Showing posts with label ஏன் திமுக வேண்டாம். Show all posts
Showing posts with label ஏன் திமுக வேண்டாம். Show all posts

Monday, March 2, 2020

திங்கள் மாலை! சுவாரசியமான செய்தி அலசல்!

அந்தப்பக்கம் திரௌபதி படத்தைப் பற்றி எழுதியதை வாசித்தீர்களா?  News 7 சேனலின் நெல்சன் சேவியர், திரௌபதி  படத்துக்கு ஜனங்கள் அதிக வரவேற்பளிப்பதில் நொந்து ட்வீட்டரில் பொங்கியது சேனலுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்றோ என்னவோ திரௌபதி படக்குழுவினருடன் ஒரு நேர்காணலை நடத்தி சமன் செய்திருக்கிறார்கள் போல!


நாடகக் காதல், ஆணவக்கொலைகள் என்ற பரப்புரை தாண்டி, ஒரு மிகப்பெரிய மோசடி நடந்ததும், அப்படியே அமுங்கிப்போனதுமாக இருந்த விஷயத்தை திரௌபதி படம் மீண்டும் கவனப்படுத்தி இருக்கிறது. மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், அவர்களுக்குத் துணையாக இருந்தவர்கள் மீது இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னால், அரசும், பார் அசோஸியேஷனும் ஊமைச் சாமிகளாக அப்படியே அடக்கிவாசிப்பது ஏன் என்ற கேள்விக்கு விடைதேடுவதற்குப் பதிலாக, பாமகவுக்கு அரசியல் ஆதாயம் தேடித்தருவதோடு திரௌபதி படம் நின்றுவிடுமானால், என்வரையில் அது பெருத்த ஏமாற்றம் என்பதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டி இருக்கிறது.

  
இதை எப்படி எடுத்துக்கொள்வது? கமல் காசர் வந்து தான் பொழிப்புரை எழுதித்தர வேண்டுமோ? அப்புறம் அந்த என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் என்பதன் வரையறை என்னவோ??

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முகநூலில் லந்து அடிப்பதில் திமுகவின் சாயம் என்ன ஆகிறதாம்? வந்து பாருங்கள்!

‪தீமிதித்து கருணாநிதியிடம் திட்டு வாங்கிய அந்தியூர் செல்வராஜை ராஜ்யசபைக்கு நியமித்து இருப்பதன் மூலம் திமுக இந்துக் கட்சியே என ஸ்டாலின் தெள்ளத்தெளிவாய் தெரிவித்திருப்பதை, செயற்குழு லெவல் ஐடி பிரிவின் மைனாரிடி அணி உறுப்புல்லாஹ் எப்படியெல்லாம் முட்டு கொடுக்கவேண்டி இருக்கிறது😂😂😂


மதன் ரவிச்சந்திரன் வேறு நொந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்.

அப்போ இவ்ளோ நாள் பெயர் இருந்ததாக சொல்லப் பட்ட hmm hmm நிலைமை...
எசமான்: தம்பி நீங்க திறமையானவர் தான் நல்ல செல்வாக்கு இருக்கு அதுவே நாளைக்கு சின்னவற்கு பிரச்னையா வந்துட்டேனா... போ போய் வழக்கம் போல பூண்டு தட்டி போட்டு சூடா மசால் வடை வாங்கிட்டு வா...
hmm hmm : சரிங்க எசமான்🔥🔥🔥
               

இந்த முகநூல்தான் எப்படி ஒவ்வொருவருடைய மன வக்கிரத்தையும் வெளிப்படுத்துகிற கருவியாக இருந்து வதைக்கிறது!!


இது ஒன்றுதான் பாக்கி இருந்தது! இன்றிரவு அதுவும் தீருகிறது. திருப்திதானே!

மீண்டும் சந்திப்போம்.    

Friday, March 22, 2019

தேர்தல் களேபரங்கள்! எதைக் கழிப்பது? எதைத் தேர்வு செய்வது?

இங்கேயும் அங்கேயும் தேர்தல் விவகாரங்களாக எழுதி வருவதைத் தொடர்ந்து கவனித்து வருகிற நண்பர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். இங்கே ஏதோவொரு கட்சிக்காக அல்லது வேட்பாளருக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ எழுதுவதை விட அதிக முக்கியத்துவமும் அழுத்தமும் கொடுப்பது, தேர்தல் சீர்திருத்தங்களுக்காகவே என்பதை மறுபடியும் ஒருமுறை தெளிவுபடுத்துவதில் தவறில்லையே!

இந்தப்படம் ஜாலி சித்திரமாக ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளத்தில் வெளியானது. தலைப்பென்னவோ ஜாலி சித்திரமாக இருந்தாலும், நடப்பு அரசியலின் நிலையென்ன என்பதைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிறதா இல்லையா?     

