Showing posts with label புத்தக அறிமுகம். Show all posts
Showing posts with label புத்தக அறிமுகம். Show all posts

Tuesday, December 15, 2020

#புத்தகங்கள் காலத்தின் கண்ணாடியா? அல்லது எழுதியவன் மனக்குழப்பங்களா? எது சரி?

வினய் சீதாபதி எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கிற புத்தகம் : Jugalbandi: The BJP Before Modi பெங்குவின் வெளியீடாக நவம்பர் 23 அன்று வெளியான இந்தப் புத்தகம், இதுவரை வெளியான விமரிசனங்களை, தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, நான் வாசிக்க விரும்பும் புத்தகங்களில் இது முதலிடத்தில் இருக்கிறது என்று இன்னொரு வலைப் பக்கங்களில் எழுதிப் பதினெட்டு நாட்கள் தான் ஆகியிருக்கிறது. The Wire தளத்தில் கரண் தாப்பர், நூலாசிரியருடன் அவர் சொல்ல வந்ததையும் தாண்டி வார்த்தைகளை வலுக்கட்டாயமாக வாயில் திணிக்க முயற்சி செய்கிற ஒரு 54 நிமிட பேட்டி வெளியிடப்பட்டிருக்கிறது.

 மேலே வெறும் ஸ்க்ரீன்ஷாட் மட்டும்தான்!  ஒரிஜனல் வீடியோ இங்கே  

In an interview that will create considerable controversy and perhaps provoke the wrath of Bharatiya Janata Party supporters, the author of a recent study of Atal Bihari Vajpayee and Lal Krishna Advani has claimed that in 1998, when he was 33 and a young MLA, now Union home minister Amit Shah had been critical of the nuclear tests என கரண் தாப்பர் தன்னுடைய மனக் கிடக்கையை வெளிப்படையாகவே சொல்லி விடுகிறார். Vinay Sitapati, the author of Jugalbandi, an account of the Vajpayee-Advani relationship, and who teaches at Ashoka University, claims that in 1998 Amit Shah wrote to prime minister Vajpayee sharply criticising the nuclear tests.In his alleged letter he wrote: “Respected Vajpayee Ji, because of your greed for publicity you have forever lost Pakistan Occupied Kashmir”. Sitapati adds that when Vajpayee summoned him to Delhi for an explanation Shah told him that Morarji Desai had told him: “If we both (India and Pakistan) become nuclear powers, we can never win back PoK through war”.

இந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டுமென்கிற ஆவலை கரண் தாப்பர் போன்ற ஊடகக்காரர்கள் கொஞ்சமும் குறைத்து விடவில்லை என்பதே என்னுடைய கருத்தாக இருக்கிறது.  

"ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் காலத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறான். அவனைப் பாதித்த விஷயங்கள், சமூகத்தில் அவன் பார்த்த, அவனைப் பாதித்த நிகழ்வுகள், அவனுடைய ஆதங்கத்தோடு சேர்ந்தோ, அல்லது அவன் புரிந்து  கொண்ட விதத்தை ஒட்டியோ தான் அவன் படைப்புக்கள் இருக்கும். மனிதனை நேசிக்கத் தெரிந்த எழுத்தாளர்கள் அனைவரிடத்திலும் காணக் கிடைக்கிற பொதுவான பண்பு இது". இப்படி 10 வருடங்களுக்கு  முன்னால் ஆலிவர் ட்விஸ்டும் ஏய்ப்பதில் கலைஞனும்...!  என்ற தலைப்பில் இன்னொரு வலைப்பக்கங்களில் எழுதியதை இன்றும் நான் உறுதியாக நம்புகிறேன். ஆனாலும் இப்போது எழுதிக் குவிக்கப்படும் புத்தகக் குப்பைகள் தவறான தகவல்களை வாசிப்பவர் மீது திணிப்பதற்காகத் தெரிந்தே செய்யப்படுபவை என்பதை சேர்த்தே சொல்லியிருக்க வேண்டுமென்று தோன்றுகிற அளவுக்கு disinformation பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது.    

