Sunday, March 7, 2021

IT ரெயிடுகளும் பின்னே தொடரும் பல்டிகளும்! #சோதனை மேல் #சோதனை ! போதுமடா சாமி!

னை சசிகலாவின் அரசியல் துறவறத்தைப் பற்றி இங்கே எதுவுமே பேசக்காணோமே என்று ஆதங்கத்தோடு கேள்வி எழுப்பிய படியே அண்ணாச்சி உள்ளே வந்தார். இதில் நான் பேச என்ன இருக்கிறது என்ற பதிலில் அவருக்குக் கொஞ்சம் கூடத் திருப்தி இல்லை. யார் இந்த அண்ணாச்சி, சசிகலா மீது என்ன இந்த திடீர்க் கரிசனம் என்றெல்லாம் கேள்வி எழுகிறதா? அண்ணாச்சி, நான் முன்னொரு காலத்தில் ஒரு வங்கி ஊழியனாக வேலை செய்து கொண்டிருந்த நாட்களில் உடன் பணியாற்றிய சீனியர்! அண்ணாச்சிக்கு அரசியல் ஆர்வம் உண்டு, ஆனால் வெளியே அதிகம்  காட்டிக்கொள்ள மாட்டார். நான் எழுதுவதை சைலண்டாகக் கவனித்து வருகிறவர் என்ற தகவல் போதுமில்லையா! .     


அண்ணாச்சியை சமாளிப்பதற்காக இந்த 3 நிமிட வீடியோ, மற்றும் பதிவில் ஒரு இடம் கொடுத்தாகி விட்டது. சசிகலா திடீரென அரசியலை விட்டே ஒதுங்குகிறேன் என்று அறிக்கை விட்டதற்கு புதிதாக ஒரு காரணம் சொல்கிறார்களே, நம்புகிற மாதிரியாகவா இருக்கிறது? சசிகலாவுக்கு டிடிவி தினகரன் மீது மிகவும் பாசமுண்டு என்பது தெரிந்த விஷயம். ஜெ.வால் கட்டம் கட்டப்பட்டு, கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்ட பிறகு இருக்கும் இடமே தெரியாமல் இருந்தவர். அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்த்து, பொறுப்பையும் கொடுத்து விட்டுத்தான்  ஜெயிலுக்குக்குப்போனார் சசிகலா.எதிர் பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை என்பதால் கொஞ்சம் ராஜதந்திரமாக ஒதுங்கிக்கொண்டார் என்று சொன்னால் கூட நம்புகிற மாதிரி இருக்கும். அதைவிட்டு தம்பி திவாகரன் சொன்னார், சசிகலாவும் ஒதுங்கினார் என்று சொன்னால் சுவாரசியமே இல்லாமல் சப்பென்று முடிந்து விடாதா? ஆட்டத்தில் பிஜேபி, மோடி, அமிஷ் ஷா மிரட்டல் என்றெல்லாம் சேர்க்காமல் எப்படி தினமலர்  கொஞ்சமும் அறிவில்லாமல் செய்தி போடுகிறதாம்? அண்ணாச்சி! இப்போது சந்தோஷமா?   



அந்தநாட்களில் MGR படங்களில் மாறுவேஷம் போட்டு வருவதை, மச்சம் இருந்தால் மாறுவேஷம் இல்லை என்றால் ஒரிஜினல் என்பதாகக் கிண்டல் செய்வார்களே, நினைவுக்கு வருகிறதா?

அதே காமெடியை திமுக வழக்கறிஞர் அணி உதவியுடன் ஆர் எஸ் பாரதி, பொன்முடி இருவரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில்  செய்திருக்கிறார்கள் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இன்றைக்கு வெளியாகி இருக்கும் இந்தச் செய்தி சொல்கிறது. Who could possibly say that Duraimurugan from whom crores of rupees intended for distribution for his son’s election was seized in Vellore in March 2019 is not the general secretary of DMK, and not a permanent trustee of DMK trust? Indeed, it was the DMK itself that made such a claim, in a writ petition that it filed on January 28, 2021. 

