண்டாம்!

இங்கே கெவின் கெல்லி சொல்வது தலை-வால் என்ற இரண்டு அம்சத்தைப் பற்றி! வேறு எதனோடும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்!

இப்படி ஆயிரம் உண்மையான நண்பர்களைச் சம்பாதிப்பது, முடியக் கூடிய ஒரு விஷயம் தான்! அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுகிற விதத்தில் உங்களுடைய தயாரிப்பு இருக்க வேண்டும்! இங்கே உதாரணத்துக்கு வலைப் பதிவுகளையே எடுத்துக் கொள்வோமே, அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வழியைக் காட்ட உங்களால் முடியும் என்றோ, அவர்களுக்கு பயன் படுகிறவிதத்தில் உங்களுடைய பதிவுகளை அவர்களை அடையாளம் கண்டு கொள்கிற மாதிரியோ ஆரம்பித்து, அந்த நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ளவும் உங்களால் முடியுமானால், ஆயிரம் பேர் மட்டுமல்ல இன்னும் அதிகமாகவே உங்களைப் பின்தொடரத் தயாராக இருப்பவர்களாக மாற்ற முடியும்!

இப்படி உண்மையான நண்பர்கள் கிடைப்பது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். இந்த மாதிரி நண்பர்களை சந்தோஷப்படுத்துவதே கூட ஒரு சந்தோஷகரமான அனுபவமாகவும், வாழ்க்கைக்கு உயிர் ஊட்டுவதாகவும் இருக்கும் இல்லையா!


புத்தகங்களைப் பேச வந்த தளத்தில் இதெல்லாம் எதற்காக என்கிறீர்களா? புத்தகங்களை என்ன செய்வது என்ற இந்தப்பக்கத்தை ஒருதரம்  வாசித்து விடுங்கள்!

புத்தக வாசகனுக்கு தான் வாங்கிய புத்தகங்களோடு உள்ள உறவு அது ஒரு புத்தகம் என்பதைத் தாண்டியது, அது  ஒரு விதமான தோழமை உணர்வு, படிப்பின் வழியாக உணர்ந்த நெருக்கம் அவனைப்பற்றிக் கொள்கிறது, அவன் புத்தகங்களை வெறும் அலங்காரப்பொருளாக நினைப்பதில்லை, ஒரு புத்தகம் திறக்கப்படும்போது ஒரு உலகம் திறக்கபடுவதை உணர்கிறான், அது தன் வாழ்வை புரட்டி போடுவதை தானே அனுபவிக்கிறான், ஆகவே அதை உயிருள்ள ஒன்றாகவே கருதுகிறான், புத்தகங்களை தன்னை மேம்படுத்த துணை செய்யும் ஆசானாக, நண்பனாகவே கருதுகிறான், ஆகவே புத்தக வாசகன் ஒரு புத்தகத்தை இழப்பதை எப்போதுமே தனது அந்தரங்க வலியாக உணர்கிறான்,

எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தவரிகளில், புத்தகம் என்ற இடத்தில் பின் தொடர்பவர்கள் என்று வைத்துப் பாருங்கள்! அப்படியான நெருக்கம், கைவரப் பெறுமானால், ஃபாலோயர்ஸ், எண்ணிக்கை, அதனால் சாதிக்க முடிந்தது என்று வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ள நதிப்பெருக்கு மாதிரி ஓடிக் கொண்டே இருக்கும்! இலக்கை அடையும் வரை ஓயவே ஓயாது!



ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் விழுதுகளாய் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறதே,! கொஞ்சம் இந்தப் பக்கத்தையும் பாருங்களேன்!
 

Saturday, January 15, 2011

மாற்றங்களுக்குத் தயாராவது - 8


வாசகர்களுக்கு உளங்கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! வான் மழை வழாது பொழிக ! மழைவளம் சுரக்க!பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

ஜான் பி கோட்டர் தன்னுடைய புத்தகத்தில், மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் ஒரு எட்டு முக்கியமான தடைகளைப் பட்டியல் டுகிறார். அதற்கப்புறம், ஒரு எட்டு முக்கியமான வழிகளில் எப்படி மாற்றத்தை நாம் விரும்புகிற விதத்தில் நிர்வகிக்க முடியும், சாதிக்க முடியும் என்பதையும் சொல்கிறார்.

அதுவும் சுருக்கமாக வெறும் நூற்று எண்பத்தேழு  பக்கங்களில்!

முதலில் அவர் மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் எட்டுக் காரணிகள் எவை என்று சொல்வதைப் பார்க்கலாம்.இதற்கு மாற்றாக, மாற்றங்களுக்கு ஒரு எட்டு வழிகளை சொல்வதையும் அதனதன் கீழேயே சேர்த்துப் பார்த்து விடலாம்!


இங்கே புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை கூகிள் புக்ஸ் தளத்தில் இணையத்திலேயே வாசிக்க முடியும்.


1. Allowing too much complacency

Establishing a Grater sense of urgency.

2. Failing to create a sufficiently powerful guiding coalition

Creating the Guiding Coalition.
 
3. Underestimating the power of Vision

Developing a Vision & Strategy

4. Under communicating the Vision by a factor of 10 (or 100 or even 1000)

Communicating the Vision, Change.
 
5. Permitting obstacles to block the Vision

Empowering others to act.
 
6. Failing to create short-term Wins

Creating short-term Wins.
 
7. Declaring Victory too soon

Consolidating Gains and producing even more change
 
8. Neglecting to anchor Changes firmly in the Corporate Culture

Institutionalizing Changes in the Culture.

நிறுவனங்கள் தோற்பதற்கான முக்கியமான எட்டுக் காரணங்களைப் பட்டியலிடும் ஜான் பி கோட்டர், நிறுவனங்கள் ஜெயிப்பதற்கான எட்டு வழிமுறைகளையும் அடுத்து சொல்கிறார். சிவப்பு, நீல வண்ணங்களில் இரண்டையும் அடுத்து டுத்துப் பார்க்கிறீர்கள் இல்லையா?

கொஞ்சம் இந்த இரண்டு பட்டியல்களையும் பார்த்துவிட்டு, உங்கள் மனதில் என்ன கேள்விகள் எழுகிறதோ, அதை எழுதுங்கள்!

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக, ஒரு விளம்பரம்! மாற்றங்கள் என்றால் நமக்கு என்னென்னமோ தோன்றுகிறது இல்லையா? 

காம்லின் நிறுவனத்துக்கோ அது ஒரு வினோதமான விளம்பரமாக! 



மாற்றங்களை, ஒரே நிமிடத்தில் விளக்கி விடுகிறார்களாம்!




என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்!
 



Wednesday, January 5, 2011

வாசிக்க நினைத்திருக்கும் புத்தகங்கள்..!

ஜனவரி பிறந்து விட்டது!

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், ஹேங் ஓவர்கள் முடிந்த பிறகு, அடுத்து ஒன்று ஆரம்பமாகவேண்டுமே! இங்கே தமிழ்ப்பதிவுகளில் சுடச் சுட வடை என்ற ரீதியில்,  இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பரபரப்பாக இருக்கப் போவது சென்னையில் நேற்றுத் துவங்கிய புத்தகக் கண்காட்சி தான்! புத்தகக் கண்காட்சியில் என்ன புத்தகங்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்து வாங்கினேன், அதில் என்ன வாசித்தேன், என்ன பிடித்தது அல்லது ஏன் பிடிக்கவில்லை என்ற மாதிரியான விவரங்களை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

சென்ற வருடம், இதே சென்னைப் புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுதிய இந்தப் பதிவில் ஒரு வாசகர் எழுப்பியிருந்த கேள்விக்கு பதில் சொன்னதில் இன்றைக்குக் கூட எந்த மாற்றமும் இல்லை.


"மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையில், புத்தகங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், பின்னால் மென்மையான குரலில், அந்தப் புத்தகத்தை பற்றியோ, அதை விட இன்னும் சிறப்பான புத்தகம் ஒன்றையோ அறிமுகம் செய்யும் குரல்! புத்தகத்தை விற்பனை செய்யவேண்டுமே என்ற விற்பனையாளனின் குரல் அல்ல அது! புத்தகங்களை நேசித்த, அதை முழுமையாக வாசித்தஒரு வாசகன், இன்னொரு வாசகனோடு ஆர்வமாகப் பகிர்ந்துகொள்ளும் குரல்!

திரு நவநீத கிருஷ்ணன், அந்தப் புத்தக நிலையத்தில் வேலைக்கு சேர்ந்து, அதன் செயலாளராகவும் ஆனவர். சென்ற (2009) அக்டோபரில் தான் காலமானார்! பள்ளி இறுதிப் படிப்பை மட்டுமே முடித்த அவரால், வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கடைக்கு வருகிறவர்களிடமும் உண்டாக்கத் தெரிந்த வித்தையை நிறையத் தரம் அனுபவித்தவன் நான்.

வாசிப்பை ஊக்குவிப்பது எப்படி என்பதை நான் பார்க்கும் விதம் வேறு! ஆர்ப்பாட்டமான கண்காட்சிகளை நடத்தி, அங்கே காண்டீனில் என்ன சாப்பிட்டோம் எந்த எந்தப் பிரபலங்களைப் பார்த்தோம் என்று பட்டியலும் புகைப்படமும் வெளியிடுவது மட்டுமே ஊக்குவிப்பது என்று நீங்கள் கருதினால், அதற்கு நான் தடையாக இருக்கப் போவதில்லை.

அடுத்தது, வலைப்பதிவுகளில் எழுதுபவர்களில், இன்னும் ஐம்பதாண்டுகளில் கொண்டாடப் படப் போகிறவர்களைப் பற்றி...அப்படி யாராவது வருவார்கள், அல்லது வரவே மாட்டார்கள் என்பதெல்லாம் என்னுடைய நம்பிக்கைகளின் சுமையில் சேர்த்துக் கொள்வதாக இல்லை. வலைப் பதிவுகளின் வடிவமும், வெளிப்படுத்துகிற கலையும், புத்தகங்கள், கவிதை எழுதுவதை விட வேறானது.

அதைக் கண்டுகொள்வதற்கு ஐம்பதாண்டுகள் போகவேண்டாம்! இப்போதே, இங்கேயே R P ராஜ நாயஹம் ஒருவர் இருக்கிறார். அவரை விட, வலைப் பதிவுகளைத் திறமையாகக் கையாளத் தெரிந்த வித்தைக்காரரைப் பார்ப்பது மிகவும் கடினம். இதை சொல்லும்போதே வேறு யாருமே இல்லை என்று சொல்வதற்காக இல்லை, இன்னும் பல பதிவர்கள் வெவ்வேறு வடிவங்களில் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், நானும் அவர்களை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இந்த வலைப்பதிவு வடிவம் வேறு, புத்தகமாகப் படிக்கிற வடிவம், உள்ளடக்கமே வேறு. நான் சொல்ல வந்தது, கொஞ்சம் பேர் தெரிய வந்தவுடன், அல்லது சும்மா எழுதிக் கிறுக்கியதை எல்லாம் வெளியிட்டு, மாப்பிள்ளை மச்சான் படைப்பும் அதில் ஒரு ஓரத்தில் வந்திருக்கிறது என்ற ஒன்றை மட்டும் வைத்துக் காசு பார்ப்பவர்களைக் குறித்தானது மட்டுமே! அதே மாதிரி, இணையத்தில் எழுதியதையே, புத்தகமாக வாந்தி எடுக்கும் ரிபீட்டு கல்ச்சரை மட்டுமே!"

இந்த ஒரு அம்சத்தில் என்னுடைய கருத்துவேறுபாட்டைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், இதுமாதிரிக் கண்காட்சிகள் புத்தக விற்பனையை அதிகரிக்கச் செய்யும் தூண்டுகோலாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஒரு புத்தகக் கடையில் டிஸ்ப்ளேயில் வைத்து ஆறுமாதமோ  அல்லது ஒரு வருடத்திலோ விற்கிற ஒரு புத்தகம், இந்த மாதிரிக் கண்காட்சியில் ஒரே நாளில் அந்த எண்ணிக்கையைத் தாண்டிவிடுகிறது. பதிப்பகங்கள் சந்தோஷப்படலாம்! அவர்களாகப் பார்த்துக் கொடுக்கிற ராயல்டி கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்குமே என்று புத்தக ஆசிரியர்களும் கூட சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்!

காசு கொடுத்து, தேடிப் பிடித்து வாங்கும் வாசகனாய் நாமும் சந்தோஷப் படுகிற மாதிரி புத்தகங்கள் வந்திருக்கிறதா என்பது வாசகர் பார்வையில் இருந்து எழவேண்டிய கேள்வி! நாம் தேடுகிற விஷயங்கள், அந்தப் புத்தகத்தில் கிடைக்கிறதா? நம்முடைய சிந்தனையை உயர்த்திக் கொள்கிற விதத்தில் நாம் வாங்கும் புத்தகங்கள் உதவியாக இருக்கிறதா?

சென்ற  வருடம் புத்தகக் கண்காட்சியில் என் மகன் வாங்கி வந்த புத்தகங்களில், ஜெயமோகனின் "இன்றைய காந்தி" கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரி இருந்தது.  திரு ராமச்சந்திரா குஹா எழுதிய INDIA After Gandhi ஆங்கில புத்தகத்தைப் போல ஜெயமோகனின் நூல் ஒரு முழுமையான புத்தகமாக, தேவையான தகவல்களுடன் கூடிய புத்தகமாக இல்லை என்றாலும் கூட, தமிழில் வெளியான புத்தகம் என்ற வகையில் கொஞ்சம் உயரமான இடத்தில் தனித்து இருக்கிறது. தமிழினி வெளியீடாக வந்த இந்தப் புத்தகம், இன்று கூட வாங்கிப் படிக்கக் கூடியது தான்.

இந்த வருடம் புத்தகக் கண்காட்சி துவங்கிவிட்டது என்பதற்காகவோ, கண்காட்சி சுரம் என்னையும் தொற்றிக் கொண்டுவிட்டது என்பதற்காகவோ இல்லாமல், புத்தகங்களை அதன் உள்ளடக்கம், ஆசிரியரின் அனுபவம், எழுத்துவன்மை இவைகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதால் மட்டுமே இந்த வருடம்  நான் வாசிக்க, வாங்க நினைத்திருக்கும் ஒரு சில புத்தகங்களின் அறிமுகமாக!