சரி! இப்போது எதற்காக பழைய கதை என்று கேட்கிறீர்களா?புஸ்பா புருசன் காமெடி மாதிரி சுனந்தா புஷ்கரைத் திருமணம் செய்து கொண்டதாலேயே மிகப்பிரபலமும் ஆனவரும் சோனியா காங்கிரசின் MPயுமான சசிதரூர்  Battle of belonging என்ற தலைப்பில் புத்தகம் எழுதி அது கடந்த அக்டோபரில் வெளியாகியிருக்கிறது.இந்தத்தகவலே Outlook தளத்தில் நடப்பு இதழில் வெளியான புத்தக விமரிசனம் பார்த்த பிறகுதான் தெரிய வந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!  புஸ்பா புருசன் மவுசு போய்விட்டதா என்ன?😂😂


சசி தரூர் 220 வருஷ அரதப்பழசான ஒரு  ஆங்கிலப் புத்தகத்திலிருந்து ஒரு வாக்கியத்தைப் பிடித்துக் கொண்டு, தப்பு மேல் தப்பாகத் தன்னுடைய வாதங்களை இந்தப் புத்தகத்தில் அடுக்கிக் கொண்டே போகிற மாதிரி இருக்கிறது.

Shashi Tharoor’s brilliant but deeply flawed thesis in The Battle of Belonging takes off from where G.K Chesterton left it off long back when he said: “‘My country, right or wrong’, is a thing that no patriot would think of saying except in a desperate case. It is like saying, ‘my mother, drunk or sober’.” (செஸ்டர்டன் The Defendant என்ற புத்தகத்தில் எழுதியது 1901 இல்)  Tharoor is brilliant with words, which he uses not to convince but to confuse, obfuscate and deceive. He writes brilliantly, except this time around his core arguments are fundamentally flawed. 

Tharoor fails to examine the counterfactual in any great detail—why can’t a nationalist be a patriot, or a patriot a nationalist if they meet some, but not all, of the elements of his own definitions? For example, if someone criticises the government’s policies and still admires an authoritarian leader is he a nationalist or a patriot as per the Tharoorian construct?  என்று ஸ்ரீவத்ச கிருஷ்ணா விமரிசனமாக எழுதுவதிலேயே இந்த 462 பக்கப் புத்தகத்தை ரூ.799/- கொடுத்து வேண்டாத குழப்பம் தலைவலியையும் சேர்த்தே வாங்கியாக வேண்டுமா என்ற எண்ணம் வலுவாக எழுகிறதா இல்லையா? 

புத்தகங்கள் நல்லவைதான்! வலிமையானவைதான்! நல்லதும் வலிமையும் எப்படிப்பட்ட புத்தகங்களைத் தேடிப் படிக்கிறோம்? திரித்துச் சொல்லும் குப்பைகளை எந்த அளவுக்கு நிராகரிக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது!

மீண்டும் சந்திப்போம்.         

Sunday, December 13, 2020

இரண்டு புத்தகங்கள்! புத்தகம் எழுதியே சோனியா காங்கிரசை மிரட்டுகிறார்களே!

தற்குறிகளைத் தலைமையாகக் கொண்ட சோனியா  காங்கிரசுக்கு, யாராவது அவர்களைப் பற்றிப் புத்தகம் எழுதிவிட்டால் ஜன்னி வந்துவிடும் என்பதை ஸ்பானிஷ் எழுத்தாளர் ஜேவியர் மோரோ எழுதிய சிவப்புச் சேலை::வாழ்க்கையே அதிகாரத்தின் விலை (The Red Saree: When Life is The Price of Power)  ஒரு புத்தகம் எவ்வளவு மிரட்டியது என்பதை சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் காங்கிரஸ்! பதிவில் அந்தப்பக்கங்களில் முன்பே பார்த்திருக்கிறோம். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கே.நட்வர்சிங்கை எண்ணெய் பேர ஊழலில் பலிக்கடாவாக்கி மந்திரிசபையில் இருந்து வெளியேற்றிய பிறகு, அவர் தன்னுடைய சுயசரிதையை எழுதப்போகிறார் என்ற செய்தி கசிந்ததும் சோனியாவும் பிரியங்காவும் அவரது வீட்டுக்கே போய்த் தாஜா செய்த கதையையும் அந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம்! 