ஆர் எஸ் பாரதி, திமுக சார்பில் தாக்கல் செய்திருக்கும் பிரமாண பத்திரத்தில், 2019 மார்ச் மாதம் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான D துரை முருகனும், திமுகவின் பொதுச் செயலாளரும், திமுக அறக்கட்டளை ட்ரஸ்டியுமான துரை முருகனும் ஒருவர் அல்ல என்று சொல்லியிருக்கிறார். ரெயடுக்குள்ளானவர்  D துரை முருகன் வேறு,  திமுக பொதுச்செயலாளர் / அறக்கட்டளையின் ட்ரஸ்டி (இனிஷியல் இல்லாமல்) துரை முருகன் வேறு, அவ்வளவு தான்!

K Ponmudi, the organising secretary of DMK, also repeated the same claim – that D Duraimurugan i s not the same as Duraimurugan. Shocked by DMK disowning its own general secretary and permanent trustee, the IT Department scrambled for proof and finally got the patta of the agricultural lands owned by D Duraimurugan issued by Tehsildar, Katpadi, dated 4.4.2005, with a photo of D Duraimurugan.

எதற்காக அப்படி செய்தார்களாம்? மேலே லிங்கில் இருக்கும் செய்தி ஒரு சுவாரசியமான காரணம் ஒரு twist உடன் முடிகிறதே, அதைக்கவனியுங்கள்!

வருமானவரிச் சோதனை கொஞ்சம் உறுதியாக நடத்தப பட்டால் இன்னும் என்னென்ன காமெடிகள் இதுபோலக் கிளம்பி வருமோ? நிச்சயமாக சினிமா நடிகை டாப்ஸி காமெடி செய்திருப்பதுபோல IT ரெயிடுகள் வேடிக்கை அதுவே வாடிக்கை என்று இருந்துவிடாது!

மீண்டும் சந்திப்போம்.  

6 comments:

  1. பணம் என்பது இவர்களுக்கெல்லாம் விளையாட்டுப்பொருள்...  ம்...ஹூம்...

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு ஸ்ரீராம்? கமென்ட் புரியவில்லை!

      Delete
    2. துரைமுருகன், சசிகலா வகையறாதான்!  பொதுவாக அரசியல்வியாதிகள்!

      Delete
    3. பணம் விளையாட்டுப்பொருள் இல்லை ஸ்ரீராம்! பணம் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள உதவும் கருவி, பெரிய ஆயுதம். சசிகலாவிடம் இருக்கும் பெரும்பணம் இப்போது அவருக்கு எந்தவகையில் உதவியது? கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!

      Delete
  2. கருணாநிதி எவ்வழி அவ்வழி திமுக. அவர், கனிமொழி தன்னுடைய மகள் இல்லை என்று சட்டமன்றத்திலேயே சொன்னவராயிற்றே. திமுக டிரஸ்டில் பெரிய மர்மமும் கள்ளப்பணமும் பதுங்கி இருப்பதை ஐடி ரெய்டுகள் நடத்தினால் வெளிப்பட்டுவிடும் என்ற பயமோ என்னவோ. விரைவில் துரைமுருகனுக்கு வேறு பொறுப்பு கொடுத்துவிட்டு (ஆட்சி அமைத்தால் ) பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கழற்றிவிட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

    ஆனால் ஐ.டி. ரெய்டு என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இத்தகைய ரெய்டுகளினால் எல்லோருடைய நேரமும்தான் வீணடிக்கப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன் சார்! அரசியல் தலைமை மட்டுமே மாறி மற்றவை அப்படியே மாறாமல் இருக்கும் சூழலில் அதிரடி மாற்றம், உடனடி மாற்றம் எதுவுமே சாத்தியமில்லாதது. IT raid என்பது துறைரீதியான routine work அவ்வளவுதான். அதற்குமேல் காரியங்கள் நடக்க நிறையத் தடங்கல்களை எதிர்கொண்டாக வேண்டியிருக்கும்.

      லிங்கில் எக்ஸ்பிரஸ் செய்தியை முழுதாக வாசித்தீர்களா?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)