பார்த்தது, கேட்டது, படித்தது! எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக!
Thursday, May 21, 2020
ச்சும்மா ஜாலிக்கு! விண்ணைத்தாண்டி வருவாயா? விடலைத்தனமான காதல்!
Wednesday, April 8, 2020
கொஞ்சம் சீரியசாக! ஒரு பழைய படத்துக்கு புது விமரிசனம்! ஹே ராம்!
கமல் தன்னை காந்தியின் சீடனாகச் சொல்லிக்கொள்வதுபோன்ற அபத்தம், அபாயம் வேறெதுவும் இல்லை. அவர் உண்மையில் முஹம்மது அலி ஜின்னாவின் சீடர்.ஹேராம் திரைப்படத்தைத் தனது அரசியல் ஞானத்தின் உரைகல்லாகவும் அவரும் அவருடைய ரசிகக் கண்மணிகளும் சொல்லிக் கொள்வது வழக்கம்.
அந்தப் படம் உண்மையில் காந்தியிஸத்தை அல்ல; ஜின்னாயிஸத்தையே உயர்த்திப் பிடிக்கிறது.
அஹிம்சையே உயர்ந்த தர்மம். அதே நேரம் தர்மத்தை நிலை நாட்ட மேற்கொள்ளப்படும் ஹிம்சை அதைவிட உயர்ந்தது.
இது அதர்மம் தலை தூக்கும் போது தர்மத்தை நிலை நாட்ட வன்முறையைக் கையில் எடுத்த தெய்வத்தின் குரல். காந்தியின் குரல் அல்ல.
காந்தி எந்நிலையிலும் இந்திய அளவில் ஆயுதத்தை ஏந்தச் சொல்லவில்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியக் குழந்தையை இஸ்லாமியக் குழந்தையாகவே வளர்த்துவா என்று தன் குழந்தையைப் பறிகொடுத்த இந்து தந்தைக்குச் சொன்னவர்.
ஹே ராம் படத்தில் தன் மனைவியை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொன்றதால் கோபம் கொள்ளும் சாகேத ராம், தான் மட்டுமல்ல; ஒட்டு மொத்த இந்து சமூகமே இப்படி பாதிக்கப்பட்டிருப்பது கண்டு குமுறுகிறான். காந்தியின் அஹிம்சையே இதற்குக் காரணம் என்று காந்தியைக் கொல்லப் புறப்படுகிறான்.
அந்த இடத்தில் தற்செயலாகத் தன் இஸ்லாமிய நண்பனைப் பார்க்கிறான். பல இஸ்லாமிய அப்பாவிகள் இந்து அடிப்ப்டைவாதிகளால் தாக்கப்படவிருப்பதையும் பார்க்கிறான். அவர்களைக் காப்பாற்ற ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறான்.
இது காந்தியத்துக்கு முற்றிலும் எதிரானது.
காந்தி எந்த நிலையிலும் யாரையும் ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை.
ஜாதி விஷயத்தில் மேல் ஜாதியினரே தமது தவறுகளுக்கு பிராயச் சித்தம் செய்யவேண்டும் என்று சொன்னார்.
மத விஷயத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் வன்முறையைக் கையில் எடுத்தால் பேரழிவு ஏற்படும் என்பதால் பொறுத்துக்கொண்டு போகச் சொன்னார். ஆனால், யாரைக் காப்பாற்றவும் ஆயுதத்தை அவர் பரிந்துரைக்கவே இல்லை. ஆயுதத்தை ஏந்தச் சொன்னது ஜின்னா.
சாகேத ராம் அதைத்தான் செய்கிறான். ஆனால், அதை காந்திய சிந்தனையின்படி வந்தடைந்ததாகவும் சொல்கிறான். முழு மடத்தனம்.
பத்து அப்பாவி இஸ்லாமியர்களைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்துவது சரி என்றால் 100 இந்துக்களைக் காப்பாற்ற அதே ஆயுதத்தை ஏந்துவதும் சரியாகத்தானே ஆகும். அப்படியானால், சாகேத ராம் கையில் இருக்கும் ஆயுதம் யாரைப் பார்த்து நீண்டிருக்கவேண்டும்.