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது நினைவுகளை புத்தகமாக எழுதி வெளியிட்டதில் இது வரை மூன்று பகுதிகள் வந்தாயிற்று. நான்காவது பகுதி அவர் ஜனாதிபதியாக இருந்த 2012 -- 2017 காலத்தைய நினைவுகளாக வருகிற ஜனவரி மாதம் வெளிவர இருப்பதாக, பதிப்பாளர்களான ரூபா பப்ளிகேஷன்ஸ் அறிவித்திருக்கிறது. அதிலிருந்து சின்னச் சின்னதாக சில பகுதிகள் வெவ்வேறு ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.வாங்கின காசுக்காகக் கூவுகிற ஊடகங்களில் வந்த செய்தி ஒன்று இங்கே சாம்பிளாக  

ஆனால் முன்னைப்போலப் பதறக் கூடப் பொழுது இல்லாமல்  தலைக்குமேலே வெள்ளம் போன பிறகு சாண் என்ன முழம் என்ன என்ற கையறு நிலையில் சோனியா & கோ இருக்கிற மாதிரித்தான் தெரிகிறது.


தேர்தலுக்குத் தேர்தல் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்தால் மாமியார் மெச்சின மருமகள் என்பதைத்தாண்டி அரசியலே தெரியாத இத்தாலிய மம்மி தான் என்ன செய்வார்? மகன், மகள் இருவருமே அரசியலை வெறும் விளையாட்டாகவும், வெறும்  பொழுதுபோக்காகவும் எடுத்துக் கொள்கிறவர்களாக இருக்கையில் என்னதான் செய்வது? ராமச்சந்திர குஹாக்கள் குமுறிக் கதறி அழுவது ஏனென்று இப்போது புரிகிறதா?

 

Sanjay Jha's new Twitter bio reads: "Congressi by DNA. Sacked & Suspended. My big blunder: Fought for internal democracy, suggested changes to revive Congress, challenged Rip Van Winkle leadership. (sic)" இப்படித்தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சஞ்சய் ஜா காங்கிரசின் முன்னாள் தேசிய ஊடகத் தொடர்பாளர். கடந்த ஜூலையில் கட்சித்தலைமையை விமரிசித்ததற்காக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்டவர். இவர் எழுதிய புத்தகம் ஒன்று இந்த டிசம்பர் 21 அன்று வெளியாகிறது. அமர்த்யா சென் இந்தப்புத்தகத்தைப் பற்றிச் சொன்னதிலிருந்து ஓரிரு வாக்கியங்களை முகப்பில் போட்டு இருப்பதிலிருந்தே சஞ்சய் ஜா காங்கிரஸ் DNA தன்னுள் இருப்பதாகச் சொல்வது அந்த DNA கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பு, வெறுப்பைத்தவிர வேறொன்றுமில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டிவிடுகிறது.

அப்படி சஞ்சய் ஜா என்னதான் சொல்லி இருக்கிறார் என்பதை இங்கே நூலின் ஒருசிறுபகுதியை எடுத்துப்போட்டுச் சொல்லி இருக்கிறார்கள்! அதிலிருந்தும் ஒரு சிறுபகுதி The Congress is its own worst enemy, the saying goes. Infighting is in the party’s DNA, and internecine feuds are exhausting. Scurvy wheeler-dealers forget that the real adversary is the BJP, the default beneficiary of the Congress’s self-destruction. 


