Sunday, March 28, 2021

தமிழக அரசியல்களம் ஏன் இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது?

ஆபாசராசாபேச்சுக்கு எதிர்ப்பு அதிகமாகி வருவதைக்  குறித்து திமுகவினர் யாரும் வாய்திறக்க வேண்டாம்.  கொஞ்சநாட்களில் சர்ச்சை, எதிர்ப்பெல்லாம் அப்படியே அமுங்கிப்போய்விடும் என்று இசுடாலின் கருதுவதாகத்  தோன்றுகிறது. அதுபோலவே தேமுதிகவின் சரிவுக்கு என்ன காரணமாம்? அதை வெறும் இரண்டே முக்கால் நிமிட வீடியோவில் சொல்லிவிட முடியுமா என்ன? 


தேமுதிகவின் சரிவுக்கு விஜய பிரபாகரன் ஒருவரை மட்டுமே குறைசொல்கிற இந்தச் செய்தியைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தினமலர் தேர்தல்களம் 8 பக்க இணைப்பில் நல்லா இருந்த கட்சியும் நாலு சகுனி பசங்களும் என்று தலைப்புக்கொடுத்து,ஒரு மிமிக்ரி கலைஞன் விஜயகாந்த் மாதிரியே பேசியதைச் சொல்லி சப்பென்று முடித்திருக்கிற மாதிரியே இந்த வீடியோ செய்தியும் இருக்கிறது.

நேற்று கோவை தெற்கு தொகுதியில் பிஜேபி வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி ஈரானி பேச்சுக்கு கமல் காசரின் கட்சி பதில் சொல்லியிருப்பது திமுகவினருக்குத் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக்  காட்டுவதாகவே இருந்தது.

முன்னதாக  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, ‘‘பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன், மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது, அதற்குண்டான தீர்வுகளை வழங்குவது, ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல், திட்டங்கள் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நான் சவால் விடுகிறேன்.பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு அளிக்கும் வாக்குகள் வளர்ச்சிக்கு உண்டான ஓட்டு. ஏழை, எளிய மக்களை, அவர்களின் வறுமையில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கான ஓட்டு. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

காலைக் கடன்களைக் கழிக்க பெண்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர். அதைச் சரிசெய்ய கோடிக்கணக்கிலான கழிப்பறைகளை நாடு முழுவதும் கட்டிக் கொடுத்துள்ளார். அதில் பெரும் பங்கு பயனாளிகள் தமிழகத்தில் உள்ளனர்.அதேபோல், கரோனா காலகட்டத்தில் 8 மாதங்களுக்குப் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ரேஷன் அரிசி மற்றும் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், தேர்தலின்போது பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அதேபோல், இளைஞர்கள் தங்களது நட்பு வட்டாரத்தில் உள்ள மற்ற இளைஞர்களுக்கும் தெரிவித்து அவர்களை பாஜகவுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்’’ என்று ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.  


வானதி சீனிவாசன் போன்ற துக்கடாக்களுடன்.... என்ன ஒரு ஆணவமான அறிக்கை?! தைரியம் இருந்தால் சவால் விட்ட ஸ்ம்ருதி ஈரானியுடனேயே விவாதம் செய்ய கமல் காசர் விருப்பம் தெரிவித்திருக்க வேண்டியது தானே! ஏற்கெனெவே ஸ்ம்ருதியுடன் விவாதம் செய்து பப்பரப்பே என்று கமல் காசர் தவித்துத் தண்ணீர் குடித்த கதை மறந்து போய்விட்டதோ?

நினைவு படுத்திக்கொள்ள இங்கே 90 நிமிட விவாதம்   


 இது  தமிழில் 5 நிமிடச் சுருக்கம்.  

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழப்பு: ராகுல் காந்தி
ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் தமிழகத்தில் பல லட்

பிழைப்பு கெட்டுப்போன காங்கிரஸ், திராவிடங்களைச் சொல்கிறாரோ ராகுல் காண்டி?!  

