Sunday, March 31, 2019

அமேதி போயாச்சு வயநாடு வந்ததே! டும் டும் டும்!

ராகுல் காண்டி தன்னை காஷ்மீர் கவுல் பிராமணனாக அறிவித்துக் கொண்டு கோவில் கோவிலாகப்போய் வழிபாடு செய்கிற மாதிரி ஸ்டன்ட் அடித்துப்பார்த்தும் கூட அமேதி தொகுதியில் ஸ்ம்ருதி ஈரானிக்கு ஈடு கொடுக்க முடியாதென்பது  தான் கள யதார்த்தம்!


sting operation conducted by Times Now had thrown up some startling admissions by a Congress MLA regarding why Rahul Gandhi would be choosing Wayanad as his safe seat. In the sting video, a senior Congress Party leader could be seen saying Congress President Rahul Gandhi is facing pressure in Amethi and has to find a safe seat, implying that he should contest from Wayanad as Hindus form a minority in Wayanad constituency which will ensure an easy victory for Rahul Gandhi என்கிறார்கள் இங்கேபாட்டி இந்திரா அன்னை அன்டோனியோ மைனோ (சோனியாவின் ஒரிஜினல் பெயர்)  காட்டிய வழியில் ராகுலும் தெற்கே பாதுகாப்பான தொகுதி தேடியதில், இஸ்லாமியர் கிறித்தவர் வாக்குகள் மெஜாரிடியாக இருக்கும் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.The Janeu Dhari Shiv Bhakt avatar of Rahul Gandhi during the Gujarat elections was soon betrayed by the realisation that Congress if it wishes to survive, would need to bank on non-Hindu votes. It perhaps became even more apparent when the residents of Amethi expressed their resentment with the Congress party and the dynasty saying that they did not want to empower Muslims in the area அந்த செய்தி உண்மையைப்போட்டு உடைக்கிறது.ஆனால் இடதுசாரிகள் ராகுல் அங்கே போட்டியிடுவது தங்களுக்கெதிராகத்தான் என்று கொதிக்கிறார்கள். தோற்கடிக்காமல் விடமாட்டோம் என்று சூளுரை, முழக்கங்கள் வேறு!  

மல்லுதேச எம்பி ஆவது கூடப் பெரிய விஷயமில்லை. கேரள நலன் சார்ந்தே பேசவேண்டும் என்பதும் தன்னை ஜெயிக்கவைத்த தொகுதிக்குக் கட்டாயம் ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்பதும் அமேதியில் ஜெயித்து எம்பி ஆனபிறகும் தொகுதியைத் தங்கள் பண்ணையம்  மாதிரி வைத்திருந்தது போல  சேட்டன் மாரிடம் செல்லாது என்பதும் தெரியுமோ என்னவோ?       
Banu Gomes
இந்து மதத்தை விஷம் போல வெறுக்கும் தமிழக ஹிட்லர்கள் குழு .. கிருஷ்ணரை குறித்து மார்ச் 22 அன்று தண்டனைக்குரிய வகையில் பேசி மீண்டும் இந்து வெறுப்பு பிரச்சாரம் செய்த விடியோவை காண நேர்ந்தது.
''eve teasing -க்கு முன்னோடி கிருஷ்ணன் தான் . பொள்ளாச்சி வீடியோ பதிவுகள் அவன் கையில் கிடைத்திருந்தால்..தேவ லோகத்தில் அனைவருக்கும் போட்டு காட்டி இருப்பான்'' என்கிற பிதற்றலாக அப் பேச்சு இருக்கிறது.
இந்த பிதற்றல் பேச்சை..அதன் நட்பு கட்சிகள் எதுவும் கண்டிக்கவும் இல்லை. இதற்கு பலன் தரக்கூடிய, பொருள் பொதிந்த எதிர்வினைகள் இரண்டு தான் உண்டு.
1. இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் தொடர்ந்து அவதூறு செய்து இந்து மக்களை புண்படுத்தும் தி.மு,க. + அரசியல் கட்சிகளுக்கு ...வாக்களிக்காமல் முற்றிலுமாக புறக்கணிப்பது.
2. இன்னும் அதிகமாக கிருஷ்ணரை கும்பிடுவது. 
செய்து பாருங்கள்.
அடுத்த தேர்தலில் ..அவதூறு பேசிய இதே கட்சிகள்.. கிருஷ்ணர் வேடமணிந்து..பஜனைகள் பாடி... வாக்கு கேட்டு.. உங்களை தேடி வருவார்கள் !
இந்த இணையதளத்தைப் பற்றி
  