DMK leader Jagathrakshakan’s family linked to record FDI in Sri Lanka என்று அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் கல்வித்தந்தை ஜகத்ரட்சகன் குடும்பம் சிங்கப்பூர் ரூட்டில் இலங்கையில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் சுமார் 26 ஆயிரம் கோடிரூபாய் நேரடி முதலீடு செய்திருப்பது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. ஓமன் நிறுவனமொன்று பின் வாங்கிய நிலையில் ஒரே முதலீடாக 385 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடாக வந்திருப்பது கடந்த செவ்வாயன்று வெளியாகியிருக்கிறது   

Silver Park International, named by the BOI, is registered with Singapore’s national regulator Accounting and Corporate Regulatory Authority (ACRA), with three of its four directors — Jegath Rakshagan Sundeep Anand, Jagathrakshakan Sri Nisha and Jagathrakshakan Anusuya – listed with a Chennai address. They are the son, daughter and wife of Mr. Jagathrakshakan, who is the DMK’s Arakonam Lok Sabha candidate. “We are aware of the Singapore company’s links to an Indian business interest. The agreement has been signed by one Mr. Jagathrakshakan,” a senior government source in Colombo told The Hindu, requesting anonymity.


அரசியலில் துரோகங்கள் கூட நன்மைக்கே என்று முகநூலில் விஜயகுமார் அருணகிரி என்பவர்  எழுதி இருக்கிற பகிர்வு கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. முழுதும் கீழே   
1998 லோக்சபா தேர்தல் . திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் அப்பொழுது புதிதாக திமுகவில் இணைந்து இருந்த சரத்குமார் வேட்பாளராக போட்டியிட்டார்.அதிமுக பக்கம் இருக்கும் நாடார் ஓட்டுக்களை திமுகவுக்கு கொண்டு வர நினைத்த கருணாநிதி சரத்குமாருக்கு சீட் கொடுத்து இருந்தார்.
அதிமுக சார்பில் கடம்பூர் ஜனார்த்தனம் போட்டியிட்டார்.நமக்கு தெரிந்த நாடார் இன நண்பர்கள் அனைவரும்சரத்குமாருக்கு ஆதரவாக வேலை செய்தார்கள்அப்பொழுது நான் திமுக அனுதாபியாக இருந்தாலும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகவே இருந்தேன்..காரணம் சரத்குமார் கனிமொழி இவர்கள் எல்லாம் கழிசடைகள் .இவர்களுக்கு சாதி ரீதியாக ஆதரவு அளிப்பது இந்த சமுதாயத்திற்கு நாம் செய்யும் தீங்காகும் என்பது என்னுடைய நிலைப்பாடு. நம்மால் இந்த சமுதாயத்திற்கு நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. கெடுதல் செய்யாமல் இருக்க வேண்டும் .இதற்காக சரத்குமார் மாதிரி ஆட்க ளைஜெயிக்க விடக் கூடாது என்றே நான் எங்கள்பகுதி நாடார் இன நண்பர்களிடம் கூறுவேன்
.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெ ற்று முடிவுகள் வெளி வந்து கொண்டு இருந்தது திருநெல்வேலி தொகுதியில் சரத்குமார் முன்னிலை என்றே அப்பொழுது வானொலியில.கூறிக்கொண்டு இருந்தார்கள். நண்பர்கள் எல்லோரும் என்னிடம் பாருய்யா .. சரத்குமார் ஜெயிச்சாச்சு என்று என்னிடம் வம்பிழுக்க பொறுங்கப்பா..தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி ஒட்டு இன்னும் எண்ணவில்லை என்றேன்.
தூத்துக்குடி ஓட்டுக்களை எண்ண ஆரம்பித்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. அதிமுக வின் கடம்பூர்ஜனாரத்தனம் முன்னிலைக்கு வந்தார். இறுதியில் 6904 ஓட்டுக்கள் வித்தியாச த்தில் சரத்குமார் தோல்வி அடைந்தார்.எனக்கு சந்தோசமாக இருந்தது  உடன் இருந்த நண்பர்கள்என்னிடம் கடுமையாக சண்டைக்கு நின்றார்கள்.
கடைசியில் சரத்குமார் என்னை தோற்கடித்தது தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமிதான் என்று பகிங்கரமாகவே குற்றம் சாட்டினார் எனக்கு பெரியசாமியை பிடிக்காது என்றாலும் சரத்குமாரை தோற்கடித்தன் மூலமாக பெரியசாமிக்கு தேங்க்ஸ் கூறிக்கொண்டேன்.
