Showing posts with label ச்சும்மா ஜாலிக்கு. Show all posts
Showing posts with label ச்சும்மா ஜாலிக்கு. Show all posts

Sunday, April 11, 2021

#கர்ணன் திரைப்படம் சொல்லவருவது என்ன?

இந்தப்பக்கங்களில் திரைப்பட விமரிசனம் என்றெழுதி நீண்டநாட்களாகி விட்டது என்கிற நினைப்பே, இன்று முகநூலில் ஸ்டேன்லி ராஜன் எழுதிய ஒரு பகிர்வைப் படித்ததும் தான்,வந்தது. அதுவும் ஒரு திரைப்படம் மீதான விமரிசனம் என்று மட்டுமே இல்லாமல், தமிழ்த்திரை உலகம் போய்க்கொண்டிருக்கிற விதத்தைப் பற்றிய ஆதங்கமாகவும் வெளிப்பட்டிருந்ததை யோசித்ததில் ஒரு பெருமூச்சுடன் தான் கடக்கவேண்டி இருந்தது.


 

2ம.நே 
இந்த சினிமா தயாரிப்பு என்பது சாமான்யம் அல்ல, பெரும் செட்டிகளும் மார்வாடிகளுமே திணறி தாக்குபிடிக்க முடியாமல் ஓடிவிட்ட களம் அது
ஏவிஎம் போன்றோரே ஒதுங்கி கொள்ள, குஞ்சுமோன் போன்ற பிரமாண்டங்களே இருந்த இடம் தெரியாமல் போன அளவு அதன் தாக்கம் கடுமையானது
திரைதுரையிலே ஊறிய நடிகர்களும் கவிஞர்களும் கூட, ஏன் டைரக்டர்கள் கூட சொந்தபடம் எனும் சவால் எடுக்க துணியவில்லை. அப்படிபட்ட திரையுலகில் பா.ரஞ்சித்தனார் 6 படம் தொடர்ந்து தயாரிப்பாராம், இதற்கான பணம் எங்கிருந்து யார் கொடுகின்றார்கள் என்பது தெரியாது
சரி, யாரும் கொடுக்கட்டும் ஆனால் இந்த தலித் கும்பல் எடுக்கும் படங்களின் கதை என்ன?
மேல் சாதி கீழ்சாதியினை அடிகின்றது, ஒடுக்குகின்றது எனும் ஜாதிய மோதலை தூண்டும் விதமாகவே இருக்கின்றதே அன்றி உருப்படியாக ஏதுமில்லை
நல்ல தலித்படம் என்றால் படித்தோ உழைத்தோ ஒரு சமூகம் உயர்வதை காட்டலாம் , மாறாக அடி, வெட்டு, குத்து, சிறைக்கு போ என்பதெல்லாம் மிக பெரிய சாதிய வன்ம தூண்டல்
இந்த இடத்தில் பாரதிராஜா, கமல், முத்தையா என அவர்களை இழுத்துவரலாம் ஆனால் பாரதிரஜாவோ கமலஹாசனோ சாதிய சண்டை வராதவரையில் சுய சாதி அல்லது ஒரு சாதியின் கொடும் மனநிலையான இன்னொரு பக்கத்தை காட்டியிருப்பார்கள்
அதற்கு முக்குலத்தோர் சமுதாயம் பொங்கியிருக்க வேண்டும் ஆனால் அவர்களோ நாங்கள் அப்படித்தான் திருந்த வேண்டிய தூரம் நிறைய உண்டு என்பதுபோல் அமைதி காத்தார்கள்
ஆனால் ரஞ்சித்தர், மாரி செல்வராஜ் படங்களெல்லாம் அப்படி பக்குவமான நிலையில் எடுக்கபட்டவை அல்ல, அவர்களிடம் முதிர்ச்சி இல்லை மாறாக ஒருவித வன்மம் மட்டும் மேலோங்கி நிற்கின்றது
வரலாற்றை புரட்டுங்கள்
1300களில் ஆப்கானிய கொள்ளை கும்பல் மதுரையினை ஆளவந்ததில் தமிழ்குடிகளின் அடக்குமுறை ஆரம்பிக்கின்றது, பின் நாயக்கர்கள் வந்தார்கள்
வெள்ளையன் ஆட்சியில் எல்லோரும் அடிமை ஆம் பார்ப்பனன் முதல் தலித் வரை அடிமைகளே
பார்ப்பனருக்கும் சொத்து பத்து மாட மாளிகை என எதுவுமில்லை, ஒரு சில ஜமீன்களும் மிராசுகளும் மட்டும் சொத்து வைத்திருந்தன அதுவும் ஆங்கிலேயனுக்கு கப்பம் கட்ட.இந்நிலையில்தான் சுதந்திரம் வந்து நாடு விடுதலையாயிற்று
இதன் பின் காட்சிகள் மாறின, பார்ப்பன சமூகம் முடிந்தால் இந்தியா இல்லையா வெளிநாடு என கல்வியில் அதன்போக்கில் முன்னேறிற்று