அப்பாவிகளைக் கொல்ல வந்த அடிப்படைவாதிகளிடம் காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். என்னை முதலில் கொல் என்று நிராயுதபாணியாக முன்னால் வந்து நின்றிருப்பார். துப்பாக்கியை எடுத்துச் சுட்டிருக்கமாட்டார்.
காந்தியின் பெயரைப் பயன்படுத்தி கமல்ஹாசன் செய்தது அப்பட்டமான அசட்டுத்தனமான அபாயகரமான தீவிரவாத ஆதரவு நிலைப்பாடுதான்.
ஒருவகையில் அப்பாவிகளைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்துவது நிச்சயம் சரிதான். காந்தியம் தோற்கும் இடம் அது. மேலும் அந்த நியாயம் இஸ்லாமிய அப்பாவிகளைக் காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தக்கூடாது. ஆனால் ஹேராமில் அதைத்தான் செய்திருக்கிறார் கமல். அப்படியாக அவர் ஜின்னாவின் சீடராகவே அன்றும் இருந்தார். இன்றும் இருக்கிறார்.
அந்தத் திரைப்படத்தைப் பற்றிப் பேசுவதென்றால், முதல் மனைவி இறந்த ஒரு வருடத்துக்குள்ளாகவே வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது (இது ரசிகர்களுக்காகச் செய்த கிளுகிளுப்பு), இயக்கத்துக்காக திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தவர்கள் எத்தனையோ பேர் இருக்க இரண்டாந்தாரம் கட்டிய சாகேத ராமையே அந்த இயக்கம் காந்தியை கொல்வது போன்ற மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்தது (அதற்கு சப்பைக் காரணம் வேறு சொல்லியிருப்பார்) என ஏகப்பட்ட குறைகள் இருக்கும்.
சுருக்கமாகச் சொல்வதானால், தான் எந்த அரசியலைப் பின்பற்றுகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லக்கூட வக்கில்லாத நபும்சகமே கமலிடம் வெளிப்படுகிறது.
திரு B R மகாதேவன் சொல்வது எனக்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது என்பதால் இங்கே அவர் அனுமதியில்லாமலேயே பகிர்ந்திருக்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
Thursday, April 2, 2020
ச்சும்மா ஜாலிக்கு! ஒரு திரைப்பட விமரிசனம் : HIT (the first case) தெலுகு
Saturday, March 28, 2020
வைரஸ் ! ஒரு சிச்சுவேஷன் திரைப்பட விமரிசனம்!
Tuesday, January 21, 2020
ச்சும்மா ஜாலிக்கு! ஒரு திரைப்பட விமரிசனம்! V1 மர்டர் கேஸ்
Thursday, January 16, 2020
நான்கு படங்களுக்கு நாலைந்து வரிகளுக்கு மிகாமல் விமரிசனம்!
Wednesday, November 13, 2019
கொஞ்சம் சினிமா! Official Secrets! திரை விமரிசனம்.
Sunday, October 6, 2019
அசுரன் பட விமரிசனம்! வெக்கை எழுதிய பூமணி நேர்காணல்!
அசுரனில் இந்தத் துல்லியம் இல்லை. Gray shade மனிதர்கள் இல்லை அல்லது அப்படி நினைத்துச் செய்த கதாபாத்திரங்கள் முழுமையாக ஆகி வரவில்லை. மறுபுறம் இரக்கமும் கருணையும் ஆர்கானிக்காக அமைந்திருக்கிறது. இந்தச் சமநிலை எதேச்சையானதாகக் கூட இருக்கலாம்.
மூலக்கதையை எழுதிய எழுத்தாளர் பூமணி இந்தப் படம் குறித்து என்ன நினைக்கிறார் என்று இந்து தமிழ்திசையில் ஒரு நேர்காணல். அவருக்கும், அவருடைய பார்வையில் படம் எடுக்கப்பட்டிருந்தால் உலகத்தரத்துக்குப் போயிருக்கும் என்றுதான் படுகிறது.
Friday, October 4, 2019
ச்சும்மா ஜாலிக்கு! #மலைக்கள்ளன் (1954) பட விமரிசனம்!
