இந்தியப் பிரதமராக இருந்த அரசியல்வாதிகளிலேயே இன்றைக்கும் மிகவும் குறைத்து மதிப்பிடப் படுகிறவர் பி வி நரசிம்ம ராவ் ஒருவர் மட்டும் தான் என்கிற கசப்பான உண்மையை அவர் பிறந்த நூற்றாண்டு தொடங்குகிற ஜூன் 28 இன்று, ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
புதிய தறுதலை தொலைக்காட்சிக்கு 17 மொழிகளில் பேச தெரிந்த முன்னாள் பி.வி.நரசிம்ம ராவ் என்று மட்டுமே தலைப்புக் கொடுக்கத் தெரிவதில் வியப்பு ஒன்றுமே இல்லை. முன்னாள் என்ற வார்த்தைக்கு அடுத்து பிரதமர் என்ற வார்த்தையைக் கூடச் சேர்க்க முடியாத அலட்சியத்தைப்போலவே தேச மக்களும் அவரைக் குறைவாக மதிப்பிட்டு அலட்சியப்படுத்தி வருகிறோமா?
நரசிம்ம ராவ் : இந்தியாவை மாற்றி அமைத்த சிற்பி என்ற தலைப்பிலேயே நூலின் மொத்தக் கருத்தையும் சொல்கிற மாதிரி வினய் சீதாபதியின் ஆங்கிலநூலைத் தமிழில் மொழி பெயர்த்த ஜெ . ராம்கியின் அறிமுக உரையோடு போன சனிக்கிழமை ஒரு நூல் மதிப்புரை விவாதம் நடந்தது என்ற தகவலை சற்றுத்தாமதமாகத் தான் தெரிந்து கொள்ள முடிந்தது . வலையேற்றியது Tamil EBookery யூட்யூப் தளத்தில் நேற்று வரை தேடி இன்றிரவு தான் கிடைத்தது.
மீண்டும் சந்திப்போம்.