2014 ஜனவரியில் டைம்ஸ் நவ் டிவிக்கு
ராகுல் காண்டி அளித்த முழுப்பேட்டி யிலிருந்தே காங்கிரசின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாக சஞ்சய் ஜா பொருமியிருக்கிறார். அதில் இருந்தே பிஜேபியினர் ராகுல் காண்டியை பப்பு எனக்கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டதாக இப்போது புலம்புவதில் என்ன பிரயோசனம்?

காங்கிரசைப் பீடித்திருக்கும்  பெரிய வியாதி தேர்தல் தோல்விகள் அல்ல! சோனியாவும் வாரிசுகளும் தான் என்பது இந்த இரண்டு புத்தகங்களைப் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

ஆனாலும் வாசிப்பதே சுவாசமாக நினைக்கிற ஒருவன் இந்தப் புத்தகங்களை அறிமுகப்படுத்தாமல் இருந்து விட முடியுமா?

மீண்டும் சந்திப்போம்.      

Sunday, March 8, 2020

கொஞ்சம் சினிமா! கொஞ்சம் விமரிசனம்! பாவம் அரசியல்!

ஜிப்சி! படம் என்பதைவிட எழுத்தாளர் ராஜு முருகனுடைய லேட்டஸ்ட்  இடதுசாரிக் கிறுக்குத்தனம் என்றே சொல்லிவிடலாம்! கிறுக்குத்தனத்தின் உச்சம்! படத்தை ப்ரொமோட் செய்வதற்காக யூட்யூபில் உசுப்பேத்துகிற வீடியோக்களாகப் போட்டுக்கொண்டே வந்து கடைசியில் சரக்கு எதுவுமில்லை என்பதைத் தாங்களே வெளிப்படுத்திக் கொண்டதுதான் மிச்சம் போல! ப்ளூ சட்டை மாறன் இந்த  5 நிமிட வீடியோ விமரிசனத்தில் கிழித்திருக்கிறார்.

   
இந்த விமரிசனம் கொஞ்சம் அதிகமாகவே  டேமேஜ் செய்திருக்கும் போல! பல இடங்களிலிருந்தும் எதிர் வினைகள் வந்துகொண்டே இருக்கின்றன. வெறும் கோஷங்களையே முழுநீளப் படமாக எடுத்தால் என்ன ஆகுமாம்? நானும் நீண்டகாலமாகவே பார்த்து வருவதில், இந்திய இடதுசாரிகளுக்கு அரசியல் தான் சரிப்பட்டு வரவில்லை என்றால், சினிமா, நாடகம் கூடக் கைகொடுக்க மாட்டேனென்கிறதே! ஜனங்களுக்கு அண்ணாயிசம் கூடப்புரிந்துவிடும் போல! ஆனால் இடதுசாரிகள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிய வைக்கவே முடியாதோ?  இடது சாரிகளைத் தொட்டுப் பேசிய ஏதாவது ஒருபடம் நினைவுக்கு வருகிறதா? கொஞ்சம் சொல்லுங்கள்! இத்தனைக்கும் கலை, இலக்கியம் எல்லாம் மக்களுக்காகவே என்று எழுத்தாளர் சங்கம், கிராமிய இசைக்குழு, என்று ஏகப்பட்ட புரட்சிகர முன்னெடுப்புக்களைத் தொடர்ந்து  செய்துவருகிற இடதுசாரிகளுக்கு, ஒரு சின்ன விஷயத்தைக் கூடக் குழப்பமில்லாமல் சொல்ல முடியவில்லையா? கடலை உருண்டையில் கூட சர்வதேசியம் பேசியவர்கள், இப்போது சரவதேசியத்தைக் கைவிட்டு லோக்கல் பாலிடிக்ஸ் ஒன்லி என்று இறங்கிவந்தும் கூட, இப்படி சறுக்கிக் கொண்டே வருகிறார்கள் என்றால் ....?