1.Makers of Modern India

ராமசந்த்ர குஹா இந்தப் புத்தகத்தில், நவீன பாரதத்தைச் செதுக்கிய சிற்பிகளாக ஒரு பத்தொன்பது நபர்களைக் குறித்து அவர்களுடைய எழுத்துக்கள், பேச்சுக்களில் இருந்து எடிட் செய்து தொகுத்து வெளியிட்டிருக்கும்  இந்த நூலை இந்த ஜனவரியில் வாங்கிப் படிக்க உத்தேசித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தை கல்கத்தாவில் அறிமுகம் செய்து பேசிய ராமச்சந்திர குஹா சொன்ன ஒரு கருத்து, வங்காளம்  உருப்படுவதற்காகவாவது சிபிஎம் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசு பத்தாண்டுகளுக்கு முன்னரே ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்ன ஒரு விமரிசனத்தை அன்றாட செய்திகளில் சென்ற மாதம் பார்க்க நேர்ந்தது.அப்போது  இந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்[புக் கிடைத்தது. 

ராமசந்த்ர  குஹா இந்தப் புத்தகத்தில்,  ஜனங்களுக்கு மறந்து போன அல்லது அறிமுகமே இல்லாமல் போன  தாராபாய் ஷிண்டே, ஹமீத்  தல்வாய், சையத் அஹமத் கான் போன்ற சிலரைத் தன்னுடைய பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். ஜனங்களுக்கு நினைவில் இருக்கும் முக்கியமான புள்ளிகளான, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் இருவரையும் சேர்த்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், இந்த இருவரும், செயல் வீரர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள்! அதாவது, இவர்கள் எழுதிய, பேசியதன் அடிப்படையில் தொகுப்பதற்குப் போதிய விவரங்கள் இல்லாததுதான் என்று சொல்லப்படுவது கொஞ்சம் நெருடுகிறது.

ஆனாலும் சரித்திரமே தெரியாமல் சரித்திரத்தை போதிக்க முற்படுகிற முற்போக்கு எழுத்தாளர்கள், சரித்திரப் பேராசிரியர்கள் நிறையப் பேரைப் படித்து அலுத்து விட்ட அனுபவம், சரித்திரத்தைக் கொஞ்சம் கோர்வையாக, என்ன சொன்னாலும் அதற்குப் போதுமான ஆதாரங்களுடன், குறிப்புக்களுடன் சொல்லத் தெரிந்த திரு ராமசந்த்ர குஹா, தன்னுடைய பார்வையில் என்ன சொல்ல வருகிறார் என்பதை, அவர் தொகுத்து வெளியிட்டிருக்கும் இந்த நூலை வாங்கிப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலை இந்தப் புத்தகக் கண்காட்சியி துவங்கிய தருணம் தோற்றுவித்திருக்கிறது.

இணையத்தில் ஒரு தளத்தில் ரூ.543/- என்றும் இன்னொன்றில் ரூ.559/-என்றும் விலையைப் பார்க்க முடிந்தது.இணையத்தில் புத்தகங்களை வாங்கத் தெரிந்தவர்களுக்கு, ஆண்டு முழுவதுமே புத்தகத் திருவிழா-கண்காட்சிதான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லையல்லவா!

2.பாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்

 
3.அறிவும் நம்பிக்கையும் - ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்


தமிழினி வெளியீடாக இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்பதை சொல்வனம் இதழில் வந்த இந்தக் குறிப்பில்மட்டும் தான் தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழினி, விருபாடாட்காம் மற்றும் வேறெந்த தளங்களிலும், புத்தகத்தைப் பற்றிய மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. எத்தனை பக்கங்கள், விலை விவரம் பற்றியும் எந்தத் தகவலும் தெரிந்து கொள்ள முடியவில்லை.



அதனால் என்ன?!

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் மோகனத் தமிழை மின்தமிழ் மற்றும் தமிழ்வாசல் கூகிள் வலைக் குழுமங்களில் நிரம்ப அனுபவித்தவன்! அவருடைய வாசிப்பு அனுபவம், தான் சொல்ல வருவதைப் பாங்குடன் சொல்கிற நேர்த்தி இவைகளைத் தொடர்ந்து படித்து அனுபவித்து வருகிறவன். தாயை போல பிள்ளை நூலைப் போல சேலை என்பார்கள் இல்லையா!  அந்த வகையில் அவருடைய மோகனத் தமிழ் எப்படி இருக்கும் என்பது ஏற்கெனெவே தெரிந்திருப்பதனால், இந்த இரண்டு நூல்களையும் இந்த ஜனவரியிலேயே வாங்கிப் படிக்கும் உத்தேசம் இருக்கிறது.

இந்த ஆண்டு படிக்க உத்தேசித்திருக்கும் நூல்களின் பட்டியல், நூல்களைப் பற்றிய சுருக்கமான மதிப்பீடுகளை  இன்னும் ஒன்றிரண்டு பதிவுகளில் தொடர்ந்து பேசுவோம்!

Change Management மாற்றங்களுக்குத் தயாராவது குறித்த தொடர்பதிவுகள் கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடரும்! மனிதவளம், மேலாண்மை, நிர்வாகம், மார்கெடிங் துறை குறித்த பதிவுகளைத் தொடர்ந்து இந்தப்பக்கங்களில் எழுதும் விருப்பம் இருப்பதை ஏற்கெனெவே சொல்லியிருக்கிறேன்!


டிஸ்கி ஒன்று

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதிய  இரு நூல்கள் புத்தகக் கண்காட்சியில் கடைக்கு 12.01.2011 அன்று விற்பனைக்கு வந்து சேர்ந்தன. 

தமிழினி -- கடை எண் 354, 355 

United Writers Shop No 29 

நூல்கள் --- 

1) பாரதிக் கல்வி, ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன், தமிழினி, டிசம்பர் 2010, பக்கம்
128, ரூ 80. 

2) அறிவும், நம்பிக்கையும் -- ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன், தமிழினி, டிசம்பர்
2010, ரூ 55 

முதல் நூல் பாரதியின் கருத்துகளைப் பற்றிய இலக்கிய விமரிசனம். 

இரண்டாவது நூல் மனித சிந்தனை மரபுகளின் வரலாற்றில் அறிவும் நம்பிக்கையும் எந்தவிதமான ஊடுகலந்த இயக்கம் கொள்கின்றன என்பதைப் பற்றி விவேகாநந்தரையும், நம்மாழ்வாரையும் முன்னிறுத்தி எழுதப்பட்ட பண்பாட்டு விமரிசனம். 

"படிக்க நேர்ந்தால் படிப்பவர்கள் கருத்துகள் சொன்னால் நன்றாக இருக்கும். அவ்வாறு சொல்வோருக்கு முன்கூட்டியே நன்றிகள்" . 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் தன்னுடைய நன்றிகளை முன்கூட்டியே இப்படி தெரிவித்திருக்கிறார்!


Friday, December 31, 2010

எழுத்தே என் சுவாசக் காற்றாக....!


(சு)வாசிக்கப் போறேங்க....!

புத்தகங்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட வலைப்பதிவு இது.

ஓராண்டைத் தாண்டியாகிவிட்டது.இந்த வருடத்தில் அறுபத்திரண்டு பதிவுகளும், சென்ற ஆண்டு கடைசியில் இரண்டுமாக மொத்தம் அறுபத்துநான்கு பதிவுகள் இந்தப்பக்கங்களில் வெளியாகி இருக்கின்றன.