இதெல்லாம் லுலுலாயிக்குத்தான் என்பது பாளையக் காரர்களுக்குத் தெரியாதா என்ன? 

"தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் கூட ஹெச்.ராஜா போன்ற கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை பார்க்கவே  முடியாது; அவரைத்  தான் பாஜக வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது” - ஸ்டாலின்
அப்படி அவர் செய்த அயோக்கியத்தனம் என்ன? அவர் என்ன ஊழல் செய்து சொத்து சேர்த்திருக்காரா? சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்துள்ளாரா?இல்லை பெண்கள் விஷயத்தில் பெயரை கெடுத்து கொண்டாரா? சாதி கலவரத்தை தூண்டினாரா? அடுத்தவன் வயிற்றில் அடித்து அவன் சொத்தை ஆட்டைய போட்டாரா? இப்படி ஊரில் இருக்கும் அத்தனை அயோக்கியத்  தனங்களையும் செய்த இசுடாலின்  வெட்கப்படாமல்  தேர்தலை சந்திக்கும் போது H ராஜா கடைந்தெடுத்த அயோக்கியனா?  என்று முகநூலில் பொருமுகிறார் கார்த்திக் விஸ்வநாதன். பாவம், தமிழக அரசியல் களம் எப்படிப்பட்டது என்பதை அறியாத அப்பாவி போல!  

பின்னே! திராவிடமாயை என்றால் சும்மாவா?  
    

Saturday, March 30, 2019

சிவன்கோவில் கட்டினாரா திருமா ? இது என்ன புதுக்கூத்து?

கார்த்தி சிதம்பரத்தை ஆதரிக்கிற சாக்கில் இசுடாலின் பிஜேபியின் H ராஜாவை கடைந்தெடுத்த அயோக்கியன் என்று வெறுப்பைக் கக்கியதில், H ராஜா எழுப்புகிற பல கேள்விகள் திராவிடங்களையும் கூட்டாளி சிவகங்கை ஜாமீன்களையும் எப்படி உறுத்தியிருக்கின்றன என்பது மட்டுமே வெளிப்பட்டது. வெறுப்பரசியலை விதைத்த திராவிடங்கள் அந்த வெறுப்பிலேயே வெந்து முடியப் போகிறார்களோ?


‘‘கூட்டணிக் கட்சிகள் எனக்கு அசுரபலம். அதிலும் எதிரணியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் களத்தில் நிற்பது, என் வெற்றிக்குக் கூடுதல் பலம். 30 ஆண்டுகளுக்கு மேல் இந்தத் தொகுதியின் எம்.பி-யாக இருந்த சிதம்பரம், கொண்டுவராத திட்டங்களைக் கொண்டுவர இருக்கிறேன். மோடி அரசின் சாதனைகள், தமிழக அரசின் சாதனைகள் என் வெற்றிக்கு உதவும்.’’ -ஹெச்.ராஜா
“பி.ஜே.பி ஆட்சியில் பணமதிப்பிழப்பு, குழப்பமான ஜி.எஸ்.டி., சிறுபான்மையினருக்கான அச்சுறுத்தல் என்று பிரச்னைகள் ஏராளம். தமிழகத்தில், ‘மோடிஎம்கே’ ஆட்சி அகற்றப்பட வேண்டும். நான் வெற்றிபெற்றால், தனியார் நிறுவனங்கள் மூலமாக இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘ஸ்பைசஸ் பார்க்’ திறக்கப்படும்.’’ - கார்த்தி சிதம்பரம்  
கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒருகாலத்தில் அதன் எதிரிகளும் வியந்து பாராட்டிய கட்சிக்கட்டுப்பாடு, இன்றைக்குக் காணாமலேயே போய்விட்டதோ?


