தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவர் கயவர்களால் மானபங்கப்படுத்தப் பட்டதுடன் எரித்துக் கொலை செய்யப்பட்டதும் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்திலும் கூட சில உறுப்பினர்கள் அதீத உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் உணர்ச்சிவசப்படும் ஒரு கும்பல் மனோநிலையுடன் எந்தக்காலத்திலும் சரியான முடிவெடுக்க முடியாது. சரியான நீதியை வழங்குவதற்கு உதவியாகவும் இருக்க முடியாது. ஒரு குற்றம் நடந்ததென்றால் கும்பலாகக் கூடி வெட்டு, குத்து, கல்லாலடித்துக் கொல், என்கவுன்டரில் போட்டுத்தள்ளு என்று கூவுவது என்ன மாதிரியான மனோநிலை?
முந்தைய நாட்களில் ஹிந்து நாளிதழில் சுரேந்திரா இந்த போலித்தனத்தை கார்டூனாக வரைந்திருக்கிறார்.
அவர் மட்டுமல்ல, இன்னொரு கார்டூனிஸ்ட் மஞ்சுள் கூட ஜனங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் நியாய உணர்ச்சி பற்றி கார்டூனாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ராஜ்யசபை உறுப்பினரான ஜெயா பச்சன் கூட குற்றவாளிகளை அடித்தே கொல்லவேண்டுமென்று ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
ஜனங்களுடைய கோபம் அரசுக்கெதிராகத் திரும்புவது தெரிந்த நிலையில் தெலங்கானா காவல்துறை இன்று பெண் மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் என்கவுன்டரில் போட்டுத் தள்ளி இருக்கிறது.
ப்ரியங்கா ரெட்டியை சிதைத்து தீ வைத்து கொன்ற 4 பேரையும்..என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறது ..தெலுங்கானா காவல்துறை.
கொதித்துக் கொண்டிருந்த பெண்களை இது சற்றே அமைதிப்படுத்தி இருக்கிறது.
என்கவுண்டர் மூலம் ...தனக்கு எதிராக திரும்பிக் கொண்டிருந்த அரசியலுக்கு.. வேகத்தடை போட்டிருக்கிறார்..தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் . [ அரசியல் சுயலாப காரணமின்றி அரசியல்வாதிகள் எதையும் செய்வதில்லை ]
இச் செயலுக்கு ...பொதுமக்கள் ஆதரவு இருக்கும் / இருக்கிறது.
வழக்கு விசாரணை, நீதிமன்றங்கள் என்று..பொதுமக்களை ... மனித உரிமை பேசவிடாமல் தடுப்பது... குற்றத்தின் கொடூர தன்மை மட்டுமல்ல..
கொடூரத்தை அரங்கேற்றிய குற்றவாளிகளுக்கு ...தையல் மெஷினும், நிதி உதவியும் அளித்து கேவலமான அரசியல் செய்யும் அரசியல் வியாதிகள் முக்கிய காரணம்.
வருடக்கணக்காக இழுத்துக் கொண்டு நடக்கும் விசாரணைகளும், நீதியை உணர்த்தாத தீர்ப்புகளும் ஒரு முக்கிய காரணம்.
மனித உரிமை பேசி தொடர்ந்து 'கொடூர கொலை குற்றவாளிகளை மட்டும்' தப்பிக்க செய்யும் போலிகள் முக்கிய காரணம்.
இனியாவது...எந்த ஒரு குற்ற செயலுக்கான விரைந்த தீர்ப்பிலும், அதன் விளைவிலும் தார்மீக நீதி என்பது உணரப் படவேண்டும். உணர்த்தப் படவேண்டும்.
அப்போதுதான்..கொடூர குற்றவாளிகளுக்கு கூட மனித உரிமை குறித்து பேச பொதுமக்கள் முன்வருவார்கள்.
பானு கோம்ஸ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். இங்கே சிதம்பரங்களுக்கு விரைந்து கிடைக்கிற நீதி டில்லியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான நிர்பயாவுக்கு கிடைப்பதில்லை. என்கவுன்டர்கள் கூட அரசியல் ஆதாயத்துக்காகத்தான் செய்யப்படும் என்றால் .......
என்கவுன்டர்கள், நிச்சயமாக, சரியான தீர்வல்ல.