சரிப்பா இப்பொழுது எதற்கு இந்த கதை என்று கேட்கிறீர்களா? தூத்துக்குடி அரசியலில் தன்னை தவிர வேறு யாரையும் அரசியல் செய்ய விட மாட்டார் பெரிய சாமி. தந்தை வழியில் கீதா ஜீவனும் தூத்துக்குடியில் திமுகவை அவர்களின் குடும்ப சொத்தாகவே வைத்து இருக்கிறார்.
2004 லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் வெங்கடேச பண்ணையாரின் என்கவுண்டர் தான். அதனை முன் வைத்து கருணாநிதி ஆடிய அரசியல் ஆட்டத்தினால் தான் நாடார்கள் அதிமுக ஆதரவு நிலை யில் இருந்து திமுக பக்கமாக திரும்பினார்கள்.
அப்பொழுது திமுகவில் உறுப்பினராக ஏன் அனுதாபியாக கூட இல்லாத வெங்கடேச பண்ணையாரின்மனைவியான ராதிகா செல்வியை திருச்செந்தூர் லோக்சபா தொகுதியின் வேட்பாளாராக்கி நாடார் வாக்குகளை திமுக பக்கம் திருப்பிக் கொண்டார் கருணாநிதி.
வெற்றி பெற்ற ராதிகா செல்வியை மத்திய மந்திரியாக்கி தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவை வளர்த்து கொண்டார் கருணாநிதி. ஆனால் இப்பொழுது ராதிகா செல்வி எங்கே? காரியம் நிறைவேறிய உடன் கழற்றி விட்டு விட்டார்கள்.  தூத்துக்குடி மாவட்ட திமுகஅரசியலில் பெரிய சாமி குடும்பத்தை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
இதற்கு உதாரணமாக ஜெனிபர் சந்திரன் ராதிகாசெல்வி என்று திமுகவில் உச்சத்தில் இருந்து பெரிய சாமி குடும்பத்தினால் திமுகவில் இருந்துவிரட்டப் பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அதனால் கனிமொழியை தூத்துக்குடி மாவட்ட அரசியலில் வேரூன்ற விட பெரியசாமி குடும்பம் நிச்சயமாக விட மாட்டார்கள். கனி மொழியை கவிழ்த்துவிடவே பார்ப்பார்கள். இது அவர்களின் எதிர் கால அரசியலுக்கு மட்டுமல்ல
ஸ்டாலினின் எதிர்கால அரசியலுக்கும் பயன்படும் என்பதால் நிச்சயமாக கனிமொழியை தோற்கடிக்க ஸ்டாலின் துணை நிற்பார்.
ஏம்ப்பா அந்த அளவிற்கா ஸ்டாலினுக்கு அறிவு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஸ்டாலின் சும்மா டம்மி. துர்கா ஸ்டாலின் தான் திமுகவின் இப்போதைய மம்மி. திமுகவில் இனி தன்னுடைய குடும்பத்தை தவிர வேறு யாரும் தலைமை பதவிக்கு வந்து விடக் கூடாது என்று  நினைக்கும் துர்கா ஸ்டாலின் கீதா ஜீவன் மூலமாக கனிமொழியின் அரசியல் வாழ்க்கையை முடித்து விடுவார்.
தூத்துக்குடி மாவட்ட அரசியல் துரோகங்கள் நிறைந்த வரலாற்றைக்கொண்டது. வேண்டும்என்றால் சரத்குமாரிடம் கேட்டு பாருங்கள். எப்படி கருணாநிதி பெரியசாமி மூலமாக தன்னை தோற்கடித்தார் என்று விரிவாக கூறுவார். இன்றைய திமுகவில் கருணாநிதியின் இடத்தை நிரப்பிக் கொண்டு இருப்பது துர்கா ஸ்டாலின்தான்.
அதனால் மீண்டும் ஒரு துரோக வரலாற்றை தூத்துக்குடியில் பெரியசாமி குடும்பம் எழுத தயாராக காத்து இருக்கிறது. வரலாற்றில் பல துரோகங்களின் பயன்கள் நன்மையாகவே  முடிந்துள்ளது. அந்த வகையில் கனிமொழியின்  தோல்வியினால் இந்த தேசத்துக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய நன்மை விளையும்.
அதனால் நாடார் இன நண்பர்களே! சாதி உணர்வுகள் இருக்கலாம். அதற்காக கனிமொழி சரத்குமார் மாதிரி கழிசடைகளை ஆதரிப்பது இந்த நாட்டிற்கு செய்யும் துரோகமாகும்.எனக்கு என்னுடைய இனத்தை விட என்னுடைய தேசமே தெய்வமாகும்.
முடிவாக என்னப்பா கூற வருகிறாய் என்றுகேட்கிறீர்களா.. மதம் என்பது நாம் அணிந்துள்ள மேல்சட்டை மாதிரி பளிச்சென்று தெரிய வேண்டு ம். ஆனால் சாதிஎன்பது உள்ளே அணிந்துள்ள கால்சட்டை(உள்ளாடை)  மாதிரிகண்ணுக்கு தெரியக்கூடாது. இருந்தாலும் கனிமொழி மாதிரி கழிசடைகளுக்கு எதிராக வேட்டியை வரிந்து கட்ட ஆரம்பித்ததால்  என்னுடையகால்சட்டையின் நிறம் தெரிய ஆரம்பித்துவிட்டது.
.
அதற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள்.தூத்துக்குடி யில் தேர்தல் முடியும் வரை இது மாதிரி சாதி சார்ந்த பதிவுகள் அடிக்கடி வரும்.அதற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள்.எனக்கு தேவை தூத்துக்குடியில் பிஜேபியின் வெற்றி!அதுவரை சாதி பின்புலம் இல்லாது  எதையும் எழுத முடியாது.. 
என்னுடைய லட்சியம் என்றுமே..இந்துவாக இருப்போம் இந்தியாவை காப்போம். என்பதே...