மதுரை நாடாளுமன்றத்தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர் சு வெங்கடேசன் மதுரைத் தொகுதிக்கென்றே தனியாகவொரு  தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறாராம்! CPI நல்லகண்ணு, திமுக ஆசாமிகளை மட்டும்   படத்தில்  காண முடிகிறது. சு.வெங்கடேசன், எழுத்தாளராக அறிமுகம் ஆகிக் கொண்டிருந்த அந்த நாட்களிலேயே கட்சியைத் தனது ஓட்டுவாலாகவே நினைத்தவர் என்பது கட்சி வட்டாரங்களில் உரக்கவே கேட்க முடிந்த அதிருப்திக் குரல்கள்தான்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வளவு தேய்ந்து சிற்றெறும்பாக குறுகிப்போய்க் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளமாகத் தான் பார்க்கமுடிகிறது. தொடர்புடைய பதிவு இடதுசாரிகள் இங்கே தீண்டத் தகாத கட்சிகள் தானா?

ரங்கராஜ் பாண்டே இந்த வீடியோவைப் பகிர்ந்து இருப்பது எனக்கு ஆச்சரியம் இல்லை. திருமாவளவன் சிவன்கோவில் கட்டியதாகச் சொல்வதும் கூட! சலுகைகளுக்காக இந்து என்று சொல்லிக் கொள்வதும் கிறித்தவர்களாக வாழ்வதும் இங்கே மிகச் சாதாரணமாகிப்போய்விட்ட விஷயம். தேர்தல் நேரத்தில் இந்து வாக்குகளை இழக்கத் தயாராக ஏதாவதொரு  வேட்பாளரோ, கட்சியோ உள்ள தேசமா இது? !!   

ரெட்டியார்கள், கொண்டாரெட்டி ஜாதிச் சான்றிதழ் வாங்குவதும், நாயக்கர்கள் காட்டுநாய்க்கன் ஜாதிச் சான்றிதழ் வாங்குவதும் அப்படிச் சான்றிதழ் வாங்கி SC/ST சலுகைகளை அனுபவிப்பதும் இங்கே சர்வ சாதாரணம்! கிறித்தவ மதத்துக்கு மாறி இந்து என்று சான்றிதழ் கொடுத்து SC/ST சலுகை அனுபவித்த ஒருவர் சிக்கிக் கொண்டபோது தொழிற்சங்கம் அவரை இப்படி பதிலெழுத வைத்துக் காப்பாற்றிய கதையையும் நேரடியாகவே அறிவேன்.  I am born as Hindu but practising christianity!  கேஸ் மூடப்பட்டது. அரசியல்ல  இதெல்லாம் சாதாரணமப்பா ரகம்தான்!
      
மீண்டும் சந்திப்போம்.
         

விந்தைகள் நிறைந்தது தேர்தல்களம்!

ஹரன் பிரசன்னா முகநூல் பகிர்வில் இந்த வீடியோவை பார்த்தேன். உண்மையிலேயே வேறே லெவல்! வெறும் 45 வினாடிகள்தான்! கன்னத்தில் அறைந்து நடப்பு நிலவரத்தைச் சொல்கிறது. ரெண்டு முருகன் வீட்டில் ரெய்டு நடந்தது பற்றி இசுடாலின் ஏதாவது சொல்லியிருக்கிறாரா என்று பார்த்தால் கண்டனம் தெரிவித்திருக்கிறாராம்! தினமணி தளத்தில் செய்தி 

பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் என்று சொன்னாராம் துரைமுருகன். பயந்துகொண்டே சொன்னாரா அல்லது பயப்படாமல்தான் சொன்னாரா என்று தெரிந்துகொள்ள ஆசைதான்!