இதில் அன்று "குற்றபரம்பரை" என ஆங்கிலேயனால் அடிமையாக்கபட்ட முக்குலத்து சமூகம் கூட விளையாட்டு, கல்வி, தொழில் என மெல்ல மேலெழுந்தது
இன்று காவல்துறை நீதிதுறை உள்ளிட்ட பல துறைகளில் மறவர்கள் ஆதிக்கம் இருப்பதை மறுக்க முடியாது, இவ்வளவுக்கும் குற்றபரம்பரை என ஒடுக்கபட்ட சமூகம் அது
துருக்க படையெடுப்பில் பல இன்னல்களை சந்தித்து ஒடுக்கபட்ட இனமான நாடார் இனம் இன்று உழைப்பால் வியார சமூகமாக உயர்ந்து நிற்கின்றது, தமிழக பொருளாதாரம் அவர்களிடம் இருக்கின்றது
ஆக ஆழ்ந்து கவனியுங்கள்
இதில் தலித்மக்களின் சாதனை என்ன?
இந்த 2000 வருடம் அடக்கினான், ஒடுக்கபட்டோம், தாழ்த்தபட்டோம் என்பதல்ல விஷயம், 1930களில் இருந்து அவர்களுக்கு வாய்ப்பு குவிய தொடங்கியது
சுதந்திர இந்தியா அவர்களுக்கான விடியலை இட ஒதுக்கீடு, சட்ட ரீதியான பாதுகாப்பு என வழிவிட்டது
ஆனால் எவ்வளவு தலித் தொழிலதிபர்கள் உருவானார்கள், எவ்வளவு பேர் பெரும் பதவிக்கு வந்தார்கள், எவ்வளவு பேர் தொழில் சாம்ராஜ்யம் இல்லை வேறு வகையில் உருவானார்கள்?
ஒருவருமில்லை
படிப்பு இல்லை என்பது விஷயமல்ல, சென்னையில் உழைத்து கொடிகட்டிய நாடார்களில் பலர் 5ம் வகுப்பு தாண்டாதவர்களே
ஆக கல்வியும் இன்னும் கடுமையான உழைப்புமே ஒரு சமூகத்தை உணர்த்தும் மாறாக அடங்கமறு, வெட்டு, குத்து, கொல் என்பதெல்லாம் ஒரு காலமும் நல்ல முடிவினை தராது
இது ஒரு சில லோக்கல் தாதாக்களை உருவாக்குமே அன்றி சமூகத்துக்கான ஒரு மாற்றத்தையும் கொடுக்க்காது
ரஞ்சித் கோஷ்டி ஒரு மாதிரியான விஷ விதைகளை தமிழகத்தில் விதைக்கின்றது
சுதந்திர இந்தியா எல்லோருக்கும் சமவாய்ப்பு என்று அல்ல, அவர்களுக்கு மிகபெரிய வாய்ப்பினை கொடுக்கும் அளவில்தான் வடிவமைக்கப் பட்டிருக்க்கின்றது
அதில் படித்தோ உழைத்தோ முன்னேறாமல் கற்பனை கதைபேசியே சம்பாதிப்போம் அதற்கு ஒரு சமூகத்தினை வெறியேற்றி புரட்சி செய்வோம் என்பதெல்லாம் சரியல்ல.இதெல்லாம் சமூகம் பற்றி அதன் அமைதி வளர்ச்சி பற்றி கவலைபடாத ஒரு சில பக்குவற்ற தற்குறிகளின் சுயநலம் அன்றி வேறல்ல
கமலஹாசனும் தேவர்மகன் என்றொரு படம் எடுத்தார், அதன் முடிவில் வன்முறை தீர்வாகாது கல்வியும் உழைப்புமே ஒரு சமூகத்தை மேம்படுத்தும் என சொல்லியிருந்தார்
எங்கே "பொடியன்குளம்" என பெயர் வைத்த கோஷ்டி "கீழதூவியூர்" என ஒரு ஊருக்கு பெயர் வைத்து படம் எடுத்துவிட முடியுமா?
எடுத்துவிட்டு கமுதி ராமநாதபுரம் பக்கம் அமைதி நிறுத்திவிட முடியுமா?
இந்த சென்சார் போர்டும் அது சார்ந்த அமைப்புகளும் சாதிய வன்முறையினை தூண்டும் ரஞ்சித்தர் கோஷ்டிகளுக்கு சில கட்டுபாடுகளை விதிக்காவிட்டால்
அதாவது படிக்காதே உழைக்காதே மாறாக அருவாள் தூக்கி அந்த சாதியினை வெட்டி "புரட்சி செய்" என்றெல்லாம் வன்மங்களை விதைப்பதை தடுக்கா விட்டால் பிறிதொரு நாளில் இவர்களால் தமிழக அமைதி மிகபெரிதாக பாதிக்கபடும் என்பது மட்டும் நிஜம்..
அரைகுறை சுயநல‌ போராளி மிக மிக ஆபத்தானவன், அவனால் மிகபெரிய சமூக அமைதி கெடும், அதற்கு முன் அரச அமைப்புகள் விழிப்பது நல்லது. ஆம், உழைப்பும் படிப்பும் நல்ல சிந்தனையுமே ஒரு சமூகத்தை உயர்த்தும் அதைத்தான் பல்வேறு சமூகங்களின் வளர்ச்சியினை கொடுக்கும்,

