Thursday, March 12, 2020

ஜோதிராதித்ய சிந்தியா! சோனியா & கோவின் முடிவின் தொடக்கம்!

சோனியாG காங்கிரஸ் ஆட்சியிலிருந்த 2004 - 2014 இந்தப் பத்து வருடங்களில், காசுக்குக் கூவுகிற ஊடகக் காரர்களுக்கு யோககாலம் என்றிருந்தது நினைவுக்கு வருகிறதா? யார் யாரெல்லாம் மந்திரி, எந்த மந்திரிக்கு என்ன இலாகா என்பதைக் கூட தரகு வேலை செய்ய முடிந்த காலம் அது. அதிலும் கொடிகட்டிப் பறந்தவர் அந்தநாட்களில் NDTV யின் அறியப்பட்ட முகமாக இருந்த பர்கா தத். நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி ஆட்சி அமைத்த இந்த ஆறாண்டுகளில், செல்லாக் காசாகிப் போனவர்களில் முதலிடம் வகிப்பதும் கூட  அதே பர்கா தத் தான்! காங்கிரஸ் சார்பு ஊடகங்களில் (ஹிந்துஸ்தான் டைம்ஸ்) அவ்வப்போது எழுதுகிறார். Mo Jo Story என்கிற யூட்யூப் சேனலில் அடிக்கடி அம்மணியின் அரசியல் மேதாவித்தனத்தைக் காணமுடிகிறது என்பதில் ஆறுதலா? சோதனையா?

 
  
இந்த ஆறுநிமிட வீடியோவில் பர்கா தத் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டுத் தான் பாருங்களேன்! மத்தியப்பிரதேசத்தில் சிந்தியா வெளியேறியது ஒரு ஆரம்பம்தான்! அடுத்த்து யார் யாராக இருக்கலாம் என்ற ஊகத்தை காரணத்தோடு சொல்கிறார் என்பதுதான் சுவாரசியம். எச்சரிக்கை மணியைச் சட்டைசெய்கிற மனோநிலையில் சோனியா குடும்பத்தினர் எவருமே இல்லை என்பது தான் காங்கிரஸ் கட்சியின் தொடர் சோகம். தலைமை தாங்கத் துப்பில்லாவிட்டாலும் அந்தக் குடும்பத்தைத் தவிர வேறு எவர்கைக்கும் கட்சி போய்விடக்கூடாது என்பதிலும் குறியாக இருக்கிறது சோனியா & கோ. தொடர்ந்து மாரடைப்புக்குள்ளாகிற ஒரு மனிதனுடைய கதை போலத்தான்! அடைப்பை சரி செய்யத் தலைமை முயற்சிக்க வேண்டும் முடியாவிட்டால் ஒதுங்கி வேறொருவருக்கு வழிவிட வேண்டும். இரண்டுக்கும் இடம் கொடுக்காத அடைப்பாக சோனியாG இருப்பது தான் காங்கிரசுடைய தற்போதைய பரிதாப நிலைமை.  

  
ஆதன் தமிழ் சேனல் மாதேஷுடைய கேணத்தனமான குறுக்கீடுகள், கேள்விகளைக் கொஞ்சம் சகித்துக் கொள்ள முடியுமானால், இந்த 26 நிமிட நேர்காணலில் கோலாகல ஸ்ரீனிவாஸ் மத்தியப்பிரதேச காங்கிரசின் அரசியல் குளறுபடிகளை, பொறுமையாக விளக்கிச் சொல்கிறார். சொன்னதில் கொஞ்சமாவது மாதேஷுக்குப் புரிந்ததா என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்!

   
தமிழகத்தின் நிரந்தரக் குழப்பமாக இருப்பது என்று ரஜனி முடிவு செய்து விட்டார் என்பதற்குமேல் தராசு ஷ்யாம் வேறு புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறார்? இதற்குப்போய்  13 நிமிடம்  நீட்டி முழக்கலா?



மீண்டும் சந்திப்போம்.    

4 comments:

  1. அது வெறும் இலவங்காய்..ந்னு தெரிஞ்சிருந்தும் அதத் தான் திங்கனும்..ந்னு கிளியெல்லாம் கூடு கட்டிக்கினு குந்தியிருந்தா.... என்ன..ந்னு சொல்றது!?..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜு சார்!

      இவர் வருவாரென்று இன்னமும் நம்புகிற ரசிகக்குஞ்சுகளை என்னவென்று சொல்வது?

      Delete
  2. ரஜினி போகாத ஊருக்கு வழியைச் சொல்கிறார்.

    ஜோதிராதித்யா, அவருடைய எதிர்காலத்துக்கு எது நல்லதோ அதை நோக்கிப் பயணித்திருக்கிறார். வேறு என்ன சொல்ல.

    ReplyDelete
    Replies
    1. ரஜினிகாந்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதிக்கொடுக்கிற ஆள் சரியில்லை! அவ்வளவுதான் நெ.த. சார்!

      ஜோதிராதித்ய சிந்தியா பிழைக்கிற வழியைத் தெடிக் கொண்டார் என்பது சரி! ஆனால் இத்தனைகாலம் பொறுமையாக இருந்திருக்க வேண்டியதில்லை.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)