Showing posts with label தமிழக அரசியல். Show all posts
Showing posts with label தமிழக அரசியல். Show all posts

Wednesday, June 23, 2021

அரசியலுக்கு வந்துவிட்டால் யாருக்கும் வெட்கமில்லை!

தினமலர் நாளிதழுக்கு என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்::: தி.மு.க., ஆட்சிக்கு வந்த 40 நாட்களிலேயே, அதன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது போங்க! 'நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்பதை உறுதியாக சொல்ல முடியாது' என கையை விரித்து விட்டார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன். 'பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் சாத்தியமே இல்லை' என, 'குண்டை' துாக்கி போட்டார், நிதி அமைச்சர் தியாகராஜன். தமிழக அரசு, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதை சரிசெய்ய நிபுணர் குழு எல்லாம் அமைக்கிறது, மாநில அரசு.பிரதமர் மோடியை சந்தித்து 25 கோரிக்கைகளை முன்வைத்தார், முதல்வர் ஸ்டாலின். அவை நிறைவேற்றப்படுமா என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும், பிரதமர் மோடி தரவில்லை.  தி.மு.க.,வினர், 'கோ பேக் மோடி' என பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததை, அவ்வளவு சீக்கிரம் பிரதமர் மோடி மறந்திருக்க மாட்டார். போதாக்குறைக்கு, நிதி அமைச்சர் தியாகராஜன் வேறு, தன் பங்குக்கு அவ்வப்போது மத்திய அரசை விமர்சித்து கடுப்பேத்துகிறார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதில் சிறப்பாக செயல்பட்ட முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் நியமனத்தில், 'கோட்டை' விட்டுவிட்டார் என, நினைக்க தோன்றுகிறது. கோவில் நிலங்களை மீட்பதில் அக்கறை காட்டி பாராட்டு பெற்ற ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 'கோவிலில், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்' எனக் கூறி, மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்தார். 'முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த பாவிகள் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்' என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களான வைகோவும், திருமாவளவனும் வேறு, முதல்வர் ஸ்டாலினுக்கு குடைச்சல் தருகின்றனர். ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கிடைத்த நிம்மதியும், மகிழ்ச்சியும், ஆட்சிக்கு வந்த நாள் முதல் இல்லாமல் போய்விட்டது; பாவம்! உண்மையிலேயே பரிதாபப் படுகிறாரா அல்லது நையாண்டி செய்கிறாரா? எதுவாக இருந்தாலும் ஒன்றரை மாதத்திலேயே திமுகழக அரசின் லட்சணம் இதுதான் இப்படித்தான் என்றாகிவிட்டது மட்டும் நிச்சயம் 


இந்த ஒன்றியம் இவர்களிடம் படுகிற பாடு இருக்கிறதே! நீட் தேர்வு பற்றிய  பேச்சு எழுகிற சமயங்களில் எல்லாம் சினிமா நடிகர் சூர்யா தவறாமல் ஆஜராகி விடுகிறார் என்பது கூட தமிழக அரசியலின் இன்னொருவிதமான காமெடி! 


நாடாளுமன்றம்  நிறைவேற்றிய சட்டங்கள், திருத்தங்கள் மீது தீர்மானமோ ஆட்சேபமோ தெரிவிப்பது ஒரு  பயனுமில்லாத நேற்று அரசியல் ஸ்டன்ட் மட்டுமே! அதுபோலவே தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு, தேர்வு ரத்து என்பதும் சட்டமசோதாவை  உச்சநீதிதிமன்றம் உறுதிப்படுத்திய பிறகு எடுபடாது என்று தெரிந்தே மாணவர்களையும் பெற்றவர்ளையும் குழப்பி ஏமாற்றுகிற வேலை! பின்னே வேறென்ன?   
   

தினமலர் நாளிதழ் இன்றைக்குப்பார்த்து எதற்காக இந்தக் கார்டூனை வெளியிட்டிருக்கிறார்கள்?பாமகவின் இரட்டைநாக்கும் ஆதாயம் இருந்தால் கூட்டணியை  மாற்றிக்கொள்ளும் வேகமோ புதிது அல்ல. 2021 சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு திமுகவை நெருங்க பாமக எடுத்த முயற்சிகள், பாமகவின் சட்ட மன்ற உறுப்பினர் G K மணி மருத்துவர் ராமதாசின் தூதராகச் செயல்பட்டுவருவது எதுவுமே ரகசியமல்ல. ஆச்சரியமுமல்ல. 


முதல்வர் நல்ல முடிவெடுக்கப்படும் என்று சொன்னது போல மருத்துவர் ராமதாசும் முடிவெடுத்துவிடுவார் என்பது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமல்ல. 


தினமலர் செய்தி மட்டும் உண்மையாக இருக்குமானால் தமிழகத்தில் பிஜேபி மிக வேகமாக வளர்ந்துவிட்டது. அடுத்து வரும் தேர்தல்களில் கழகங்களை, கூட்டணி வைக்காமலேயே தோற்கடிக்கிற அளவுக்கு வலிமை பெற்று வளருகிறது என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டுமோ? A Party with a diference என எப்போதோ யாரோ சொன்ன கதையெல்லாம் பொய்தானாம்! அவர்களும் கழகங்கள், காங்கிரஸ், இதர கட்சிகள் மாதிரியே இந்தவிஷயத்திலும் என்று நீட்டி முழக்குகிறது தினமலர். 

