Sunday, April 12, 2020

கூகிள்! அரசியல்! படித்ததில் பிடித்தது! #TSபாலையா

நடுவில் இரண்டுமூன்று நாட்களாக வீடியோக்களை பதிவில் இணைக்க முடியாமல் இருந்தது இன்றைக்குச் சரியாகி இருக்கிற மாதிரித் தெரிகிறது. ஆனால் கூகிளை முழுக்க முழுக்க நம்பியிருப்பது படுமுட்டாள்தனம் என்பதைக் கடந்தகால அனுபவங்கள் கற்றுக் கொடுத்தும் கூட கண்மூடித்தனமாக Firefox இல் இருந்து Chrome ப்ரவுசருக்கு மாறி, அதையும் personalised browser ஆகப்பயன்படுத்திவந்தது பெரும் தவறோ என்று யோசிக்க வைத்திருக்கிறது.


பானாசீனா செட்டியாருக்குத் தானும் பரபரப்புச் செய்திகளில் இடம்பெற்றே ஆகவேண்டும் என்ற தவிப்பிருக்காதா என்ன? இந்த நாறவாய் மட்டும் இல்லாமலிருந்தால் சீனாதானாவைத் தெரு நாயோ, காக்கையோ தூக்கிக் கொண்டு போயிருக்குமோ? இந்த 32 நிமிட நேர்காணலைப் பார்த்தபோது லைம்லைட்டில் இருந்தே ஆகவேண்டுமென்கிற தவிப்பு இருக்கிற மாதிரியே தமிழக சேனல்களுக்கும் இந்தமாதிரி குபீர் பொருளாதார மேதை தேவைப்படுகிறார் என்பது வெளிப்பட்டது. நெருக்கடியான நேரத்திலும் கூடத் தமிழக அரசியல்வாதிகள் எவரும் தங்களுடைய குறுகிய அரசியல் குட்டையில் இருந்து வெளியே வரத் தயாராக இல்லை என்பதும் தெரிந்த விஷயம்தான்.  அரசியல் குப்பைகள்!

முகநூலில் சில பகிர்வுகள் உண்மையிலேயே வித்தியாசமானதாகவும், வாசித்ததில் மிகவும் பிடித்தமானதாகவும் இருப்பதை மறுக்க முடியாது! அந்த வகையில் நடிகர் T S பாலையா பற்றி:


Balaguru Kalyanasundaram  நேற்று, பிற்பகல் 4:38

சில ஆளுமைகளைப்பற்றி நம்மிடமிருக்கும் தரவுகளை வைத்து ஒரு பிம்பத்தை உருவாக்கிவைத்திருப்போம் . அது பலநேரம் நிதர்சனத்தில் உண்மையாய் இருப்பதில்லை. கிக்கிரி பிங்கிரி என கோமாளித்தனம் செய்யும் நகைச்சுவை நடிகர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த சந்திரபாபு , காளி N .ரத்தினம் போன்றவர்களின் உண்மையான ஆளுமை பற்றி தெரிந்த போது விக்கித்து நிற்க வேண்டியிருந்தது . அந்த வரிசையில் இன்று வாசித்த `'நூற்றாண்டு கண்ட T.S. பாலையா `' புத்தகம் அவர் பற்றிய நிறைவானதொரு பிம்பத்தை கொடுத்து பிரமிக்க வைத்தது .

1.பாலையா ஒரு நல்ல குணச்சித்திர & நகைச்சுவை நடிகர் , 2. அவர் சிவாஜி எம்ஜிர் காலத்திய நடிகர் . என்று இதுநாள் வரை நினைத்திருந்தது எவ்வளவு தவறு என்று புரியவைத்தது புத்தகம் . 1936 ல் திரைத்துறையில் நுழைந்தவர் 1950 ல் உச்சம் தோட்டிருக்கிறார் . அந்த காலகட்டத்தில் தொடர்ந்து பாகவதர் , பியூ சின்னப்பா விற்கு எதிராக வில்லன் என்றால் பாலையாதான் என்று நின்று களமடியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் எல்லிஸ் .டங்கன் சதிலீலாவதி ,அம்பிகாபதி , மீரா என தன் படங்களில் பாலையாவை தொடர்ந்து நடிக்க வைத்திருக்கிறார். இவரது திறமையை இனங்கண்டு கொண்டதையும் தன் நடிப்புக்கு உயிர் தண்ணீர் ஊற்றியதையும் நன்றியுடன் நினைவு கூருகிறார் பாலையா .

