Wednesday, June 30, 2010

இலைக் குணம்! புதுமைப் பித்தன் கட்டுரை

 30, ஜூன் 1948 இல் மறைந்த புதுமைப்பித்தனுடைய நினைவு தினம் இன்று! அவருடைய கட்டுரை ஒன்றை, நினவஞ்சலியாக இங்கே!
ன்று நானும் எனது நண்பரும் ஒரு வேலையாகச் சென்றிருந்தோம். திரும்பும்பொழுது நல்ல வெயில். எனக்குக் கொஞ்சம் தாகமெடுத்தது.எனது நண்பருக்கோ காப்பி பிடிக்காது. இப்படிப் பட்ட பிரகிருதிகளும் உண்டா என்று ஆச்சரியப் படாதீர்கள்.அதற்காக சாப்பாட்டுக் கடைஎன்று சொல்லப் படும் ஒரு கீழ்த்தர ஹோட்டலுக்குப் போய் சுக்கு வெந்நீர் கொண்டு வரச் சொன்னோம். அங்கே இருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
 
ருவர் விநாயக பகவானுக்கு அண்ணா என்று சொல்லலாம். மற்றவரோ எனில் உண்ணாவிரத உபவாச  மகிமைகளை அனுபவத்தில் அறிந்த மகான் போலத் தோன்றினார். முதற் கூறப்பட்ட மனிதர் சுமார் ஒரு அரைப்படி மோர்சாதத்தை சட்னியுடன் வேட்டையாடின காட்சியை எப்படி உரைப்பேன்!  
லையாழ்வானிடத்தில் இடையறாத அன்பு! ஒன்று மாத்திரம் சொல்கிறேன். அவரது கை தறியின் ஓடம் போல, இலைக்கும் வாய்க்குமாகப் பறந்ததுகடைசியாக இலையை வழித்து நக்கி விட்டு, பக்கத்தில் இருந்த ஒரு செம்பு ஜலத்தையும் ஒரே மூச்சில் தனது குஷியில் செலுத்திவிட்டு "ஹாய் " என்ற சத்தத்துடன்  சுவரில் சாய்ந்தார்என்ன! எரிமலைகள் நெருப்பைக் கக்கும்போது பாதாளத்திலிருந்து ஒரு ஹூங்கார சப்தம் புரண்டு கொண்டே வருமாம். அது போல எங்கே வாந்தி எடுக்கப் போகிறாரோ என்று நினைத்தேன். நல்லகாலம், அது சாதாரண ஏப்பம் தான்! சாப்பாட்டை எப்படி அனுபவித்தாரோ அப்படியே ஏப்பத்தையும் நன்றாக அனுபவித்துத் தான் விட்டார். "கிறள்" புலவர் வேடிக்கையாக
 
தின்றதனால் ஆயபயன் என்கொல்--ஏப்பந்தான்
நன்றுவராஅ தெனின்
 
ன்றதின் உண்மையைக் கண்டேன்.

"
ரி, நாம் சேர்மாதேவியில் இறங்க வேண்டுமானால், இந்த ரயிலுக்கே புறப்பட வேண்டும்"  .என்று எழுந்தார் விநாயகர் அண்ணா.
 
சேர்மாதேவி, திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து  முக்கால் மணி நேரப் பிரயாணம்.

"
ன் நாம் சேர்மாதேவியில் இறங்க வேண்டும்?" என்று தயங்கினார் உபவாச விரதர்.

"
ன் நாம் சேர்மாதேவியில் இறங்க வேண்டும்?" என்று ஆச்சரியமும் கோபமும் கலந்த குரலில் திரும்பச் சொல்லிவிட்டு " ஏன்? என்ன காப்பி சாப்பிட வேண்டாமா?" என்றார் இந்த பூலோக விநாயகர்.
 
வர் இப்படிப் பதில் சொல்லும்பொழுது அவரது அந்தராத்மாவின்  "மருமத்தில் எறிவேல்" பட்டதுபோலத் தோன்றியது அவரது குரலின் தொனி. திருச்செந்தூர் போய்விட்டு வருகிறவர்கள் திருநெல்வேலி ஜங்ஷனில் மத்தியான போஜனத்தை முடித்து விட்டு, சேர்மா தேவியில் காப்பி சாப்பிட வேண்டும் என்று தெரியாத மனிதனும் உண்டோ என்று ஆச்சரியப்பட்டார் இந்தக் கலிகாலக் கவந்தன்.  
வரது மனவுலகில் திருநெல்வேலி என்றால் திருப்தியான "சாம்பார் சாதம்" "தயிர் சாதம்" என்றும், சேர்மாதேவி என்றால் ஒரு டஜன் இட்லி சட்னிகளை அடித்துச் செல்லும் பெருவெள்ளமாகிய காப்பி என்ற சிற்றுண்டி என்றும் பொருள்பட்டு  நின்றது.
 
