Monday, March 2, 2020

திங்கள் மாலை! சுவாரசியமான செய்தி அலசல்!

அந்தப்பக்கம் திரௌபதி படத்தைப் பற்றி எழுதியதை வாசித்தீர்களா?  News 7 சேனலின் நெல்சன் சேவியர், திரௌபதி  படத்துக்கு ஜனங்கள் அதிக வரவேற்பளிப்பதில் நொந்து ட்வீட்டரில் பொங்கியது சேனலுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்றோ என்னவோ திரௌபதி படக்குழுவினருடன் ஒரு நேர்காணலை நடத்தி சமன் செய்திருக்கிறார்கள் போல!


நாடகக் காதல், ஆணவக்கொலைகள் என்ற பரப்புரை தாண்டி, ஒரு மிகப்பெரிய மோசடி நடந்ததும், அப்படியே அமுங்கிப்போனதுமாக இருந்த விஷயத்தை திரௌபதி படம் மீண்டும் கவனப்படுத்தி இருக்கிறது. மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், அவர்களுக்குத் துணையாக இருந்தவர்கள் மீது இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னால், அரசும், பார் அசோஸியேஷனும் ஊமைச் சாமிகளாக அப்படியே அடக்கிவாசிப்பது ஏன் என்ற கேள்விக்கு விடைதேடுவதற்குப் பதிலாக, பாமகவுக்கு அரசியல் ஆதாயம் தேடித்தருவதோடு திரௌபதி படம் நின்றுவிடுமானால், என்வரையில் அது பெருத்த ஏமாற்றம் என்பதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டி இருக்கிறது.

  
இதை எப்படி எடுத்துக்கொள்வது? கமல் காசர் வந்து தான் பொழிப்புரை எழுதித்தர வேண்டுமோ? அப்புறம் அந்த என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் என்பதன் வரையறை என்னவோ??

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முகநூலில் லந்து அடிப்பதில் திமுகவின் சாயம் என்ன ஆகிறதாம்? வந்து பாருங்கள்!

‪தீமிதித்து கருணாநிதியிடம் திட்டு வாங்கிய அந்தியூர் செல்வராஜை ராஜ்யசபைக்கு நியமித்து இருப்பதன் மூலம் திமுக இந்துக் கட்சியே என ஸ்டாலின் தெள்ளத்தெளிவாய் தெரிவித்திருப்பதை, செயற்குழு லெவல் ஐடி பிரிவின் மைனாரிடி அணி உறுப்புல்லாஹ் எப்படியெல்லாம் முட்டு கொடுக்கவேண்டி இருக்கிறது😂😂😂


மதன் ரவிச்சந்திரன் வேறு நொந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்.

அப்போ இவ்ளோ நாள் பெயர் இருந்ததாக சொல்லப் பட்ட hmm hmm நிலைமை...
எசமான்: தம்பி நீங்க திறமையானவர் தான் நல்ல செல்வாக்கு இருக்கு அதுவே நாளைக்கு சின்னவற்கு பிரச்னையா வந்துட்டேனா... போ போய் வழக்கம் போல பூண்டு தட்டி போட்டு சூடா மசால் வடை வாங்கிட்டு வா...
hmm hmm : சரிங்க எசமான்🔥🔥🔥
               

இந்த முகநூல்தான் எப்படி ஒவ்வொருவருடைய மன வக்கிரத்தையும் வெளிப்படுத்துகிற கருவியாக இருந்து வதைக்கிறது!!


இது ஒன்றுதான் பாக்கி இருந்தது! இன்றிரவு அதுவும் தீருகிறது. திருப்திதானே!

மீண்டும் சந்திப்போம்.    

2 comments:

  1. படித்தவர்கள் திமுக வில் வளர வேண்டும். அது திமுக வில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      நீங்கள் சொல்வது புரியவில்லை. படித்தவர்களே திமுகவில் இல்லை என்றா சொல்கிறீர்கள்? படித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பண்புள்ளவர்களாக இருக்கிறார்களா, அல்லது வசதி வாய்ப்புக்காகத் தலைமையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறவர்களாக மட்டுமே இருக்கிறார்களா என்பது தான் கேள்வியாக இருந்திருக்க வேண்டும்.

      கழகங்களுடைய so called திராவிடக் கொள்கைகளுக்காக எவரும் கட்சியில் இல்லை என்பது மட்டும் தெளிவு.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)