Tuesday, January 12, 2010

தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது!

லண்டனில் கல்வி பயில்வதற்காக,  விடுதியில் தங்கியிருக்கும் ஒரு இந்திய மாணவன் சொல்வதாக இந்த சிறுகதை ஆரம்பிக்கிறது.

ஒரு விடுதி அறையில் இவனும், ஒரு ஆப்பிரிக்க மாணவனும் கூட்டாளிகள்! இந்த ஆப்பிரிக்க மாணவனுக்கும், ஒரு ஆங்கிலேய யுவதிக்கும், எப்படியோ காதல் மலர்கிறது. இவனைத் தேடி அந்தப் பெண் அறைக்கு வருவதும், சந்தோஷமாகப் பேசிக் கழிப்பதும், வெளியே செல்வதுமாக, இந்த நிகழ்வுகளுக்குசாட்சியாக, கதைசொல்லியாக வரும் இந்திய மாணவனுடைய பாத்திரம்இருக்கிறது.

ஆயிற்று, அந்த ஆப்பிரிக்க இளைஞன்,  சொந்த ஊருக்குக் கிளம்பும் நேரம் நெருங்குகிறது. தன்னுடைய சூட்கேசில் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டு  இருக்கும்போது ஒரு புகைப்படம் கீழே வந்து விழுகிறது. அதில் இவனும், ஒரு இளம் பெண், குழந்தைகள், பெரியவர்கள் என்று குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படன்! கதை சொல்லி கேட்கிறான், "இது யார் உன் தாய் தந்தை சகோதரி இவர்களோடு எடுத்துக் கொண்டதா?"

"கதையையே மாற்றி விட்டாயே! இது என் மனைவி, மாமனார், மாமியார், என் குழந்தைகளோடு எடுத்துக் கொண்டது! இன்னும் சில நாட்கள் தான்! என் குடும்பத்தோடு
ஒன்றாகக் கூடி சந்தோஷமாக இருப்பேன்!"

"அப்படியானால் நீ இந்தப் பெண்ணுடன் நெருக்கமாகப் பழகியது.....?"

"அதெல்லாம் சும்மா! பொழுது போவதற்காக! அவ்வளவுதான்! இந்த ஆங்கிலேயர்களுக்கே ரொம்பவும்தான் கர்வம்! தங்களுடைய வெள்ளைத் தோல் மீது அவ்வளவு பெருமிதம்! அந்தப் பெருமிதத்தோடு கொஞ்சம் விளையாடிப்பார்க்கலாமே என்று தான்."

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவுக்கு  வெளியே யாரோ தடதடவென்று ஓடுவது போல, படியில் உருண்டு விழுவது போல  சத்தம் கேட்கவே, இந்த இந்திய மாணவன் பதறிப்போய், வெளியே பார்க்கிறான். 


அந்தப் பெண் தான், ஆப்பிரிக்க இளைஞனைக் காதலித்த அதே பெண் தான், தேடிவந்தவள், இந்த சம்பாஷணையைக் கேட்டு, அதிர்ச்சியில் பதறி, படியில் உருண்டு அடிபட்டு மயங்கிக் கிடக்கிறாள்.

அந்த விடுதிக் காப்பாளர், இவனைக் கூப்பிட்டு, "இந்தப் பெண்ணுக்கு  மருத்துவ சிகிச்சை தேவைப் படுகிறது. ஒரு கை கொடுத்து உதவுவாயா?"
என்று கேட்பதோடு கதை இந்த வாக்கியத்தோடு முடிகிறது.

"எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை! தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது!"

இந்த கேள்வி, அறையில் நண்பர்களுக்குள் விவாதிக்கப் பட்ட அதே கேள்விதான்! பதில் தான் முற்றுப் பெறாமல் கேள்வியாகவே நின்று விடுகிறது.

1965 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்த  கல்கி ராணுவச் சிறப்பிதழில் திரு. தி. சா. ராஜு எழுதிய சிறுகதை இது. மூன்று அல்லது நான்கு பக்கங்களுக்குள் தான் இருக்கும்!

கதாபாத்திரங்களுடைய பெயர்கள், வர்ணனைகள் எல்லாம் எழுத்துக்கு எழுத்து அப்படியே நினைவில் இல்லை! ஆனால், கதாசிரியர், மனித மனங்களின்  பேதப்பட்டு நிற்கும் குணத்தைச் சொல்வதாகவும் அதே நேரம் , வாசகருக்கு ஒரு கேள்வியாகவும் , இந்த ஒரு வரியில் முடித்துவிடுகிறார்!

"எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை! தண்ணீரும் தான் எண்ணெயை ஒதுக்குகிறது!"

தி.சா. ராஜு! ராணுவத்தில் பணிபுரிந்தவர்! சாகித்ய அகடமிக்காக, ஒரு பஞ்சாபி நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு காந்தீயவாதி! மனிதமனங்களின் நுட்பமான உணர்வுகளை எழுத்தில் கொண்டுவந்தவர்.  


அகிலன், தீபம் நா.பார்த்த சாரதி போன்ற எழுத்தாளர்கள், கொஞ்சம் சுயகௌரவத்தோடு, லட்சியவாதிகளாகவும் இருந்தது போல, புகழ், பொருளுக்காக எழுத்தை சமரசம் செய்து கொள்ளத் தெரியாத இன்னொரு
லட்சியவாதி. தமிழ் எழுத்தாளர்களில், லட்சியவாதிகளும்  இருந்தார்கள் என்பதே இன்றைக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தோடு அப்படியா என்று கேட்க வைக்கும் சங்கதி!

இந்தக் கதையைக் கொஞ்சம், அந்த தண்ணீர்-எண்ணெய் சமாசாரத்தை யோசித்துப் பாருங்களேன்!

பேதம் எங்கிருந்து வருகிறது? நிறத்திலா, இனம், மொழி, தேசம், நகரம், கிராமம், தெரு, எதிர் வீடு, பக்கத்து வீடு இப்படிப் பிரித்துச் சொல்வதில் இருந்தா? பேதம் என்பதே கற்பிதம் தானா?





பேதங்கள் தேவை தானா?  தவிர்க்க முடியாதவை தானா?

கொஞ்சம் நீங்களும் யோசித்துச் சொல்லுங்களேன்!

Friday, January 8, 2010

புத்தகக் கண்காட்சியும், புத்தகம் படிப்பதும்!



நேற்றைக்கு மகன் சென்னையில் இருந்து அலைபேசியில் பேசினான்.

"புத்தகக் கண்காட்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். உனக்கு ஏதோ புத்தகம் வேண்டுமென்று சொன்னாயே, இப்போது சொல்!"

கொஞ்சம் தயங்கினேன். என்னுடைய பட்டியல் மிகப் பெரியது. தவிர, புத்தகங்களை நேரில் பார்த்து, கொஞ்சம் புரட்டிப் பார்த்துவிட்டு, ஆசிரியரின் நடையை ஒரு சாம்பிள் பார்த்து வாங்குவது தான் எனக்குப் பழக்கம். மொட்டையாக, திடீரென்று என்ன வேண்டுமென்று கேட்டால், என்ன  சொல்வது?

இதயம் பேசுகிறது மணியன்  ஆதரவில் வளர்ந்த சில  எழுத்தாளர்களை, அவர்களுடைய அபத்தமான உளறல்களை, ஒரு பதத்திலேயே இனம் கண்டு, தவிர்த்தவன். அதே மாதிரி,  தம்பட்டம் கொட்டிக் கொண்டு, ஆர்ப்பாட்டமாக  வருகிறவர்களை எல்லாம், என்னுடைய முதல்தேர்வாக எப்போதுமே எடுத்துக் கொள்வது இல்லை.

பாலகுமாரனைக் கூட, அப்படித்தான், ஆரம்பத்தில் என்னுடைய முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டதில்லை. தொழிற்சங்க வேலைகளில் மும்முரமாக இருந்த நேரம் அது. மதுரை வங்கியில் பணியாற்றி வந்த இரண்டு நண்பர்கள் பக்கத்து அறையில் தங்கியிருந்தார்கள். பாலகுமாரனை வெறியோடு வாசித்தவர்கள் அவர்கள். எனக்கும் சிபாரிசு செய்து, படிக்கக் கொண்டு வந்து கொடுத்தபோது அந்த நாட்களில் ஒதுக்கியிருக்கிறேன்.

அப்புறம் சிலகாலம் கழித்து, எனக்கு நேரம் கிடைத்த தருணத்தில் ஒரே மூச்சில் அத்தனை புத்தகங்களையும் படித்தும் பார்த்தாயிற்று! நண்பர்கள் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும் அளவுக்கு அப்படி என்ன தான் இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக ஆரம்பித்தது.

