Saturday, October 30, 2010

கவிதை! இது கவிதை!


ஒரு புத்துணர்ச்சிக்காக, கொஞ்சம் மாறுதலுக்காகவும் சில கவிதைகள்!

முதலில் சூஃபி கவிஞரான முகமது ஜலாலுதீன் ரூமியின் கவிதைகள் இரண்டு!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமேயானால், இந்த கவிதை வரிகளுக்குள் இருக்கும் ஆன்மீக அனுபவத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமாக இல்லை என்பதோடு, இதே விஷயத்தை நம்மூர் ஞானிகளுமே தங்கள் அனுபவத்தில் கண்டு சொல்லி
ருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடியும்! இறைவன், இறையனுபவம் என்பது ஒன்றே! மதங்கள், மதவாதிகள்  பிரித்துச் சொல்வது போல, அவர்கள் குறிப்பிடும் பாதையில் போனால் தான் தரிசனம் கிடைக்கும் என்பதெல்லாம் வெறும் புருடா என்பதையும் சேர்த்தே பார்க்க முடியும்! ரூமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா?

நீ!

உயிராய்ப்  பூமியில் தோன்றிய தருணமே
ஏறிச் செல்லவோர் ஏணியும் வந்தது!
ஏறிவருவாய் என!
மண்ணிலிருந்து தாவரமானாய்!
தாவர நிலையே மிருகமும் ஆனது.
அதன்பின் மனிதனுமானாய்.
அறிவும், அறிந்ததில் தெளிவும், நம்பிக்கையும்
கூடவே வந்தது உனக்காக.

மண்ணில் பிறந்த உடலைப்பார்!
எப்படி முழுமையாய் ஆனதென்று!
மரணம் குறித்தேன்  பயம் கொள்ள வேண்டும்?
மரணம்  உன்னைக் குறுக்கியதா?
உடல்நிலை கடந்தே போகும் போது
தேவதை  ஆவாய் ஐயமில்லை!
தேவர்கள் உலகுக்கு உயர்வதிலும் ஐயமில்லை

அங்கேயே தேங்கிவிடாதே! தேவர்களுக்கும் மூப்புண்டு
தேவநிலையைக் கடந்து மறுபடியும் விழிப்பின்
பெருங்கடல் நிலைக்குள் மூழ்கி மூழ்கிப் பரந்திடுவாய்
சிறு துளியாய் நீ! விரிந்து பரந்து நூறு கடல் ஆகிடுவாய்!
சிறு துளி மட்டுமே கடலென்று எண்ணிவிடாதே!
பெருங்கடல் கூட, சிறு துளியாய் ஆனதைப்பார்!

 
முகமது ஜலாலுதீன் ரூமி என்ற இந்த பெர்ஷிய  சூஃபி கவிஞருடைய கவிதைகளில், காதலையும் தொட்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்! ஆன்ம நேயம் வெளிப்படும் சூ ஃபி கவிதை வரிகள் அவை! வெறும் உடல்களின் மீதான இச்சை என்பதையும் தாண்டி, கொஞ்சம் பரவசமான நிலையில்!காதல் கவிதை மாதிரித் தோன்றினாலும் உயர்ந்த ஆன்மீகத் தேடலோடு கூடிய உயிரின் வேட்கையாக இந்தக் கவிதை வரிகளைப் பாருங்கள்!

காதல் என் காதோடு வந்து சொன்னது:

"வேடனாக இராதே! எதிர்க்கச் சக்தியில்லாதவனாக இரு!
எனக்குப் பிரியமானவனாக ஒரு முட்டாளாகவே இருந்துவிடு!
செந்தழல் இரவியாக வேண்டாமே! ஒரு புள்ளியே கூடப் போதும்.
எனது இல்லத்தில் அண்டியிருந்து  வீடற்றவனாக இரு
எரியும் விளக்காக வேண்டாம், விட்டில் பூச்சியாக இரு! போதும்!
இருந்தால்  வாழ்க்கையை அனுபவித்து சுவைக்க முடியும்
அடங்கிப் பணி செய்வதன் பலம் என்னவென்று அப்போது தெரியும்!"
ஆங்கில மூலம், மற்றும் விரிவாகப் படிப்பதற்கு இங்கே
மற்றும் இங்கே  

**********
இயற்கையிடமிருந்து வெகுதூரம்  விலகி வாழுகிற இயந்திரத் தனமான வாழ்க்கை, இயல்பான, இயற்கையான சில விஷயங்களைக் கூட ரசிக்கத் தெரியாமல், வாழுகிற போலித் தனமான அவலம் இவைகளை முன்னேற்றம் என்கிற பெயரில் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்! 