வெறும் புத்தக வாசிப்பு, இது எனக்குப் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்ற ரீதியில், அல்லது வெறும் விமரிசனமாக மட்டும் குறுகி நின்றுவிடாமல், வாசிப்பையும் தாண்டி எழுத்து என்னென்ன விதங்களில் தாக்கத்தை, தொடர்சிந்தனையைத் தோற்றுவித்திருக்கிறது என்ற
மையப் புள்ளியை வைத்து மட்டுமே இந்தப் பக்கங்களில் பேச முயற்சி செய்திருக்கிறேன்.



மனிதவளம், தலைமைப்பண்பு, சுய முன்னேற்றம் மேலாண்மை பற்றிய பதிவுகளுக்கு இந்தப்பக்கங்களில் இன்னும் முக்கியத்துவம் கொடுக்க ஆசை! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், எப்படி வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ள முடியுமானால் செய்வதை இன்னமும் திருந்தச் செய்ய முடியும்!

இந்தப்பக்கங்களில் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன, பிடிக்காத விஷயம் என்ன, என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பின்னூட்டங்களில் பகிர்ந்துகொள்ள முடியுமானால், இந்தப் பக்கங்களை மேம்படுத்த பேருதவியாக இருக்கும்!


Bonne Année 2011
வருகிற புத்தாண்டு, உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினர், நண்பர்களுக்கும் ஒரு இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பிரார்த்தனை செய்துகொள்கிறேன். இந்தப் புத்தாண்டில், நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றிபெறவும், எண்ணியது எண்ணியபடி நடந்தேறவும் இறைவனது பெரும் கருணை உங்களோடு இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!



Tuesday, December 21, 2010

மாற்றங்களுக்குத் தயாராவதும் நிறுவனப் பண்புகளும்!

மாற்றங்களை எதிர்கொள்வது, மாற்றங்களுக்குத் தயாராவது என்று பார்த்துக் கொண்டிருக்கும்போது Organizations, Organizational behaviou என்று  ஒரு நிறுவனம், நிறுவனப் பண்புகளைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடுவது நல்லது.


மாற்றங்களுக்குத் தயாராவது என்பதே ஒரு நல்ல தலைமை, எங்கே இருக்கிறோம்,அடுத்து எங்கே போகவேண்டும் என்பதில் தெளிவான பார்வை, அதைக் குழப்பமில்லாமல் செயல்படுத்துகிற லாவகம், ஊழியர்கள் என்றால் உத்தரவுக்காகக் காத்திருப்பவர்கள் என்று மட்டுமே இல்லாமல், தங்கள் பொறுப்பை உணர்ந்து பொறுப்புடன் செயல் படுகிறவர்களாக, தலைவர்கள் கொண்டு வர விரும்பும் மாற்றத்தை சாதிக்க ஆர்வத்துடன் ஈடுபடுகிற கூட்டாளிகளாக மாற்ற முடிவதில் தான் இருக்கிறது!

நிறுவனம் என்பது என்ன? நிறுவனப் பண்புகள் என்பது என்ன? இந்தியச் சூழ்நிலைகளில், நாம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருப்பதற்கு நேர்மாறாகத் தான்  இவை பற்றிய விவரம், விளக்கம், வியாக்கியானம் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிறுவனப் பண்புகளைக் குறித்த பதிவொன்றை சென்ற மாதம், சேத் கோடின் பதிவுகளில் படித்தது, தொடர் சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது.

இங்கே பெரும்பாலான நிறுவனங்கள், குறிப்பாக அரசுத்துறை, பொதுத்  துறையில் இயங்குபவை  தங்களை ஒரு கட்டமைக்கப் பட்ட, ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கிற அமைப்பாகவே உணராமல், ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியிலேயே செயல் படுவதையும், என்ன நோக்கத்திற்காக நிறுவனம் தொடங்கப்பட்டதோ அதற்கு எதிராகவே பல தருணங்களில் செயல் படுவதையும் பார்க்க முடியும். ஒரு சரியான தலைமை இல்லாதது, தெளிவான செயல் திட்டம் இல்லாதது, ஒரு தெளிவான பார்வை இல்லாதது இப்படி இந்த அமைப்புக்கள் குறைப் பிரசவங்களாகவே இருப்பதற்குக் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சமீபத்தில் சேத் கோடின் பக்கங்களில் கார்பரேட்டுகளுக்கு மனசாட்சி கிடையாது என்ற தலைப்பிலான பதிவைப் படித்துவிட்டு, இங்கே உள்ள பல நிறுவனங்களுடைய பிரச்சினைகளோடு, குறிப்பாக பொதுத்துறையில் இயங்கும்  ஒரு புள்ளிராசா வங்கியின் தோற்றுக் கொண்டே இருக்கும் இயல்போடு பொருத்திப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தேன். பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு மனசாட்சி மட்டுமில்லை, குறைந்தபட்ச மூளை கூடக் கிடையாது. எல்லாம் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் தான்! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவை இல்லை என்பது, நன்றாகவே புரிகிறது.ஆனால் என்ன செய்ய?!

சேத் கோடின் சொல்வதைக் கொஞ்சம் என்னவென்று பார்த்து விடலாம்! அவர் சொல்கிறார், நிறுவனங்களுக்கு மனசாட்சி கிடையாது, அதெல்லாம்  அங்கே உள்ள நபர்களுக்கு மட்டும் தான்!

"நான் என்ன செய்யட்டும், என்னுடைய துறைக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது!", "நான் இங்கே வேலைதான் செய்கிறேன்" , "என்ன பண்ணுவது? இது என்னுடைய வேலை" இப்படிச் சொல்கிறபோதே, உங்களுடைய மனசாட்சியையும் கழற்றி வைத்து விட்டு, உங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள் என்கிறார் சேத் கோடின்


பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டு, வேறெவர் மீதோ பழியை சுமத்தி விடுவது கொஞ்சம் சிரமமே இல்லாத குறுக்குவழிதான்!  

எதற்கு? இந்த மாதிரி ஆசாமிகளால் நிரப்பப் பட்ட நிறுவனம் அல்லது பிராண்ட், வேகமாகக் காணாமலேயே போவதற்குத் தான்! 

முந்தைய நாட்களைப் போல அல்லாமல், நிறுவனங்களுக்கு இப்போது அதிக பலம், முதிர்ச்சி இருக்கிறது. எந்த அளவுக்குத் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, திறமையாக, வேகமாகச் செயல் படுகிறார்களோ அந்த அளவுக்கு பொருளாதாரத்தையும் மக்களையும் மாற்றக் கூடிய வல்லமை உள்ளதாக இருக்கிறது.இப்படிச் சொல்கிற சேத் கோடின், ஆகக் கூடி நாம் செய்ய வேண்டியதெல்லாம், தனிநபர்களாகப் பார்த்து,  யாரோ வந்து இதை நீ தான் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று சொல்கிற வரை காத்திருக்காமல், (அப்படி எவரும் வந்து சொல்லவும் மாட்டார்கள் ) தாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு முழுப் பொறுப்பேற்று செயல்பட்டாகவேண்டும் என்றும் முத்தாய்ப்பாகச் சொல்கிறார்.

