Wednesday, June 16, 2010

நியாயத் தீர்ப்பு..! எண்டமூரி வீரேந்திரநாத்!


 வெற்றிக்கு ஐந்துபடிகள் புத்தக வெளியீட்டு விழாவில் திரைப்பட நடிகர் நாகார்ஜுனன் மாலை அணிவித்துக் கட்டித் தழுவுகிறார்!

என்னுடைய இன்னொரு வலைப்பக்கங்களில், தமிழில் புத்தக வெளியீடு, பதிப்பாளர்களுடைய மனோபாவத்தைத் தொட்டு கொஞ்சம்  எழுதி இருந்தேன். அதில் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய நியாயத் தீர்ப்பு என்ற ஒரு சிறு புத்தகம், மூன்று குறுங்கதைகளைக் கொண்டதைத் தொட்டுச் சொல்லியிருந்தது இங்கே மீள்பதிவாக. 

புத்தகங்களைப் பகிர்ந்து கொள்கிற பதிவுகள் எல்லாம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவுமே கூட!

நாலாவது தூண் புத்தக விமரிசனமாக எழுதும்போது, இப்படிச் சொல்லி இருந்தது நினைவு வருகிறதா?

"கதை எழுத ஆரம்பிக்கும் போதே, ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது மூன்று திருப்பங்களையாவது வைத்துவிடுகிறார். கதையின் பிளாட் என்ன என்பதை நடுவிலேயே இந்தக் கதையில் மொத்தமாகவே சொல்லி விடுகிறார். வித்தியாசமான பாத்திரங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கதைக்களங்கள், என்று தேர்ந்த நெசவாளி சின்னச் சின்ன இழையாகப் பின்னிப் பின்னி ஒரு பட்டுப் புடவையை நெய்வதுபோல, கதையை கண்முன்னால் நிகழ்கிறமாதிரிக் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்!

திருப்பம், திருப்பத்திற்குத் திருப்பம், திடீர்த் திருப்பம், அதிரடித் திருப்பம் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அந்த ஒரு சுவாரசியத்தை, படிக்க வருகிறவர்களைக் கட்டிப்போடுகிற ஜாலத்தை எண்டமூரியின் அத்தனை கதைகளிலுமே பார்க்கலாம்.எண்டமூரி சுவாரசியத்திற்கு நான் காரண்டீ! போதுமா! "

எண்டமூரி வீரேந்திரநாத் என்ற அருமையான கதை சொல்லியின் திறமையை வியந்து எழுதிய வார்த்தைகள் அவை! கதை சொல்கிற நேர்த்தி, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு  இப்போது மறுபடி படிக்க ஆரம்பித்தபோதும் மனதைக் கொள்ளை கொள்வதாக இருக்கிறது.

எண்டமூரி வீரேந்திரநாத் எழுதி, சுசீலா கனக துர்க்கா மொழிபெயர்ப்பில் வெளியான "நியாயத் தீர்ப்பு "என்று ஒரு புத்தகம். மூன்று குறுங்கதைகள். இதுவும் சென்னை, திருமகள் நிலையம் வெளியீடு தான்..1992 இல் வெளியானது வெறும் 191 பக்கங்கள் தான்.

முதல் கதை நாற்பத்தெட்டே பக்கங்கள் தான்! ஐந்து கதா பாத்திரங்கள். ஆறாவது கதாபாத்திரத்தைப் பற்றி பிரஸ்தாபம் மட்டுமே இருக்கிறது.

ஒருவன் தன்னுடைய மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்று அதற்காக இன்னொருவனிடம் இரண்டுலட்சம் ரேட் பேசி, ஒருலட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறான்.

அதை மூன்றாவதாக ஒருவன், அவன் தான் இந்தக் கதையின் நாயகன், கவனித்துக் கொண்டிருக்கிறான்! கொலைகாரனிடம் போய், அவனுடைய திட்டம் எல்லாம் தெரியும் என்று காட்டி, அட்வான்ஸ் தொகை ஒரு லட்சத்தையும் அடித்துக் கொண்டு வந்து விடுகிறான்.

அடுத்து, கொலை செய்ய ஏவியவனிடம் போகிறான். அங்கேயும் கதாநாயகன், தனக்குத் தெரிந்த ஆதாரங்களை எடுத்து வைக்கிறான். வேறு வழி இல்லாமல், ஏவியவன் நான்கு லட்சம் ரூபாயைக் கதாநாயகனுக்குக் கொடுக்கிறான்.

இரண்டு மனிதர்களையும் எப்படி எதிர்கொள்கிறான், அவர்களும் என்ன மாதிரியான நிர்பந்தத்திற்குப் பணிந்து போகிறார்கள் என்பது, அடுத்தடுத்த திருப்பங்களாக எண்டமூரி தனக்கே உரிய லாவகத்தோடு கதையைப் பின்னியிருக்கிறார்.

அதோடு கதை முடிவதில்லை அன்பர்களே! எண்டமூரியின் ஸ்பெஷாலிடியே, திருப்பத்துக்கு மேல் திருப்பம், கடைசியாக ஒரு பன்ச் வைத்து ஒரு அதிரடித் திருப்பம் தான்!