அது அன்றி எதுவும் வாரா
ஸ்டேன்லி ராஜன் சேர்த்தே சொல்லி இருக்கலாம்.

தலித் இலக்கியம், தலித் சினிமா, தலித் அரசியல் என்று தலித் மக்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து, தனித் தீவாக்கும் முயற்சிகள் நீண்டநாட்களாகவே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சரக்கு மிடுக்கு என்று பேசும் திருமாவளவன், ரஜினிகாந்தை வைத்துப் படம் பண்ணியதாலேயே பிரபலமான பா. ரஞ்சித், அவரை அடியொற்றி வந்த மாரி செல்வராஜ் என்று விபரீதமான சிந்தனைகளை விதைக்கும் நபர்கள் இப்போதுதான் முன்னணிக்கு வந்து கொண்டிருப்பதைக் கவலையோடு கவனிக்க வேண்டி இருப்பதை ஸ்டேன்லி ராஜன் பகிர்வு சுட்டிக் காட்டுகிறது.

மாற்றுக்கருத்தையும் கவனத்தில் கொள்வதற்காக சிங்கப்பூர் பதிவர் நண்பர் கோவி கண்ணன்  . 
இது பட விமரிசனம் அல்ல என்று சொல்லியே ஆரம்பித்திருக்கும் கர்ணன் படத்தின் மீதான பார்வை இங்கே  

மீண்டும் சந்திப்போம்.

Friday, February 19, 2021

#ராயல்அக்க்ப்போர் ஒரு "கோமகனின் காதல்" பிரிட்டனைப் பாடாய்ப்படுத்துகிறதாம்!