இப்போதெல்லாம் பாலகுமாரன்   என்றால் ஒருவிதமான அலுப்பும் வந்து விடுகிறது. எழுத்துச் சித்தராக, இன்றைக்கும் கூட சில வாசகர்களுக்குத் தென்படுகிற பாலகுமாரன், ஒரு கட்டத்தோடு தேங்கிப் போனவராகவே எனக்குத் தென்படுவதுதான் காரணம். ஏற்கெனெவே சொன்னதைத் தவிர, புதிதாக அவரிடம் ஏதுமில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. பொறுமை அதிகமாக இருந்தால், உடையார் ஆறு பாகங்களாக அதில் என்னதான் சொல்லியிருக்கிறார் என்பதைப் படித்துவிடும் எண்ணமும் இருக்கிறது. ஆனால், என்னுடைய முன்னுரிமைப் பட்டியலில் இல்லை.

என்னுடைய தேர்வு, சில அடிப்படைக் கேள்விகளோடு, தேடலோடு சம்பந்தப்பட்டது. எனக்குப் பிடித்தமான விஷயத்தைப் பற்றி எழுதியிருந்தால் தான் படிப்பேன் என்று எப்போதுமே இருந்ததில்லை, நேரெதிர் கருத்தைச் சொல்லியிருந்தாலுமே கூட, சொல்வதில் ஒரு லாஜிக் இருந்தால், அந்த மாதிரி எழுத்தாளர்களையும் என்னுடைய வாசித்தே தீரவேண்டியவர்கள் பட்டியலில் வந்து விடுவார்கள்.

"அப்பா, தி.ஜானகிராமன் புத்தகங்கள் வேண்டுமென்று சொன்னாயே! இங்கே கேட்டால் எவரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். குறைந்த பட்சம் பதிப்பகம் பெயராவது தெரியுமா?  சொன்னாலாவது, சொல்லலாம் என்கிறார்கள்" ஏதோ ஒரு ஸ்டாலில் இருந்து, மகனிடமிருந்து மறுபடி கேள்வி.

"ஐந்திணைப் பதிப்பகம் என்று ஸ்டால் இருக்கிறதா என்று பார்!"

புத்தகக் கண்காட்சி பற்றிய, குவியல் குவியலான பதிவுகள், இத்தனை புத்தகம் போன வருடம் வாங்கியதே படிக்காமல் இருக்கிறது என்று ஒரு பட்டியல் போட்டு விட்டு, இந்த வருடம் இத்தனை ரூபாய்க்கு, இன்னின்ன பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தை வாங்கப் போகிறேன் என்றெல்லாம் அளந்து கொண்டிருக்கும் பதிவுகளை ஒரு பக்கம் பார்த்துக் கொண்டேவரும் நேரத்தில், தமிழ் எழுத்துலகின் மிகப் பெரிய ஆளுமையான தி. ஜானகிராமன்  புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று சொல்லக் கூடத் தெரியாத, அல்லது சொல்ல மனமில்லாத ஆசாமிகள்....புத்தகம் விற்கிறார்களாம்! 

சிறிது நேரம் கழித்து மறுபடியும் மகனே பேசினான். "என்னென்ன புத்தகம் சொல்லு!" ஐந்திணை ஸ்டாலை அடையாளம் கண்டு போய்ச் சேர்ந்து விட்டான்.

 "ஐந்திணை கதிரேசன் அங்கு இருக்கிறாரா கேள்!"  என்று நான் கேட்டதை அவனும் அங்கே எவரிடமோ கேட்க, " அதோ இருக்கிறார் பாருங்க! அவர்தான் கதிரேசன் " என்று சொல்வது இந்த முனையில் கேட்கிறது. "பேச வேண்டுமா? செல்லைக் கொடுக்கட்டுமா?" மகன் பரபரத்தான்.

"வேண்டாம், எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் பார்த்தது, இப்போது அதையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டிருக்க முடியாது. மலர் மஞ்சம், உயிர்த்தேன், செம்பருத்தி இதெல்லாம் இருக்கிறதா என்று பார்!"

கேட்ட  மூன்றுமே இருந்தது. ஒன்று சேதப்பட்டதாக இருப்பதாகவும் தெரிந்தது.

ஒருவழியாக, மகன் கொள்முதல் செய்துவிட்டு, மறுடியும் பேசினான். "அப்பா! தி.ஜா புத்தகம் மட்டும் வாங்கவில்லை. ஒரு புத்தகம் இருநூற்றைம்பது ரூபாய் என்று சொன்னார்கள்! அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்."

"சரி! வேறு என்ன தான் வாங்கினாய்?"

