Monday, January 25, 2021

ஊதிப் பெரிதாக்கப்படும் சசிகலா புராணம்!

குருமூர்த்தி துக்ளக் ஆண்டுவிழாவில் குறிப்பிட்டுப் பேசிய பிறகே V K சசிகலா இங்கே தமிழக ஊடகங்களில் மிகவும் பரபரப்பான விவாதப்பொருளாகியிருக்கிறார். நாளை மறுநாள் (27 ஜனவரி) சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா என்ன செய்யப்போகிறார் என்பதை ஆளுக்காள் மனம்போன போக்கில் என்னென்னவோ ஊகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிற விந்தைக்கு ஒரு 41 நிமிட சாம்பிள் வெட்டி ஊகங்களுக்குச் சிறகுகள் ஆயிரம் என்பதற்கு மேல் சொல்வதற்கொன்றுமில்லை.  


ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா சேனலில் அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தியுடன் நேற்று நடத்திய 47 நிமிட நேர்காணல், மற்ற ஊடக விவாதங்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்ததைக் கவனித்தேன்.

ரங்கராஜ் பாண்டே இந்த நேர்காணலில் கூர்மையான கேள்விகளை புகழேந்தியிடம் முன்வைக்கிறார். அவரும் எரிச்சலடையாமல் பொறுமையாக பதில் சொல்கிறார். அதுமட்டுமல்ல சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அதிமுகவில் பிளவு வருமா, அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவாரா என்ற கேள்விகள் நேரடியாகக் கேட்கப் படவில்லை என்றாலும், புகழேந்தி கொஞ்சமும் தயங்காமல் அதிமுகவின் இன்றைய நிலைபாட்டை சொல்கிறார். ஏதாவது சதி இருந்ததா. பாஜகவின் அழுத்தம் இருந்ததா என்று திரும்பத் திரும்ப  பாண்டே கேள்வியெழுப்பியதற்கும் பொறுமையாக  பதில் சொல்கிறார் புகழேந்தி! பொய்யான பதிலில்லை, ஆனால் உண்மையை உடைத்துச் சொல்லவில்லை. ஒரு திறமையான ஊடகக்காரரிடம் முரண்படாமல் சமாளித்த புகழேந்தியின் சாமர்த்தியத்தைக் கண்டு வியக்கிறேன். அதிமுகவின் தற்போதைய மனநிலை  என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் நேர்காணல். நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.  
  


2 comments:

  1. சசிகலா ஆஸ்பத்திரியில் அல்லவா இருக்கார்.
    முதல்ல தொற்றிலிருந்து வெளி வரட்டும். அப்புறம் சிறையிலிருந்து வரலாம்.
    பாண்டேயின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது சிரமமே.
    காணொளி பார்க்கிறேன். நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!

      சசிகலா மருத்துவமனையில் இப்போது இருந்தாலும்நாளை சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னை வரலாமென்று செய்தி. இப்போதிருக்கிற கேள்வி அதைப்பற்றியதே இல்லை.

      சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா என்ன அரசியல் செய்யப்போகிறார்? அதிமுகவில் இருக்கும் விசுவாசிகள் என்ன செய்யப்போகிறார்கள்? சசிகலாவின் வருகை அதிமுகவை பலவீனப்படுத்துமா இப்படி நிறைய எதிர்பார்ப்புக்கள், எதிர்பார்ப்பின் மீது பல்வேறு ஊகங்கள் என்று போய்க்கொண்டிருக்கின்றன.

      பதிவின் முதல்பாராவிலேயே ஒரு சாம்பிளாக ஒரு வீடியோவுக்கான இணைப்பு இருக்கிறது. ரங்கார்ஜ் பாண்டே சாமர்த்தியமான ஊடகக்காரர்தான்! அவருக்கு ஈடுகொடுக்கிற அதிக சமர்த்தியசாலியாக இந்த நேர்காணலில் புகழேந்தி இருக்கிறார். பாண்டே கேள்விகள் எதையும் நிராகரிக்கவில்லை, தடுமாறவில்லை, அதேநேரம் எதையும் ஒப்புக்கொள்ளவுமில்லை. அதிமுகவின் தற்போதைய தலைமை வடிவுக்கு மாறாக ஒன்றையும் சொல்லவில்லை. அவர் சொல்லாமல் விட்ட விஷயங்களில் இருந்து நிறைய ஊகங்கள், கேள்விகள் எழுகின்றன என்பதில் தான் சுவாரசியமே! சசிகலா முதலில் சென்னைக்கு வந்து சேரட்டும்! என்னென்ன நடக்கும், நடக்கிறது என்று பார்க்கலாம்.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)