சரி, பதிவின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தது , இடையில் ஜகத் ரட்சகன் விவகாரம், அப்புறம் ஒரு முகநூல் பகிர்வு இவைகளுக்கிடையே என்ன சம்பந்தம்? எதைக்கழிப்பது? எதைத்தேர்வு செய்வது? என்று இதை வைத்து எப்படி முடிவு  செய்வது என்ற கேள்வி எழுகிறதா?

இப்போதுள்ள தேர்தல் முறையில், நல்லவர், வல்லவர் என்று பார்த்து எவரையும் தேர்ந்தெடுக்கிற சாய்ஸ் நமக்கு அளிக்கப்படவில்லை! போட்டியிடும்  நபர்களில் , ஆகக்  குறைவான மோசம்  ஒன்றைத் தேர்ந்தெடுக்க மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. அவசர அவசியசியமாகத் தேர்தல்முறையில் சீர்திருத்தங்கள் தேவைப்படுவது ஏன் என்பது புரிகிறதா?

அப்படிச் சீர்திருத்தங்கள் செய்யப்படுகிறவரை என்ன செய்வது? முதலில், விஷக்காளான்களாகப் பெருகிவரும் உதிரிக்கட்சிகளை தயவு தாட்சணியம் இல்லாமல் முற்றொட்டாக நிராகரிப்பது நல்ல தொடக்கம்.

அடுத்து, போட்டியிடுகிற பிரதான கட்சி வேட்பாளர்களில் அவரோ அவர் சார்ந்த கட்சியோ முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அல்லது ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் அவர்கள் செய்தது, செய்யத் தவறியது இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, எதிர்த்துப் போட்டியிடுகிற வேட்பாளர், கட்சி இவைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இரண்டுமே மோசம்  தானே என்றால், அதற்குத் தான் தூத்துக்குடி தொகுதியை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டது. கனிமொழி வெர்சஸ் தமிழிசை என்றிருப்பதில் இரண்டுபேருமே ஒரே அளவிலான மோசம்  இல்லை, கனிமொழிக்கு, தமிழிசை எவ்வளவோ மேல் என்ற முடிவுக்குத்தான் வர முடிகிறது என்றால் உங்களுடைய அரசியல் தீர்மானம் வெற்றிபெற வாழ்த்துகள்!                            

Friday, March 15, 2019

அரசியல் களம் இன்று! ஏன் திமுக காங்கிரஸ் வேண்டாம் ?

அரசியல் பதிவு இல்லாமல் இன்றைக்கு இந்தப் பக்கம் கொஞ்சம் டல்லடிக்கிறதோ? குறைப்பட்டுக் கொள்ள வேண்டாம்! மங்களகரமாக மதுரைச் செய்தியுடன், ஆரம்பித்துவிடலாமா?
உறுதியாகத் தோற்பதற்காகவே வெங்கடேசனை இங்கே நிறுத்தியிருக்கிறார்களோ? முதலில் வந்த வதந்திகளின் படி உ வாசுகி நிறுத்தப்படலாம் என்பது மாறி, சு வெங்கடேசன் என்றாகியிருக்கிறது. கோவையில் பி ஆர் நடராஜன் 2014 வரை மக்களவை உறுப்பினராக இருந்தவர் என்ற வகையில் தொகுதியில் நல்ல அறிமுகமும், கண்ணியமான வாக்குகளையும் பெறக்கூடியவர் என்று ஒப்பிட்டுப்பார்த்தால் வெங்கடேசன் பூஜ்யம் என்றே சொல்லிவிடலாம். திமுக தொண்டர்கள் ஆதரவைப்பெறுவதும், கட்டிமேய்ப்பதும் ரொம்பவுமே கடினம் என்ற நிலையில் இரண்டு பேருமே ஜெயிப்பது குதிரைக்கொம்புதான்!

