இந்தப்பக்கங்களில் திரைப்பட விமரிசனம் என்றெழுதி நீண்டநாட்களாகி விட்டது என்கிற நினைப்பே, இன்று முகநூலில் ஸ்டேன்லி ராஜன் எழுதிய ஒரு பகிர்வைப் படித்ததும் தான்,வந்தது. அதுவும் ஒரு திரைப்படம் மீதான விமரிசனம் என்று மட்டுமே இல்லாமல், தமிழ்த்திரை உலகம் போய்க்கொண்டிருக்கிற விதத்தைப் பற்றிய ஆதங்கமாகவும் வெளிப்பட்டிருந்ததை யோசித்ததில் ஒரு பெருமூச்சுடன் தான் கடக்கவேண்டி இருந்தது.
பார்த்தது, கேட்டது, படித்தது! எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக!
Sunday, April 11, 2021
#கர்ணன் திரைப்படம் சொல்லவருவது என்ன?
Friday, February 19, 2021
#ராயல்அக்க்ப்போர் ஒரு "கோமகனின் காதல்" பிரிட்டனைப் பாடாய்ப்படுத்துகிறதாம்!
கோமகன், காதல் என்றாலே நிறைய வில்லங்கம் நிறைய ஊர்வம்பு, அக்கப்போர் என்ற கலவையாக இருப்பது பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் மட்டும் தான்! உலகில் வேறு பல ராஜகுடும்பங்கள் இருந்தாலும் இந்தக் குடும்பத்தைப் போல, அந்தரங்க விஷயங்கள் ஊடகங்களில் அலசிக் காயப்போட்டது மாதிரி வேறெங்கும் இருந்தது இல்லை! அரசனோ சம்சாரியோ இருவருமே ஆசாபாசங்கள் நிறைந்த மனிதர்கள் மட்டும் தான்! புனிதர்கள் அல்ல! அவர்களுடைய அந்தரங்கத்தைப் பொதுவெளியில் கதைப்பது ஒருவகை ஊர்வம்பு மட்டும் தான்! washing the dirty linen in the public என்ற வழக்குச் சொல்லை ஆரம்பித்து வைத்ததே இங்கிலாந்தின் Tudor வம்சத்து அரசர்கள் காலத்தில் இருந்து தான் என்பது பிரிட்டிஷ் வரலாற்றின் கேவலமான அம்சம்! எதனால் தெரியுமா? அரசனும் அரசியும் உறவு கொள்வதற்கு முன்னால் பாதிரிகள் கூடி படுக்கையறையில் ஜெபம் செய்வதும், மறுநாள் காலையில் படுக்கையில் உறவுகொண்டதற்கான சுவடுகள் இருந்ததா என்று பரிசோதனை செய்வதில் இருந்து உண்டான வழக்கு அது. இப்போது பிரிட்டனை ஆள்வது Windsors வம்சம் முந்தைய அரசபரம்பரைகளை மிஞ்சிய ராயல் அக்கப்போர்களாக, பிரிட்டிஷ் ஊடகங்களில் மட்டுமல்லாமல் உலக ஊடகங்களாலும் கதைக்கப்படுவதாக இன்றைக்கு ஆகியிருக்கிறது.
பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் இரண்டாவது பேரன் ஒரு அமெரிக்க டிவி நடிகை மேகன் மார்க்கிலை காதல் திருமணம் செய்துகொண்ட நாளிலிருந்தே பிரிட்டிஷ் ஊடகங்கள் கொஞ்சம் பொறாமை, வெறுப்பு கலந்த செய்திகளை பிரசுரிக்க ஆரம்பித்துவிட்டன. இயல்பாகவே பிரிட்டிஷ் மீடியாவுக்கு அமெரிக்கர்கள் என்றாலே கொஞ்சம் இளப்பம்! மட்டந்தட்டுவதும் கூட வாடிக்கைதான்! அதுவும் போக மூத்த இளவரசர் வில்லியம், இளையவர் ஹாரி இருவருக்கும் இடையில், ஒரு பனிப்போர், ஹாரியின் திருமணத்துக்குப் பிறகு ஆரம்பித்ததாக ஊடகங்களில் செய்திகள், மறுப்பு என மாறி மாறி வந்துகொண்டே இருந்ததில், கடந்த வருடம் ஹாரி மேகன் தம்பதியினர் அரசகுடும்பத்தின் சீனியர் உறுப்பினர்களாகச் செயல்படுவதில் இருந்து வெளியேற இருப்பதாக செய்தி ஒன்று கசியவிடப்பட்டது. பாட்டி எலிசபெத் ஒரு சமரச முயற்சியாக இளைய பேரனும் அவர் மனைவியும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய ஒருவருட காலம் அவகாசம் கொடுத்ததில், ஹாரியும் மேகன் மார்க்கிலும் தங்கள் மகன் ஆர்ச்சியுடன் முதலில் கனடாவிலும், அது சரிப்பட்டு வராததால் அமெரிக்காவிலும் குடியேறினார்கள். அரச குடும்பத்தை சார்ந்திராமல், Netflix முதலான ஊடகங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு மில்லியன் கணக்கான் டாலர்களை சம்பாதித்து காலை வலுவாக ஊன்றிக்கொண்டும் அமெரிக்காவிலேயே செட்டிலாகி விடத் தீர்மானித்து விட்டமாதிரியே செய்திகள்.
#ஊர்வம்பு ஒரு பிரிட்டிஷ் "கோமகனின் காதல்" ஒரு புத்தகம்!
Thursday, December 17, 2020
ச்சும்மா ஜாலிக்கு! #முகநூல்சுவாரசியங்கள் பார்த்து ரொம்ப நாளாச்சு இல்ல?!!
முகநூல் வம்பர்களால் மட்டுமே ஆனதல்ல கொஞ்சம் உருப்படியாக, விஷயம் தெரிந்து எழுதுகிற சிலரும் இருக்கிறார்கள் என்பதற்காக கொஞ்சம் சாம்பிள்கள்! #முகநூல்சுவாரசியங்கள்
இது கார்ட்டூனிஸ்ட் மஞ்சுள் முகநூல் பகிர்வில் இருந்து எடுத்ததுதான்! இங்கே தமிழக அரசியல் கோமாளிகளைத் தாண்டியும் என்னைப் பரவசப் படுத்துவது ஆம் ஆத்மி கட்சியின் கேசரிவாலு தான்!நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்டு மண்ணைக்கவ்விய AAP வஸ்தாது கேசரிவாலு வருகிற 2022 உத்தரப்பிரதேச சட்டசபைத்தேர்தலில் போட்டியிடப்போகிறாராம்!
எப்போதும் கொஞ்சம் கேலியும் கிண்டலுமாகவே எழுதிவரும் நண்பர்/பதிவர் சேட்டைக்காரன் மனம் நொந்துபோய் முகநூலில் சாட்டையைச் சுழற்றி இருக்கிறார்
என்ன பொய் சொன்னாலும் அதை ஜனங்கள் அப்படியே நம்பிவிடுவார்கள் என்று யாரோ எழுதிக்கொடுக்கும் வசனத்தைப் பன்ச் டயலாக் ஆகப் பேசிப் பிரபலமான ஒரு நடிகன் சிலகாலத்துக்கு முன்னால் எம்ஜியார் கொடுத்த நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும் என்று உளறியது நண்பர்களுக்கு மறந்தே போயிருக்கும்! அதே மாதிரி எம்ஜியார் மடியில் வளர்ந்தவன் நான் என்று இன்னொரு கோமாளி சிலநாட்களுக்கு முன்னால் உளறியதாவது ஞாபகம் வருகிறதா? நண்பர் சாட்டையை எடுத்தது ஏனென்று இப்போது விளங்கியிருக்குமே!