இது  ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளத்தில் வெளியான நையாண்டி. இந்து தமிழ்திசை வேறுமாதிரி கவலைப்படுகிறது.

ஏன் வாரிசுகளே இல்லையா என்ன? எதற்கு இந்த வீண் கவலை?  


ஜனவரி 23 இல் சனாதன வேரறுப்போம்! ஜனநாயகம் காப்போம்! என்று சூளுரைத்து திமுக கூட்டணியில் 2 சீட் வாங்கிவிட்ட திருமாவளவன்  செய்திருப்பது என்ன? சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குப்போய், திருநீறு பூசி தீட்சிதர்களிடம் வாக்கு சேகரித்தாராம்! விகடன் தளம் செய்தி சொல்கிறது.

சரி, வேட்பாளர் வந்தார்! கும்பிடுபோட்டார்! தீட்சிதர்கள் திருநீறு கொடுத்தனுப்பியதோடு விட வேண்டியதுதானே? ஆளூர் ஷா நவாசுக்கு இந்துக் கோவிலுக்குள் என்ன வேலை?   கோவிலுக்குள் வந்து வாக்கு சேகரிப்பது என்ன தேர்தல் லோலாயித்தனம்? 

Raja Sankar
கோவிலுக்கு வந்தா திருநீறு கொடுத்துவிட்டா போதாதா?
இப்படி இளிச்சிட்டே கொஞ்சி குலாவ வேணுமா? விட்டா காலிலியே விழுந்து ஆசீர்வாதம் வாங்கிருப்பாங்க போல.
இதனால் தான் பூணூல் அறுத்தாலும் திட்டினாலும் அடித்தாலும் மற்றவர்கள் யாரும் உதவிக்கு வர்றதில்லை.
பின்னே இவிங்களுக்கு உதவ போயி இவிங்களே பூணூல் அறுத்தவனோட கொஞ்சி குலாவ போயிடுவாங்க எல்லாம் நினைக்கறாங்க.இதுல பலருக்கு ரோஷம் பொத்துட்டு வருதாம். வந்தா வாங்க வராட்டி போங்கன்னு. அதான் யாரும் வர்றதில்லையே அப்புறம்?
அப்படி அந்த வயிறுக்கு சோறூ தின்னேதான் ஆகனுமா?
கொஞ்சமாச்சும் வெக்கம் ரோஷம் மானம் எல்லாம் வேண்டாமா?இதுல யாராச்சும் தமிழ்ல பாடுவேன் அப்படீன்னா மட்டும் உடனே ரவுடி ஐயர் ஆகிடுவாங்க.
ஏன்னா பசிக்கும்ல அப்படீன்னு.அப்படீன்னா என்ன? இந்த கோவிலை இடிப்பேன் என சொன்ன ஆட்களுக்கு இந்த தீட்சிதர்கள் ஆதரவாகத்தானே இருக்கிறார்கள் என அர்த்தம்.
ஒருவேளை அந்த கட்சியிலேயே மானவெக்கம் இல்லாம உறூப்பினராக இருப்பாங்களா? இதையும் செஞ்சிட்டு ஆ ஊன்னா சாஸ்திரம் சம்பிரதாயம் என சொல்லுவாங்க பாருங்க கடுப்பாவும். முதல்ல நீங்க சாஸ்திரம் சம்பிரததாயத்தை எல்லாம் கடைபிடிங்க. அப்பாலிக்கா மத்தவிங்களுக்கு அறிவுரை சொல்லலாம்.சாதிக்கு 5 சதம் பத்து சதம் இப்படி கோடாரிக்காம்புகள் இருக்கறது உலக வழக்கம் தான். 
ஆனா சாதியே கோடாரிக்காம்புகளால் ஆனதா இருக்ககூடாது. அழிஞ்சு தான் போவும். 

என்று பொங்கியிருப்பதில் தவறே இல்லை! இங்கே ராதிகா கீச்சுக்கு ஒருத்தர் பொங்கியிருக்கிறார்! 
விந்தைகள் நிறைந்தது தேர்தல் களம்! 
      