`பி எஸ் வீரப்பா & எம் `ஆர்`ராதா போன்றோர்களுக்கு முன்னோடி வில்லனாக துலங்கியவர் .செறிவான கதாபாத்திரங்கள் என்றால் கூப்பிடுங்கள் பாலையாவை என்ற நிலையில் இருந்திருக்கிறார் . உதாரணமாக அண்ணாவின் வேலைக்காரி நாடகம் படமாக்க பேச்சுவார்த்தை நடந்தபோது , இயக்குனரிடம் அண்ணா இரண்டு கேள்விகள் கேட்டிருக்கிறார் அதில் ஒன்று யாருக்கு முக்கிய எதிர்மறை கதாபாத்திரத்தை கொடுக்கப்போகிறீர்கள் என்பது ! "பாலையா" என்றதும் நிறைவாய் ஒப்புக்கொண்டுள்ளார்.ஆரம்பகாலங்களில் பாலையாவின் பெயருக்கு பின்னேதான் எம்ஜிரின் பெயர் திரையில் தோன்றுமென்பதிலிருந்து அவரின் செல்வாக்கு நமக்கு புரிகிறது . இருவரும் ஒன்றாக "சதிலீலாவதி "யில் அறிமுகமானவர்கள் , எம்ஜியார் முக்கியநட்சத்திரமாக 20 ஆண்டுகள் ஆனது . பாலையாவுடன் இணைத்து நடிக்கையில் அவரே ரசிகர்களை ஆக்ரமிக்கிறார் என்று ஒரு கட்டத்தில் அவருடன் நடிப்பதையே தவித்திருக்கிறார் எம்ஜிஆர் .

பாலையாவின் நடிப்பில் அடிப்படையிலேயே நகைச்சுவை தொனி உண்டென்பதை ஆரம்பகாலங்களில் சில வில்லன் கதாபாத்திரங்களில் பளிச்சிட செய்தவர் ,ஒரு கட்டத்தில் கொடூர வில்லனிலிருந்து குணச்சித்திர நடிப்புக்கு நகர்ந்திருக்கிறார் அதற்கு தகுந்தாற்போல கதாபாத்திரங்கள் தொடர்ந்து அமைந்திருக்கிறது பிற்காலத்தில் AP நாகராஜன் ,ஸ்ரீதர், K .பாலசந்தர் போன்றோர் அவரின் மகோன்மதம் உணர்ந்து தங்கள் படைப்பில் பயன்படுத்தியுள்ளனர் .

காதலிக்க நேரமில்லையில் அந்த கதாபாத்திரத்திற்கு பாலையாதான் என்ற முடிவோடு பாலையாவை பார்க்க போகும் ஸ்ரீதரிடம் ரேஸ் ஆர்வமுள்ள பாலையா சனி ஞாயிறு படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்ற விஷயம் சொல்லப்படுகிறது . கதையை சொல்லி ஒப்புகொள்ளவைத்துவிட்டு பாலையாவிடம் கேட்டேவிடுகிறார் . ஆமாப்பா உண்மைதான் எனக்கு கிண்டில மனச வச்சிக்கிட்டு ஸ்டுடியோக்குள்ள நிக்கமுடியாதப்பா , என்னையும் ஏமாத்திகிட்டு எல்லாரையும் ஏமாத்திட்டு எதுக்கு . அதான் படப்பிடிப்புக்கு போறதில்லை என்கிறார் பாலையா .புரியுது இருந்தாலும் இந்த படத்துக்கு நீங்க சனி ஞாயிறும் படப்பிடிப்புக்கு வரணும். உங்க கதாபாத்திரம் படம் முழுதும் இருக்கு . கொஞ்சம் யோசிச்சவர் . சரி வரேன் என்றவர் சொன்னபடி காலத்தால் அழியாத அந்த கதாபாத்திரத்தை நடித்து கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆரம்ப அத்தியாயமாக விளங்கியவர் .தனது 58 வயதில் மரணமடைந்தார் .

மீண்டும் சந்திப்போம்  

4 comments:

  1. T S பாலையா பற்றிய விஷயங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  2. எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திரு TS பாலையா அவர்கள்...

    அவரைப் பற்றிய செய்திகள் மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. பாலையாவின் நடிப்பு எனக்கும் ரொம்பப்பிடிக்கும் துரை செல்வராஜூ சார்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)