இது ஹோம் டிபார்ட்மென்ட் சமாசாரம் என்பதால் என்னால் உடனடியாகச் சரிபார்க்க முடியவில்லை! யாராவது வந்து சரிபார்த்துச் சொன்னால் நல்லது!
அக்கப்போர்களுக்கும் ஆபாசப் பின்னூட்டங்களுக்கும் பெயர்போன முகநூலில் இன்னமும் கூட சுவாரசியமான பல விஷயங்கள் பகிர்வுகள் கிடைக்கின்றன என்பது ஆச்சரியமான விஷயம் தான்! #மஞ்சுள்டூன்ஸ் இலிருந்து இன்றைய அரசியல் நிலவரத்தைச் சொல்கிற இன்னொரு கார்ட்டூனுடன் பதிவை நிறைவு செய்து விடலாம்!
வீசப்படும் கற்களையில்லை கொண்டே பிஜேபி மேற்கு வங்கத்தில் கோட்டை கட்டுகிறது என்பதில் முழு உண்மையில்லை! மம்தா ஆத்திரத்தில் தன்னுடைய கோட்டைச் சுவர்களைப் பெயர்த்தே வீசுவதில் பிஜேபியின் கோட்டை மிக வேகமாக கட்டப்பட்டு வருகிறது என்றல்லவா இருக்க வேண்டும்!
மீண்டும் சந்திப்போம்.
இப்போது பார்த்துக் கொண்டிருப்பது
#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!
செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்
-
இன்று எதையோ தேடப்போக, ஜெயகாந்தன் எழுதிய உன்னைப் போnல் ஒருவன் நாவல் கைக்கு கிடைத்தது. இந்தப்புத்தகத்தை வாசித்து முப்பது வருடங்களுக்கும் மேலா...
-
எண்டமூரி வீரேந்திரநாத் எழுத்தைப் பற்றிப் புதிதாக நான் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை! ஏற்கெனெவே, சிலபதிவுகளில் எழுத்து என்ற தூரிகை கொண்டு...
-
யூட்யூப் தளத்தில் செய்திகளைத் தேடிக்கொண்டிருந்த தருணத்தில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. அரசியல் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவனை, கொஞ்சம் இலக்...
-
என்ன மாதிரி எழுத்தைக் கொண்டாடுவீர்கள்? எதற்காக? இப்படி ஒரு கேள்விக்கான தேடலாக அந்த நேரத்தில் உந்துதலாக அமைந்த ராஜேஷ் குமார் பாராட்டு விழா ...
-
மஹாபாரதக் கதை மாந்தர்களில் சகுனி கொஞ்சமல்ல நிறையவே வித்தியாசமானவன் என்பது தெரிந்ததுதான். உண்மையைச் சொல்லப்போனால் பாரதக்கதையில் வரும் பாத்திர...
-
நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வது, படித்ததில் பெற்ற அனுபவங்களை, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையில் இந்தப் பக்கங்களில் சில ப...
-
கல்கியில் 1965 வாக்கில் தொடர்கதையாக ஜீவகீதம் வெளிவந்து கொண்டிருந்தது. இளம் வாசகனாக, என்னை அந்தநாட்களிலேயே மிகவும் ஈர்த்தவர் எழுத்தாளர் ஜெக...
-
வைரமுத்துவுக்கு கேரளத்தின் ONV இலக்கியவிருது என்று அறிவித்த நேரம் மிகவும் பொல்லாத நேரமாகத்தான் இருக்க வேண்டும். ஏற்கெனெவே இடதுமுன்னணி அரசில...
-
கிறித்தவம் ஒரு நம்பிக்கையாக அல்லது மதமாக எப்போதும் இருந்ததில்லை, அது ஒரு வியாபாரம், MLM ஐ விட மோசமாகச் செய்யப்படும் வியாபாரம் என்பதை நம்மில...