நாளை தீப ஒளித்திருநாள்! அறியாமை அகங்காரம் ஆணவ இருளை விலக்கும் ஒளிவிளக்கை அகத்துக்குள் ஏற்றுவதான குறியீடே தீபாவளி! தீபங்களின் வரிசை என்றுதான் அர்த்தம்.
இந்தவருட தீபாவளிப் பரிசாக எனக்கு இன்று வெள்ளிக் கிழமை காலை, பேத்தி பிறந்திருக்கிறாள்.வீடியோ காலில் குழந்தையைப் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஒரு அற்புதமான வரம்.ஸ்ரீ அரவிந்த அன்னையின் திருவடிகளைச் சரணடைகிறேன். ஸ்ரீ அரவிந்த அன்னை இந்தப் பச்சிளம் குழந்தைக்குத் துணையாக இருந்து காத்தருள வேண்டும்.
நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!
எங்கும் நலமே விளைக! மீண்டும் சந்திப்போம் .
மீண்டும் சிந்திப்போம்