ராஜூமுருகனுடைய ஜிப்சி படத்தைப் பற்றியதே அல்ல இந்த விமரிசனம் என்பது நண்பர்களுக்குப் புரிந்தே இருக்கும் இல்லையா? காலாவதியாகிப் போன இந்திய இடதுசாரிகள், காங்கிரஸ் மாதிரிக் கரிக்கட்டையாக மறுபடி உயிர்த்தெழ முடியாத அளவுக்குப் போய் விட்டார்களே என்பது தான் என் விசனமாக! 


சினிமா மாயையை விட திராவிட மாயை ஆபத்தானது! இப்படிச் சொல்வதற்குக் கூட விடாமல் டாக்டர் கிருஷ்ணசாமியை புதியதலைமுறை சேனலின் கார்த்திகேயன் குறுக்கே விழுந்து மறிப்பது வேடிக்கை! டாக்டர் கிருஷ்ணசாமியோ அவருடைய புதிய தமிழகம் கட்சியினரோ  குறையில்லாத, விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லதான்! ஆனால் இவருக்குக் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச கவனத்தைக் கூட தமிழக அரசியல் களத்தில்  கொடுக்கவில்லை என்பது தற்செயலானது அல்ல. எதற்கெடுத்தாலும் பாமகவுடன் ஒப்பீடு, மோதுவதில் மட்டுமே குறியாக இருக்கும் திருமாவளவன்  தன்னை தலித் சமூகத்தின் ஏகப் பிரதிநிதியாக  பொசிஷன் செய்துகொள்வதற்கு இங்குள்ள ஊடகங்களும், கழகங்களும் துணையாக இருந்தார்கள்! அதன்பின்னாலும் ஒரு அரசியல் இருந்தது.

    
முகநூலில் இந்தப்புத்தகத்தைப் பற்றிய ஒரு விரிவான அறிமுகக்குறிப்பை வாசித்தேன். இந்த வருடம் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் உடனே சேர்த்துக் கொள்ள வைத்த ஒரு அறிமுகம். 


நிவேதிதா லூயிஸ் தனது முதல் பெண்கள் புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறார் . வீடியோ 58 நிமிடம். 
சென்னை மைத்ரி புக்ஸ் வெளியீடாக 224 பக்கங்களில் ரூ.200/-

மீண்டும் சந்திப்போம். 

Wednesday, February 26, 2020

இட்லி தோசை மாவுதான்! அதுவே வெற்றிகரமான தொழிலாக!

ஒரு தொழிலை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக வளர்ச்சியுடன் நடத்துவது மிகவும் கஷ்டமா? தடங்கல்கள் வந்துகொண்டே தான் இருக்கும், அதையும் தாண்டி என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்கிறார் மணி கிருஷ்ணன். இட்லி தோசை மாவுதான் ப்ராடக்ட்! அதுவும் அமெரிக்காவில் எப்படி ஒரு வெற்றிகரமான வணிகமாக ஆனது என்பதை இந்த 27 நிமிட நேர்காணலில் சொல்கிறார் சாஸ்தா ஃபுட்ஸ் மணி கிருஷ்ணன்.


