மேற்கு வங்க அரசியல்களம், தேர்தல்களம், உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டுநாள் விஜயமாக அங்கே போய்வந்த பிறகு, சூடு பிடித்திருக்கிறது என்று சொல்வதை விட ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு அதிக கிலி பிடிக்க ஆரம்பித்து விட்டதென்றே தெரிகிறது! அதுவும் போக மம்தா பானெர்ஜிக்கு image makeover மற்றும் தேர்தல் உத்தி வகுக்கப் போயிருக்கும் IPAC பிரசாந்த் கிஷோர் பிழைப்பிலும் மண்விழுந்துவிடும் போல இருக்கிறது!
முகநூலில் பானு கோம்ஸ் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்:
பிஜேபியை, நரேந்திர மோடியைக் கடுமையாக விமரிசிக்கும் கார்ட்டூனிஸ்ட் சதீஷுக்கு பிரசாந்த் கிஷோர் சவால் விடுவதில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை போல இருக்கிறது! பயத்தில் உளறுவதெல்லாம் சவாலாகி விடுமா சதீஷ்?
இங்கே தமிழக அரசியல்களம் என்ன நிலையில் இருக்கிறது?
எஸ்ரா சற்குணம் மாதிரி முழுநேர திமுக பாதிரிகளை வைத்துக் கொண்டு வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
இஸ்லாமியர்களுக்கு திமுகவை விட்டால் வேறு போக்கிடமே இல்லை என்ற நிலை மாற்ற அசாதுதீன் ஒவைசி தன்னுடைய AIMIM கட்சியுடன் (நயம் முஸ்லீம் கட்சி முத்திரையுடன்) வருகிற சட்டசபைத் தேர்தலில் களம் இறங்குகிறாராம்! எஸ்ரா சற்குணம் திமுகவுக்கு கிறிஸ்தவ ஓட்டுக்களைச் சிந்தாமல் சிதறாமல் வாங்கித் தர முடியுமா என்பது சந்தேகம்தான்! ஆனால் ஒவைசி..? இங்கே யாருடன் கூட்டுச் சேரப்போகிறார்?
விடைகாண முடியாமல் தமிழக அரசியல் களம் வெகுவாக இப்போதே குழம்ப ஆரம்பித்து விட்டது.
மீண்டும் சந்திப்போம்