  
கூட்டணிப்பங்கீட்டில் இசுடாலின் சாதித்துவிட்டார் என்கிறார் ரவீந்திரன் துரைசாமி! ஆச்சரியமாகத்தான் இருந்தது! பார்க்கலாம்! போனமுறை பூஜ்யம் என்ற ரிசல்டிலிருந்து இந்தத்தேர்தலில் கொஞ்சம் சீட் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது என்பதே ஆறுதலான செய்திதான்!
கூட்டணி உறுதி! தொகுதிப்பங்கீடும் ஒருவழியாக முடிந்தது! விசிக எந்தச் சின்னத்தில் நிற்கிறார்களாம்? இன்னமும் தெரியவில்லையே!
ராகுல் காண்டி டீ ஷர்ட், ஜீன்ஸில் வந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளை அசத்தியிருக்கிறார். சார் என்று அழைக்காதீர்கள் ராகுல் என்றே அழைக்கலாம் என்றாராம்! கட்சிக்காரர்கள் எவராவது அழைத்து விட முடியுமா? யாரும் கேட்கவில்லையே என்று விட்டுவிட முடியுமா? மாரிதாஸ் கேட்கிறார்!  நீங்களும்  கேளுங்கள்!




காங்கிரஸ்காரனுக்கும் திமு கழகத்துக்கும் உண்மையைப் பேசுவது என்றால் ரொம்பவுமே அலெர்ஜி! கேட்டால் தங்கபாலுவுக்கு ராகுல் காண்டி அழுத்தந்திருத்தமாக ரிப்பீட்டடாக உண்மை ஜெல்லும் என்று சொல்லச் சொன்னகதையை பார்த்திருக்கிறோம் இல்லையா?


ராகுல் காண்டி  பேசியதில் உண்மை இருக்கிறதா?
ரங்கராஜ் பாண்டே என்ன சொல்கிறார் என்றுதான் கேளுங்களேன்!

இங்கே இசுடாலின் அங்கே ராகுல் காண்டி இவர்களோடு கூட்டாளிகளாக இருக்கிற உதிரிகள் எல்லோரையும் முற்றொட்டாக நிராகரிப்பதே நாம் நமக்கே செய்துகொள்ளக் கூடிய நல்ல விஷயம்! 

ஏற்கெனெவே கொடுத்த்த வாய்ப்புக்களை abuse துஷ்ப்ரயோகம் செய்தவர்களை நிராகரிப்பது ஒன்றே சரியான அரசியல் செயல்பாடும் கூட! 
                       

Wednesday, March 13, 2019

"டெல் மோடிஜி, உண்மை ஜெல்லும்" பப்பு மொழி!

காலம் செய்த கோமாளித்தனத்தில் காங்கிரஸ் கட்சி  எத்தனை அரிதாரங்களைபோட்டுக் கலைத்திருக்கிறது என்று பார்க்கவே மிகவும் அலுப்பாக இருக்கிறது.

இந்தக் கலந்துரையாடலில் ராவுல்பாபா இப்போதைய பிரதமரை இந்தமாதிரி  கூட்டத்தில் கேள்விகேட்டு பதில் சொல்வதைப் பார்த்திருக்கிறீர்களா என்று ஒரு சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார்! 3000 பெண்களுக்கு முன்னால் நின்று பதில் சொல்ல தைரியம் இருக்கிறதா என்று யாரோ எழுதிக்கொடுத்த வசனத்தைப் பேசுகிற தருணம் 27mts 57s!  துண்டுச் சீட்டைப் பார்த்துக் கொண்டே தப்பும் தவறுமாக உளறுகிற இசுடாலின் போல அல்லாமல், துண்டுச்சீட்டு இல்லாமலேயே அதே பழைய அரைத்தமாவைத் திரும்பத்திரும்ப அரைக்கிறார். ஆகையால் ராவுல் பாபாவின் பழைய கதையொன்று மீளவும்! 