தமிழக அரசியல்களம் ஏன் இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது?  என்கிற கேள்வி எனக்குள்  உறுத்திக்கொண்டே இருந்ததற்கு விடைசொல்கிற மாதிரி முகநூலில் ஒரு பகிர்வை இப்போது பார்த்தேன்:


போலி பாதிரி போலி போராளி ஜெகத் கஸ்பர் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வெற்றிக்காக பிரச்சாரம் செய்ய வில்லை, பாஜகவுடன் காம்ப்ரமைஸ் செய்து கொண்டது போல இருக்கிறது என்று பேசியுள்ளார்.
மதமாற்ற கும்பலின் தலைவனுக்கு அரவக்குறிச்சி தொகுதி மட்டும் ஏன் கண்களை உறுத்துகிறது. ஜெகத் கஸ்பருக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணம் என்ன? எத்தனையோ தொகுதிகளில் திமுக வெற்றி பெற வாய்ப்பு இல்லாத நிலையில் ஜெகத் கஸ்பருக்கு அரவக்குறிச்சி மீது மட்டும் ஏன் அக்கறை?
பதில் ஒன்று தான்.
இத்தனை காலம் தமிழகத்தில் பாஜகவை வளரச் செய்ய நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லை. பாஜகவின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தெளிவான பதிலடி தர சரியான தலைவர் இல்லை.
ஆனால் இப்போது ஒரு தலைவன் உருவாகிறான். சூடான ரத்தமும், தெளிவான நோக்கமும், வரையறுக்கப்பட்ட கொள்கைகளும், எதையும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ளும் தைரியமும், எதைப்பற்றியும் விவாதிக்கும் அறிவு கூர்மையும், நேர்மையும், இந்த தேசத்தின் மேன்மையையும் உணர்ந்த, சுயநலம் இல்லாத எளிமையான அணுகுமுறை கொண்ட ஒருவன் களத்தில் இருக்கிறான்.
கோடிக்கணக்கான இளம் தமிழர்களை தேசியத்தின் பக்கம் நிற்க செய்யும் வலிமையுடையவன், இப்போதே லட்சக்கணக்கான தமிழர்களை ஈர்த்து விட்ட இளம் தலைவன் உருவாகி வருகிறான்.
அரவக்குறிச்சி அவனை அடையாளப்படுத்துகிறது. அரவக்குறிச்சி தரும் வெற்றி அவனை அங்கீகரிக்கும். அதன் பின் தமிழகமெங்கும் அவன் வழியில் இளைஞர்கள் திரள்வார்கள். அவன் வழியில் தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கும்.
அவனே வருங்கால தலைவன், அண்ணாமலை அவன் பெயர்.
ஜெய்ஹிந்த்

மீண்டும் சந்திப்போம்   

4 comments:

  1. அண்ணாமலை!...

    ஆன்மீகத்தில் வெகு கம்பீரமான பெயர்.. நிகரானது ஏதும் இல்லை..

    ஜெய்ஹிந்த்..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் துரை செல்வராஜூ சார்!

      அரசியலிலும் இந்த நிஜ அண்ணாமலை சாதிப்பார் என்றே எனக்கும் உறுதியாகத் தோன்றுகிறது!

      Delete
  2. எரிகின்ற கொள்ளியில்
    எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?..

    காசர்களைப் பற்றி பேசற்க!..

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் காலத்தில் சீமான், கமல் காசர், டிடிவி தினகரன் போன்ற சில்லறைகளை ஒதுக்கி வைக்க முடியாதே சார்! இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அஜெண்டா இருப்பதில், ஏற்கெனெவே குழம்பியிருக்கும் அரசியல் குட்டையை மேலும் குழப்புவது ஏன் எதற்காக என்பதைப்பேசியே ஆகவேண்டியிருக்கிறது இல்லையா?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)