இந்தப் பதிவைப் படித்துவிட்டுக் கொஞ்சம் யோசித்துக் கொண்டு இருந்ததில், ஏன் சில  நிறுவனங்கள், குறிப்பாகப் பொதுத்துறை நிறுவனங்கள், கற்றுக் கொள்ளும் நிறுவனங்களாகத் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளத் தவறிக் கொண்டே இருக்கின்றன என்பதைப் பார்த்தபோது, அருவருப்பும் ஆயாசமும் தான் மிஞ்சுகிறது

ஒரு நிறுவனம், கற்றுக் கொள்ளும் நிறுவனமாக, மாற்றங்களுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறனுடையதாக இருக்கிறதா என்பதை எப்படி அளவிடுவது? எதை வைத்துத் தெரிந்து கொள்வது?

எந்த ஒரு நிறுவனமும், ஒரு குறைந்தபட்ச நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தான் கட்டப் படுகிறது. அந்த நோக்கங்களை நிறைவேற்ற மனிதர்கள்  தேவைப்படுகிறார்கள். அப்படித் தேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மனிதர்கள், எந்த அளவுக்கு நிறுவனத்தின் நோக்கங்களைப் புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள் என்பது முதலில்! 

அதற்கப்புறம், அதை நிறைவேற்றுவதில் எந்த அளவுக்குத் திறமை, ஈடுபாட்டுடன் செயல் படுகிறார்கள் என்பது! இந்த இரண்டுக்கும் இடைவெளி எதுவும் இருக்கிறதா என்ற சுய சோதனை, இடை வெளியை நிரப்ப என்ன செய்கிறார்கள் என்பது அடுத்து. ஆக இப்படி  ஒரு நிறுவனம் நல்ல முறையில் இயங்குகிறதா இல்லையா என்பது ஒரு புறம்! காலத்துக்கேற்ற படி, மாற்றங்களுக்குத் தயாராக இருப்பது, மாற்றிக் கொள்வதும் இன்னொரு புறமுமாக, ஒரு நிறுவனம், அதில் உள்ள நபர்கள் பண்புகளை வளர்த்துக் கொண்டாக வேண்டி இருக்கிறது. 

ஆக நிறுவனப் பண்புகள் என்று சொல்லும்போதே, அது அதில் பணியாற்றும் மனிதர்களுடைய ஒட்டு மொத்தப் பண்பை அளவீடாகக் கொண்டு சொல்லப் படுவது என்பது தெளிவு.

எந்த ஒரு நிறுவனமாக இருக்கட்டும், அது ஒரு கற்றுக்கொள்ளும் நிறுவனமாக இருக்கிறதா, வெற்றிகரமாகச் செயல் படுகிறதா என்பதை, அந்த நிறுவனம் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்கிறது என்பதைக் கவனித்தாலே புரிந்து கொள்ளக் கூடியது தான்.

ஒரு பிரச்சினை, சவாலை எதிர்கொள்ளும் தருணத்தில் ----

முதலாவதாக, அந்தப் பிரச்சினை அல்லது சவாலைப் புறக்கணிக்கிறார்களா , அதற்குரிய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்களா?

இரண்டாவதாக, அடுத்தவர் மீது பழியைத் தூக்கிப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்களா?

மூன்றாவதாக, இந்த மாதிரிப் பிரச்சினை, புகார், குறை எப்போதுமே இருப்பது தான் என்ற மாதிரி அதைக் குறித்து ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களா? என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தத் தவறுகிறார்களா?

இந்த மூன்று கேள்விகளில் எந்த ஒன்றிற்கும் ஆமாம் என்பது பதிலாக இருக்குமானால், அந்த நிறுவனம் கற்றுக் கொள்ளத் தவறுகிற, சீக்கிரமே காலாவதியாகிப் போய்விடக் கூடிய நிறுவனம் தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்! அப்புறம், அதில் உள்ள ஆசாமிகளுமே கூட, அதே கதிக்குத் தான் போகவேண்டியவர்கள் என்பது தனியாகச் சொல்ல வேண்டிய ஒன்றா என்ன!

இப்படி இல்லாமல்-----

பிரச்சினைகள், புகார்கள், குறைபாடுகள் எல்லாம் அந்த நிறுவனம் செயல்படும் விதத்தில், பின்பற்றும் நடைமுறைகளில் தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும், அதே மாதிரி எதிர் காலத்தில் நிகழாமலும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை, அந்த நிறுவனத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் பணியாற்றுகிறவர்கள் முன்வந்து ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றிருந்தால், அந்த நிறுவனம் தன்னுடைய அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளக் கூடிய நிறுவனமாக  இருக்கிறது, மாறிவரும் சூழலுக்கேற்றபடி, தன்னைத் தகவமைத்துக் கொள்ளவும், தன்னுடைய திறமையைப் பெருக்கிக் கொள்ளவும் தெரிந்த வளரும் நிறுவனமாகவும் இருக்கிறது.

பிரச்சினைகள், அவை விடுக்கும் சவால்கள் என்பவை பயமுறுத்துபவையோ, தலையைச் சீவி விட்டுப்
போகிறவையோ அல்ல! திறமைகளை வளர்த்துக் கொள்ளக் கிடைக்கும் அற்புதமான வாய்ப்புத் தான்! பிரச்சினை என்று பார்த்தால், பிரச்சினைதான்! அதே நேரம், அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு, அது ஒரு கற்றுக் கொள்ளும் அனுபவம் மட்டுமல்ல, அதையும் தாண்டி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சேர்க்கும் ஏணியாகவும் இருக்கிறது.

இதில் புள்ளிராசா வங்கி எங்கே வருகிறது என்று கேட்கிறீர்களா? இங்கே இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்!
 
புள்ளிராசா வங்கி,  தலையில் இருந்து வால் நுனி வரை, எவருக்கும் தன்னுடைய  பொறுப்பு என்னவென்பதே இன்றைக்கும் தெரிந்து கொள்ளாமலேயே வண்டி ஒட்டிக் கொண்டிருக்கிறது. பிரச்சினைகள், புகார்கள் வெடித்து வெளியே வரும் வரை எவரும் எதுவுமே செய்ய மாட்டார்கள்,   அப்படி வரும் சமயத்தில், எவர் மீதாவது பழியைச் சுமத்தி வெளியே அனுப்பி விட்டால், Off with his head, Off with her head! என்று  தலையை சீவ உத்தரவு போட்டு விட்டால்  எல்லாம் சரியாகப் போய்விடும் என்று நம்பி செயல்பட்டுக் கொண்டே புள்ளிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிற பொதுத் துறை வங்கி அது!

அவ்வளவு தான்!

இது இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே வெளியானதன் மீள்பதிவுதான், இந்த சந்தர்ப்பத்துக்குத் தேவையான சில மாற்றங்களுடன்!


 

Saturday, December 18, 2010

மாற்றங்களுக்குத் தயாராவது-6


மாற்றங்களுக்குத் தயாராவது எப்படி ஆரம்பிக்கிறது என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்த ஐந்து பதிவுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாற்றங்கள், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒரு ஜென் ஞானியைப் போல மேகங்கள் வந்தன போயின, நான் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் வெறும் சாட்சி மட்டும் தான் என்று உலக வாழ்க்கையில் எல்லோராலும்  இருந்துவிட முடியாது அல்லவா?

