தற்குறிகளைத் தலைமையாகக் கொண்ட சோனியா காங்கிரசுக்கு, யாராவது அவர்களைப் பற்றிப் புத்தகம் எழுதிவிட்டால் ஜன்னி வந்துவிடும் என்பதை ஸ்பானிஷ் எழுத்தாளர் ஜேவியர் மோரோ எழுதிய சிவப்புச் சேலை::வாழ்க்கையே அதிகாரத்தின் விலை(The Red Saree: When Life is The Price of Power) ஒரு புத்தகம் எவ்வளவு மிரட்டியது என்பதை சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் காங்கிரஸ்! பதிவில்அந்தப்பக்கங்களில் முன்பே பார்த்திருக்கிறோம். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தகே.நட்வர்சிங்கை எண்ணெய் பேர ஊழலில் பலிக்கடாவாக்கி மந்திரிசபையில் இருந்து வெளியேற்றிய பிறகு, அவர் தன்னுடைய சுயசரிதையை எழுதப்போகிறார் என்ற செய்தி கசிந்ததும் சோனியாவும் பிரியங்காவும் அவரது வீட்டுக்கே போய்த் தாஜா செய்த கதையையும் அந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது நினைவுகளை புத்தகமாக எழுதி வெளியிட்டதில் இது வரை மூன்று பகுதிகள் வந்தாயிற்று. நான்காவது பகுதி அவர் ஜனாதிபதியாக இருந்த 2012 -- 2017 காலத்தைய நினைவுகளாக வருகிற ஜனவரி மாதம் வெளிவர இருப்பதாக, பதிப்பாளர்களான ரூபா பப்ளிகேஷன்ஸ் அறிவித்திருக்கிறது. அதிலிருந்து சின்னச் சின்னதாக சில பகுதிகள் வெவ்வேறு ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.வாங்கின காசுக்காகக் கூவுகிற ஊடகங்களில் வந்த செய்தி ஒன்று இங்கே சாம்பிளாக
ஆனால் முன்னைப்போலப் பதறக் கூடப் பொழுது இல்லாமல் தலைக்குமேலே வெள்ளம் போன பிறகு சாண் என்ன முழம் என்ன என்ற கையறு நிலையில் சோனியா & கோ இருக்கிற மாதிரித்தான் தெரிகிறது.
தேர்தலுக்குத் தேர்தல் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்தால் மாமியார் மெச்சின மருமகள் என்பதைத்தாண்டி அரசியலே தெரியாத இத்தாலிய மம்மி தான் என்ன செய்வார்? மகன், மகள் இருவருமே அரசியலை வெறும் விளையாட்டாகவும், வெறும் பொழுதுபோக்காகவும் எடுத்துக் கொள்கிறவர்களாக இருக்கையில் என்னதான் செய்வது? ராமச்சந்திர குஹாக்கள் குமுறிக் கதறி அழுவது ஏனென்று இப்போது புரிகிறதா?
Sanjay Jha's new Twitter bio reads: "Congressi by DNA. Sacked & Suspended. My big blunder: Fought for internal democracy, suggested changes to revive Congress, challenged Rip Van Winkle leadership. (sic)"இப்படித்தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சஞ்சய் ஜா காங்கிரசின் முன்னாள் தேசிய ஊடகத் தொடர்பாளர். கடந்த ஜூலையில் கட்சித்தலைமையை விமரிசித்ததற்காக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்டவர். இவர் எழுதிய புத்தகம் ஒன்று இந்த டிசம்பர் 21 அன்று வெளியாகிறது. அமர்த்யா சென் இந்தப்புத்தகத்தைப் பற்றிச் சொன்னதிலிருந்து ஓரிரு வாக்கியங்களை முகப்பில் போட்டு இருப்பதிலிருந்தே சஞ்சய் ஜா காங்கிரஸ் DNA தன்னுள் இருப்பதாகச் சொல்வது அந்த DNA கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பு, வெறுப்பைத்தவிர வேறொன்றுமில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டிவிடுகிறது.
அப்படி சஞ்சய் ஜா என்னதான் சொல்லி இருக்கிறார் என்பதை இங்கே நூலின் ஒருசிறுபகுதியை எடுத்துப்போட்டுச் சொல்லி இருக்கிறார்கள்! அதிலிருந்தும் ஒரு சிறுபகுதி The Congress is its own worst enemy, the saying goes. Infighting is in the party’s DNA, and internecine feuds are exhausting. Scurvy wheeler-dealers forget that the real adversary is the BJP, the default beneficiary of the Congress’s self-destruction.
2014 ஜனவரியில் டைம்ஸ் நவ் டிவிக்கு ராகுல் காண்டி அளித்த முழுப்பேட்டியிலிருந்தே காங்கிரசின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாக சஞ்சய் ஜா பொருமியிருக்கிறார். அதில் இருந்தே பிஜேபியினர் ராகுல் காண்டியை பப்பு எனக்கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டதாக இப்போது புலம்புவதில் என்ன பிரயோசனம்?
காங்கிரசைப் பீடித்திருக்கும் பெரிய வியாதி தேர்தல் தோல்விகள் அல்ல! சோனியாவும் வாரிசுகளும் தான் என்பது இந்த இரண்டு புத்தகங்களைப் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?
ஆனாலும் வாசிப்பதே சுவாசமாக நினைக்கிற ஒருவன் இந்தப் புத்தகங்களை அறிமுகப்படுத்தாமல் இருந்து விட முடியுமா?