ம்மாதிரி இலையாழ்வாருக்குப் பக்தி செலுத்தும் அன்பர்களை மரியாதைக் குறைவாக எழுதுவதாக எண்ணக் கூடாது. என்ன, நமது பண்டைக் கிழவியின் கவிகள், நமது இலக்கியத்தில் அவள் உண்ட விருந்துகளின் ஜாபிதாக்களாகப் பரிமளிக்கின்றன அல்லவா!
 
டகென்று  சொல்லி அமுதத்தையிட்ட
கடகம் செறிந்த கை
 
கை மட்டுமா அவ்வையின் ஓவியத்தில் பாதிக்கப் படுகிறது? கைக்குப் பின் நங்கையின் மனமும் வன்மையுமன்றோ  நமது மனக்கண் முன் நிற்கிறது!மற்றும்,
 
ரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும்

ரிந்திட்ட புல்வேளூர் பூதனது வன்மையையும்  நமது கிழவி காலவாரியை எதிர்த்துப் புகழ் பெறும் தன கவிகளில் நமக்குக் காண்பிக்கிறாள்! விருந்து மணக்கும் இக்கவிகள் அவள் காலத்துச் சாதாரண மக்களின் உள்ள நிலையையும் வள்ளன்மையையும் நமக்குக் காட்டுகின்றன.
 
நான் எப்பொழுதும் ராமலிங்க சுவாமியை சாப்பாட்டுச் சாமி என்று சொல்லுவது வழக்கம். கடவுள் என்றால் எத்தனை டஜன் மாம்பழங்கள் என்று சொல்லிவிடுவார் போலிருக்கிறது. அவர் திருவாசகத்தை அனுபவித்த அருமையைப் பாருங்கள்!
 
வான் கலந்த மாணிக்க வாசகத்தின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ் சுவை கலந்தென்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!
 
ந்த "மோஸ்தர்" இலக்கிய ஆராய்ச்சி நமக்குள் இன்னமும் புறப்படவில்லை. வந்தால் நமக்குக் கம்ப ராமாயணம் எத்தனை பதிர் பேணைக்குச் சமானம் என்று சொல்லி இலக்கியச் சுவையை  லேசாக எடுத்து ஊட்டி விடுவார்கள்.

வ்வடியார் கூட்டத்தில் நானும் ஒருவன். எனது அனுபவத்தைச் சிறிது கேளுங்கள்.
னது நண்பரும் குருநாதருமானவர்--பெயரைச் சொல்ல இஷ்டமில்லை.--'ரசிகர்' என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் மாணவனாக இருந்த காலத்தில்  தமிழ் இலக்கியம் என்றால், சமணரைக் கழுவேற்றுவதற்கும், "காதைக் குறும்பையளவாகத் தோண்டி எடுப்பதற்கும்" இடையிடையே "முதலையுண்ட பாலனை அழைத்தல்" "எலும்பைப் பெண்ணுருவாக்குதல்" முதலிய செப்படி வித்தைகள் செய்வதற்கும், தற்காலத்தில் சர்வகலாசாலைப் பண்டிதர்கள் கால ஆராய்ச்சி செய்து, பால் மணம் மாறாத மாணவர் தலையில் சுமத்துவதற்கும், ஏற்பட்ட சித்திரவதை செய்யும் ஸ்பானிய யந்திரம் (Spanish English of Inquisition) என்று எண்ணியிருந்தேன்.
 

சிகர் தன் தமிழ் இலக்கியத்தின்  உண்மை இனிமையாகக் காட்டி என்னை அனுபவிக்கச் செய்பவர். அவருடன் பேசுவதே ஒரு அனுபவம் என்று சொல்லுவேன். அவர் இப்பொழுது சென்னையில் இருக்கிறார். கொஞ்ச நாட்களுக்கு முன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது.அதைப்பற்றித் தான் நான் சொல்ல வந்தது.
 

குசலம் விசாரித்த பிறகு சாப்பிட உட்கார்ந்தோம். சமையல் அன்று விசேஷம். ஆனால் விருந்தல்ல. நான் பொறித்த குழம்பை  விளக்கெண்ணைப் பிள்ளைக்கும்,நோயாளிக்கும் நெருங்கிய பந்து என்று நினைத்திருந்தேன். நான் அன்று உண்ட பொறித்த குழம்பு எந்த வெங்காய சாம்பாரையும் தூக்கி அடித்துவிடும்!

பேச்சின்போக்கில் பாரதியாரின் "நெஞ்சு பொறுக்குதில்லையே"  என்ற நொண்டிச் சிந்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர், சிலரைப் போல பிரசங்க மாருதத்தால்  ஏன் மூளையைச் சிதற அடிக்க வில்லை. பாரதியின் பாட்டுக்கு "ஸ்பெஷல் ப்ளீடிங்" மாதிரி இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் வேலை செய்யவில்லை. அதைக் கேட்ட பிறகு, பாரதி உண்மைக் கவி என்பதற்கு அந்தப் பாட்டு ஒன்றே போதும் என்று பட்டது. அன்று பாரதியாரின் ஆவேசமும் மனக் கொதிப்பும் அந்தப் பொறித்த குழம்பு பெற்றதென்றால் வியப்பென்ன! பாட்டை அனுபவித்ததனால் உண்டான குதூஹலமும் எக்களிப்பும் அன்று உணவிற்கு ஒரு கவிதை உணர்ச்சியைக் கொடுத்தது.
 