டிஸ்கி: ஆனால் பிஜேபியின் மாநில பொதுச் செயலர்
K T  ராகவன் மறுப்புச் செய்தி வெளியிட்டிருக்கிறார் 


அதேபோல H ராஜா மீது தேர்தல் செலவுக்காகக் கொடுத்த பணத்தில் 4 கோடி ரூபாய்க்கு வீடுகட்டிக் கொண்டுவிட்டார் என்ற செய்தி அமமுக ஆசாமிகளால் பரப்பப்படுவதையும் என்ன செய்யப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்தால் பகிர்கிறேன். 

அரசியலுக்கு வந்துவிட்டால் யாருக்கும் வெட்கமில்லை என்பது சரிதான் போல. 

மீண்டும் சந்திப்போம். 

Thursday, May 27, 2021

தமிழக சட்டசபைத் தேர்தல்களில் கிடைத்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள்!

மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப்போகும் மாதவனா    வாழ்ந்துபாரு வறுமை பழகிப்போகும் இப்படி ஒருபாட்டு ஒன்பது ரூபாய் நோட்டு திரைப் படத்தில் வரும். மோடிக்கு எதிராக அரசியல் செய்யத் தெரியாதவர்கள் கூட அப்படி மனம் தளர்ந்து மோடி மீது வெறுப்பைக் கக்குவதே அரசியல் என்ற நிலைமைக்குப் பழகிப்போய் விட்டார்கள். விவசாயிகள் போராட்டம் என ஆரம்பித்து திக்குதிசை தெரியாமல் அந்தரத்தில் திரிகிற ஒருகூட்டத்தை, இங்கே உள்ள சில அரசியல்வாதிகள் ஆதரிக்கிற போர்வையில் மோடி மீது வெறுப்பையும் வன்மத்தையும் கக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட நாள்  மே 26. அந்த நாளுக்கு என்னவாம்?


சரக்கு, மிடுக்கு என வீரவசனம் பேசிய திருமா கூட இந்த மாதிரி சரக்கு தீர்ந்துபோன காமெடிப்பீசாகி விட்டார். 2014 இல் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்ட தினமான மே 26 ஆம் தேதியை தேசிய கருப்பு நாளாக அனுசரிக்க வேண்டும் என்று டெல்லியில் போராடிவரும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 

வேளாண் சட்டங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று படித்துப்பார்த்து விட்டுத்தான் எதிர்க்கிறார்களா? வெறுப்பரசியல் செய்ய அதெல்லாம் தேவையே இல்லை என்பது இந்திய அரசியலின் தலைவிதி!  


3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும்! சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோமென இசுடாலின் அறிவித்திருப்பதாக இந்த வீடியோ செய்தி.  அதுமட்டும் தானா?


 

இந்தமாதிரி வக்கிரமான பாடல் எழுதுகிறவருக்கு விருது! முதல்வர் பாராட்டு என்பதெல்லாம் தமிழகத்தின் சோகம்.
  


சிரிப்புத்தான் வரு.குதையா! 
இடுக்கண் வரும்போது சிரித்துத்தான் சமாளித்தாக வேண்டும்! வேறென்ன செய்ய? மேலே உள்ள ஸ்க்ரீன் ஷாட் நாச்சியாள் சுகந்தி என்பவருடைய முகநூல் பகிர்விலிருந்து எடுக்கப்பட்டது 


நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல்களில் கிடைத்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களில் கமல் காசர் கட்சி கரைந்து போனதும் சகாயம் என்கிற உத்தமருடைய சாயம் வெளுத்துப்போனதும் தான்! சகாயத்துடைய சாயம் தேர்தலுக்கு முன்பாகவே கடந்த ஜனவரியில் வெளுத்தது. கமல் காசர் யாருடைய B டீம்/ கைக்கூலி என்பது தேர்தலுக்குப் பின்னால் வெளுத்தது. அவரைக்  கருவேப்பிலையாகப்பயன்படுத்திக் கொள்ள அவரே யார் யாரிடம் விலைபோனார் என்பது கொஞ்சமல்ல  நிறையவே வினோதமான விஷயம்!  

மீண்டும் சந்திப்போம்.       

Sunday, April 4, 2021

யாருக்கு வாக்களிப்பது? அதற்கு முன் யார் யாரை நிராகரிப்பதென்பதை முடிவு செய்யுங்கள்!

எந்தத்தேர்தலிலும் பார்த்திராத அளவுக்கு இந்த சட்ட மன்றத் தேர்தலில் இரண்டு கழகங்களும் கூட்டணி  முடிவாகும் முன்னரே தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை கடந்த மூன்று மாதங்களில் தனித்து நடத்தி முடித்து விட்டன. பத்துவருடங்களாக ஆட்சியைப் பிடிக்க முடியாத பெரும்பசி, வெறியோடு திமுக பெரும்பணச் செலவில் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுக்கும் உத்திகளோடு களம் இறங்கியிருக்கிறது. அநேகமாக தமிழகத்தில் இருக்கும் மொத்த ஊடகங்களையும் திமுக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, திமுகதான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்ற செய்தியை பல்வேறு விதமான வழிகளில்  ஜனங்களுடைய மனதில் பதிய வைக்கும் உளவியல் யுத்தத்தில் வென்றதுபோல ஒரு மாயையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.