Friday, March 29, 2019

இடதுசாரிகள் இங்கே தீண்டத் தகாத கட்சிகள் தானா?

ஒரு காலத்தில் உ.பி.யின் முக்கியக் கட்சிகளின் கூட்டணிகளில் தவறாமல் இடம்பெற்றவர்கள் இடதுசாரிகள். இவர்களில், அதிக செல்வாக்கு பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) அதிகபட்சமாக 1967-ல் ஆறு தொகுதி கிடைத்திருந்தது. அதே 6 தொகுதிகள் மீண்டும் 1984-ல் சிபிஐக்கு உ.பி.யில் கிடைத்தது. இதில் கான்பூர் தொகுதியில் சுபாஷினி அலியும் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு அக்கட்சிக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன் 1991 தேர்தலில் கடைசி வெற்றி கிடைத்தது. இதுவும் தற்போது சரிந்து சிபிஐக்கு 0.1 சதவிகித வாக்குகள் மட்டுமே உ.பி.யில் மீதம் உள்ளன. 

The Indian Left, according to its critics, has never been right. When it was time to join the national movement in 1942 it called for support to the "peoples' second world war". Amid the euphoria of freedom, it called for an armed revolution in Telengana during 1948. In the era of crisis during the late '50s and '60s, it went for compromise. Chand Joshi analyses the dilemma of the Left in India in the context of this most momentous year in Indian politics  சந்த் ஜோஷி இப்படி அலசிக் காயப்போட்டது அக்டோபர் 2014 இந்தியா டுடே 


இந்நிலையில், காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட சிபிஐயின் உ.பி. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இது, காங்கிரஸ் பொதுச்செயலாளரான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுடன், பத்து நாட்களுக்கு முன்பாகவே முறிந்தது. 


அதேசமயம், மற்றொரு பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி வதேரா, உ.பி.யில் செல்வாக்கு இல்லாத கட்சிகளான மஹான் தளம், ஜன் அதிகார், அப்னா தளத்தின் கிருஷ்ணா பட்டேல் பிரிவு ஆகியவற்றுடன் பேசி கூட்டணி அமைத்துள்ளார். இதற்கு பாஜகவை போல் காங்கிரஸும் உபியில் இடதுசாரி கட்சிகளை வளர்க்க விரும்பவில்லை என்பது காரணமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி பேப்பரில் The Necessary Alternative என்றால் போதுமா? இடதுசாரிகளை ஆதரித்துக் கட்டுரை எழுதினால் மட்டும் சரியான மாற்று என்றாகிவிடுமா? 
இப்படி ஒரு பரிதாபநிலைக்குத் தள்ளப்பட்டதற்கு  வேறு எவரையும் குறைசொல்ல முடியாத அளவுக்கு இடதுசாரிகள் தொடர்ந்து மேற்கொள்ளும் தவறான அரசியல் நிலைகளே முழுக்காரணமாக இருக்கின்றன. தேர்தல் அரசியலை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்பதில் இங்கே இடதுசாரிகள் தொடர்ந்து தவறு செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒன்று தேர்தல் அரசியலில் முழுக்க நனைவது  அல்லது குறுங்குழுக்களாக உடைந்து சிதறிப்போன நக்சல்கள் மாதிரி தேர்தல் பாதை திருடர்கள் பாதை என்று ஒதுங்கிப் போவது என்ற மாதிரித்தானா?
தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு சரியான பாதைக்குத் திரும்பவேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய இடதுசாரிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அவசர அவசியமாக ஆகியிருக்கிறது. இந்திய சூழலுக்கேற்ற இயக்கமாகத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது! தவற விட்டால் இடதுசாரிகளை இனிமேல் திருமாவளவன், திராவிடர் கழகம் போன்ற திருகல் வேலை ஆசாமிகளிடமிருந்து மட்டுமே போகிறபோக்கில் பேசக் கேள்விப்படுகிற மாதிரி மட்டுமே ஆகிவிடும்! 
   

ஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரிக்கு வந்த தினம் இன்று!

மார்ச் 29! ஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரிக்கு முதன் முதலாக வந்த தினம்!


ஸ்ரீ அரவிந்தராலும்பிறகு எல்லோராலும் அன்னை என்று அழைக்கப் பட்ட அற்புதப் பேரொளியைக் கண்டு கொள்கிற தருணம் நம்மில் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறதுநாம் தான்தேடி வருகிற இறையருளை உணராமல் இருக்கிறோம்.  அறியாமைஆர்வமின்மைநானே எனதே என்று பழக்கங்களின் பிடியில் சிக்கி புலன்களுடைய அடிமையாகவே இருப்பது இப்படிநிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

இறையருள்நம்மை விட்டு விலகுவதே இல்லைஅதே நேரம்நம் மீது நம் விருப்பத்திற்கு மாறாகத் தன்னை திணித்துக் கொள்வதும் இல்லைநாமாகவிரும்பி அழைப்பதற்காகஏற்றுக் கொள்வதற்காகப் பொறுமையோடு காத்திருக்கிறதுஒவ்வொரு தருணத்திலும் முடிவெடுக்கிற சுதந்திரத்தை நமக்களித்து விட்டுஅந்தந்த முடிவுக்குத் தகுந்த பலனையும் அனுபவத்தையும் தந்து கொண்டேஅதிலிருந்தேஉள்ளார்ந்த ஒரு ஆன்மீக அனுபவத்திற்கான பாதையையும் திறந்து வைக்கிறதுநம்மை அறியாமலேயேஅல்லதே அறிந்தே கூடக் கிணற்றுக்குள் தான் விழுவேன் என்று பிடிவாதமாக விழுந்தாலும் கூட,கிணற்றில் விழுந்த பிறகு அதிலிருந்தே வேறொரு பாதையில் இறையருள் வழிநடத்துகிறது.

நல்லவை என்பன மட்டும் அல்லமிகத் தீயவை என்று சொல்லப் படுபவையும்தெய்வ சித்தத்தின் படி இயங்கும் கருவிகளாகவே இருப்பதை அப்போது தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது"வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க" என்று அனுபவித்துப் பாடிய வரிகளின் பொருள் அப்போது தான் அவரவர் பக்குவத்துக்கேற்றபடி புரிகிறது.

இப்படித்தான் 1965-66 களிலேயே ஸ்ரீ அரவிந்த அன்னைஎன்னுடைய அன்னையாகவே தோன்றித் தன்னை அறிவித்துக் கொண்டாலும்என் ஈர்ப்புகவனமெல்லாம் வேறு எதில் எதிலேயோ இருந்ததால்தேடி வந்த அன்னையை அறியவில்லைஸ்ரீ அரவிந்தரோடு அணுக்கமாக இருந்த நண்பர்களே `ஆரம்ப காலங்களில் ஸ்ரீ அரவிந்த அன்னையை 'அன்னையாக' அறிந்திருக்கவில்லை. அவரும் ஏதோ தங்களைப் போலவே, ஸ்ரீ அரவிந்தருடைய இன்னொரு சீடர் என்ற அளவிலே தான் நினைத்திருந்தார்கள். 

ஸ்ரீ அரவிந்தர் ஒரு சாதகருக்கு எழுதிய கடிதங்களில் அன்னையைப் பற்றி, அவருடைய அவதார நோக்கங்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார். 'மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்காதே, அந்த பராசக்தியே தான் இங்கே மானிட வடிவம் தாங்கி வந்திருக்கிறாள்' என்று உறுதியாகச் சொல்கிறார். ஆசிரமத்தில் இருக்கும் இந்த அன்னையைப் பற்றியா சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு 'ஆமாம்' என்று உறுதிபடச் சொல்கிறார்.