மாற்றங்கள் எப்படி ஆரம்பிக்கின்றன? ஒரே நேரத்தில் எல்லோரிடத்திலும் மாற்றத்திற்கான ஆர்வம் ஆசை ஏற்பட்டு விடுவதில்லை என்பதை ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம். உண்மையை சொல்லப் போனால், மாற்றங்கள் எப்படி இருக்குமோ, நான் எதற்காக மாற வேண்டும்,
என்னை விட்டு விடுங்கள், நான் இப்படியே இருந்து விட்டுப் போய் விடுகிறேனே என்று முதலில் கெஞ்சலாகவும் பிறகு முரட்டுப் பிடிவாதமுமாக ஒரு எதிர்ப்பு நிலை ஏற்படுவதைத் தான் காலம் காலமாகப் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறோம். மாற்றங்களுக்குத் தயாராக முரண்டு பிடிப்பது, பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவது என்பது மனித இனத்தின் பொதுவான தன்மைதான். ஆனாலும் மாற்றங்கள், அந்தப் பொதுவான தன்மையையும் உடைத்து, பழமையைப் புரட்டிப் போட்டுவிடுகிறதாக வந்து கொண்டே இருப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா?

க, மாற்றங்கள் என்பது, ஒரு தனிநபர் அல்லது ஒரு சிறிய குழுவினால் முன்னோடிகளாகக் கொண்டு ஆரம்பித்திருப்பதை வரலாற்றை சரியாகப் புரிந்துகொண்டாலே நம்மால் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக,கிறித்தவ திருச்சபையின் இறுக்கமான பிடியில் மத நம்பிக்கை, இந்த பூமி தான் படைப்பின் நடுநாயகமாக இருக்கிறது என்பதை நம்ப வைத்துக் கொண்டிருந்தது; மக்களும் ஆடு மந்தையைப் போல ஆமாம் ஆமாம் என்று தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். கலீலியோ என்ற விஞ்ஞானி, உண்மையில் பூமி சூரியனைச் சுற்றி வரும் பல கிரகங்களில் ஒன்று தான் என்பதை சொன்னபோது முரட்டுத் தனமாக, எதிக்கத் தான் பழக்கங்களின் அடிமையாகவே இருந்து பழக்கப்பட்டுப் போனவர்களுக்குத் தெரிந்திருந்தது.வாடிகன் மிகக் கடுமையாக மத நம்பிக்கைத் திணிக்க முற்பட்டபோது என்ன நடந்தது என்பதை அறிவியல் வரலாறு சொல்கிறது. (அறிவியல் வரலாறு என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நூலின் அற்புதமான தமிழ்மொழி பெயர்ப்பாகத் திரு.பெ.நா. அப்புசாமி, எழுதியிருந்த நூலை இளம் வயதில் படித்த நினைவு வருகிறது.)

ந்த முன்னோடி அல்லது முன்னோடிகளைத் தான் மாற்றங்களைத் தலைமையேற்று வழிநடத்துபவர்கள் என்று சொல்கிறோம். கலீலியோவை ஆரம்ப கட்டத்தில் ஏளனம் செய்த, எரிக்க முயன்ற வெறியர்களுடைய பார்வையில் அவர் ஒரு கிறுக்கனாகத் தான் தெரிந்தார். ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப் பட்டதாகவோ, உலகம் என்ன சொல்கிறது என்பதை அடியொற்றித் தான் தானும் ஆமாம் சாமி போடுகிறவனாக இருக்கவேண்டும் என்பவராகவோ இருக்கவில்லை. தன்னுடைய கண்டுபிடிப்பில் அவர் உறுதியாக இருந்தார், அதைப் புரிந்து கொள்ள தயாராக இருந்த
நபர்களுக்குப் பொறுமையாக விளக்கவும் தயாராக இருந்தார். கடைசியில் என்ன ஆயிற்று என்பது இந்நேரம் உங்களுக்கே புரிந்திருக்கும்! எதிர்த்து நின்றவர்களுடைய எண்ணிக்கை, பயமுறுத்தல், ஏளனங்கள் அவரை சலனப் பட செய்யவில்லை. மாறாக, அவர் என்னதான் சொல்கிறார், அது உண்மையா என்று தெரிந்து கொள்ள ஒவ்வொருவராக முன்வர ஆரம்பித்தார்கள். இங்கே ஒரு கருத்து, அதற்கு ஆரம்பத்தில் ஒட்டு மொத்த எதிர்ப்பு, அப்புறம் இதில் உண்மை இருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள ஒவ்வொருவராக முன்வந்த விதம், இப்படி சிறுதுளியாகப் பெருகிக் கொண்டே போனதில், எந்தக் கட்டத்தில் மாற்றத்திற்கான எதிர்ப்பு அடித்துச் செல்லப் பட்டது என்பதைத் துல்லியமாக எவராலும் கணிக்க முடியாது என்பதே உண்மை.

ஜான் பி கோட்டர் முதலான ஆசிரியர்கள் எழுதிய பல நூல்களைப் படிப்பது ஒரு ஆரம்பம் மட்டுமே. நடைமுறையில் நம்மை சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முயற்சித்தாலேயே, புத்தகங்களையும் தாண்டிய அனுபவங்கள், நாம் சரியாகப் புரிந்து கொண்டு ஜெயித்தவை, புரிந்துகொள்ளத் தவறித் தோல்வியில் முடிந்தவை என்று பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.



Think differently  என்ற வலைப்பதிவில் ஒரு மாதத்திற்கு முன்னால், திரு மக்கின்னான், டெரெக் சிவெர்ஸ் என்பவர் யூட்யூபில் தலைமைப் பண்பு  குறித்து வலையேற்றம் செய்திருந்த வீடியோ ஒன்றை மேற்கோள் காட்டி இருந்தார். இந்த மூன்று நிமிட வீடியோவைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள்.

மேல் சட்டை அணியாத ஒருவர், சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், நடனமாட ஆரம்பிக்கிறார். சிறிது நேரமானதும் இன்னொருவரும் சேர்ந்து கொள்கிறார்.  


ந்த முதல் பின்பற்றும் நபர்  கிடைக்கும் அந்தத் தருணம் தான் மிக முக்கியம்

ரண்டுபேர் சேர்ந்து நடனமாட ஆரம்பித்ததும், மூன்றாவதாக ஒருவர் சேர்ந்து கொள்ள, நடனமாடும் விருப்பம் ஒரு கூட்டத்தின் விருப்பமாக மாற ஆரம்பிக்கிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்!

மாற்றத்திற்குத் தயாராவதும் இப்படித் தான்! ஒரு தலைவன் அல்லது முன்னோடி, மாற்றத்திற்கு வித்தாக இருக்கிறான். அவனைப் பின்பற்றும் அந்த முதலாவது, இரண்டாவது ஆர்வலர்கள் தான் முக்கியம். அப்புறம் அது எல்லோருக்கும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது!

கொஞ்சம் யோசித்துப் பார்த்து விட்டு என்ன தோன்றுகிறது என்பதை சொல்லுங்கள்!

தொடர்ந்து பேசுவோம்!


