Sunday, August 23, 2020

"ஜயமுண்டு பயமில்லை மனமே !"

கபாலி சாஸ்திரியார், பிறந்தது சென்னையில், 1886 ஆம் வருடம், செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி. திருமயிலை கபாலீஸ்வரனுடைய பெயரையே, மகனுக்குச் சூட்டி மகிழ்கிறார் விஸ்வேஸ்வர சாஸ்திரிகள். கன்னிமாரா நூலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஐந்து வயதிலேயே மகனுக்கு ஸ்ரீ வித்யா மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார். சம்ஸ்க்ருதம்,பூஜை பாராயணம், ஜபம் எல்லாவற்றையும் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்ட கபாலி சாஸ்திரி, பன்னிரண்டு வயது நிறைவதற்கு உள்ளாகவே, வால்மீகி ராமாயணம் முழுவதையும் பன்னிரண்டு தடவை பாராயணம் செய்து முடித்து விட்டார்.



மயிலாப்பூர் ஹிந்து ஹை ஸ்கூலில் தான் கல்வி. ரைட் ஹானரபில் V S ஸ்ரீனிவாச சாஸ்திரியார் தலைமை ஆசிரியர். அந்த நாட்களில், ஸ்ரீனிவாச சாஸ்திரியாரது ஆங்கில மொழியின் ஆளுமை ரொம்ப பிரசித்தம். அப்படிப்பட்டவரது மாணவர், ஆங்கில வழிக் கல்வியிலும் சிறந்து விளங்கியதில், வியப்பு ஒன்றுமில்லை தான்.

காவ்ய கண்ட கணபதி முனி என்றும், வாசிஷ்ட கணபதி முனி என்றும் "நாயனா" என்று அன்போடு ரமணர் அழைத்த மாதிரியே, அன்பர்களால் அழைக்கப் பட்ட மகா தபஸ்வி, இளம் கபாலி சாஸ்திரிக்கு, வேதம், உபநிஷத்துக்களின் உட்பொருளை விளங்கச் சொல்லிக் கொடுக்கிறார். ரமண மகரிஷியின் தரிசனமும், ஹஸ்த தீக்ஷயும் கிடைக்கிறது. ரமணரின் "நான் யார்" என்கிற விசார மார்கத்திலும் நல்ல பரிச்சயம் ஏற்படுகிறது.

ஸ்ரீ ரமணருடன் நாயனா 

ஆனாலும் கபாலி சாஸ்திரியாரின் தாகம் தீருவதாயில்லை. ரமண வழி முடிவானதாக அவருக்குத் தெரியவில்லை. அந்த நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் "ஆர்யா" என்ற பத்திரிகையில் The Secret of Veda, Life Divine என்ற தலைப்புகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். ஆர்யா பத்திரிகையில் ஸ்ரீ அரவிந்தர் எழுதி வந்ததைப் படித்த கபாலி சாஸ்திரியாருக்குப் புதிய தரிசனம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். அது வரை வேதத்தின் உட்பொருளாக, மரபு ரீதியாகக் காலம் காலமாகச் சொல்லப் பட்டதற்கும் அப்பால், புதிய சிந்தனை இழை ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து தொடங்குவதைத் தன்னை அறியாமலேயே, கபாலி சாஸ்திரியார் உணர்ந்த தருணங்கள் அவை.


ஸ்ரீஅரவிந்தர் 

ஸ்ரீ அரவிந்தர், பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் இருக்கிறார் என்பது தெரியும். அரசியலை விட்டு ஒதுங்கி ஆன்மீக சாதனையில் தீவீரமாக இருக்கிறார் என்பதும் தெரியும். அவரைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம். எப்படி, எப்போது என்பது தான் தெளிவாகத் தெரியவில்லை. அதற்கும் ஒருசரியான தருணத்தை, இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்!

1917 ஆம் ஆண்டில் சங்கர ஜெயந்தியை ஒட்டிப் பாண்டிச்சேரிக்கு வருகிற வாய்ப்பு, கபாலி சாஸ்திரியாருக்குக் கிடைக்கிறது. மகாகவி சுப்ரமணிய பாரதியும் அந்த நேரத்தில் பாண்டிச்சேரியில் தான் இருந்தார். 


ஏற்கெனெவே, திருவல்லிக்கேணியிலும், நண்பர்கள் மூலமாகவும் நன்கு அறிமுகமானவரான, பாரதியைச் சந்திக்க முடியுமோ? பாரதிக்கும், ஸ்ரீ அரவிந்தருக்கும் நெருங்கிய பழக்கம் இருக்கிறதென்று சொல்லக் கேள்வி. பாரதியார், ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க உதவக் கூடுமோ?

