Friday, August 20, 2010

தி ஆர் டாகுமென்ட்.....! இர்விங் வாலஸ்!

 
இர்விங் வாலஸ் எழுதிய "மனிதன்" என்ற புதினத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுக விமரிசனத்தைப் பார்த்திருக்கிறோம்!

சுதந்திர தினச் சிந்தனைகளாக இன்னொரு வலைப் பக்கங்களில் எழுதிக் கொண்டிருந்ததில், தேடும்போது இர்விங் வாலஸ் எழுதிய தி ஆர் டாகுமென்ட் (The R Document) என்ற புதினத்தைப் பற்றிய இந்த TIF (பட வடிவில்) அந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒரு கட்டுரையின் ஒரு பக்கம் காணக் கிடைத்தது.

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்

இர்விங் வாலஸ் எழுதிய, தி ஆர் டாகுமென்ட்! 1976 ஏப்ரலில் முதல் முறையாகப் புத்தகவடிவில் வெளியானது. 

இந்தப்  புத்தகத்தை 1977 இல் மைக்கேல் ஹெண்டெர்சன் என்பவர் படித்துவிட்டு, தன்னுடைய கருத்தை இப்படிச் சொல்கிறார். அவர் எழுதிய இந்தப் பகுதியின் முதல் பக்கம்(மேலே பட வடிவில் காண்பது), இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப் பட்டு, இருபது மாதங்கள் இந்திய ஜனநாயகம் கழுத்து நெறிக்கப்பட்டுக் கிடந்த அந்த இருண்ட தருணங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. 

ஹெண்டெர்சன் சொல்கிறார்:

"1975-1977 இந்திய நெருக்கடி நிலைப் பிரகடனத்தைப் பற்றி விரிவாகப் படித்து முடித்துவிட்டு, வீடு திரும்புகிற நேரத்தில் படிப்பதற்காக சுவாரசியமான புத்தகத்தைத் தேடிய போது, இர்விங் வாலஸ் எழுதிய தி ஆர் டாகுமென்ட் புதினத்தைப் பார்க்க நேர்ந்தது. அதன் அட்டையில் அதிர்ச்சியூட்டக் கூடிய யதார்த்த நிலை என்று போட்டிருந்ததைப் பார்த்தேன்.

இருபது மாதங்கள் இந்தியாவில் அமலில் இருந்த சர்வாதிகாரத் தன்மையை  அதிரச் செய்யும் அளவிற்கு இந்த நாவல் எதிரொலித்தது என்பது உண்மை. இந்தக் கதையை, 1977 இல் படித்ததற்குப் பதிலாக, 1974 இல் படித்திருந்தால், மிக சுவாரசியமான கற்பனை, ஆனால் எப்போதுமே நடக்க முடியாதது என்று தான் நினைத்திருப்பேன். 

இந்தியாவின் அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 42 வது திருத்தம் மாதிரி, அமெரிக்காவிலும் நடக்கிற மாதிரி ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டது, அங்கே எழுத்தாளரின் வெறும் கற்பனை என்று மட்டும் ஒதுக்கி விட்டுப் போக முடியவில்லை.

நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப் பட்டபோது நாடாளு மன்றம்,ஆட்சியாளர்களின் மனமறிந்து ஒத்து ஊதுகிற ஒரு இடமாக மட்டுமே ஆகிப் போனது,  பத்திரிகைகளின் வாய்கள் கட்டப்பட்டன, நீதித்துறை செயலிழந்து நின்றது........



இப்படிப் போகிறது ஹென்டர்சனின் வர்ணனை!

இந்திய அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 42 வது திருத்தம், திருத்தம் செய்யப்பட்ட அந்த சில வரிகளில் வாக்கியங்களில், அடிப்படை உரிமைகளைப் பறித்தது. அலங்காரக் கோஷங்கள் சேர்க்கப் பட்டன.  இறையாண்மையுள்ள ஜனநாயகக் குடியரசு என்பது வார்த்தைகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, இறையாண்மையுள்ள, சோஷலிச, மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக ஆகிப் போனது! 

வார்த்தைகளில் மட்டும் தான்என்பதைச் சொல்லித் தான் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன!?

அதிகமான விவரங்கள் வேண்டுமானால் இந்த லின்கில்
கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம்!

எமெர்ஜென்சி அமலில் இருந்த தருணங்களில் வெளியான இந்தப் புத்தகம் இந்தியாவில் தடை செய்யப் பட்டிருந்ததாக ஒரு தகவல் உண்டு. இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் தீய அம்சங்களை தோலுரித்துக் காட்டிய புத்தகம் என்றெல்லாம் சொல்லப் பட்ட இந்தப் புத்தகத்தை, 1985 வாக்கில் தான் படிக்க முடிந்தது. தற்சமயம் பெங்களுர், வாசன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் ரூ.90/- இற்குக் கிடைக்கிறது.

The R Document! 

நீதிமுறையில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ள ஒரு கதாபாத்திரத்தோடு கதை ஆரம்பிக்கிறது! நீதிமுறையைப் பாதுகாக்க முனைகிற அவருடைய உயிருக்கே உலை வைப்பதாகவும்  கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.

கிறிஸ்டோபர் காலின்ஸ்!