2001ல் அமெரிக்காவின் பாஸ்டன் நகர் ஏர்போர்ட்டில் FBI யால், 1,60,000 டாலர்களுடனும் தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளுடனும் கூட  அழைத்து வந்த கொலம்பிய நாட்டு போதை மாபியா கும்பல் தலைவனின் மகளுடன் கைது செய்யப்பட்டார் ராகுல் காந்தி.
சோனியாவின் கெஞ்சுதலால் இந்தியாவின் மானம் கப்பலேறி விடுமே என்று அஞ்சி வாஜ்பாய் அவர்களின் முயற்சியால் அப்போதைய இந்திய வெளியுறவு துறை செயலாளர் பிரஜேஷ் மிஷ்ரா, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருடன் பேசி பின் வாஜ்பாயின் கடும்முயற்சியால் ஜார்ஷ்புஷ்ஷால் விடுவிக்கப்பட்டார்.
ஒருவேளை வாஜ்பாய் முயற்சி எடுத்திருக்காவிடில் ராகுல் 128 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றிருப்பார். நமக்கும் பெரிய தலைவலி குறைந்திருக்கும். இப்போது யோக்கியன் போல நடமாடி கொண்டிருக்கமாட்டார். இவை எல்லாவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. என்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொன்ன வாரிசுகளின் கதைகளில் ஒன்று உடனே நினைவுக்கு வருகிறது.
*******
1990களில் ஒரு நாள் நானும் எனது சகோதரரும் "உள்ளத்தை அள்ளித்தா" படம் பார்க்கச் சென்றிருந்தோம். படம் "காமெடி வகை" என்று தெரியாமல் உள்ளே போய் வயிறு குலுங்க சிரித்துவிட்டு வந்தோம். கிட்டத்தட்ட அதே நிலை இன்று அலுவலகம் முடிந்து வீடு வந்தவுடன் "சம்பிரதாயமாக" டிவி பார்த்தபோது பப்புவின் நாகர்கோவில் பேச்சு நேரலையாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருந்தது. 
.
மொழி பெயர்ப்பாளர் (தங்கபாலு) ராகுலுக்கு மேல் காமெடி. பாவம் அவர். உடைந்துபோன keyboard போல அடிக்கடி ஓரிரு எழுத்துக்கள் விட்டுப்போய் தமிழ் மொழியை "பெயர்த்து" எடுத்துக் கொண்டிருந்தார். (பாரதம் என்பதை பாரம் என்கிறார்)
.
ராகுல் - தங்கபாலு கூட்டு அந்தக்காலத்து "தங்கவேலு முத்துலட்சமி" காம்பினேஷன் போல இருந்தது.
.
ஒரு கட்டத்தில் ராகுல் "The great tamil poet" என்று ஆரம்பித்தவுடன் நம் மனதுக்குள் ஒரு ஜெர்க் "அய்யயோ யாரை இழுத்து தெருவில விடப் போறானோன்னு"
.
வழக்கம் போல "பெயரைக் கெடுக்கும்" பப்பு திருவள்ளுவரை "திருவா.. லவ... வலுவா" என்று துழாவ ஆரம்பித்ததும் வந்த சிரிப்பை மீறி அடுத்த ஜெர்க் நம் மனதில் "எந்த குறளோட குரல்வளைய நெரிக்கப்போறானோன்னு தெரியலையே" என்று.
.
அங்கதேன் ட்விஸ்ட் வச்சார் ராகுல். "He said உண்மையே வெல்லும்" என்று சட்டென்று முடித்து விட்டார். குறள் 7 பதம் கொண்டது, இவர் இரண்டிலேயே முடித்துவிட்டாரே!
.
"உண்மையே வெல்லும்" - அவ்வளவுதான் திருக்குறள். ஆனால் தங்கபாலுவோ இன்னும் வரும், மொழி பெயர்க்கலாம் என்று காத்திருக்க, சிறிது நேரம் கழித்து ஒன்னும் வராமல் "அவ்வளவுதான் போலிருக்கு இன்னைக்கி" என்று அதையும் மொழி பெயர்த்து அடுத்த அதிர்ச்சிக்காக காத்திருந்தார்.
.
"உண்மை வெல்லும்" "இது எந்தக் குறள் அய்யா" என்று "தேவர் மகன் ஸ்ருதி" போல நாமும் குழம்பி, சரி இது முப்பாலுக்கும் "அப்பால்" ஏதோ போல என்று மனதை தேற்றிக்கொண்டு அடுத்த வரிக்காக ஒரு திகிலுடன் காத்திருந்தோம்.
.
நாம் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. கடைசியில் ராகுல் "டெல் மோடிஜி, உண்மை ஜெல்லும்" என்றார்.
.
"ஜெல்லுமா" என்று தங்கபாலு, துரைமுருகனைவிட அதிகமாக ஒரு expression கொடுக்க, பப்புவோ "i know what i mean, please go ahead" என்று புன்னகையுடன் உத்திரவாதம் கொடுக்க, தங்கபாலுவோ மையமாக "உண்மை செல்லும்" என்ற வாக்கில் ஏதோ மையமாக சொல்லி வைத்து முடித்தார்.
.
இந்த எழுச்சி உரை முடிந்தவுடன் அனைவரும் ராகுலை உச்சி முகர்ந்து "அனல் பறக்கும் பேச்சு" என்று கொஞ்சாத குறை.
.
கடைசியில் வைகோ "கண்ணுல ஜலம் வச்சுண்டு" வந்து இரண்டு முறை கைகொடுத்து "வாழ்த்து" சொன்னது மனதுக்கு ரொம்பவும் ஆறுதலாக இருந்தது.
.
உண்மை ஜெல்லட்டும் என்று முகநூலில்  நையாண்டி செய்கிறார் ச. சண்முக நாதன் 


பொள்ளாச்சியை சம்பவமாக்கியதற்கு இதை முன்னமே செய்திருக்க வேண்டும்! இப்போதாவது செய்தார்களே பார்த்தால் என்று  குறை சொல்ல ஏதுமில்லை!    
’சத்தியமேவ ஜெயதே’ என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பது ராகுல் காந்தி சொல்லித் தான் தெரியும்.

என்னே என் அறிவின்மை! எனக்கிதுவே வெட்கமில்லாமல் வேறே வெட்கமில்லை.