 

Monday, December 13, 2010

மாற்றங்களுக்குத் தயாராவது! - 5

மாற்றங்களை எதிர்கொள்வது, மாற்றங்களுக்குத் தயார் செய்து கொள்வது குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஜான் பி கோட்டர்
ழுதிய ஒரு புத்தகத்தை  அடிப்படையாக வைத்துக் கொண்டு, நாம் நம்முடைய அன்றாட வாழ்விலேயே பார்த்துக் கொண்டிருக்கிற, நடப்பு விஷயங்களோடும், நாம் அறிந்த சில நிறுவனங்களின் செயல்பாடுகள், அனுபவங்களில் இருந்தும் மாற்றம் என்பது என்ன, மாற்றத்திற்குத் தயார் செய்து கொள்வது என்றால் என்ன என்பதையும் சின்ன சின்ன உதாரணங்களோடும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

எனக்கு அதிகம் பரிச்சயமானது வங்கித் துறை என்பதால், நான் நன்கு அறிந்த ஒரு பொதுத்துறை வங்கி, புள்ளிராசா வங்கி என்று அதன் தன்மையை வைத்து அழைத்து, அதில் நடந்து கொண்டிருப்பதைப் பற்றியும் கொஞ்சம் இந்தத் தலைப்புக்குப் பொருத்தமான சம்பவங்களையும் சேர்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மாற்றங்களுக்குத் தடையாக இருப்பதாக ஜான் பி கோட்டர் ஒரு எட்டுக் காரணங்களைப் பட்டியலிடுவதை, அதற்கு மாற்றாக, மாற்றத்தைத் திறம்பட நிர்வகிக்க வேறொரு எட்டு வழிகளையும் அவர் பரிந்துரைப்பதை முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். 

அவர் தன்னுடைய புத்தகத்தின் மையக் கருத்தாக சொல்வது மூன்றே மூன்று அடிப்படையான விஷயங்கள் தான்! 

மாற்றங்களை சாதிக்கத் தெளிவான பார்வையும், தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டுதலாக இருக்கும் நல்ல ஒரு தலைமை, தலைமையின் தெளிவான பார்வையைப் புரிந்து கொண்டு செயல்படும் ஊழியர்கள், தலைவர்களும், அவர்களைப் பின்பற்றி நடப்பவர்க்களுமான ஒரு நல்ல நிறுவனப் பண்பு இப்படி மூன்றே விதமாக மாற்றத்தை எதிர்கொள்வது, மாற்றத்துக்குத் தயாராவது, மாற்றத்தை சாதிப்பது என்பது நிகழ்கிறது.
தலைமைப் பண்பு என்பதும், நிர்வாகத் திறன் என்பதும் வேறு வேறானவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு நல்ல தலைமை, என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான பார்வையை உருவாக்கும் வல்லமை படைத்ததாக, தாங்கள் காணும் லட்சியத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக, அதை அடைய செயல் படுகிறவர்களாக, தங்களைப் பின்தொடர்பவர்களாக ஊழியர்களை உருவாக்க முடிந்தவர்களாக என்று தலைமையேற்று  நடத்துபவர்களின் மீதுதான் முதலாவதாக ஆதாரப்பட்டு நிற்கிறது.


"You can’t expect your employees to exceed the expectations of your customers if you don’t exceed the employees’ expectations of management. "

— Howard Schultz


இந்த வார்த்தைகளை விளக்குவதாக ,பிசினெஸ் ஓர்ல்ட் வார இதழில் ஓராண்டுக்கு முன்னால் வெளிவந்த ஒரு கேஸ் ஸ்டடியை இங்கே படிக்கலாம்.


மாற்றங்கள் எங்கிருந்தோ எவராலோ திணிக்கப்பட்டு நிகழ்வதல்ல. அப்படித் திணிக்கப்படும்போது ஊழியர்களை
கொல்வதற்கு சமமாக இருக்கும் என்பதை ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூ வலைத் தளத்தில் சென்ற மாதம் வெளிவந்த ஒரு பதிவின் சுட்டியை முந்தைய பதிவில் கவனித்துப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால், அதையும் படித்துப் பார்த்துவிடுங்களேன்!

ஸ்ரீ அரவிந்த அன்னை, தன்னிடம் வரும் அடியவர்களுக்கு சொன்னதன் ஒரு பகுதியை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமாகவும், உபயோகமாகவும்  இருக்கும்.


No Imposition

“The Mother once told this writer that she could effect the desired changes in the Ashram collectivity in a trice but she did not wish to do so. She preferred to wait for the change to come about spontaneously, from within.

That was her way and that is also the Divine's way.

Changes imposed from above or outside are not natural. They do not last. When the pressure is relaxed, things tend to swing back to their original rhythm. It is only when the necessity of a change is realised within oneself and the will is exerted accordingly that the change is accepted in the whole of the being and integrated with the general nature. Only so can the change cease to be artificial and superficial and become natural.

Besides it is a law of this manifestation to let everything evolve in full freedom.

Freedom is the law of growth. Even though all has issued from the Divine and is essentially maintained by the Divine, each is given full freedom to follow its own choice of direction and pace. The Oversoul never takes possession of the soul, it oversees, presides over its evolution but does not interfere with its liberty. It is the soul below that has to make the effort to come closer to the Oversoul, aspire for its union with the higher counterpart. The latter patiently waits for it to be ready and want to unite with it. Only so can the union be joyous culmination of a movement that proceeds spontaneously from the embodied soul. The initiative and the onus of the operation lies with the lower term.

So too with the world. The universe has indeed emanated the Being of the Supreme Lord. It has been released into manifestation with a purpose; to manifest the Divine Will. The details of the working out of the process, however, are left to the Soul in Becoming. And this Soul is multiple. There may be, and are, deviations from the main Intention, deformations in the process consequent on this departure from the central Truth. But the Divine does not interfere.

The Divine allows full scope for the consequences of such aberrations to be worked out; it waits for the movement—collective and individual—to correct itself and put itself in time with the higher Will. The Divine does not participate. The universe has to take steps to orientate its directs towards the Divine, feel the need to be restored to its Parent Divine, to be possessed by the Divine, before the Divine Lord responds by taking possession of it. The movement on the part of the universe or the individual has to be conscious, willed effort to become one with the Divine Lord.

In all this operation the Divine's help is of course there to be drawn upon; but it is not imposed. That would be contrary to the Law of manifestation. For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”


Excerpted from and acknowledged with thanks and gratitude:

“Commentaries on The Mother's Ministry” Part II 
by Sri M P Pandit, Published by Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.

மாற்றங்களை வலிந்து திணிப்பதால் பயனேதும் இருக்காது. மாற்றங்களுக்குத் தயார் செய்துகொள்ளவேண்டும், ஒருமித்துச் செயல் பட வேண்டும். வெறும் உத்தரவுகளால், அதை சாதிக்க முடியாது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு உங்கள் மனதில் படுவதைப் பின்னூட்டமாக எழுதுங்கள். இங்கே மாற்றங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்திருப்பது, Change Management  என்ற தலைப்பிலான பாடங்களோ பரீட்சையோ அல்ல. 

மாற்றங்களுக்கு  நம்மைத் தயார் செய்துகொள்வதற்கான, மாற்றங்களுக்கான விதையாக நாமே மாறுவதற்கான அச்சாரமாகத் தான் இந்தத் தொடர்பதிவுகள்!

தயார் தானே!!



Saturday, December 11, 2010

மாற்றங்களுக்குத் தயாராவது - 4


மாற்றங்களை எதிர்கொள்வது, மாற்றங்களுக்குத் தயாராவது என்பது என்னவோ இமய மலை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது போல சாத்தியமே இல்லாத ஒன்றாக  எண்ணி மயங்கும் போது, மலைத்து நிற்கும் போதுதான் கடினமான ஒன்றாக, சிக்கல்கள் நிறைந்ததாக ஆகிறது.