வணிக ஊடகங்களை திமுகவால் விலைக்கு வாங்க முடிந்தாலும், தனிமனிதர்களாக சமூக ஊடகங்களில் செய்துவரும் திமுக எதிர்ப்பை ஒன்றும் செய்ய முடியாமலும், அவைகளின் தாக்கம் எந்த அளவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதை சரியாக கணிக்க முடியாமலும் தவித்துவருகிறார்கள் என்பது தான் கள யதார்த்தம்


உதயநிதி அடுத்த முதல்வரா? கேட்கவே படுதமாஷாக இருக்கிறதே! ஆனால் சங்கர மடம் போல இல்லாத திமுகவில் என்ன நடக்கும் என்பது தான் ஊரறிந்த ரகசியமாயிற்றே!

தேர்தல் நேரக்காமெடிகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு வாக்காளர்களாகிய நமக்கு முன்னால் இருக்கிற கடமை, வாய்ப்புக்கள் என்னவென்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா?

அன்புள்ள வாக்காளரே!
வணக்கம். இன்னும் 2 நாட்களில் விரலைக் கறை படுத்திக் கொள்ளப் போகிறீர்கள். ஆனால் கறை நல்லது, நீங்கள் சரியான அரசைத் தேர்ந்தெடுப்பீர்களேயானால்.
பொதுவாகத் தேர்தலின் போது எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள் என்று அறிவுரை சொல்வார்கள். ஆனால் நான் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து முடிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்று நம் முன் ஐந்து வாய்ப்புக்கள் நிற்கின்றன. அவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை விட எவற்றையெல்லாம் நிராகரிப்பது என்று சிந்தித்தால் நாம் தேர்ந்தெடுக்கக் கூடியது எது என்பது தானே தெளிவாகிவிடும்.
நாம் தமிழர் என்றொரு கட்சி களத்தில் நிற்கிறது. அந்தக் கட்சி விடுதலைப் புலிகளின் சித்தாந்தால் மன ஊக்கம் பெற்று (inspiration) உருவானது. அதன் ஆதர்ச தலைவர் பிரபாகரன். அவரது அணுகுமுறை இந்தக் கட்சித் தலைவரிடமும் பிரதிபலிக்கிறது. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை மரத்தில் கட்டி வைத்து தோலை உரித்து பனைமட்டையால் விளாச வேண்டும், தன் முடிவை ஏற்காதவர்களை கிரீஸ் டப்பாவை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன் என்றெல்லாம் அவர் பகிரங்கமாகப் பேசுகிறார். சுருக்கமாகச் சொன்னால் அது அரசியல் கட்சியல்ல, ஒரு வழிபாட்டுக் கும்பல் (Cult) அதை நிராகரித்து விடலாம்
அமமுக, மக்கள் நீதி மய்யம் இரண்டும் தனிநபர்களின் சுயநலத்தால் உருவானவை. சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டார். அந்த நிலையில் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள கட்சியும் தேர்தலிலிருந்து ஒதுங்கியிருக்கத்தானே வேண்டும்? சசிகலா, திமுகவை வீழ்த்துவதுதான் நமது நோக்கம் என்று அறிவித்து இருக்கிறார். அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட கட்சி, திமுகவை வீழ்த்தும் நோக்கம் கொண்ட அதிமுகவைத்தானே வலுப்படுத்த வேண்டும்? அதற்கு மாறாக திமுகவிற்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க முற்படுவது ஏன்?
ஏனென்றால் தேர்தல் வெற்றியை அல்ல, தேர்தலுக்குப் பின் பேரம் நடத்தி, ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டத் தன்னை மீண்டும் கட்சிப் பொறுப்பில் பிணைத்துக் கொள்வதை எதிர்பார்த்து, தினகரன் களம் இறங்குகிறார். அவரது சொந்த நலனைக் காப்பாற்ற நாம் வாக்களிக்க வேண்டியதில்லை
கமல்ஹாசனின் கட்சி தோன்றக் காரணம் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட இடைஞ்சல். அப்படி இடைஞ்சல் ஏற்பட்டிருக்காவிட்டால் என் சொத்து மதிப்பு ரூ 200 கோடி இருந்திருக்கும் (இப்போது 177 கோடி) என்கிறார். தனக்கு ஏற்பட்ட பண இழப்புக் காரணமாக பழி வாங்க அரசியலில் நுழைந்திருக்கிறார். அதற்கு முன்பு அவர் அரசியல் பிரசினைகள் குறித்து சினிமாவிலோ, வெளியிலோ ஏதும் கருத்துச் சொன்னதில்லை என்பதை இதோடு பொருத்திப் பார்த்தால் உண்மை புரியும்.
தன்னை காந்தியின் பி டீம் என்கிறார் கமல்..காந்தி தனது எல்லாக் கூட்டத்தையும் பிரார்த்தனையோடு தொடங்கினார். ரகுபதி ராகவ ராஜாராம் பிரபலமானது அவரது கூட்டங்களின் மூலம்தான். கமல்ஹாசனுக்கு இறை நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்ற அவரது திருவாசகத்தின் பொருள் புரியாமல் விழிக்கிறான் பாமரன். கடவுளை நம்பாதவர் காந்தியின் பீ டீம் ஆக இருக்க முடியுமா?
ஒரு பக்கம் தன்னை காந்தியின் பி டீம் என்று சொல்லிக் கொள்பவர், தன்னை பெரியாரின் சீடர் என்றும் சொல்லிக் கொள்கிறார். காந்தியை பிரிட்டீஷ் அரசின் ஒற்றர், கவர்மெண்டின் ரகசிய அனுகூலி, உழைக்கும் மக்களின் துரோகி என்றெல்லாம் எழுதியவர் பெரியார் (19.2.1933, குடி அரசு தலையங்கம்) பெரியாரின் சீடர் எப்படி காந்தியின் பி.டீமாக இருக்க முடியும்?
திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தால் அதன் 2006-11 ஆட்சிக்காலம் நினைவுக்கு வருகிறது. மின்வெட்டு, நிலப்பறிப்பு, அதிகாரிகளை மிரட்டுவது, அரைப் பிளேட் பிரியாணிக்கும் பராட்டோவிற்கும் அடிதடி, அராஜகம், ரெளடியிசம் இவையெல்லாம் நினைவிலாடுகின்றன.
ஆரம்ப நாட்களிலிருந்து இன்று வரை திமுகவில் நீடிக்கும் ஒரே விஷயம், இந்து மத வெறுப்பு, இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுவது.
நான் எல்லாவற்றையும் விட முக்கியமாகக் கருதுவது அது குடும்ப ஆட்சியை நிறுவ முயல்வதை. குடும்ப உறுப்பினர்கள் அரசியல் கட்சியில் இருப்பதற்கும் ஓர் அரசியல் கட்சி குடும்பத்தின் கையில் இருப்பதற்கும் பெருத்த வித்தியாசங்கள் உண்டு. அப்போதும் கூட அது அந்தந்த கட்சிக் காரர்களின் தலையெழுத்து என்று நாம் பொருட்படுத்தாமல் இருந்து விடலாம். நாம் கட்சியின் உறுப்பினர்களாக இல்லாதவரை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விடலாம். ஆனால் அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் பெற்றுத்தர முற்படும் போது நாம் அதை நிராகரிக்கும் வகையில் செயல்பட்டாக வேண்டியிருக்கிறது. நம் தனிவாழ்வு, தொழில், சமுக வாழ்வு இவற்றின் மீது நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகாரம் செலுத்தி வரும் அமைப்புஅரசு . அந்த அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் கையில் ஒப்படைத்தால் என்னவாகும்?
அதிமுக அரசு இருண்டகாலத்திலிருந்து தமிழகத்தை விடுவித்தது. அதன் ஆட்சிக்காலத்தில் எதிர்மறையாக ஏதும் பெரிதாக செய்துவிடவில்லை. நீட் ஜிஎஸ்டி எல்லாம் தமிழ்நாட்டிற்கு எனப் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டவை அல்ல. நாடு முழுமைக்குமானவை. நீட் தேர்வு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது (உதாரணம் பஞ்சாப், ராஜஸ்தான்) திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளத்திலும் நடக்கிற்து. GST விகிதங்களைத் தீர்மானிப்பது ஒரு தனிநபரல்ல. ஓர் அரசுத் துறை அல்ல. ஒரு குழு -கவுன்சில் - தீர்மானிக்கிறது. அந்தக் கவுன்சிலில் எல்லா மாநில பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். உதாரணமாக தில்லியின் சார்பில் மனீஷ் சிசோடியா (பாஜக) புதுச்சேரியின் சார்பில் நாராயணசாமி (காங்கிரஸ்( வங்கத்தின் சார்பில் அமித் மித்ரா (திருணாமூல்) கேரளத்தின் சார்பில் தாமஸ் ஐசக (மார்க்சிஸ்ட்)
எப்போதும் அதிமுகவின் அணுகுமுறை என்பது சட்டரீதியாக சாதிக்க முடிந்தவற்றிற்கு நீதிமன்றங்களை நாடுவது (உதாரணம்: காவிரி,) சட்டப்போரட்டத்தின் மூலம் சாத்தியமாகதவற்றிற்கு மாற்று வழிகளைக் காண்பது (உதாரணம் : 69% இட ஒதுக்கீட்டிற்கு ஒன்பதாம் அட்டவ்ணை மூலம் சட்டப் பாதுகாப்பு, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு)
எடப்பாடி அரசு மத்திய அரசோடு இணக்கமாக இருந்து திட்டங்களைப் பெற்று வருகிறது (உதாரணம் 11 மருத்துவக் கல்லூரிகள், மெட் ரோ ரயில் விரிவாக்கம்) தமிழக அரசின் வருவாய் முதன்மையாக மூன்று வழிகளில் வருகின்றன. 1.ஜி எஸ் டி (அதில் ஒரு பங்கு மத்திய அரசுக்குரியது) 2. பதிவுக் கட்டணங்கள் (நிலம், வீடு, வாகனங்கள்) 3. டாஸ்மாக். இந்த வருமானத்திலிருந்து அது அரசு ஊழியர் சம்பளம், விலையில்லா அறிவிப்புகள், போன்றவற்றையும் பிற செலவுகளையும் எதிர் கொண்டு பின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவிடுவது என்பது மிக சிரமம். அனேகமாக சாத்தியமில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலும் (கடன் வாங்கக் கூட) நிதியும் தேவை . இதற்கு இரு அரசுகளுக்குமிடையே நல்லுறவு தேவை.
மத்திய அரசோடு மோதல் போக்கை கடைப் பிடிப்பது அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமானால் தங்கள் பிம்பங்களைக் கட்டமைத்துக் கொள்ள உதவலாம். மாநில வளர்ச்சிக்கு உதவாது. அதற்கு யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு நடைமுறை சாத்தியமாக முடிவெடுக்கும் pragmatic அரசுதான் தேவை.
தேர்தல் என்பது இருப்பதில் எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புதான். வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அன்றாட வாழ்வில் பெரும் பிரசினைகளை ஏற்படுத்தாத அதிமுக ஆட்சி தொடர வாக்களியுங்கள்
எண்ணித் துணிக கருமம். அன்புடன் மாலன் .