சின்னச் சின்ன சந்தோஷங்கள் கூட, இயல்பாக, இயற்கையோடு ஒட்டியிராமல், மிகவும் செயற்கைத் தனமாக ஆகிவிட்ட காலம் இது!
நாற்பது வருடங்களுக்கு முன்னால், ஆங்கிலப் பாடமாகப் படித்த கவிதை வரிகள், இன்றைக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும் வினோதத்தை நினைவு படுத்திக் கொண்டே, இங்கேயும் ஒரு மீள் பார்வையாக!  உள்ளிருந்து வெளிப்படும் ஏக்கமாக....!

வில்லியம் ஹென்றி டேவிஸ் என்ற இந்தக் கவிஞனுடைய இந்த வாரத்தைகளைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்!


What is this life if, full of care,

We have no time to stand and stare.

No time to stand beneath the boughs

And stare as long as sheep or cows.

No time to see, when woods we pass,

Where squirrels hide their nuts in grass.

No time to see, in broad daylight,

Streams full of stars, like skies at night.

No time to turn at Beauty's glance,

And watch her feet, how they can dance.

No time to wait till her mouth can

Enrich that smile her eyes began.

A poor life this if, full of care,

We have no time to stand and stare.

கிட்டத் தட்ட இதே உணர்வுகளைச் சொல்கிற மாதிரி வில்லியம் ஒர்ட்ஸ்ஒர்த் கவிதை வரிகளைக் கொஞ்சம் அனுபவித்துத் தான் பாருங்களேன்! தயாசுரபி என்ற பெயரில் யாகூ! 360 தளத்தில் எனக்கு அறிமுகமான மாதிரி இலக்கிய ரசனையும் விமரிசனத் திறமும் கொண்ட வாசகர்கள் எவரேனும் இங்கே இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள ரகசியமாய் ஒரு ஆசை இருக்கிறது!


The world is too much with us; late and soon,
    Getting and spending; we lay waste our powers:
    Little we see in Nature that is ours;

    
We have given our hearts away, a sordid boon!
    This Sea that bares her bosom to the moon;
    The winds that will be howling at all hours,
    And are up-gathered now like sleeping flowers;
    For this, for everything, we are out of tune;
    It moves us not. — Great God! I’d rather be
    A Pagan suckled in a creed outworn;
    So might I, standing on this pleasant lea,
    Have glimpses that would make me less forlorn;
    Have sight of Proteus rising from the sea;
    Or hear old Triton blow his wreathèd horn.

   The Sonnet by William Wordsworth, 
Miscellenous sonnets 33

கவிதைகளைப் படித்துவிட்டு, அவை தந்த அனுபவங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன்! கேட்போம்!


 

8 comments:

  1. தோசை என்கிற ரவிகுமார் கருணாநிதி!

    நாந்தேன் மொதல்ல, மீ தி பர்ஸ்ட் என்ற மாதிரியான பின்னூட்டங்கள்,அப்படிப் பின்னூட்டம் இடுகிறவர்களின் அரைவேக்காட்டுத் தன்மையை, பதிவைப் படிக்காமலேயே உள்ளேன் ஐயா ரகத்தில் ப்ராக்சி கொடுக்கும் வெட்டி அலம்பல்கள் என்பது நான்கு பதிவுகளை வைத்திருக்கும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. மிக அழகான - அருமையான பதிவுங்க. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல பதிவு,நன்றாக உள்ளது.

    ReplyDelete
  4. "இயற்கையிடமிருந்து வெகுதூரம் விலகி வாழுகிற இயந்திரத் தனமான வாழ்க்கை, இயல்பான, இயற்கையான சில விஷயங்களைக் கூட ரசிக்கத் தெரியாமல், வாழுகிற போலித் தனமான அவலம் இவைகளை முன்னேற்றம் என்கிற பெயரில் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்!"
    இன்றைய வாழ்க்கையின் யதார்த்தமான வரிகள்!
    வாழ்க்கையின் பொருளாதாரத் தேடல்கள் இயற்கை, ரசனைகள், இப்படி நெஞ்சுக்கு நெருங்கிய அழகானவை அனைத்தையும் தூரத்தில் தள்ளி விட்டன.

    வில்லியம் ஹென்றி டேவிஸ் எழுதிய கவிதையும் பிரமாதம்!

