Thursday, March 19, 2020

கொரோனா வைரஸ் தொற்று: பிரதமர் நரேந்திரமோடியின் உரை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயப்பட அவசியமிருக்கிறதோ இல்லையோ தேவையே இல்லாத பரபரப்பும், வதந்திகளும், பீதியும் வாட்சப் முதலான சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கிற வினோதத்துக்கு பஞ்சமில்லை. சதீஷ் ஆசார்யா தொடர்ந்து பொறுப்பற்ற விதத்தில் கார்டூன்கள் வரைந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். இவைகளுக்கு மத்தியில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களுக்கு சில முக்கியமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்

     
கொரோனாவின் அச்சுறுத்தல் பற்றி விளக்கி இருக்கிறார்.
Social Distancing ஆக இருப்பதின் தேவையை குறிப்பிட்டு இருக்கிறார்.
தனியாக இருப்பதற்கு மக்கள் பழகுவதற்கு வரும் ஞாயிறு 'மக்கள் ஊரடங்கு' (Janata Curfew) என்று அறிவித்து இருக்கிறார். சட்டரீதியாக எதுவும் இல்லாமல், மக்கள் தாங்களே காலை முதல் மாலை வரை வீட்டை விட்டு வராமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
இந்த வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப் படுபவர்களுக்கு உதவ ஒரு நிபுணர் குழு அமைக்கப் பட்டு இருக்கிறது. அவர்கள் விரைவில் முடிவுகள் எடுத்து தேவைப்படும் உதவிகளை செயல் படுத்துவார்கள்.
உணவு, மாளிகை, காய்கறி, மருந்துகள் போன்றவை விற்பனைக்கோ, கடைகளுக்கோ எந்தத் தடையும் வராது. மக்கள் வாங்கிக் குவித்து வைத்து ஸ்டாக் தீர்த்து வைக்காமல் இருக்க கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த அச்சுறுத்தல் நடுவிலும் மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள் முதல் பால் டெலிவரி செய்பவர் வரை செய்யும் சேவைகளை நினைத்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் பிரதமர் பேசி இருக்கிறார்.
தீவீர மோடி எதிர்ப்பாளரிடமிருந்து முகநூலில் இப்படி ஒரு உடனடி பகிர்வை நான் எதிர்பார்க்கவே இல்லை.

ஞாயித்துக்கிழமை ஒரு நாள் ஒரே ஒரு நாள் மட்டும் வீட்டிலே இருந்து பாருங்க என சொல்லியிருக்கார். மற்றபடிக்கு ஊரடங்கு உத்தரவெல்லாம் இல்லை.
பொருட்களை வாங்கி ஸ்டாக் வைக்கவேண்டாம் எல்லாம் பொருட்களும் கிடைக்க அரசு வழி செய்யும் என சொல்லியிருக்கார்.
சூப்பர் மார்க்கெட்டை கொதறதாதீங்க. 
இப்படி மிகச்சுருக்கமாக நண்பர் ராஜசங்கர் பகிர்வில் சொல்லியிருந்ததை கூட ஸ்ரீதர் கொடுத்த அதிர்ச்சி, பாராட்டுப் பத்திரம் மறக்கடித்துவிட்டது. இருந்தாலும் சேட்டைக்காரன் பதிவர் விலாவாரியாகச் சொன்னது போல வருமா?
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதிஜி அவர்களின் வேண்டுகோள்:
1. அடுத்த சில நாட்கள் / வாரங்களுக்கு அத்தியாவசியமான காரணம் தவிர்த்து பிற காரணங்களுக்காக தயவு செய்து வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.
2. இன்னும் கொரோனாவுக்கு சரியான மருந்துகள்/ உபாயங்கள் கண்டுபிடிக்காத நிலையில், அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பது அவர்களுக்கும், அவர்களது உற்றார், உறவினர்களுக்கும், மற்றவர்களுக்கும் பாதுகாப்பானதாகும்.
3. வெளியே செல்ல முடியாதவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அவர்களது விடுப்புகளுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் இருக்குமாறு நிறுவனங்கள் /தனியார்களிடம் வேண்டுகோள்.
4. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் என்பதால், அனாவசியமாக பெருமளவில் பொருட்களை வாங்கிக் குவித்து விடாதீர்கள்.
5. கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினர் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்வகையில் தனி நபர்களும் கொரோனாவை எதிர்கொள்ள, அரசாங்கம் விதிக்கிற கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகக் கடைபிடிக்கவும்.
6. இந்த இக்கட்டான சூழலில், உறுதியும், கட்டுப்பாடும் அனைவருக்கும் மிக அவசியம்.
7. பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அதுகுறித்து ஆராய்ந்து உரிய முடிவுகளை எடுக்க நிதியமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
8. 60/65 வயதுக்கு மேற்பட்டவர்களை எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியேற விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.
9. வழக்கமான உடற்பரிசோதனைகள்/ தள்ளிப்போடத் தக்க அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றை தயவு செய்து ஒத்திப்போடவும். மருத்துவமனைகள், சுகாதார ஊழியர்கள் மீது அனாவசியமான அழுத்தம் தராமலிருக்க இது உதவும்.
10. வருகிற மார்ச் 22-ம் தேதி ( ஞாயிறு) காலை 07:00 மணி முதல் இரவு 09:00 வரை பொது ஊரடங்கு (Janata Curfew) கடைபிடித்து அனைவரும் வீட்டிலேயே இருக்கவும்.
11. மார்ச் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு, சைரன் ஒலிக்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்யவும். சைரன் அடித்ததும் அனைவரும் அவரவர் வீட்டு வாசலில், ஜன்னலில் நின்றபடி 5 நிமிடங்களுக்கு கரவொலி எழுப்பி கொரோனாவுக்கு எதிராகப் போராடுகிறவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும்.
அனைவரும் பிரதமர் சொன்னதைக் கடைபிடிப்போம். பாரதத்தை கொரோனாவிலிருந்து காப்போம்.
பாரத் மாதா கீ ஜே! வந்தே மாதரம்!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிஜம் தான்! அதற்காக பயந்து ஓடவும் வேண்டாம்! ஒளியவும் வேண்டாம். சுயகட்டுப்பாட்டுடன், சுகாதாரத்துறை சொல்கிற விஷயங்களைக் கடைப்பிடித்தாலே , நம்மால் இந்த அச்சுறுத்தலை வெற்றிகரமாக சமாளிக்க முடியும்

மீண்டும் சந்திப்போம்.         

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)