கோமகன், காதல் என்றாலே நிறைய வில்லங்கம் நிறைய  ஊர்வம்பு, அக்கப்போர்  என்ற கலவையாக இருப்பது பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் மட்டும் தான்! உலகில் வேறு பல ராஜகுடும்பங்கள் இருந்தாலும் இந்தக் குடும்பத்தைப் போல, அந்தரங்க விஷயங்கள் ஊடகங்களில் அலசிக் காயப்போட்டது மாதிரி வேறெங்கும் இருந்தது இல்லை! அரசனோ சம்சாரியோ இருவருமே ஆசாபாசங்கள் நிறைந்த மனிதர்கள் மட்டும் தான்! புனிதர்கள் அல்ல! அவர்களுடைய அந்தரங்கத்தைப்   பொதுவெளியில் கதைப்பது ஒருவகை ஊர்வம்பு மட்டும் தான்! washing the dirty linen in the public என்ற வழக்குச் சொல்லை ஆரம்பித்து வைத்ததே இங்கிலாந்தின் Tudor வம்சத்து அரசர்கள் காலத்தில் இருந்து தான் என்பது பிரிட்டிஷ் வரலாற்றின் கேவலமான அம்சம்! எதனால் தெரியுமா? அரசனும் அரசியும் உறவு கொள்வதற்கு முன்னால் பாதிரிகள் கூடி படுக்கையறையில் ஜெபம் செய்வதும், மறுநாள் காலையில் படுக்கையில் உறவுகொண்டதற்கான சுவடுகள் இருந்ததா என்று பரிசோதனை செய்வதில் இருந்து உண்டான வழக்கு அது. இப்போது பிரிட்டனை ஆள்வது Windsors வம்சம் முந்தைய அரசபரம்பரைகளை மிஞ்சிய ராயல் அக்கப்போர்களாக, பிரிட்டிஷ் ஊடகங்களில் மட்டுமல்லாமல் உலக ஊடகங்களாலும் கதைக்கப்படுவதாக இன்றைக்கு ஆகியிருக்கிறது. 


பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் இரண்டாவது பேரன் ஒரு அமெரிக்க டிவி நடிகை மேகன் மார்க்கிலை காதல் திருமணம் செய்துகொண்ட நாளிலிருந்தே பிரிட்டிஷ் ஊடகங்கள் கொஞ்சம் பொறாமை, வெறுப்பு கலந்த செய்திகளை பிரசுரிக்க ஆரம்பித்துவிட்டன. இயல்பாகவே பிரிட்டிஷ் மீடியாவுக்கு அமெரிக்கர்கள் என்றாலே கொஞ்சம் இளப்பம்! மட்டந்தட்டுவதும் கூட  வாடிக்கைதான்! அதுவும் போக மூத்த இளவரசர் வில்லியம், இளையவர் ஹாரி இருவருக்கும் இடையில், ஒரு பனிப்போர், ஹாரியின் திருமணத்துக்குப் பிறகு ஆரம்பித்ததாக  ஊடகங்களில் செய்திகள், மறுப்பு என மாறி மாறி வந்துகொண்டே இருந்ததில், கடந்த வருடம் ஹாரி மேகன் தம்பதியினர் அரசகுடும்பத்தின் சீனியர் உறுப்பினர்களாகச் செயல்படுவதில் இருந்து வெளியேற இருப்பதாக செய்தி ஒன்று கசியவிடப்பட்டது. பாட்டி எலிசபெத் ஒரு சமரச முயற்சியாக இளைய பேரனும் அவர் மனைவியும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய ஒருவருட காலம் அவகாசம் கொடுத்ததில், ஹாரியும் மேகன் மார்க்கிலும் தங்கள் மகன் ஆர்ச்சியுடன் முதலில் கனடாவிலும், அது சரிப்பட்டு வராததால் அமெரிக்காவிலும் குடியேறினார்கள். அரச குடும்பத்தை சார்ந்திராமல், Netflix முதலான ஊடகங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு மில்லியன் கணக்கான் டாலர்களை சம்பாதித்து காலை வலுவாக ஊன்றிக்கொண்டும் அமெரிக்காவிலேயே செட்டிலாகி விடத் தீர்மானித்து விட்டமாதிரியே செய்திகள். 