பாரதியார் புதுவையில் தங்கியிருந்த வீட்டைத் தேடி வருகிறார் கபாலி சாஸ்திரி. மாடிப் படிகளேறி வரும் போதே மகாகவி பெரும் குரலில் பாடிக் கொண்டிருந்தார்:

"ஜயமுண்டு பயமில்லை மனமே! - இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு"

பரஸ்பர குசலம் விசாரித்துக் கொண்ட பிறகுபாரதி சென்னை நண்பர்கள் சிலரைப் பற்றி விசாரித்து விட்டு மறுபடி பாட ஆரம்பித்தார்:

"குருவே! பரமன் மகனே
குஹையில் வளரும் கனலே!"

கபாலி சாஸ்திரிக்கு பெரிய ஆச்சரியம்குகன் என்ற சொல்தகராகாசமாகிய ஹ்ருதயமென்னும் குகையில் வளரும் கனல்குமரனான முருகனையும் குறிப்பதுவேதத்தின் மிக ஆழ்ந்த கருத்தாக இருப்பதுஇதை எப்படிக் கண்டீர்கள் என்று பாரதியிடம் கேட்கிறார்.

"ஸ்ரீமான் அரவிந்த கோஷுடன் ரிக் வேத ஆராய்ச்சி சிலகாலம் பண்ணிக் கொண்டிருந்த போது கண்டது இது" என்கிறார் பாரதி.

ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய பிரஸ்தாபம் எழுந்தவுடனேயேகபாலி சாஸ்திரியார்தான் அவரைச் சந்திக்கும் ஆர்வத்திலேயே பாண்டிச்சேரிக்கு வந்திருப்பதையும் சொல்லிபாரதி அதற்கு உதவ முடியுமா என்று கேட்கிறார். அந்த கால கட்டங்களில்ஸ்ரீ அரவிந்தர்சாதாரணமாக எவரையும் சந்திப்பதில்லைஎன்றாலும்ஸ்ரீ அரவிந்தருடன் தங்கியிருக்கும் ஒரு அன்பருக்குச் சீட்டுக் கொடுக்கிறார் பாரதிஇன்னார்ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்கிற மாதிரி.
அன்று மாலையேஆறு மணிக்கு ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்கஅனுமதியும் அழைப்பும் கிடைக்கிறது!

கவிதையோடு படமும் இணையத்தில் கிடைத்தது நன்றி


இன்றைய த்யானத்திற்கான ஸ்ரீ அரவிந்தரின் அமுத மொழி:

"Not to impose one's mind and vital will on the Divine but to receive the Divine's will and follow it, is the true attitude of sadhana. Not to say, "This is my right, want, claim, need, requirement, why do I not get it?" but to give oneself, to surrender and to receive with joy whatever the Divine gives, not grieving or revolting, is the better way. Then what you receive will be the right thing for you."
- Sri Aurobindo [SABCL, 23:597]

அவுட்லுக் வார இதழில் காங்கிரஸ் கட்சி மஹாத்மா காந்திக்கும், சுதந்திரப் போராட்டத்திற்கும் தாங்களே மொத்தக் குத்தகைதாரர் என்கிற மாதிரி, ஸ்ரீ அரவிந்தர் முதலான தலைவர்களை மறந்து போன அவலத்தைப் பற்றி ஒரு சிறு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இங்கே படிக்கலாம் 

ஆகஸ்ட் 15 ஸ்ரீ  அரவிந்தர்  அவதரித்த நாள். அதை ஒட்டி 2009 ஆகஸ்டில் இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதியதன் மீள்பதிவு.  

Saturday, July 4, 2020

#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது!

நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த்து உரையாடியிருக்கிறார். நிமு (லடாக்) பகுதியில் நமது வீரர்களிடம் நமது பிரதமர் பேசியவிதம், வெளியுறவுக் கொள்கை, மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்தான அடிப்படை சித்தாந்தம் இவைகளில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை எதிரொலித்திருக்கிறது. வீரர்களுடைய தியாகம், போர்க்குணம் குறித்துப் பெருமிதம் தெரிவித்து மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்--எனநான்கே ஏமம் படைக்கு.என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டிப் பேசிய பிரதமர் விஸ்தரிப்பு முயற்சிகள் வரலாற்று ரீதியாகத் தோற்றே வருவதாகவும் சொல்லியிருக்கிறார். கல்வான் பிரதேசம் நம்முடையது, அதில் கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் உறுதிபடச் சொல்லி இருக்கிறார்.


வழக்கம்போல காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களுக்கு பிரதமருடைய பேச்சு புரியவில்லை. ஊழல் திமிங்கலம் பானாசீனா    மூன்றாவது முறையாகவும் பிரதமர் சீனாவைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லையே என்று குறை சொல்கிறார். ராகுல் காண்டி
யோ வழக்கம்போல ட்வீட்டரில் அக்கப்போர் செய்துகொண்டிருக்கிறார் என்பது தேசம் அனுபவித்து வரும் சாபக்கேடு. 