380 அறத்துப்பால் குறள்களில் ஒன்றிலாவது நிச்சயம் இதை சொல்லாமலா விட்டிருப்பார்? சிந்தனை தெளிவடைந்தேன்.


உத்தமசிகாமணிகளை என்ன செய்ய வேண்டுமென்பதில் ஒரு தெளிவு இருக்கிறது தானே?!!   
  

Thursday, March 7, 2019

தடுமாறும் அரசியல்! தடம் மாறலாமா நாம்?

தேதிமுக! பாவம், துரைமுருகன் நேற்றைக்கு அடித்த தம்பட்டத்தில் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டிய கட்டாயம்! புதியதலைமுறை செய்தி வீடியோவில் எப்போதுமில்லாத விதத்தில், தேதிமுக விலாசம் காண்பிக்கப்படுவதில் உள்ளர்த்தம் ஏதாவது இருப்பதாக நினைத்தால், அது உங்கள் சௌகரியம்! தேதிமுகவுக்கு விலாசம் அப்படி ஒன்றும் காணாமல் போய்விடவில்லை என்று சொல்வதாகக் கூட  இருக்கலாம்!

புதியதலைமுறையில் தடுமாறும் தேதிமுக பின்னணி என்ன? என்ற தலைப்பில் ஒரு செய்தித் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.சினிமா பிரவேசம், 2005 இல் கட்சி ஆரம்பித்தது என்று  கொஞ்சம் சுவாரசியமான பழையதகவல்களுடன்! இருந்தென்ன பிரயோசனம்?


அசிங்கப்பட்டாண்டா ஆட்டோக்காரன்! சினிமா காமெடி ஆகவேண்டுமானால் இருக்கலாம்!நம்மூர்  அரசியலில், அசிங்கப்படுவதே ஒரு தனிப்பெரும் தகுதியாக வளர்ந்துகொண்டிருக்கிற சீரழிவில் இன்னுமொன்று என்று தாண்டிப்போய் விடுவோமா? போவோமானால் , அது சரிதானா?     

Venkatesh Rathakrishnan  9 மணி நேரம்தினமலர் நிர்வாக ஆசிரியர்  முகநூலில சொன்னது இது · 
பிம்பங்களும் யதார்த்தங்களும்
----------------------------------------------------------
நேற்று மாலை மோடியின் பிரசார உரையை ஒட்டி, புதிய தலைமுறை தொலைக்காட்சி நேரலையில் உட்கார்ந்திருந்தேன். எண்ணற்ற விஷயங்கள் என் மனத்தில் அலைமோதத் தொடங்கின. கட்டமைக்கப்படும் பிம்பத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்னை ஆச்சரியப்படுத்தின.
1. பா.ஜ.க. ஒரு தீண்டத்தகாத மதவாத கட்சி. அவர்களோடு யாரும் கூட்டணி வைக்க தயங்குவார்கள், கூட்டணி கிடைக்காது. 

யதார்த்தம் : பா.ஜ.க.வோடு குறைந்தபட்சம் 6 கட்சிகளும் இயக்கங்களும் கூட்டணி கண்டிருக்கின்றன.
2.கழகங்கள் இல்லாத ஆட்சியே எங்கள் லட்சியம்.

யதார்த்தம் : கழகம் ஒன்றின் தோளில் உட்கார்ந்துகொண்டு, கூட்டணியோடுதான் தேர்தலைச் சந்திக்கிறது பா.ஜ.க.
3. தமிழகத்துக்கு பா.ஜ.க. அரசு என்ன செய்தது?

யதார்த்தம் : நேற்றுகூட 5,100 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றன, தொடங்கப்பட்டு இருக்கின்றன.
4. கழகங்களை நோக்கி விமர்சனங்களைக் கொட்டிய எச். ராஜா வாயால், 

நேற்று கழகத்தின் புகழ்மொழி ஒலித்தது இன்னொரு யதார்த்தம்.  