நம்மூர் யூட்யூப் சேனல்கள் வைக்கும் கொடூரமான தலைப்புக்களை மறந்துவிடுங்கள்! எங்களுக்கு போதிக்கப்பட்ட மார்கெட்டிங் கான்செப்ட் 4Ps product, price, promotion and place, அப்புறம் இன்னொரு 3Ps  people, processes and physical environment  என்று அடுக்கிக் கொண்டே போகிற விஷயங்களை மணி கிருஷ்ணன் மிக எளிமையாக I was in the right place, at the right time with the right population என்று சொல்வது மிக சுவாரசியம். அவர் சொன்னது #3Ps தான் என்பது வெறும் புத்தகப் புழுவாக மட்டுமே சந்தைப்படுத்துவதை படித்துக் கரைத்துக் குடித்த எனக்கு, கொஞ்சம் லேட்டாகத்தான் உறைத்தது. அனுபவமே சிறந்த ஆசான் என்று தெரியாமலா சொன்னார்கள்!! இன்று காலை கண்ணில் பட்ட நல்ல நேர்காணலாக இருந்தது. அதை நடத்திய நவநீத்துக்கு எப்படி என்ன கேட்பது என்று சரியாகப் புரியாவிட்டாலும் மணி கிருஷ்ணன் தெளிவாகப் புரிகிற மாதிரியும்  சொல்லவந்ததை முழுமையாகவும் சொன்னார் என்பது நேர்காணலின் நிறைவான விஷயம்.

இன்று கண்ணில் பட்ட புத்தக விமரிசனம் 

அரசியலையும் திரைப்படங்களையும் தவிர்த்துவிட்டு தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை. கருப்பு வெள்ளை திரைப்படக் காலம் முதல் இணையத் தொடர் காலம் வரை, அறிவியல் தொழில்நுட்பங்கள் அறியாதவர்கள் மற்றும் அன்றாடங்காய்ச்சிகள் முதல், மெத்தப்படித்தவர்கள், பெருந்தனக்காரர்கள் வரை எல்லா காலத்திலும் எல்லா மக்களிடையேயும் இந்த இரண்டு துறைகளும் நீக்கமற ஊடுருவி இருக்கின்றன.
இதில் திரைத்துறை என்பது கேளிக்கைக்கு உரியது என்பதால் அதிகம் பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை என்றாலும் அரசியல் மீதான அதீத ஆர்வம் என்பது சற்றுத் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். இதைக் கருப்பொருளாக வைத்துத் தான் பா.ராகவனின் "கொசு" நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த அரசியல் மற்றும் அதன் மீது உள்ள மோகம் எத்தனை தூரம் சராசரி மனிதர்களுடைய வாழ்வாதாரத்தை பாதித்து விடுகின்றது என்பதை நினைக்கையில் வேதனையாகத்தான் இருக்கிறது
இரண்டு தலைமுறைகளாக அரசியலில் தொண்டர்களாகவே இருந்து விட்ட ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாம் தலைமுறை இளைஞன் ஒருவன் எப்படியாவது தொண்டன் என்னும் நிலையிலிருந்து மேலே எழுந்துவிடுவது என்று ஒரு வைராக்கியத்தோடு முயல்கிறான். இந்த இலட்சியப்பாதையில் கானல் நீராக வந்து போய்விடுகின்ற மாயங்களும் மாயைகளும், அவற்றுக்குச் சமாந்தரமாக இலை மறை காயாகப் பயணிக்கும் அரசியலுக்குள் அரசியல் என்கின்ற தாய விளையாட்டும் தான் இந்தக் கதை.