ஆனால் பாரதப் பிரதமருடைய நேற்றைய பேச்சு புரிய வேண்டியவர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது என்பது சீனாவின் எதிர்வினைகள் தெளிவாகக் காட்டி விட்டன என்பது காங்கிரஸ் மண்டூகங்களுக்கு இன்னும் உறைக்கவில்லை. In the face of Chinese attempts to change the status quo at the Line of Actual Control, and the lack of substantive movement through negotiations at the military and diplomatic level, India had a choice. One option was to underplay the incursions, keep the issue in cold freeze, and slowly normalise the India-China relationship. The other option was to recognise the threat, decide to take on the adversary irrespective of potential costs, and reframe the entire framework of the relationship to impose costs on China. PM Modi has made his choice by picking the second option என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலையங்கம். நேருவைப்போல ஒரு அரசியல் கோழையாக இல்லாமல் பிரதமர் மோடி எண்ணித் துணிந்து ஒரு தெளிவான முடிவை எடுத்துவிட்டார் என்பதிலேயே இந்தியா பாகிஸ்தான் சீனா! திரண்டு வரும் போர்மேகங்கள்! என்று எழுதிய பதிவில் நண்பர்கள் பந்து மற்றும் திருப்பூர் ஜோதிஜி எழுப்பிய சில கேள்விகளுக்குத் தெளிவான விடைகள் கிடைத்து விட்டமாதிரித்தான் எனக்குத் தோன்றுகிறது.

Addressing a luncheon attended by Japanese and Indian industrialists, Modi said: “Today, we see all around what happened in the 18th century… there is expansionism visible… kisi desh mein encroachment karna, kahin samundar mein ghus jaana, kabhi kisi desh ke andar ja kar kabza karna… in cheezon ki pravritti chal rahi hai (some country is encroached upon, one enters the seas somewhere, sometimes go inside a country and capture territory, we are witnessing such tendencies) This expansionism cannot be beneficial for mankind in the 21st century… development is essential and I believe that in the 21st century, if Asia is to lead the world, India and Japan should together raise the prestige of the path of development.”  
இது செப்டெம்பர் 1, 2014 இல் பிரதமர் மோடி இந்திய ஜப்பானிய தொழிலதிபர்களிடையே பேசியது. 

This theme, of expansionism versus development, was one of his key themes today. If in Ladakh he said that the era of expansionism is over and development is the engine of the future, in Tokyo, he had foreshadowed this. “The world is divided into two streams… one of Vistaarvaad (expansionism) and the other of Vikasvaad (development). Vikasvaad is the way ahead,” he had said in Tokyo. “We have to decide whether we want the world to be caught in the clutches of expansionism or…on the path of development. Those who follow the path of peace, those who believe in development, they guarantee peace and progress.” என்று ஐந்தேமுக்கால் வருடங்களுக்கு முன் டோக்யோவில் பிரதமர் மோடி பேசியது தான் நேற்றைக்கு லடாக் - நிமுவில் பேசிய போதும் எதிரொலித்திருக்கிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சுபஜித் ராய் மற்றும் ரவீஷ் திவாரி இருவரும் சேர்ந்து எழுதிய செய்திக்கட்டுரை சொல்கிறது. அதை மட்டும் தானா?

Invoking Lord Krishna from Mahabharata – through his references to ‘Bansuridhari’ and ‘Sudarshan Chakradhari’ – Modi reinforced the message that India stands for peace but will not hesitate if there’s a confrontation, if its hand of friendship is misread as weakness. His remark that “strength is a pre-condition” for peace also sought to assert that India will continue to upgrade its infrastructure along the LAC and keep adding to its military strength. His “veer bhogya vasundhara” remark was a clear underlining of the principle that India will talk from a position of strength.

இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் சீனாவுடனான உறவு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதைத் தெளிவாக முடிவெடுத்து விட்டது என்றுதான் பார்க்க முடிகிறது. துப்பாக்கிகள் முழங்குவதற்கு முன்னாலேயே பொருளாதார ரீதியிலான சில அடிகளைச் சீனாவுக்குக்  கொடுத்து அதிரடியான ஆட்டத்தையும் இந்தியா ஆரம்பித்து வைத்திருக்கிறது.

சீனாவையே நம்பியிருக்கிற வியாபாரிகளும், இந்தியத் தொழில்துறையும் தங்களை மாற்றிக் கொண்டுதான் ஆக வேண்டும். மாற்றத்தை அவர்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கும் நல்லது, வலியும் குறைவாகவே இருக்கும்.

சீனாவிடம் சிக்கித் தவிக்கிற பல உலகநாடுகளுக்கும் இந்தவிஷயத்தில் இந்தியா ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.

மீண்டும் சந்திப்போம்.      

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)