னால் ஒன்று! தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும் வாழ்க்கையின் ஓர்  உன்னத ஆதர்சமாக வைப்பது சரியல்ல. சாப்பாடு, உயிர் வாழ்வதற்கு அவசியம் தான்! ஆனால் வாழ்க்கை வேறு. உயிர் வாழ்தல் வேறு. வாழ்க்கை ஓர் அனுபவம். சிலர் உலகம் முழுவதையுமே சாப்பாட்டுக் கடையாக மதித்து விடுகிறார்கள்.
******

கொஞ்ச நாளைக்கு முன் இந்த மாதிரி மனிதனை நான் சந்திக்க நேர்ந்தது. அவர் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள க்ஷேத்திரங்கள் எல்லாம் தரிசிக்க வந்திருந்தார். உண்மையில் வாழ்க்கை இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தாமிரவருணி தீரத்தில் உள்ள கிராமாந்தரத்தில் தான் வசிக்க வேண்டும். நான் சந்தித்த மனிதனுக்கும் அதே தான் ஆசை. ஆனால் காரணம்  வேறு! அவருக்கு வாய் அரை நிமிஷம் சும்மாயிராது. சாப்பிட்டுக் கொண்டாவது அல்லது அதன் பெருமைகளைப் பேசிக் கொண்டாவது இருக்க வேண்டும். "அப்படிப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே."

"
சார், போளி என்றால் அது கடம்பூர் போளிதான் சார்! நானும் எங்கெங்கோ பார்த்திருக்கிறேன், அதற்கு ஈடுஜோடு இந்த உலகத்திலேயே கிடையாது சார்!" இவர் இப்படிப் பேசி வருவதைப் பார்த்தால், உண்மையில் சைவப் பற்றுடைய பக்தர் ஒருவர் தேவாரத் திருமுறைகளைப் பக்தி சிரத்தையுடன் எடுத்து ஒதுவது போலிருந்தது. உண்பதே ஒரு பெரிய சமயமாகக் கொண்ட சாப்பாட்டு நாயன்மாராக இருந்தார்.
 
டனே சித்திரான்னத்திற்குப் பாய்ந்தார்."ஆமாம் சார். ஜங்ஷனில் இறங்கும்போது பசி அதிகம். அதுதான் முதல் தடவை போனது. அந்த ஹிந்து காலேஜ் பக்கத்தில் ஒரு பிராம்மணன் இருக்கிறான் சார். சின்ன  ஹோட்டல் தான்--சித்திரான்னம் என்றால் அங்கு தான் சார்! செலவு ஜாஸ்தியில்லை--நான் வயிற்றுக்கு வஞ்சகம் செய்து மிச்சம் பிடிப்பவனல்ல, என்ன! போங்க!. அந்த அய்யன் என்னதான் போடுவானோ....!" என்று ஆரம்பித்து சித்திரான்ன மான்மியத்தை முடிப்பதற்குள்  நாங்கள் ஜங்ஷனுக்கே வந்து சேர்ந்தோம்.
 
ப்படி இந்த மனிதன் தேடிக் கண்டுபிடித்த அம்பாசமுத்திரம் முறுக்கு, ஆழ்வார் திருநகரி தேங்குழல், நாங்குநேரி நெய்யப்பம், இத்தியாதி பொருள்களின் அருமை பெருமைகளை, கொலம்பஸ் அமெரிக்கா கண்டு பிடித்த மாதிரிஎங்களுக்கு எடுத்துச் சொல்லித் திருநெல்வேலி ஜில்லா சாப்பாட்டு பூகோள சாஸ்திரத்தை எங்களுக்குக் கற்பித்தார்.
 
வர் கண்ட திருநெல்வேலியை நான் கனவிலும் கண்டதில்லை! கடம்பூர் போளியும், பழனி பஞ்சாமிர்தமும் வாழ்க்கையின் ஆதர்சமாகக் கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் நடமாட வேண்டும்!
******

இன்றைக்குப் புதுமைப் பித்தன் நினைவு தினம்! நாற்பத்து நான்கே ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த சொ. விருத்தாசலம் என்ற இந்த எழுத்தாளருடைய தாக்கம் தமிழில் எழுத முனைகிற ஒவ்வொருவரிடத்திலும் கொஞ்சமாவது இருக்கிறது.

இது புதுமைப்பித்தன் 1943 ஆம் ஆண்டில் எழுதியது.  



2 comments:

  1. அருமையான பகிர்வு. அவரது கருத்து செறிவும் எழுத்து நடையையும் ரசித்தேன்.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)