வாழ்க்கை விழுமியங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு, இந்த அழுக்கடைந்த சாகரத்திற்குள் போராடி நீந்தி, வாழத் தக்கனவாய் பிழைத்துக் கொள்வதே குதிரைக் கொம்பாய் இருக்கின்றது. இதில் கரை சேர்வதென்பது ஒரு சராசரி மனிதனுக்கு தன்னளவில் ஒரு மிகப் பெரிய யுத்தம் தான்.
அரசியலில் முகஸ்துதியும் புறம் பேசுதலும் இரண்டாம் நுழைவாயில். எல்லாத் தொண்டனும் இதைத் தான் செய்வான் என்பது எல்லா அரசியல் தலைவனுக்கும் தெரிந்து தான் இருக்கும். ஆனால் அப்படி அவன் தெரிந்து தான் இருப்பான் என்னும் பால பாடம் கூடத் தெரியாமல் தொண்டர்கள் இருப்பது தான் வருத்தத்திற்குரியது.
ஓர் அளவுக்கு வழக்கொழிந்து போய்விட்ட மிகவும் பழையதான இதே உத்தியை தான் இந்த கதையின் நாயகனும் பயன்படுத்துகிறான். ஆனால் எதார்த்தம் வேறு என்பதை உணர்ந்த வாசகனையும் நாயகனின் நம்பிக்கையோடும் நப்பாசையோடும் காத்திருக்கத் தூண்டுவது தான் இந்தக் கதையும் பெரும் பலம்.
கோப்புகளுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட கடிதத்தை கண்டு பிடிக்க முடியாத போதே, நாயகனின் இயலாமை வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடுகிறது. கதையும் முடிவையும் ஊகிக்க முடிகிறது. ஆனாலும் நம்பிக்கை தான் வாழ்க்கை, தோல்வி வெற்றிக்கான முதல்படி போன்ற கல்லறை வாசகங்களால் ஆனது தானே மனித வாழ்வு? நாயகனும் தன் அடுத்த அடியை இன்னும் சற்று நிதானமாகவும் கவனமாகவும் எடுத்து வைக்க எத்தனிக்கிறான்.
முதல் அத்தியாயம் மட்டும் ஏன் சம்பந்தமே இல்லாமல் கதையில் செருகப்பட்டது என்று புரியவில்லை. அதில் வரும் கதாபாத்திரங்களோ சம்பவங்களோ எந்த வகையிலும் கதைக்குப் பயன்படவில்லை.
ஒரு அரசியல் தலைவர் வீட்டு மருமகளின் பெயரை துர்கா என்பதிலிருந்து சாந்தா என்று மாற்றி வைத்ததாக ஒரு வார இதழில் படித்த ஞாபகம். ( அதாவது எதை மூட நம்பிக்கை என்று சொல்லி அரசியல் செய்கிறார்களோ அதை அடிப்படையாகக் கொண்டு).
அதே போல இந்தக் கதையிலும், மணமகளின் பெயரை சாந்தி என்பதிலிருந்து தூய தமிழ்ப் பெயராக வள்ளி மயில் என்று மாற்றுவதாக முடிவு செய்கிறார்கள். ஆனால் இறுதிவரை அவள் சாந்தி என்றே அழைக்கப்படுகிறாள்.🤣
எத்தனை அபத்தம். இப்படித்தான் அரசியல் கட்சிகளும், அவர் தம் கொள்கைகளும் கூட பெரும்பாலும் அபத்தமாக இருக்கின்றன. அரசியல் கோட்பாட்டு நூலின் முதல் விதி "தன்னலம்" தான். மீதமெல்லாம், இசைவாக்கம் அடைதலும், தக்கன பிழைத்தலும் துளியளவு அதிர்ஷ்டமும் தான்.