எழுத்தாளர் மாலன் சொல்கிற விஷயங்களோடு முழுமையாக உடன்படுகிறேன் அதனால் இங்கேயும் பகிர்கிறேன் அதிமுக மீது எனக்கு வேறுவிதமான கருத்து இருக்கிறது. அதற்காக திமுக மாதிரியான ஒரு நாசகார கட்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது இல்லையா?

நீங்களும் இதை ஏற்பதோடு குடும்பத்தினர், உறவுகள், நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்! செய்தியைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளுங்கள் .
தமிழகம் பிழைத்திருக்க திமுகவை அதன் கூட்டணிக் கட்சிகளோடு முழுமையாக நிராகரிப்பதுதான் ஒரே நல்லவழி! நம்மால் செய்ய முடிவதும் கூட!

மீண்டும் சந்திப்போம்.
        

Saturday, April 3, 2021

ஏன் திமுகவை, அதன் கூட்டணிக் கட்சிகளோடு முழுதாக நிராகரிக்க வேண்டும்?

தேவியர் இல்லம் பக்கங்களில் நண்பர் ஜோதிஜி திமுகவை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைத் தொடர் பதிவுகளாக எழுதி வருகிறார். நண்பர்கள் வட்டம் அதிகமுள்ள அவருக்கே, வாசகர்கள் interaction / பின்னூட்டங்கள் மிகவும் குறைவாக இருப்பதில்  எதற்காக கருத்துச் சொல்லி வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டும் என்பதான அச்சம் நீடிப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது தமிழில் வலைப்பதிவுகள் அதிகமாக வர ஆரம்பித்த நாட்களில் திராவிட வலைப்பதிவர்கள் என்ற போர்வையில் பலர் அராஜகமாக,பின்னூட்டம் எழுதுகிறவர்களைக் குறி வைத்து, ஆபாசத்தாக்குதல்கள் நடத்திய காலம் மலையேறிவிட்டது என்றாலும், பதிவு எழுதுகிறவர்கள் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிப்போவது மட்டும்  இன்னமும் குறையவில்லையோ? இத்தனைக்கும் ஒரு  தனிமனிதனாக மறைந்த பதிவர் டோண்டு ராகவன் இந்த ஆபாச திராவிடங்களை போடா ஜாட்டான் என்று துணிந்து அம்பலப்படுத்தியபோது, தாக்குப்பிடிக்க முடியாமல் சிதறி ஓடியவர்கள் இப்போது முகநூலில் ஆதிக்கம் செலுத்திவருவது வேறு விஷயம். அங்கேயும் அவர்களுக்குப் புரிகிற மொழியிலேயே பதிலடிகள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.  


இந்த மிரட்டலுக்கெல்லாம்  பயப்படமாட்டேன் நான் கலைஞரின் மகன் என்று சவடாலாகப் பேசியவர்கள் சரித்திரம் என்ன? எந்த இந்திரா மீது கல்லெறிந்து , அவதூறு  பேசினார்களோ அவரது காலிலேயே விழுந்து கூட்டணி வைத்துக் கொண்டார்கள் (எம்ஜியாரும் சூடு பட்டபிறகு மத்தியில் ஆளுகிறவர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற பாடம் கற்றுக்கொண்டார்) பின்னர் வந்த ராஜிவ் திமுகவைப்  பெரிதாகக் கண்டு கொள்ளவிஅறிவாலயத்தில் ல்லை! சோனியாவுக்கு ஓடோடிச் சென்று கருணாநிதி ஆதரவுக்கரம் நீட்டியது, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கனிமொழி, ஆபாச ராசரா இருவரும் திகார் சிறையில் மாதக் கணக்கில் அடைபட்டிருந்த நிலையிலும் தொடர்ந்ததே! அறிவாலயத்தில் ஒரு தளத்தில்  கருணாநிதியின் மனைவி தயாளுவிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டு இன்னொருதளத்தில் கலீஞரின் கையை முறுக்கி கூட்டணி பேரமும் நடத்தி 63 சட்டசபைத் தொகுதிகளையும் கொடுத்த கருணாநிதியின் அதே தைரியம் தான் தனக்கும் என்று இம்சை அரசன் பட வடிவேலு மாதிரிச் சவடாலாகச் சொல்வதாக மட்டுமே இசுடாலின் சவடாலை எடுத்துக் கொள்ள முடிகிறது! 


