Thursday, March 25, 2021

லோலோ! லோலாயி! லயோலா! எ வ வேலு ஒப்பாரி!

முந்தைய பதிவில் உங்கள் பார்வையில் நம்பிக்கை ஊட்டும் வேட்பாளர்கள் யார் என்று எழுப்பியிருந்த ஒரு கேள்விக்கு இன்னமும் நண்பர்களிடமிருந்து பதில் எதுவும் இல்லை. ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே பதில் சொல்ல இத்தனை தயக்கம் என்றால், முன்பின் தெரியாதவர்கள் மைக்கை நீட்டிக் கொண்டு  உங்கள் ஒட்டு யாருக்கு என்ற கேள்வியோடு வந்தால் ஜனங்கள் மனம் திறந்து பதில்  சொல்லிவிடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? கருத்துக் கணிப்புக்கள் என்ற பெயரில் ஊடகங்கள் தொடர்ந்து  காசுக்கு கூவுவதைப் பார்க்கையில் என்ன நினைக்கத் தோன்றும்?கருத்தும் கணிப்பும்  என்ற குறியீட்டுச்சொல்லை வைத்து 17 பதிவுகள் எழுதியிருக்கும் எனக்கே அலுப்புத் தட்டுகிற அளவுக்குத் திகட்டி விட்டது. தேர்தலுக்குத் தேர்தல் கருத்துக் கணிப்பு என்கிற கேலிக்கூத்தை நடத்தி வந்த லயோலா கல்லூரி கூட மானம் கெட்டுப்போனதில் இந்த 2021 தேர்தல்களத்தில் தாங்கள் எந்தக்கணிப்பையும் செய்யப்போவதில்லை என்று பெரிய கும்பிடாகப் போட்டிருப்பதைப் பார்த்தும் கூடத்திருந்தவில்லை என்றால் என்ன செய்ய?


இது 2019 மே 21 அன்று அந்தப்பக்கங்களில் பகிர்ந்த ஹிந்து ஆங்கில நாளிதழ் கார்டூன்! லோலாய்த்தனம் செய்வதில் கெட்டிக்காரர்களாக இருந்த லயோலா கல்லூரி என் இந்தத் தேர்தலில் கருத்துக்கணிப்புகள் நடத்தி இதுவரை பட்டதே போதும் என்று ஜகா வாங்க என்ன காரணம், பின்னணி என்பது எனக்கும் தெரியாது!

“லயோலா கல்லூரி 2021- ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எந்த வகையிலும் கருத்துக் கணிப்பு நடத்தவில்லை என்று இதன்மூலம் அறிவிக்கின்றனது. தேர்தல் போக்குகளைப் பற்றிய விமர்சனங்களை வழங்குவதில் கல்லூரி நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், பயிற்றாப் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்தப் பங்களிப்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே லயோலா கல்லூரி என்ற பெயரில் அறிக்கைகள் ஏதேனும் வழங்கப்பட்டால் ஊடக நண்பர்கள் அதனைப் புறக்கணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் போக்குகளை வெளியிட சென்னை லயோலா கல்லூரி என்ற பெயரைப் பயன்படுத்தும் தனிநபர்களையும் மன்றங்களையும் கடுமையாக எச்சரிக்கின்றோம்” இப்படி அழாத குறை தான்! லயோலா கல்லூரி வெளியிட்டிருக்கும் அறிக்கை  தேம்புகிறதே! 


தேர்தல் ஆணையம் இப்படி ஒரு முழுப்பக்க விளம்பரம் செய்யலாமா என்கிற ஒரு விவாதம் முகநூலில் கொஞ்சம் சூடாக நடந்து கொண்டிருக்கிறது! உங்களுக்கு என்ன தோன்றுகிறது, சொல்லுங்களேன்! 


 

எவ வேலுவுக்கு ஆதரவாக துரைமுருகன் முந்திக் கொண்டு ஒப்பாரி வைத்திருக்கிறார் என்பதாக அரசியல் களம் சுவாரஸ்யமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது!

மீண்டும் சந்திப்போம்.    