மனைவியைக் கொல்வதற்கு அலையும் அந்த மனிதனையே  எப்படி அவளுக்கு செக்யூரிடி கார்டாக,  கண்ணின் இமையாகக் காப்பாற்ற வைத்து விடுகிறான் என்பது  அதிரடித் திருப்பம்! அதற்கும் மேல் ஒரு சூபர் பன்ச் இருக்கிறது-

அது தான் இந்தப் புத்தகத்தின் முதல் கதை. குயிலின் குஞ்சு!

ராபின் ஹூட் கதைகளை அல்லது அந்த மாதிரி உல்டா அடித்து வந்திருக்கும் ஏராளமான கதைகளில் ஒன்றையாவது படித்திருப்போம். இந்தக் கதையிலுமே ஒரு ராபின் ஹூட்  டைப் ஆசாமி தான் கதாநாயகன்! இருப்பவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்பவன்! 

அதிலும் கூடக் கொஞ்சம் நியாயம், தர்மம் என்று பார்ப்பதாக முடித்திருக்கும்  கடைசி பதினைந்து-இருபது வரிகள் சூபர் பன்ச்!
3500 வார்த்தைகளுக்குள் இவ்வளவு டிவிஸ்டா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? படித்துப்பாருங்கள்!

வாசிப்பதில் தான் எத்தனை சுகம்!  மலருக்கு மலர் தாவித் தேன் குடிக்கிற வண்டுகள் மாதிரி, ஒரு நல்ல வாசகனாக இருப்பதில் தான் எத்தனை ஆனந்தம்!

எனக்கு எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியதையும் படிக்கப் பிடிக்கிறது.  வி.ச. காண்டேகர் முதல் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் ஜெயமோகன் வரை, எல்லாத் தளங்களையும் தொட்டு விட ஆசைதான்!  ஒரு நல்ல வாசகனாக இருப்பதில் தான் எத்தனை ஆனந்தம்!

வாசகனாக, இது தொட்டு விட முடிகிற வானம் தான் என்பது நன்றாகவே தெரிகிறது.

இங்கே இன்னொரு விஷயத்தையும் தொட்டுச் சொல்லியாக வேண்டும்.

இணையத்தில் புத்தக அட்டைப்படங்களைத் தேடிய போது, எண்டமூரியின் பல புத்தகங்கள்  தெலுங்கில்  இன்றைக்கும் கூட முப்பது ரூபாயில் இருந்து எண்பது ரூபாய்களுக்குள் கிடைக்கிறது.

தமிழில் வெளிவரும் சிறு புத்தகங்கள் கூட நூறு ரூபாய்களுக்கும் அதற்கு மேலும் இருப்பது வாசகர்கள் விலை கொடுத்து வாங்கிப்படிக்கத் தயாராக இருந்தாலும், பதிப்பாளர்கள் தயாராக இல்லாத நிலையைத் தான் காட்டுகிறது. இங்கே சரக்குக்குத் தகுந்த விலை என்று இருப்பதில்லை. அதுக்கும் கொஞ்சம் மேலே, ஓவராகத் தான் இருக்கிறது.

ஒரு கால கட்டத்தில், மலிவு விலைப் பதிப்புக்களாக, பிரேமா பிரசுரம் முதலில் மர்ம  நாவல்களை ஆரம்பித்தது. பிரபல எழுத்தாளர்கள் எவருமே அதில் எழுத முனையவில்லை.நடுவில் ராணி முத்து என்று தினத்தந்தி குழுமத்தில் இருந்து சுருக்கப்பட்ட கதைகள் வெளிவந்தன. பின்னாட்களில், ஜி ஏ அசோகன் பாக்கெட் நாவல் என்று ஆரம்பித்தார். பாலகுமாரன் ஒருவர் தான் பாக்கெட் நாவலில் தொடர்ந்து தனது கதைகளை வெளியிட்டுக் கொள்ள அனுமதித்திருந்தார் என்பதை வைத்தே அவர் சுருங்கிப்போனதாக ஒரு விமரிசனமும் உண்டு.

நேசமுடன் வெங்கடேஷ் எழுதிய இந்தப் பதிவு தமிழ்ப் பதிப்புத் துறையை வேறு கோணத்தில் இருந்து பார்க்கிறது

கேரளத்தில் எழுத்தாளர்கள் கூடி, ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் வழியாகத் தங்கள் புத்தகங்களை ஜனங்கள் காசுகொடுத்து வாங்கிப் படிக்கும் விலையில் வைத்திருந்தார்கள்.

இங்கே தமிழ்நாட்டிலும் புத்தகங்கள் அந்த மாதிரி, கைக்கெட்டுகிற விலையில் கிடைக்கும் நாள் என்னாளோ? 


1 comment:

  1. ஆஹா..எண்டமூரியின் நிறைய புத்தகங்களை மிஸ் பண்ணியிருப்பேன் போல இருக்குது..

    உங்களுடைய புத்தக விமர்சனங்கள் எல்லாமே அந்த புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.. அடுத்த முறை சென்னை போகும் போது இந்த புத்தகத்தையும் கட்டாயம் படித்து விடுகிறேன்..

    அறிமுகத்துக்கு நன்றி...

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)