ஒரே ஒரு தேர்தல்தான்! உச்சத்தில் இருந்த வடிவேலு திமுகவுக்குப் பிரசாரம் செய்யப்போனா ர். மொத்த வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு நிற்கிறார் என்பது  அவருக்கு மட்டுமே அல்ல, இன்னும் நிறைய அரசியல் கோமாளிகளுக்கும் காத்திருக்கிற விதி!  


இசுடாலின் காமெடி அரசியலுக்கு நாம்தமிழர் கட்சியின் அபிமானி சாட்டை துரைமுருகன் போன்றவர்கள் பதில் கொஞ்சம் ரசிக்கிற மாதிரி இருக்கிறது.


 இன்றைய அரசியல் காமெடிகளை நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொண்டு விடலாமா? 

மீண்டும் சந்திப்போம்.

Friday, April 2, 2021

அண்ணாமலை IPS போன்ற இளைஞர்களே நமது நம்பிக்கைக்குரிய வேட்பாளர்கள்!

முதலில் தற்போதைய காமெடி ஒன்றைப் பார்த்து விடுவோம்! அரவக்குறிச்சியிலிருந்து கரூருக்கு ஓடிப் போன செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி பிஜேபி வேட்பாளர் அண்ணாமலை IPS, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகப் பயந்துபோய் புகார் அளித்ததில் அண்ணாமலை IPS மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாம்!


சமீப காலங்களில் இதுமாதிரி திமுக ஆசாமிகள் பயந்து புகார் கொடுத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது தான் முதல்முறையாகக் கூட இருக்கும்! அண்ணாமலை அப்படி என்ன மிரட்டிவிட்டாராம்? கீழே 13 நிமிட வீடியோ


அடாவடித்தனம்,அராஜகம். அபாண்டமாக அவதூறு அரசியல் பேச்சு எல்லாவற்றிற்கும் மொத்தக்குத்தகை எடுத்திருப்பது  திமுகதான்! அவர்களுடைய அடாவடி, அராஜகத்துக்கு ஒரு வலிமையான சவாலாக  இந்த இளைஞர் வேகமாக வளர்ந்து வருவது திமுகவினருக்கு ஆரம்பமுதலே மிகவும் உறுத்தலாக இருந்திருப்பது முதல் அரவக்குறித்ச்சி என்றாலே பண அரசியல்தான் என்று இருந்ததை உடைத்தது. திமுகவின் சிறுபான்மைக் காவலர் வேஷத்தை வெற்றிகரமாக அம்பலப்படுத்தியது என்று அண்ணாமலை IPS  அவர்களின் செயல்பாடுகள் வெகுவாகவே திமுகவினரை பயமுறுத்தியிருப்பதை அவருடைய வார்த்தைகளிலேயே கேளுங்கள்! இதுவரை திமுகவின் அரவக்குறிச்சி formula, திருமங்கலம் formula,எதையும் எவரும் challenge செய்ததில்லை! இன்று ஒரு இளைஞர் அந்தமாதிரி formula,வை உடைப்பேன் என்று உறுதியாக இருக்கிறார் என்றால், அவரே நமது நம்பிக்கைக்குரிய வேட்பாளர்! நம்பிக்கை நட்சத்திரம்!  

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இன்று,ஒளிபரப்பான நிகழ்ச்சி இது.தீபக் போபண்ணா அரவக்குறித்ச்சியின் நம்பிக்கை நட்சத்திரமான அண்ணாமலை IPS உடன் உரையாடுகிறார். ஒரு தெளிவான பார்வையுடன் அரசியல் பேசுகிற வெகுசிலரில் அண்ணாமலை IPS உம்  ஒருவர் என்பதில் சந்தேகமிருக்கிறதா என்ன?

ஒப்பீட்டளவில் இன்னும் இரு இளைஞர்களின் அரசியல் எப்படி என்று பார்த்தால் மட்டுமே அண்ணாமலை IPS அரசியல் வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும்! வீடியோக்கள் 1 நிமிடம் மட்டுமே எங்கள்Blog ஸ்ரீராமுக்கு ஸ்பெஷலாகச் சொல்லி ஆகவேண்டும்!   


கரூரில் கெஞ்சுகிறார் தேமுதிகவின் விஜயபிரபாகரன். கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய இடம் பிரேமலதா (அம்மா) LK சுதீஷ் (தாய்மாமன்) தான்!அது கூடத்  தெரியாதவரிடம் ஜனங்கள் ம்ட்டும் பதில் சொல்லி விடுவார்களா?


இந்தத்திமிருக்காகவே உதயநிதி மட்டுமல்ல, ஒட்டு மொத்த திமுக கூட்டணி வேட்பாளர்களுமே தோற்றாக வேண்டும்!

தமிழகத்தின் விடிவுகாலம் திமுக கூட்டணியை முழுதாக நிராகரிப்பதில் இருந்து தொடங்குகிறது!

மீண்டும் சந்திப்போம்.

Wednesday, March 31, 2021

#தமிழகதேர்தல்களம் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்கிற தெளிவுடன் ஆரம்பமாகட்டுமே!

அண்ணாதுரை முதல் ஆபாசராசா வரை திமுகவின் வரலாறே ஆபாசமும், கட்டப்பஞ்சாயத்து முதல் ரவுடியிசமும் தான்! திமுகவை எந்தக்கொம்பனாலும் அழிக்க முடியாது என்று இசுடாலின் பேசுவது வெறும் வாய்ச சவடால்தான்!