உண்மையில் மாற்றம் என்பது, நம்முடைய கற்பிதங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தோமேயானால், மிகவும் இயல்பானதாக, எளிமையாகத் தான் இருக்கும்.

மாற்றம் என்பது ஒரு அடிப்படை விதி. எல்லாமே மாறிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிச் சொல்லும் போது சரி என்று தான் படுகிறது, ஆனாலும் மாற்றம் என்று ஒன்றைப் பார்க்கும்போது அதை உடனடியாக ஏற்றுக் கொள்வதற்கு நம்முடைய மனம் ஏனோ தயங்குகிறது. ஏனோ ஏற்றுக் கொள்ள மறுக்கிறது இல்லையா? 


கொஞ்சம் இதற்கான காரணம் என்னவென்று உற்றுநோக்கத் தெரிந்து கொண்டால், பழக்கங்களின் அடிமையாகவே மனம் உழலும் போது புதியதை ஏற்கத் தயங்குகிறது! தெரியாத ஒன்று எப்படி இருக்குமோ யார்கண்டது என்று, நான் பழையபடியே, எனக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தால் கூட சகித்துக் கொள்கிறேன், என்னை விட்டு விடு என்று பிடிவாதம் செய்கிறது. 

ஆக மாற்றம் எப்படி இருக்குமோ என்ற கற்பனையான பயம் தான் மாற்றத்தை எதிர்க்க மூல காரணமாக இருக்கிறது.

மிகவும் பச்சையாக, நேரடியாக சொல்வதென்றால், எல்லோரும் உலகத்தை மாற்ற விரும்புகிறார்கள், முயற்சிக்கிறார்கள்; ஆனால் ஒருவர்கூடத் தங்களை மாற்றிக் கொள்ள விரும்புவதுமில்லை, முயசிப்பதுமில்லை!

நிறுவனங்களைப் பற்றிப் பேசும்போது, ஒரு உதாரணத்திற்காக, புள்ளிராசா வங்கியில் கோர் பாங்கிங் அறிமுகமானது. புதிய தொழில்நுட்பத்திற்கு ஊழியர்களும் தயாராக இல்லை, வாடிக்கையாளர்களும் புதிய முறைக்குத் தயாராகவில்லை. சின்ன சின்னக் காரணங்களுக்காகத் தாமதமான ஒவ்வொரு நிமிடமும் வாடிக்கையாளரின் அதிருப்திக்கு ஆளாக வேண்டி வந்தபோது, புதிய தொழில்நுட்பத்தைத் தான் அவர்களால் குற்றம் சொல்ல முடிந்ததே தவிர, தங்களிடம் இருந்த குறைகளைப் பார்க்க முடியவில்லை, தெரியவும் இல்லை! ஒரு கற்றுக் கொள்ளும் நிறுவனமாகப் புள்ளிராசா வங்கி எப்போதுமே இருந்ததில்லை என்பதும் கூட சேர்ந்து கொண்டது. இன்றைக்கும் கூட ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை டெபாசிட், கடன் மீதான வட்டி விகிதங்களை, சந்தை நிலவரங்களுக்குத் தகுந்தமாதிரி நிர்ணயம் செய்து அறிவிக்கும் வேகம், தைரியம் இந்தப் புள்ளிராசா வங்கிக்கு இன்றைக்கும் கூட இல்லை. மற்ற பெரிய வங்கிகள் அறிவித்து முடித்த பிறகு, அதைப் பார்த்து  தன்னுடைய வட்டி விகிதங்களை அறிவிக்கும் ஒரு வங்கியின் தலைமை எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! உண்மை நிலவரம் உங்களால் கற்பனை செய்ய முடிவதை விட மிகக் கேவலமானது.

ஆமாம்-இல்லை, முடியும்-முடியாது, உடனடியாக-சற்று தாமதமாக என்று மிக எளிதாக பதில் சொல்லக் கூடிய கேள்விகளைக் கூட, மிக சிக்கலான பதிலாக மாற்றிப் பார்க்கும் கோளாறு நிறுவனங்களில் சர்வசாதாரணம். ஒரு தனிநபராக, வீண் கற்பனையான பயம், உண்மையைப் பார்க்கத் தடையாக இருப்பதைப் போல, நிறுவனங்களில் வேறுவிதமான கோளாறு ஆட்டிப் படைக்கிறது. பொறுப்பைத் தட்டிக் கழித்து, மற்றவர் தலையில் கட்டிவிடப்பார்க்கும் மனோபாவமாக, மிக மோசமான நிறுவனப் பண்பாக இத்தகைய கோளாறு உருவெடுக்கிறது.புள்ளிராசாவங்கியின் அடிப்படைக் கோளாறே, "தானாகவும் தெரியாது- பிறர் சொன்னாலும் ஏறாது" என்பது தான்!



"The basic idea is that people go to great lengths to repress awareness of mortality. Studies show that we create three existential buffers to protect us from this knowledge: Consistency allows us to see the world as orderly, predictable, familiar, and safe. Standards of justice allow us to establish and enforce a code of what's good and fair. Culture imbues us with the sense that we have contributed to, and are participating in, a larger and enduring system of beliefs.


Anything that threatens these buffers exposes us to the looming reality of death. Change an employee's routine, and you've undermined the consistency barrier. Tell a salesperson he'll no longer be evaluated on the basis of revenue and now must hit certain cross-selling and teamwork targets, and you've attacked his standard of justice. Alter the company's mission, and you've pierced the culture buffer by requiring him to reconstruct his worldview."

Change Management சம்பந்தமாக சமீபத்தில் படித்த   ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூ தளத்தில் வெளியான பதிவு ஒன்றின் பகுதி

இந்தப் பதிவில் அழுத்தம் கொடுத்துச் சொல்லப்படுவது ஒரு நிறுவனத் தலைமை, மாற்றத்திற்குத் திட்டமிடும்போது எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பது தான்! முடிந்தால் இந்தப் பதிவிற்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களோடும் சேர்த்து வாசித்துப் பாருங்கள்! குறிப்பாக, நீல்சன் என்பவர் எழுதிய இந்தப் பின்னூட்டம்:
 
"Very interesting piece. Change is one of the most difficult challenges that we deal with on a regular basis. We are all comforted by knowing what to expect. This is especially true when our performance is being evaluated.

We have all heard the ubiquitous phrase that "change is constant," so why are most of us so bad at it? Moreover, whey are those of us who have been generally "successful" even more challenged by the prospect of change? One answer involves our lack of contextual awareness. The context within which most people work has changed or is changing. This means that the knowledge, skills, and abilities that led to success in the past may not lead to success in the future.

While this fundamental doctrine is easy to understand intellectually, it is very difficult for both individuals and organizations to apply. Changing the way we do things in order to continue our success in a new context is one of the most basic challenges that many of us face."


People -->Process -->Culture! இதுதான் மாற்றங்களுக்குத் தயாராவதில் உள்ள மூன்று அடிப்படை விஷயங்கள்! முந்தைய பதிவின் ஆரம்பத்தில் இதை அறிமுகப் படுத்துகிற மாதிரி ஒரு படம், நினைவு படுத்திக் கொள்வதற்காக மீண்டும் ஒருமுறை!



இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)