"ஒரு பத்துப் பனிரண்டு புத்தகம்! இதுவே ஆயிரத்தைநூறு ஆகிவிட்டது! The Moneychangers வாங்கியிருக்கிறேன்! நூற்று முப்பது ரூபாய் தான்! அடிக்கடி இது படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்வாயே!"

"நல்ல சாய்ஸ்! ராஜீவ் காந்தி கொலைவழக்கைப் பற்றி ஒரு புத்தகம் வந்திருக்கிறதே, அதை வாங்கினாயா? ராமச்சந்திர குஹா எழுதிய காந்தியை பற்றிய நூலின் மொழிபெயர்ப்பும் கிடைக்கிறதே பார்த்தாயா?"

"இல்லை.ஜெயமோகனுடைய காந்தி வாங்கினேன். மற்றதை அப்புறமாகப் பார்த்துக் கொள்ளலாம்!"

இது நிஜமாகவே, நேற்றைக்கு இரவு என்னுடைய மகனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல். மதியம் தான் ஆர்தர் ஹைலியின் The  Moneychangers புத்தகத்தைப் பற்றி ஒரு விமரிசனமாக இங்கே எழுதி வலையேற்றம் செய்து முடித்தபோது மின்வெட்டு! மகனிடம், அந்த வலைப் பக்கத்தைக் கொஞ்சம் பார்க்கச் சொன்னேன். என்னுடைய  பதிவுகளை எட்டிக் கூடப் பார்க்காதவன், ஒரு நான்கைந்து மாதங்களுக்கு முன்னால்,  காந்தி, நேரு, சாஸ்திரி, பொருளாதாரம் என்று தொட்டு எழுதிய பதிவுகளைப் பார்த்திருக்கிறான்.

இந்தப் புத்தகக் கண்காட்சி,  சென்னையில் நடக்கும் பத்தோடு பதினொன்றாக, ஒரு பொழுதுபோக்காக ஆகிவிட்டதோ என்று கூட, சில பதிவுகளைப் படித்த போது எண்ணம் வந்தது. ஒரு பொருட்காட்சிக்குப் போனால், அங்கே கூடத்தான் ஏதோ ஒன்றினால் உந்தப் பட்டுத் தேவை  இருக்கிறதோ இல்லையோ  எதையாவது வாங்கி வருகிறோமே, அதுபோலத்தானா இதுவும்?

நல்ல புத்தகங்கள், மிகப்பெரிய தோழனாகவும் துணையாகவுமே இருக்கக் கூடிய வல்லமை பெற்றவை. வெறும் சந்தைப் பொருள் மட்டுமே அல்ல!
வலைப் பதிவுகளில் கிறுக்கித் தள்ளுவதைஎல்லாம் தொகுத்து, அதையும் புத்தகமாக்கி விற்பனை செய்யும் வியாபார உத்திகள் முகம் சுளிக்க வைக்கின்றன.

அது போதாதென்று, வலைப் பதிவர்கள் சிலருடைய படைப்புக்களில் இருந்து கொஞ்சம் உருவி, அதையும் பதிப்பிக்கும் போக்கும்,பதிப்புலகமும், வாசகர்களும் என்ன திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று காட்டுகிறது. அப்படிக் காட்டுவதும்  ஆரோக்கியமான போக்காகத் தெரியவில்லை என்ற வருத்தம் தான் மேலிடுகிறது.

குறைந்தது மூன்று அல்லது நான்கு பதிவுகளிலாவது, சென்ற வருடம் வாங்கினதையே  இன்னமும் படித்து முடிக்கவில்லை என்ற வாக்கியத்தைப் பார்க்க முடிவதும், அப்படியும் சொல்லிவிட்டு, இந்த வருடம் நான் இன்ன பதிப்பகத்தின் இந்த இந்தப் புத்தகங்களை வாங்கப் போகிறேன் என்றும் சொல்வது பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடியவை தானா?

வீணை இருந்தும் பயனேது? -வந்து
மீட்டும் வரையில் இசையேது?


இந்தப்  பழைய திரைப்படப் பாடல் தான் இந்தத் தருணத்தில் நினைவுக்கு வருகிறது!

என்னுடைய அடுத்த கேள்வி!

இப்போதெல்லாம் புத்தகம் வெளியிடுவது என்பது இன்றைய தலைப்புச் செய்திகள் மட்டும் தானா?
 

வாசிப்பது என்பது அதை மட்டும் வாசித்து விட்டுப் போய் விடுவது தானா?

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)