மு.கருணாநிதி அடுத்தவர் கதைக்கு வசனம் எழுதியே வசன கர்த்தாவாக ஆனதும், அப்படியே அரசியல்வாதியாக மாறியதும், இந்தப்பதிவுக்கு அவசியமில்லாதவை.
Saturday, September 28, 2019
ச்சும்மா ஜாலிக்கு! கல்கியின் கள்வனின் காதலி! பட விமரிசனம்!
Saturday, September 21, 2019
ச்சும்மா ஜாலிக்கு! ரோஷக்காரி! பட விமரிசனம்!
ரோஷக்காரி! 1974 இல் வெளியான தமிழ்த் திரைக் காவியம்! நவரசத் திலகம் ஆக முத்துராமனும் கலைஞர் திலகம் ஆக ரவிச்சந்திரனும் கே ஆர் விஜயாவும் சேர்ந்து நடித்த படம்! கதை பழம்பெரும் எழுத்தாளர் பிலஹரி என்பதால் பார்க்கலாமே என்று மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு பார்த்தபடம். நாற்பத்தைந்து வருடத்துக்கு முன்னால் வந்தபடம் இப்போதும் கூட பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது!
ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கையில் சினிமாவில்,கதைகளில் சுவாரசியமேது? கல்லூரியிலேயே காதலர்களாக கதாநாயகனும் கதாநாயகியும்! படிப்பு முடிந்து அவரவர் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.கதாநாயகியின் தந்தை மகள்மீது பாசமுள்ள தந்தையாக, அதே நேரம் நல்ல அந்தஸ்துடன் கூடிய மாப்பிள்ளையாக வரவேண்டுமென்கிற ஆசையுடன்!
இப்போது பார்த்துக் கொண்டிருப்பது
#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!
செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்
-
இன்று எதையோ தேடப்போக, ஜெயகாந்தன் எழுதிய உன்னைப் போnல் ஒருவன் நாவல் கைக்கு கிடைத்தது. இந்தப்புத்தகத்தை வாசித்து முப்பது வருடங்களுக்கும் மேலா...
-
யூட்யூப் தளத்தில் செய்திகளைத் தேடிக்கொண்டிருந்த தருணத்தில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. அரசியல் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவனை, கொஞ்சம் இலக்...
-
என்ன மாதிரி எழுத்தைக் கொண்டாடுவீர்கள்? எதற்காக? இப்படி ஒரு கேள்விக்கான தேடலாக அந்த நேரத்தில் உந்துதலாக அமைந்த ராஜேஷ் குமார் பாராட்டு விழா ...
-
எண்டமூரி வீரேந்திரநாத் எழுத்தைப் பற்றிப் புதிதாக நான் சொல்லக் கூடியது ஒன்றும் இல்லை! ஏற்கெனெவே, சிலபதிவுகளில் எழுத்து என்ற தூரிகை கொண்டு...
-
நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வது, படித்ததில் பெற்ற அனுபவங்களை, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது என்ற அடிப்படையில் இந்தப் பக்கங்களில் சில ப...
-
மஹாபாரதக் கதை மாந்தர்களில் சகுனி கொஞ்சமல்ல நிறையவே வித்தியாசமானவன் என்பது தெரிந்ததுதான். உண்மையைச் சொல்லப்போனால் பாரதக்கதையில் வரும் பாத்திர...
-
தங்கமலை ரகசியம் என்று ஒரு பழைய தமிழ்ப் படம். அதில் TR ராமச்சந்திரன் ராஜா! காற்றுக்குக் கூடக் கேட்காத ரகசியங்கள் எல்லாம் என் காதுக்குக் கே...
-
கல்கியில் 1965 வாக்கில் தொடர்கதையாக ஜீவகீதம் வெளிவந்து கொண்டிருந்தது. இளம் வாசகனாக, என்னை அந்தநாட்களிலேயே மிகவும் ஈர்த்தவர் எழுத்தாளர் ஜெக...
-
வைரமுத்துவுக்கு கேரளத்தின் ONV இலக்கியவிருது என்று அறிவித்த நேரம் மிகவும் பொல்லாத நேரமாகத்தான் இருக்க வேண்டும். ஏற்கெனெவே இடதுமுன்னணி அரசில...