   

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை. "ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான்.குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை....எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு.... மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே". குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது. நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி காவி வஸ்திரம் தரித்த மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார்,
"எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு". அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட....ஆமாம்!நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா.....குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது.
"இனிமேல் இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி காவி வஸ்திரம் தரித்த ஞானி கடந்து போனார். தமிழகத்தில் எத்தனையோ பேர் இப்படித்தான் திமுகவை கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல், அறியாமையில் கதறிக் கொண்டிருக்கிறார்கள்!!!!! அறிந்தவர்கள், ஏற்கனவே சில நாலாந்தர பெரிய-கட்சி-நிர்வாகிகள் பேச்சின் காரணமாக, உள்ளிருந்து ஞானம் பெற்று தெளிந்து விட்டார்கள். முகநூலில் இப்படி ஒரு உருவகக் கதை சொல்லி வழக்கொழிந்து செத்துப்போன திராவிடத்தைப் பிடித்துக்கொண்டு மறுகாதே! தூக்கிக் கிடாசிவிட்டு வேறு வழியைத் தேடப்பார் என்று வழியும் சொல்கிற மாதிரி இருக்கிறதே!

திராவிட கழகமோ , திமு கழகமோ இப்படிக் கழகங்கள் எதுவானாலும், இந்த மாநிலத்துக்கு கேடுதான்! திமுக முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய கட்சிதான் என்பதற்கு அதன் கடந்தகாலச் செயல்பாடுகளே போதுமான காரணமாக இருக்கிறது

யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்க, யார் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் தெளிவாய் இருக்க வேண்டும் திமுக மற்றும் அதன் கூட்டாளிகளான காங்கிரஸ், கம்யூஜிஸ்டுகள், விசிக, மதிமுக போன்ற உதிரிகளை முற்றொட்டாக நிராகரிப்பதில் இருந்து ,அடுத்து யாரைத் தேர்ந்தெடுப்பது என்கிற தேடலும் ஆரம்பிக்கிறது.

மீண்டும் சந்திப்போம்..

Tuesday, March 30, 2021

#தமிழகஅரசியல் தேர்தல் நேரம்! காமெடி டைம்!

கெக்கேபிக்குணி தயாநிதி மாறன் தன்னுடைய நாற வாயை மறுபடியும் திறந்திருக்கிறார்.தயாநிதி  பேச்சை புளகாங்கிதத்தோடு முதலில் பிரசுரித்த இந்து தமிழ் திசை, பிரச்சினை வேறுமாதிரி ஆகிவிடும் என்று  நினைத்தோ என்னவோ சத்தமில்லாமல் செய்தியை எடுத்துவிட்டது.  



என்ன தயா இதெல்லாம்? என்று கேட்டுவிடக்கூடாது! கெக்கேபிக்கென்று சிரிப்பதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது, தெரியுமில்லையா? 😀😂  


சொல்வது தினமலர் தானே ,என்று அலட்சியப்படுத்த முடியாத படி, இந்தச்செய்தி திமுகவின் ஆர்வக்கோளாறு மட்டுமல்ல, கழகத்தின் நேற்றைய இன்றைய ஏன் நாளைய வரலாறும் கூட!  


சொல்வதெல்லாம் உண்மையா? பலசமயங்களில் குறிப்பாக அரசியலில் சொல்லாமல் போனதெல்லாம் கூட உண்மைதான் என்று சொல்கிறது இந்தவார துக்ளக் அட்டைப்படம்!


ஆனாலும் கூட கமல் காசர் தன்னுடைய நட்டத்துக்கு இரண்டு பூஜ்யங்கள் அசேர்த்துச் சொல்கிறாரோ என்ற பெருத்த சந்தேகம் எனக்கு! எது எப்படியாகிலும், கமல் காசருடைய நட்டம், தயாரிப்பாளர்களுக்கும்,காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் பெருத்த லாபம் என்பதைத் தனியாகச் சொல்லவேண்டுமா?

மீண்டும் சந்திப்போம்.   

Sunday, March 28, 2021

தமிழக அரசியல்களம் ஏன் இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது?

ஆபாசராசாபேச்சுக்கு எதிர்ப்பு அதிகமாகி வருவதைக்  குறித்து திமுகவினர் யாரும் வாய்திறக்க வேண்டாம்.  கொஞ்சநாட்களில் சர்ச்சை, எதிர்ப்பெல்லாம் அப்படியே அமுங்கிப்போய்விடும் என்று இசுடாலின் கருதுவதாகத்  தோன்றுகிறது. அதுபோலவே தேமுதிகவின் சரிவுக்கு என்ன காரணமாம்? அதை வெறும் இரண்டே முக்கால் நிமிட வீடியோவில் சொல்லிவிட முடியுமா என்ன? 


தேமுதிகவின் சரிவுக்கு விஜய பிரபாகரன் ஒருவரை மட்டுமே குறைசொல்கிற இந்தச் செய்தியைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தினமலர் தேர்தல்களம் 8 பக்க இணைப்பில் நல்லா இருந்த கட்சியும் நாலு சகுனி பசங்களும் என்று தலைப்புக்கொடுத்து,ஒரு மிமிக்ரி கலைஞன் விஜயகாந்த் மாதிரியே பேசியதைச் சொல்லி சப்பென்று முடித்திருக்கிற மாதிரியே இந்த வீடியோ செய்தியும் இருக்கிறது.