#Megxit என்று பிரிட்டிஷ் ஊடகங்களால் ஊதிப்பெரிது படுத்தப்பட்ட இந்த விவகாரம் கடந்த ஒருவருட காலமாகவே புகைந்துகொண்டிருந்ததில் இளவரசர் ஹாரி தம்பதியினர், தாங்கள் செயல்படும் ராஜ குடும்பத்தினராகத் தொடரப்போவதில்லை என்று தெளிவாகத் தங்களது முடிவை பிரிட்டிஷ் ராணிக்குத் தெரியப்படுத்தியிருப்பது இன்றைக்கு ராயல் அக்கப்  போராக ஊடகங்களில் பரபரப்பாகியிருக்கிறது.
அவர்கள் இனிமேல் அரசகுடும்பத்தினருக்கு அளிக்கப் படும் கௌரவ ராணுவ பதவி அடைமொழிகளையோ, மாட்சிமை தாங்கிய என்ற முன்விகுதியையோ பயன் படுத்த முடியாது என்பதை மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
     
பிரச்சினை இப்போது வேறுவிதமாகத் திரும்பவும் ஆரம்பித்திருக்கிறது என்பதுதான் உச்சகட்ட தமாஷ்!
எலிசபெத்துக்கு அடுத்து அரசராகப் பதவியேற்க மகன் சார்லஸ் காத்திருக்கிறார். அவருக்குப்பின் அவரது மூத்த மகன் வில்லியம் இவர்களெல்லாம் பதவிக்கு வந்து என்ன பெரிதாகக் கிழித்துவிடப்போகிறார்கள்? முடியாட்சி  எலிசபெத்துடனேயே முடிந்து போகட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவரே இனி இருக்கவேண்டும் என்கிற குரல்கள் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாக உரத்து எழ ஆரம்பித்திருக்கின்றன.

இரண்டாம் உலகப்போர் முடிவிலேயே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமித்துவிட்டது பிரிட்டிஷ் அரச குடும்பம் அதற்குப்பிறகும் கூட எழுபத்தைந்து ஆண்டுகள் தாக்குப்பிடித்து விட்டது. காலாவதியாகிப் போகிற நாளும் நெருங்கிக்கொண்டிருக்கிறது போல! 

#ஊர்வம்பு ஒரு பிரிட்டிஷ் "கோமகனின் காதல்" ஒரு புத்தகம்!

 

Thursday, December 17, 2020

ச்சும்மா ஜாலிக்கு! #முகநூல்சுவாரசியங்கள் பார்த்து ரொம்ப நாளாச்சு இல்ல?!!

முகநூல் வம்பர்களால் மட்டுமே ஆனதல்ல கொஞ்சம் உருப்படியாக, விஷயம் தெரிந்து எழுதுகிற சிலரும் இருக்கிறார்கள் என்பதற்காக கொஞ்சம் சாம்பிள்கள்!  #முகநூல்சுவாரசியங்கள்  

இது கார்ட்டூனிஸ்ட் மஞ்சுள் முகநூல் பகிர்வில் இருந்து எடுத்ததுதான்! இங்கே தமிழக அரசியல் கோமாளிகளைத் தாண்டியும் என்னைப் பரவசப் படுத்துவது ஆம் ஆத்மி கட்சியின் கேசரிவாலு தான்!

நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்டு மண்ணைக்கவ்விய AAP வஸ்தாது கேசரிவாலு வருகிற 2022 உத்தரப்பிரதேச சட்டசபைத்தேர்தலில் போட்டியிடப்போகிறாராம்!   