    இந்தக் கவிதை இளம் வயதில் வில்லிய‌ம் வேர்ட்ஸ்வெர்த் எழுதிய 'Daffodils'‍ ஐ விழுந்து விழுந்து படிததையும் ரசித்ததையும் நினைவுக்குக் கொன்டு வந்து விட்டது!
    கூடவே ஜான் கீட்ஸ் எழுதிய‌
    " A thing of beauty is a joy for ever:
    Its loveliness increases, it’ll never pass into nothingness வரிகளும் நினைவில் எழுகின்ற‌ன.
    இந்த வரிகளை நினைக்கும்போதெல்லாம் 'உண்மை, அன்பு, இயற்கை‍ இவை மூன்றின் அழகும் இப்படித்தான், என்றைக்குமே கூடிக்கொன்டிருக்குமே தவிர ஒரு போதும் குறையாது!' என்று இப்படியெல்லாம் இளம் வயதில் உண‌ர்வுகள் தோன்றும். உற‌ங்கிக்கிடந்த இள‌ம் வயது ரசனைகளை இந்தக் கவிதைகள் எழுப்பி விட்டன! தங்களுக்கு என் நன்றி!!

    ReplyDelete
  5. முதல் வருகைக்கு நன்றி திருமதி மனோ சாமிநாதன்!

    கவிதைகளை ஆழ்ந்து ரசித்திருக்கிறீர்கள்! ஒரு நல்ல கவிஞனுடைய அல்லது எழுத்தாளனுடைய வலிமையே, தான் உணர முடிகிற வாழ்க்கை அனுபவத்தை வார்த்தைகளில், படிப்பவரும் பெறச் செய்வதில் தான் இருக்கிறது! வாசகனுடைய வலிமையோ, வாசித்ததையும் தாண்டிப் போவதில், அதில் இருந்து முன்னேறிச் சிந்திப்பதில் தான் முழுமையடைகிறது.

    வில்லியம் ஹென்றி டேவிஸ், ஒர்ட்ஸ் ஒர்த்தைப் போலவோ, கீட்சைப் போலவோ, பரவலாக அறியப்படாதவர்! ஆனால் இந்த ஒரு கவிதையே, வாழ்க்கையின் யதார்த்தத்தை எந்த அளவுக்கு அனுபவித்துச் சொல்லியிருக்கிறார் என்பது, இதைப் பாடமாகப் படித்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட, மறந்துபோய் விடாத படிக்கு, இன்றைக்கும் பொருத்தமாக இருப்பதை வைத்தே சொல்லி விட முடியும்!

    அப்புறம் ரசனைக்கு இளமை, முதுமை என்று காலக் கணக்கு எதுவும் இல்லை!விருப்பு வெறுப்புக்கள் வேண்டுமானால், நேரத்துக்கொன்றாக மாறலாம்! சில அடிப்படை ரசனைகள் மாறுவதே இல்லை! உதாரணமாக, எனக்குப் புத்தகங்களை மிகவும் பிடிக்கிற ரசனை இன்றைக்கும் இளமையோடு தான் இருக்கிறது!

    ReplyDelete
  6. " சில அடிப்படை ரசனைகள் மாறுவதே இல்லை! உதாரணமாக, எனக்குப் புத்தகங்களை மிகவும் பிடிக்கிற ரசனை இன்றைக்கும் இளமையோடு தான் இருக்கிறது! "

    உண்மைதான்! சில அடிப்படை ரசனைகள் இறுதி வரை மாறுவதேயில்லை! நானும் அப்படித்தான். எங்கு சென்றாலும் கையில் ஒரு புத்தகத்துடனேயே போகும் பழக்கம் இன்ற‌வும் தொடர்கிறது!

    "அப்புறம் ரசனைக்கு இளமை, முதுமை என்று காலக் கணக்கு எதுவும் இல்லை!"

    இதில்தான் நான் மாறுபடுகிறேன். இள‌மையின் ரசனை கனவுகளுடனும் கற்பனைகளுடனும் கூடிய வீரியம் வாய்ந்தது! முதுமையின் ரசனை வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்து அனுபவங்கள் பலவற்றில் தோய்ந்து ஆழ்ந்த அமைதியுடன் வருவது. நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன! எல்லாமே சொந்த அனுபவம்தான்!

    ReplyDelete
  7. ரசனை என்பதே, ஒரு ஆழ்ந்த லயிப்பாக வெளிப்படுவது தான்! ஆழ்ந்த லயிப்பாக இருக்கும் எதுவும், அதிக மாற்றத்துக்கு உள்ளாவதில்லை. நீங்கள் சொல்ல வந்ததை, நான் "விருப்பு வெறுப்புக்கள் வேண்டுமானால், நேரத்துக்கொன்றாக மாறலாம்!" என்று சொல்லிவிட்டு, அதற்கப்புறமாக, சில அடிப்படை ரசனைகள் மாறுவதே இல்லை என்றும் சொல்லியிருந்தேனே அம்மா!

    இளமையின் ரசனை கற்பனையின் வீரியத்தோடு , முதுமையின் ரசனை அமைதியான அனுபவத்தோடு என்று சொல்வதே, ரசனையைப் பற்றி நாம் இன்னமும் ஒரு சரியான முடிவுக்கு வரவில்லை என்பதாகத் தான் எனக்குப் படுகிறது.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)