அரசியலில் துரோகங்கள் கூட நன்மைக்கே என்று முகநூலில் விஜயகுமார் அருணகிரி என்பவர் எழுதி இருக்கிற பகிர்வு கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. முழுதும் கீழே
1998 லோக்சபா தேர்தல் . திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் அப்பொழுது புதிதாக திமுகவில் இணைந்து இருந்த சரத்குமார் வேட்பாளராக போட்டியிட்டார்.அதிமுக பக்கம் இருக்கும் நாடார் ஓட்டுக்களை திமுகவுக்கு கொண்டு வர நினைத்த கருணாநிதி சரத்குமாருக்கு சீட் கொடுத்து இருந்தார்.
அதிமுக சார்பில் கடம்பூர் ஜனார்த்தனம் போட்டியிட்டார்.நமக்கு தெரிந்த நாடார் இன நண்பர்கள் அனைவரும்சரத்குமாருக்கு ஆதரவாக வேலை செய்தார்கள்அப்பொழுது நான் திமுக அனுதாபியாக இருந்தாலும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகவே இருந்தேன்..காரணம் சரத்குமார் கனிமொழி இவர்கள் எல்லாம் கழிசடைகள் .இவர்களுக்கு சாதி ரீதியாக ஆதரவு அளிப்பது இந்த சமுதாயத்திற்கு நாம் செய்யும் தீங்காகும் என்பது என்னுடைய நிலைப்பாடு. நம்மால் இந்த சமுதாயத்திற்கு நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. கெடுதல் செய்யாமல் இருக்க வேண்டும் .இதற்காக சரத்குமார் மாதிரி ஆட்க ளைஜெயிக்க விடக் கூடாது என்றே நான் எங்கள்பகுதி நாடார் இன நண்பர்களிடம் கூறுவேன்
.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெ ற்று முடிவுகள் வெளி வந்து கொண்டு இருந்தது திருநெல்வேலி தொகுதியில் சரத்குமார் முன்னிலை என்றே அப்பொழுது வானொலியில.கூறிக்கொண்டு இருந்தார்கள். நண்பர்கள் எல்லோரும் என்னிடம் பாருய்யா .. சரத்குமார் ஜெயிச்சாச்சு என்று என்னிடம் வம்பிழுக்க பொறுங்கப்பா..தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி ஒட்டு இன்னும் எண்ணவில்லை என்றேன்.
தூத்துக்குடி ஓட்டுக்களை எண்ண ஆரம்பித்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. அதிமுக வின் கடம்பூர்ஜனாரத்தனம் முன்னிலைக்கு வந்தார். இறுதியில் 6904 ஓட்டுக்கள் வித்தியாச த்தில் சரத்குமார் தோல்வி அடைந்தார்.எனக்கு சந்தோசமாக இருந்தது உடன் இருந்த நண்பர்கள்என்னிடம் கடுமையாக சண்டைக்கு நின்றார்கள்.
கடைசியில் சரத்குமார் என்னை தோற்கடித்தது தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமிதான் என்று பகிங்கரமாகவே குற்றம் சாட்டினார் எனக்கு பெரியசாமியை பிடிக்காது என்றாலும் சரத்குமாரை தோற்கடித்தன் மூலமாக பெரியசாமிக்கு தேங்க்ஸ் கூறிக்கொண்டேன்.
சரிப்பா இப்பொழுது எதற்கு இந்த கதை என்று கேட்கிறீர்களா? தூத்துக்குடி அரசியலில் தன்னை தவிர வேறு யாரையும் அரசியல் செய்ய விட மாட்டார் பெரிய சாமி. தந்தை வழியில் கீதா ஜீவனும் தூத்துக்குடியில் திமுகவை அவர்களின் குடும்ப சொத்தாகவே வைத்து இருக்கிறார்.
2004 லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் வெங்கடேச பண்ணையாரின் என்கவுண்டர் தான். அதனை முன் வைத்து கருணாநிதி ஆடிய அரசியல் ஆட்டத்தினால் தான் நாடார்கள் அதிமுக ஆதரவு நிலை யில் இருந்து திமுக பக்கமாக திரும்பினார்கள்.
அப்பொழுது திமுகவில் உறுப்பினராக ஏன் அனுதாபியாக கூட இல்லாத வெங்கடேச பண்ணையாரின்மனைவியான ராதிகா செல்வியை திருச்செந்தூர் லோக்சபா தொகுதியின் வேட்பாளாராக்கி நாடார் வாக்குகளை திமுக பக்கம் திருப்பிக் கொண்டார் கருணாநிதி.