5 comments:

  1. நம்பிக்கை ஊட்டும் வேட்பாளர்களே இல்லாதபோது யாரால் என்ன பதில் சொல்ல முடியும்?  இல்லையா?!!

    ReplyDelete
    Replies
    1. முழுக்க முழுக்க அவநம்பிக்கையோடு பார்க்கிற மிடில் கிளாஸ் மாதவனாக இருந்தால் அர்விந்த் கேஜ்ரிவால் மாதிரி அச்சுப்பிச்சு தான் கிடைக்கும் ஸ்ரீராம்! இந்த வாக்குச்சீட்டு ஜனநாயகத்தில் உங்களுக்கு ஓட்டுப்போடுகிற உரிமை மட்டுமே உண்டு. யாரோ ஒரு நபர் தேர்ந்தெஎடுக்கப்பட்ட பிறகு, அந்த நபர் உங்களுடைய குரலாக ஒலிக்கச் செய்ய முடியாது, அந்த நபரைக் கட்டுப்படுத்தவும் முடியாது என்பதால் எழுகிற கையறுநிலை இது.

      இருப்பதை வைத்துக் கொண்டு என்ன செய்யவேண்டும், என்ன செய்ய முடியும் என்று யோசிக்கிற நிலைக்கு நண்பர்கள் உயரவேண்டும் என்பதற்காகத்தானே இங்கே மல்லுக் கட்டிக்க கொண்டிருக்கிறேன்?

      Delete
    2. //முழுக்க முழுக்க அவநம்பிக்கையோடு பார்க்கிற மிடில் கிளாஸ் மாதவனாக இருந்தால் அர்விந்த் கேஜ்ரிவால் மாதிரி அச்சுப்பிச்சு தான் கிடைக்கும் ஸ்ரீராம்! //

      சிரித்து விட்டேன்.  

      Delete
  2. நம்பிக்கை ஊட்டும் வேட்பாளர்கள் - பாஜக அண்ணாமலை இருக்கார். (as of now) மத்தவங்களையும் யார் யார் என்று ரொம்பவே யோசித்துப் பார்க்கணும். ஆனா மனசுல, அதிமுக, பாஜகவை கூட்டுச் சேர்க்காமல் இருந்திருந்தால், நிச்சயம் 80-90+ வாங்கியிருக்குமே என்று தோன்றாமல் இல்லை.

    எ.வ.வேலு - இவர்தானே ரேஷன் பொருட்களை தங்கள் கல்லூரி ஹாஸ்டலுக்குக் கடத்தினார் என்று செய்தி வந்தது. துரைமுருகன் - உலகப் பெரும் பணக்காரர் வரிசையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவர்தானே இவர். அடுத்து பொன்முடி, டி.ஆர்.பாலு......... உலக மகா ஊழல் சக்கரவர்த்திகள் இவர்கள். ஆரம்ப காலத்தில் ஒரு டீக்குக் கஷ்டப்பட்டவங்க இவங்க என்பதை நம்புவதே கடினம்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன் சார்!

      உங்களுடைய பின்னூட்டத்தில் இரண்டாவது பகுதியில் எதை, எவரைக் கழிக்கவேண்டும் என்பதற்கான தெளிவு இருக்கிறதே! அங்கே இருந்து ஆரம்பிப்பதுதான் நமக்கிருக்கும் முதலாவது திறப்பு. விடிவுக்கான வாசல்.

      ரமண வழி மாதிரி இது இல்லை இது தேறாது என்று கழித்துக்கொண்டே வந்து கடைசியில் மிஞ்சுவது எதுவோ அதைப்பிடித்துக் கொள்வது ஒன்று மட்டுமே இந்த தேர்தல் முறையில் நமக்கிருக்கிற ஒரே சாய்ஸ். இதைப்புரிந்து கொண்டு செயல்பட முடியுமானால் ரமணருக்கு தான் யார் என்கிற ஞானம் சித்தித்த மாதிரி நமக்கும் நடக்கலாம்.

      அதுவரை பிஜேபி மீதான aversion ஐ கொஞ்சம் ஒதுக்கி வையுங்களேன்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)