"அன்னை" என்ற தலைப்பில் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய கடிதங்களின் [மொத்தம் ஆறு] தொகுப்பு, அதையொட்டி சாதகர்களுக்கு எழுந்த கேள்விகளுக்கு ஸ்ரீ அரவிந்தர் எழுதிய பதில்கள், இவைகளைத் தமிழில் தொடர்ந்து தரவும் விருப்பம். ஸ்ரீ அன்னை திருவுள்ளம் உகந்தால் அதுவும் கை கூடும்.

முப்பது, முப்பத்திரண்டு  வருடங்களுக்குப் பின்னால்வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்கள் தானாகவேஸ்ரீ அரவிந்த அன்னையிடம் அழைத்துச் செல்வதாக அமைந்தனஅப்போதும் கூடஒரு முழுமையான அர்ப்பணிப்புடன் அன்னையிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன் என்று சொல்ல முடியாது

அப்போது மட்டுமில்லைஇப்போதும் கூடத்தான் என்று உள்ளேயிருந்து ஒரு மூலையில் ஒரு குரல் ஒலிக்கிறது அதைப் பொருட்படுத்தாதே அன்னையிடம் உன்னை முழுமையாக சமர்ப்பணம் செய்து கொள்ளத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இரு, ஆக வேண்டியதை அவளே பார்த்துக் கொள்வாள் என்றும் ஒரு நம்பிக்கைக் கீற்று அவநம்பிக்கையை, என்னை அன்னை ஏற்றுக் கொள்வாளா, எனக்கு அருள் புரிவாளா என்ற சந்தேகங்களை விரட்டி அடித்துக் கொண்டும் இருக்கிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னை தன்னை ஒரு போதும் ஒரு குருவாக அறிவித்துக் கொண்டதில்லைமாறாகதன்னிடம் வருபவர்களுக்குச் சொன்னதெல்லாம்இது தான்:  

"என்னிடம் வரும் போதுஅன்னையிடத்திலே தானாகவே ஆர்வத்தோடு ஓடி வருகிற குழந்தையின் மனப்பாங்கோடு வாஅப்படி வருவதுஎண்ணற்ற தடைகள்கஷ்டங்களில் இருந்து உன்னைக் காப்பாற்றும்"


"Try to be spontaneous and simple like a child in your relation with me- it will save you from many difficulties.”- The Mother

The Mother’s First Arrival at Pondicherry —March 29
The Mother came to Pondicherry on March 29, 1914, and met Sri Aurobindo for the first time. The Mother, after Her first meeting with Sri Aurobindo, wrote in Her diary:
“It matters little that there are thousands of beings plunged in the densest ignorance, He whom we saw yesterday is on earth; his presence is enough to prove that a day will come when darkness shall be transformed into light, and Thy reign shall be indeed established upon earth.”
The day, March 29, 1914, was also the beginning of what has now grown into the Sri Aurobindo Ashram and a worldwide spiritual movement.
The Mother came to the earth with a great spiritual mission. Sri Aurobindo has said that:
“The Mother comes in order to bring the Supramental.”
“Her embodiment is a chance for the earth-consciousness to receive the Supramental into it and undergo the transformation necessary for that to be possible.”
The Mother first met Sri Aurobindo in the year 1914, soon after her arrival. After their meeting, Sri Aurobindo said that he had never seen anywhere a self-surrender so absolute and unreserved as that of the Mother. Later, Sri Aurobindo mentioned about the significance of the presence of the Mother on earth in the following words:
“The great work of the Avatar is to manifest the Divine Grace upon earth. To be a disciple of the Avatar is to become an instrument of the Divine Grace. The Mother is the great dispensatrix – through identity – of the Divine Grace with a perfect knowledge – through identity – of the absolute mechanism of Universal Justice.
And through her mediation each movement of sincere and confident aspiration towards the Divine calls down in response the intervention of the Grace.”
There will be a collective meditation at 7:45 pm in the Ashram playground on this day.
~ Courtesy : Sri Aurobindo Society, Pondicherry / Facebook page.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே!


இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)