வெற்றி பெற்ற ராதிகா செல்வியை மத்திய மந்திரியாக்கி தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவை வளர்த்து கொண்டார் கருணாநிதி. ஆனால் இப்பொழுது ராதிகா செல்வி எங்கே? காரியம் நிறைவேறிய உடன் கழற்றி விட்டு விட்டார்கள். தூத்துக்குடி மாவட்ட திமுகஅரசியலில் பெரிய சாமி குடும்பத்தை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
இதற்கு உதாரணமாக ஜெனிபர் சந்திரன் ராதிகாசெல்வி என்று திமுகவில் உச்சத்தில் இருந்து பெரிய சாமி குடும்பத்தினால் திமுகவில் இருந்துவிரட்டப் பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அதனால் கனிமொழியை தூத்துக்குடி மாவட்ட அரசியலில் வேரூன்ற விட பெரியசாமி குடும்பம் நிச்சயமாக விட மாட்டார்கள். கனி மொழியை கவிழ்த்துவிடவே பார்ப்பார்கள். இது அவர்களின் எதிர் கால அரசியலுக்கு மட்டுமல்ல
ஸ்டாலினின் எதிர்கால அரசியலுக்கும் பயன்படும் என்பதால் நிச்சயமாக கனிமொழியை தோற்கடிக்க ஸ்டாலின் துணை நிற்பார்.
ஏம்ப்பா அந்த அளவிற்கா ஸ்டாலினுக்கு அறிவு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஸ்டாலின் சும்மா டம்மி. துர்கா ஸ்டாலின் தான் திமுகவின் இப்போதைய மம்மி. திமுகவில் இனி தன்னுடைய குடும்பத்தை தவிர வேறு யாரும் தலைமை பதவிக்கு வந்து விடக் கூடாது என்று நினைக்கும் துர்கா ஸ்டாலின் கீதா ஜீவன் மூலமாக கனிமொழியின் அரசியல் வாழ்க்கையை முடித்து விடுவார்.
தூத்துக்குடி மாவட்ட அரசியல் துரோகங்கள் நிறைந்த வரலாற்றைக்கொண்டது. வேண்டும்என்றால் சரத்குமாரிடம் கேட்டு பாருங்கள். எப்படி கருணாநிதி பெரியசாமி மூலமாக தன்னை தோற்கடித்தார் என்று விரிவாக கூறுவார். இன்றைய திமுகவில் கருணாநிதியின் இடத்தை நிரப்பிக் கொண்டு இருப்பது துர்கா ஸ்டாலின்தான்.
அதனால் மீண்டும் ஒரு துரோக வரலாற்றை தூத்துக்குடியில் பெரியசாமி குடும்பம் எழுத தயாராக காத்து இருக்கிறது. வரலாற்றில் பல துரோகங்களின் பயன்கள் நன்மையாகவே முடிந்துள்ளது. அந்த வகையில் கனிமொழியின் தோல்வியினால் இந்த தேசத்துக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய நன்மை விளையும்.
அதனால் நாடார் இன நண்பர்களே! சாதி உணர்வுகள் இருக்கலாம். அதற்காக கனிமொழி சரத்குமார் மாதிரி கழிசடைகளை ஆதரிப்பது இந்த நாட்டிற்கு செய்யும் துரோகமாகும்.எனக்கு என்னுடைய இனத்தை விட என்னுடைய தேசமே தெய்வமாகும்.
முடிவாக என்னப்பா கூற வருகிறாய் என்றுகேட்கிறீர்களா.. மதம் என்பது நாம் அணிந்துள்ள மேல்சட்டை மாதிரி பளிச்சென்று தெரிய வேண்டு ம். ஆனால் சாதிஎன்பது உள்ளே அணிந்துள்ள கால்சட்டை(உள்ளாடை) மாதிரிகண்ணுக்கு தெரியக்கூடாது. இருந்தாலும் கனிமொழி மாதிரி கழிசடைகளுக்கு எதிராக வேட்டியை வரிந்து கட்ட ஆரம்பித்ததால் என்னுடையகால்சட்டையின் நிறம் தெரிய ஆரம்பித்துவிட்டது.
.
அதற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள்.தூத்துக்குடி யில் தேர்தல் முடியும் வரை இது மாதிரி சாதி சார்ந்த பதிவுகள் அடிக்கடி வரும்.அதற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள்.எனக்கு தேவை தூத்துக்குடியில் பிஜேபியின் வெற்றி!அதுவரை சாதி பின்புலம் இல்லாது எதையும் எழுத முடியாது..
என்னுடைய லட்சியம் என்றுமே..இந்துவாக இருப்போம் இந்தியாவை காப்போம். என்பதே...