எப்போதும் கொஞ்சம் கேலியும் கிண்டலுமாகவே எழுதிவரும் நண்பர்/பதிவர்  சேட்டைக்காரன் மனம் நொந்துபோய் முகநூலில் சாட்டையைச் சுழற்றி இருக்கிறார் 

எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சி என்பதுபோன்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கிறவர்களும், அவர்களின் பாசாங்கை நம்பி விசிலடிக்கிறவர்களும், ஆட்சி என்பதன் சாராம்சம் அறியாத அசடுகள் என்பது மட்டும் சத்தியமான உண்மை.
36
1 கருத்து
2 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

என்ன பொய் சொன்னாலும் அதை ஜனங்கள் அப்படியே நம்பிவிடுவார்கள் என்று யாரோ எழுதிக்கொடுக்கும் வசனத்தைப் பன்ச் டயலாக் ஆகப் பேசிப் பிரபலமான ஒரு நடிகன் சிலகாலத்துக்கு முன்னால் எம்ஜியார் கொடுத்த நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும் என்று உளறியது  நண்பர்களுக்கு மறந்தே போயிருக்கும்! அதே மாதிரி எம்ஜியார் மடியில் வளர்ந்தவன் நான் என்று இன்னொரு கோமாளி சிலநாட்களுக்கு முன்னால் உளறியதாவது ஞாபகம் வருகிறதா? நண்பர் சாட்டையை எடுத்தது ஏனென்று இப்போது விளங்கியிருக்குமே! 


நான் LPG காஸ் சிலிண்டர் (indane ) ரசீதுகளை ஜனவரி 2020 முதல் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் ! அதை எடுத்து ஆராய்ந்தபோது காஸ் ஆதார விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ 568/ மாறாமல் உள்ளது ! காஸ் விலை மாற்றம் தினசரி ஏற்ற தாழ்வு இதெல்லாம் அதெல்லாம் இந்த ரூ 568 ஐ தாண்டினால் அதை மிகுதி ஏற்றத்தை நம் வங்கி கணக்கில் வரவு வைத்து விடுகின்றன காஸ் கம்பெனிகள் ! அதனால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை ! நாம் முழு பணத்தை செலுத்தி காஸ் வாங்கினாலும் இரண்டு நாட்களில் அந்த கூடுதல் விலையை அதாவது ரூ 568/ தாண்டி நம் வங்கியில் அந்த பஉடனடியாகச் ம் வந்து விடுகிறது ! இது தெரியாமலோ அல்லது மக்கள் முட்டாள்கள் என்று நினைத்தோ ஸ்டாலின் போன்றவர்கள் இதில் அரசியல் செய்கிறார்கள் ! மக்கள் விழிப்பாக இருக்கட்டும் !
74
12 கருத்துக்கள்

இது ஹோம் டிபார்ட்மென்ட் சமாசாரம் என்பதால் என்னால் உடனடியாகச் சரிபார்க்க முடியவில்லை! யாராவது  வந்து சரிபார்த்துச் சொன்னால் நல்லது! 

ஏண்டா இப்டி பண்றீங்க....!
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’World's female population 3.52 Billion Female on Facebook 5.77 Billion f/NoOneKindlyTreats But How?’ எனச்சொல்லும் உரை
16
9 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்


அக்கப்போர்களுக்கும் ஆபாசப் பின்னூட்டங்களுக்கும் பெயர்போன முகநூலில் இன்னமும் கூட சுவாரசியமான பல விஷயங்கள் பகிர்வுகள் கிடைக்கின்றன என்பது ஆச்சரியமான விஷயம் தான்! #மஞ்சுள்டூன்ஸ் இலிருந்து இன்றைய அரசியல் நிலவரத்தைச் சொல்கிற இன்னொரு கார்ட்டூனுடன் பதிவை நிறைவு செய்து விடலாம்!


வீசப்படும் கற்களையில்லை கொண்டே பிஜேபி மேற்கு  வங்கத்தில் கோட்டை கட்டுகிறது என்பதில் முழு 
உண்மையில்லை! மம்தா ஆத்திரத்தில் தன்னுடைய கோட்டைச் சுவர்களைப் பெயர்த்தே வீசுவதில் பிஜேபியின் கோட்டை மிக வேகமாக கட்டப்பட்டு வருகிறது என்றல்லவா இருக்க வேண்டும்!

மீண்டும் சந்திப்போம்.  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)