முகநூலில் சமூக ஆர்வலர் பானு கோம்ஸ் சரியான புள்ளியில் சிந்திக்க உதவுகிறார்! 
Banu Gomes 5 மணி நேரம்
மோடியை விரட்டுவதே எங்கள் லட்சியம் / கொள்கை என்று தமிழகத்தின் எதிர் கூட்டணி கூறுவது பெரும் வேடிக்கை.
மோடியை அகற்றுவது என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.
த்தியில்..எதிர் கூட்டணியின் UPA ஆட்சி எந்த விதத்தில் மோடியின் ஆட்சியை விட சிறந்ததாக இருந்தது ?
ஊழல்களை கட்டுப்படுத்திய ஆட்சியாக இருந்ததா ? அல்லது...எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதாக இருந்ததா ?
168 பேர் கொல்லப் பட்ட மும்பை தாக்குதல் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களை UPA ஆட்சி எதிர்கொண்ட விதம் எப்படி இருந்தது ?
நாட்டின் அதிகார அமைப்புகள் ஒவ்வொன்றையும் தங்கள் அரசியல் மனிதர்களைக் கொண்டு நிரப்பி ..அமைப்பின் செயல்பாடுகளை நியாயமற்றதாக வைத்திருந்ததை என்னெவென்று சொல்வது ?
UPA ஆட்சி காலத்தில் ...ஊழல் வழக்குகள், VVIP, VIP, High profile வழக்குகளில் ...நீதித்துறையின் தீர்ப்புகள் எவ்வாறு அமைந்திருந்தன ?
சோனியா, ராகுல் உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைகள் அனைத்தும் ''ஊழல் நடந்ததிருப்பதற்கான அடிப்படை முகாந்திரம் உடைய ஊழல் வழக்குகளில்''...நீதிமன்ற ஜாமீனில் தானே இருக்கிறார்கள் ?
மத்திய நிலையை கூட விட்டுவிடுவோம்.
மாநில அளவில் ..UPA ன் dmk + cong கூட்டணி ஆட்சியால் தமிழகத்திற்கு விளைந்த நன்மை தான் என்ன ????
துரோகங்கள் என்னென்ன ??
அ.தி.மு.க கூட்டணி & தி.மு.க கூட்டணி ...இவ்விரண்டில்..
தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டுவருவதன் மூலமும் & நீண்ட கால பிரச்சினைகளை தீர்த்திருப்பதன் மூலமும் & பிற செயல்பாடுகளின் மூலமும்... நன்மைகளை செய்திருக்கிற கட்சிகளை கொண்ட கூட்டணி எது ?
எதிர் கூட்டணி ..தாங்கள் எந்த விதத்தில் ஆளும் கூட்டணியை விட மேல் என்பதை பேச முடியாமல் இருப்பதே உண்மை நிலை !   

வாக்களிப்பதற்கு முன்னால், யோசிக்க வேண்டிய விஷயங்கள், 

வெறுப்பரசியல் பேசுகிறவர்களுடைய உள்நோக்கம் என்ன?

இவர்கள் ஆட்சிசெய்யக் கிடைத்த காலங்களில் செய்தது, செய்யத்தவறியவைகளோடு ஒப்பிட்டால்  நரேந்திர மோடிக்கு இன்னொரு வாய்ப்பைத் தருவதில் தவறென்ன?           

Sunday, February 17, 2019

அரசியல் இன்று! ஏன் திமுகவும் வேண்டாம்?

புல்வாமா fedaayeen தற்கொலைத் தாக்குதல் இன்னும் சிலகாலத்துக்கு பேசுபொருளாக நீடிக்கும் போல! Most Favoured Nation அந்தஸ்து ரத்து, காஷ்மீரி பிரிவினை வாதிகளுக்கு, இன்று ஞாயிறு மாலையுடன் அரசுப் பாதுகாப்பு கிடையாது என்று ஒவ்வொன்றாக முடிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன.    

தேர்தல் நெருங்குகிற நேரத்தில் பாகிஸ்தானுடன் போரா? வந்தால் அது பிஜேபிக்கு சாதகமாகப்போய் விடுமே என்கிற பயம், இங்கே சில கட்சிகளுக்கு  வந்திருப்பதையும் கூடப்பார்க்க முடிகிறது. நேற்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் முஸ்லீம் லீக் கூட்டத்தில் திமுகவின் ஸ்டாலின் பேசியது கூட அந்த ரகத்தில் வருவதுதான்!  

அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்தபிள்ளை என்று தனக்கே சான்றிதழ் கொடுத்துக் கொள்கிறவர், அரசியல் நிலை பாட்டிலும் சரியாகத்தான் இருக்கிறாரா? அவருடைய அரசியல் ஞானம், செயல்பாடு எப்படி என்பதை இங்கே ஒரு 9 செகண்ட் வீடியோவிலேயே மதிப்பிட்டு விடலாம்!
நாசா என்று கூடங்குளம் நாட்களில் அருவருப்போடு அழைக்கப்பட்டவருடன்  சேர்ந்து என்னமாய் ஒரு  எகத்தாளச் சிரிப்பு? ஹிந்துக்கள் மதரீதியாக ஓட்டுப் போடுவதில்லை என்பதால் வருவதா இத்தகைய பேச்சு? அப்படியானால், அதையும் மாற்றிக் காட்டவேண்டிய நேரம் இது!  
நாராயணசாமிக்கு ஆதரவு! சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு! மம்தா பானெர்ஜிக்கு ஆதரவு! அப்படியே ராவுல் பாபாவுக்கும் ஆதரவு! ஒரேவார்த்தையில் சொல்வதானால் ஊழலுக்கே முழு ஆதரவு! இதுதான் திமுக என்கிறபோது, இவர்களை நிராகரித்தே ஆக வேண்டும் என்று சொல்வதில் தயக்கமென்ன?        

திமுக என்றாலே ஊழல்! திமுக நிச்சயம் வேண்டாம்!  

      

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)