நேற்று கோவை தெற்கு தொகுதியில் பிஜேபி வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி ஈரானி பேச்சுக்கு கமல் காசரின் கட்சி பதில் சொல்லியிருப்பது திமுகவினருக்குத் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக்  காட்டுவதாகவே இருந்தது.

முன்னதாக  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, ‘‘பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன், மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது, அதற்குண்டான தீர்வுகளை வழங்குவது, ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல், திட்டங்கள் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நான் சவால் விடுகிறேன்.பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு அளிக்கும் வாக்குகள் வளர்ச்சிக்கு உண்டான ஓட்டு. ஏழை, எளிய மக்களை, அவர்களின் வறுமையில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கான ஓட்டு. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

காலைக் கடன்களைக் கழிக்க பெண்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர். அதைச் சரிசெய்ய கோடிக்கணக்கிலான கழிப்பறைகளை நாடு முழுவதும் கட்டிக் கொடுத்துள்ளார். அதில் பெரும் பங்கு பயனாளிகள் தமிழகத்தில் உள்ளனர்.அதேபோல், கரோனா காலகட்டத்தில் 8 மாதங்களுக்குப் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ரேஷன் அரிசி மற்றும் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், தேர்தலின்போது பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அதேபோல், இளைஞர்கள் தங்களது நட்பு வட்டாரத்தில் உள்ள மற்ற இளைஞர்களுக்கும் தெரிவித்து அவர்களை பாஜகவுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்’’ என்று ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.  


வானதி சீனிவாசன் போன்ற துக்கடாக்களுடன்.... என்ன ஒரு ஆணவமான அறிக்கை?! தைரியம் இருந்தால் சவால் விட்ட ஸ்ம்ருதி ஈரானியுடனேயே விவாதம் செய்ய கமல் காசர் விருப்பம் தெரிவித்திருக்க வேண்டியது தானே! ஏற்கெனெவே ஸ்ம்ருதியுடன் விவாதம் செய்து பப்பரப்பே என்று கமல் காசர் தவித்துத் தண்ணீர் குடித்த கதை மறந்து போய்விட்டதோ?

நினைவு படுத்திக்கொள்ள இங்கே 90 நிமிட விவாதம்   


 இது  தமிழில் 5 நிமிடச் சுருக்கம்.  

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழப்பு: ராகுல் காந்தி
ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் தமிழகத்தில் பல லட்

பிழைப்பு கெட்டுப்போன காங்கிரஸ், திராவிடங்களைச் சொல்கிறாரோ ராகுல் காண்டி?!  

தமிழக அரசியல்களம் ஏன் இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது?  என்கிற கேள்வி எனக்குள்  உறுத்திக்கொண்டே இருந்ததற்கு விடைசொல்கிற மாதிரி முகநூலில் ஒரு பகிர்வை இப்போது பார்த்தேன்:


போலி பாதிரி போலி போராளி ஜெகத் கஸ்பர் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வெற்றிக்காக பிரச்சாரம் செய்ய வில்லை, பாஜகவுடன் காம்ப்ரமைஸ் செய்து கொண்டது போல இருக்கிறது என்று பேசியுள்ளார்.
மதமாற்ற கும்பலின் தலைவனுக்கு அரவக்குறிச்சி தொகுதி மட்டும் ஏன் கண்களை உறுத்துகிறது. ஜெகத் கஸ்பருக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணம் என்ன? எத்தனையோ தொகுதிகளில் திமுக வெற்றி பெற வாய்ப்பு இல்லாத நிலையில் ஜெகத் கஸ்பருக்கு அரவக்குறிச்சி மீது மட்டும் ஏன் அக்கறை?
பதில் ஒன்று தான்.
இத்தனை காலம் தமிழகத்தில் பாஜகவை வளரச் செய்ய நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லை. பாஜகவின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தெளிவான பதிலடி தர சரியான தலைவர் இல்லை.
ஆனால் இப்போது ஒரு தலைவன் உருவாகிறான். சூடான ரத்தமும், தெளிவான நோக்கமும், வரையறுக்கப்பட்ட கொள்கைகளும், எதையும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ளும் தைரியமும், எதைப்பற்றியும் விவாதிக்கும் அறிவு கூர்மையும், நேர்மையும், இந்த தேசத்தின் மேன்மையையும் உணர்ந்த, சுயநலம் இல்லாத எளிமையான அணுகுமுறை கொண்ட ஒருவன் களத்தில் இருக்கிறான்.
கோடிக்கணக்கான இளம் தமிழர்களை தேசியத்தின் பக்கம் நிற்க செய்யும் வலிமையுடையவன், இப்போதே லட்சக்கணக்கான தமிழர்களை ஈர்த்து விட்ட இளம் தலைவன் உருவாகி வருகிறான்.
அரவக்குறிச்சி அவனை அடையாளப்படுத்துகிறது. அரவக்குறிச்சி தரும் வெற்றி அவனை அங்கீகரிக்கும். அதன் பின் தமிழகமெங்கும் அவன் வழியில் இளைஞர்கள் திரள்வார்கள். அவன் வழியில் தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கும்.
அவனே வருங்கால தலைவன், அண்ணாமலை அவன் பெயர்.
ஜெய்ஹிந்த்

மீண்டும் சந்திப்போம்   

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)