Sunday, March 15, 2020

கழுதை தேய்ந்து கட்டெறும்பு! காங்கிரஸ் தேய்ந்து ....?

சாகரிகா கோஸ்! ராஜ்தீப் சர்தேசாயுடைய மனைவி, பத்திரிகையாளரும் கூட என்று மட்டும் சொன்னால் போதாது. கணவனும் மனைவியும் லிபரல்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டாலும் காசுக்காகக் கூவுவதைப் பிழைப்பாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் என்று சுருக்கமாகச் சொல்லவும் வேண்டுமே! சரி, சாகரிகாவுக்கு என்ன இப்போது என்கிறீர்களா? ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசை உதறி எறிந்துவிட்டு பிஜேபிக்குப் போனது இங்கே காசுக்காகக் கூவிக் கொண்டிருந்தவர்களில் பலபேரை ரொம்பவுமே பாதித்திருக்கிறது. சோனியா பரிவார் காங்கிரசை விட்டு வெளியேபோனால் நல்லது என்று வெளிப்படையாகச் சொல்லவும் ஆரம்பித்து விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! With Jyotiraditya Scindia’s departure, there are predictions of the imminent demise of the Congress. But it’s not the Congress that’s about to die — it’s the Gandhi family’s political authority that has evaporated.  இப்படித் தன் புலம்பலை இன்றைக்கு TOI இல் எழுதி ஆரம்பித்து இருக்கிறார்.


When even such a close family friend ups and leaves after a bitter exchange of words, it’s clearly a resounding vote of no-confidence in the Gandhi parivar. Ironically though, the precipitous decline of Brand Gandhi is an opportunity to revive Brand Congress இப்படி சோனியாG ப்ராண்ட்   மீது நம்பிக்கையில்லாமல் போனது காங்கிரஸ் ப்ராண்ட் உயிர்த்தெழ ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது என்று அம்மணி, காங்கிரசில் இருந்து பிரிந்து போன சரத் பவார், ஜெகன் மோகன் ரெட்டி முதலானவர்களை மறுபடியும் இணைத்து, காங்கிரஸ் ப்ராண்ட் தழைப்பதற்கு இதுவே நல்ல தருணம் என்று கனவுக் கோட்டைகளைக் கட்டுகிறார்!வரவர மாமியார் கழுதை போலாகி, அந்தக் கழுதையும் தேய்ந்து கட்டெறும்பாகி நிற்பதில் கட்டெறும்பு தேய்ந்து என்ன ஆகுமாம்? எதற்காக சாகரிகா போன்றவர்கள் கதறுகிறார்கள்? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?  

வீடியோ 4 நிமிடம் 

காங்கிரசுக்கு ஒரு நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியவில்லை என்பதால் தான் தொடர்ந்து இருமுறை தோற்க வேண்டிவந்தது.பொறுப்பான எதிர்க்கட்சியாகவும் இருக்க முடியவில்லை என்றால் காங்கிரசுக்கு எதிர்காலம் இருக்கிறதா என்ன?

  
இந்தக் காமெடி விவாதத்தை, வீடியோ 44 நிமிடம், பொறுமையாகப் பார்க்க முடிந்தால் பார்த்துவிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு ஏதேனும் இருக்கிறதா, அல்லது வாக்காளர்களே கருணைக்கொலை செய்துவிட வேண்டியதுதானா?  இந்தக்கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

மீண்டும் சந்திப்போம். 

      

2 comments:

  1. அமெரிக்கை நாராயணன் பேச்சு வந்தால் நான் மியூட் ல் போட்டு விடுவேன் அல்லது நகர்த்தி விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      பாவம் அமெரிக்கை! அவருக்கு இது பிழைப்பு. திருச்சி வேலுசாமி மாதிரி உரத்தகுரலில் அடாவடியாகப் பேசுகிறவர் காங்கிரசுக்கு ஓகேவா ?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)