அமெரிக்காவின் புதிய அட்டர்னி ஜெனரலாகப்  பதவியேற்கிறார்.  அந்தத் தருணத்தில், அமெரிக்காவில் பெருகி வரும் வன்முறை, குற்றங்களைக் களைவதற்காக, அமெரிக்க அதிபர் அமெரிக்க அரசியல் சாசனத்தில் ஒரு திருத்தம் கொண்டு வர உத்தேசித்திருக்கிறார். 35 வது திருத்தம் என்று அந்த  முயற்சி  அழைக்கப் படுகிறது. தேச நெருக்கடி காலங்களில், உரிமைகள் குறித்த அரசியல் சாசன  உத்தரவாதத்தை அடியோடு ரத்து செய்ய இந்தத் திருத்தம் வகை செய்வதாக இருக்கிறது. எப்போதும் போல ஆதரிக்கிறவர்கள், எதிர்க்கிறவர்கள் என்று இரண்டு தரப்புமே, இந்த உத்தேசத் திருத்தத்தின் மீது சவுண்டு கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

அட்டர்னி ஜெனரலான  காலின்சுக்கோ இந்த உத்தேசத் திருத்தம், அவசியமில்லை என்று பட்டாலும், அதை அடியோடு எதிர்க்கிறவர்கள் கூச்சலிடுகிற மாதிரி,  அதிகார துஷ்ப்ரயோகம் செய்யப் படாது, இருக்காது  என்றே நம்புகிறார். உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

காலின்சுக்கு முன்பு அட்டர்னி ஜெனரலாக இருந்தவர், தன்னுடைய மரணப் படுக்கையில், அவரை அழைத்து, இரகசியமானதும் அபாயமானதுமான ஆர் டாகுமென்ட் என்ற ஒன்றைப் பற்றி எச்சரிக்கை
செய்ய விரும்புகிறார். காலின்சை அழைத்துவரச் சொல்லித் தகவல் அனுப்பி, இவர் அங்கே போய்ச் சேர்வதற்குள்  அவர் மரணமடைந்து விடுகிறார். கடைசித் தருணங்களில் ஒரு பாதிரியாரிடம், பாவ அறிக்கையைச் சொல்கிற தருணத்தில், இந்த விஷயத்தையும் சேர்த்தே சொல்கிறார். ஆனால் அந்தப் பாதிரியார், அது ரகசியமானது என்று காலின்சிடம் மேற்கொண்டு எந்த விவரமும் தர மறுத்து விடுகிறார். அது என்னவாக இருக்கும் என்ற கேள்வி, கிறிஸ்டோபர் காலின்சைத் துரத்திக் கொண்டே இருக்கிறது இந்த எச்சரிக்கையை காலின்ஸ் தொடர்ந்து ஆராய்கிறார்.  

The R Document!  

அது என்ன ஆர் டாகுமென்ட்? அதற்கும், உத்தேசித்திருக்கும் முப்பத்தைந்தாவது திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?

அமெரிக்க அதிபர் வாட்ஸ் ஒர்த்துக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது! சட்ட அமைச்சகத்துக்கும் எதுவும் தெரியாது! ஆனால், சிலந்தி லாவகமாக வலையைப் பின்னுவது போல, இந்த ஆர் டாகுமெண்டை மையமாக வைத்து என்னென்னமோ நடந்து கொண்டே இருக்கின்றன!

ஒவ்வொரு மாநிலமாக, இந்த சட்டத் திருத்தத்தை அங்கீகரித்து நிறைவேற்றிக் கொண்டிருக்கையில், காலின்ஸ் இந்தத் திருத்தத்தின் தலைமைச் செயலகமாக, மாக்கியவல்லி தனது இளவரசன் என்ற படைப்பில் சொல்கிற மாதிரி, நேர்மைத்திறமில்லாமல்  வஞ்சகமும், சூதும், மோசம் செய்கிற இயல்பும், கொண்டு தனது ஆட்சி அதிகாரத்தை கட்டமைக்கிற விதமாக எப் பி ஐ டைரக்டர் வெர்னான் டி. டினன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். முழுக்க முழுக்க ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்ற டினன் முயற்சிப்பதை அறிகிறார்.தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சாக்காக இந்த சட்டத் திருத்தத்தை ஒவ்வொரு மாநிலமும் நிறைவேற்றித் தர, டினன் கொலை செய்கிறார், ப்ளாக்மெயில் செய்கிறார், தன்னுடைய  முழு சாமர்த்தியத்தையும் பிரயோகிக்கிறார்.

எப்படி இந்தக் கதை முடிச்சை கதாசிரியர் அவிழ்க்கிறார் என்பதைப் புத்தகத்தை வாசித்து அனுபவிப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
முன்னூற்று அறுபது பக்கங்களுக்குள்ளாகவே, மிகவும் விறுவிறுப்பாக கதை நகர்கிறது! அதிகாரம் ஒரே இடத்தில் மையம் கொள்ளும்போது ஏற்படக்  கூடிய விபரீதங்களை இந்த நாவல் மிக அழகாக, விறுவிறுப்பாகச் சொல்கிறது. எச்சரிக்கிறது.

இங்கே இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனம் என்ற ஜனநாயகப் படுகொலையை, ஜெயப் பிரகாஷ் நாராயணன் என்ற காந்தீய வாதி, வினோபா பாவேயின் சீடர் எப்படி  தடுத்து நிறுத்தினார் என்பதை, இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போராகவே கூடச் சொல்ல முடியும்! 


இந்திரா காந்தி என்ற சர்வாதிகாரிக்கு எதிராக, எப்படி இந்த தேசத்தின் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஜெயப்ரகாஷ் நாராயணனுடைய போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றன, காங்கிரஸ் எப்படி பிரிட்டிஷ் குள்ள நரிகளிடமிருந்து கற்றுக் கொண்ட பிரித்தாளும் கலையைப் பயன்படுத்தி அந்த ஒற்றுமையைப் பிளந்தது என்பது கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் சமகால சரித்திரம்!

தி ஆர் டாகுமென்ட்! 


அவசியம் படிக்க வேண்டிய ஒரு புதினமாக நான் பரிந்துரை செய்யக் கூடிய நூல்களில் ஒன்று! வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் அல்ல! நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும் கூட!




No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)