 கிழக்கு வெளியீடு விலை ரூ.110/- என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமோ?

மீண்டும் சந்திப்போம்.  

Saturday, February 1, 2020

திருப்பூர் ஜோதி ஜியின் 5 முதலாளிகளின் கதை!

தேவியர் இல்லம் பதிவர் திருப்பூர் ஜோதி ஜி வலைப் பதிவுகள் எழுதும் நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்கு நன்றாக அறிமுகமானவர் தான்! அப்படியே ஒரு Motivational Speaker ஆகவும்   தேர்ந்த எழுத்தாளராகவும் ஆகிவருகிறார் என்பது இங்கே புதிய செய்தியும் இல்லை. ஒரே இந்தியா நியூஸ் தளத்தின் B K  ராமச்சந்திரன் தன்னுடைய வலைப்பூவில் ஜோதிஜியின் புத்தகத்துக்கு நல்லதொரு அறிமுகம் செய்து எழுதியிருக்கிறார்  என்று பார்த்தால் புத்தக விமரிசனமாக அல்லாமல், தன்னுடைய ஆலோசனையாக! கொஞ்சம் பார்க்கலாமா?


கிண்டில் மொழியா கிண்டிலின் மொழியா ?

கடந்த பத்தாண்டுகளாக இணையத்தில் உலாத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு பரிச்சியமானவர்தான் ஜோதிஜி. ஒரு புறம் பெரியாரைப் பிடிக்கும், ஒரு புறம் விடுதலைப்புலிகளும் பிரபாகரனும் ஆதர்சம். ஒரு புறம் மோதியையும் பிடிக்கும் என்று கலந்து கட்டிய சராசரி தமிழனுக்காக சரியான உதாரணம். என்ன ஈ வே ராவைப் முகப்புப் படமாக வைத்ததால் ஒரு சாராராலும், மோதியைப் பிடிக்கும் என்று சொல்வதால் முகமூடி சங்கி ஓன்று மற்றவர்களாலும் தள்ளி வைக்கப்பட்டு தனியாக இயங்குபவர்.

பல்வேறு புத்தகங்களைப் படித்து அதன் தாக்கத்தால் எழுதுபவர்கள் ஒருபுறம், தான் கண்ட, அனுபவித்த வாழ்க்கையை முன்வைத்து அதனை எழுதுபவர்கள் ஒருபுறம். ஜோதிஜி இதில் .இரண்டாம் வகை.

செட்டிநாட்டுப் பகுதியைச் சார்ந்த இவர், வேலை நிமித்தமாக திருப்பூருக்கு குடிவந்து ஏறத்தாழ முப்பத்தாண்டுகாலம் திருப்பூர்வாசியாகவே மாறிவிட்டனர். பின்னலாடைத் தொழிலின் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நிலைகளில் வேலை செய்து இன்று தொழில்முனைவோராக வளர்ந்து இருப்பவர்.

மின்புத்தகங்களுக்கான சந்தையை விரிவாக்க, அமேசான் நிறுவனம் சில ஆண்டுகளாக புதிய புத்தகங்களை அறிமுகம் செய்யும் போட்டி ஒன்றை நடத்தி வருகிறது. எழுத்தாளர்கள் என்று தங்களைத் தாங்களே அங்கீகாரம் செய்யும் யார்வேண்டுமானலும் புத்தகங்களை எழுதி, அதனை மின்புத்தகங்களாக உருவாக்கி, இணையத்தில் வெளியிட்டு இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

அதன் பின், நம் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும். பெரியோர்களே ! தாய்மார்களே ! நான் எழுதிய புத்தகத்தை தரவிறக்கம் செய்து, பக்கங்களைப் புரட்டி, புத்தகத்திற்கு உங்கள் விமர்சனங்களை எழுதி, கூடவே தரமதிப்பீட்டில் நட்சத்திர குறியீடு செய்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று எழுத்தாளர்கள் இணையமெங்கும் மின்னல் வேக பிரச்சாரத்தை செய்தனர்.

ஏற்கனவே கவிஞர்களாலும் போராளிகளாலும், செயல்பாட்டாளர்களாலும் நிரம்பியுள்ள தமிழ் கூறும் நல்லுலகு இப்போது மிக அதிகமான எழுத்தாளர்களையும் இனம் கண்டுகொண்டுவிட்டது. வழக்கம் போல நம் திராவிட இனமான சிங்கங்கள் களத்தில் குதித்து, 150க்கும் மேலான புத்தகங்களை வெளியிட்டு, இணைய அணியின் பிரச்சாரத்தின் மூலம் எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்து, அனைவருக்கும் ஐந்து நட்சத்திர மதிப்பு அளித்து, வெற்றிக்கோட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்றனர்.

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. இதுதான் போட்டியின் வரைமுறை என்றால் அதனை கைவசம் செய்வதற்கு ஒரு திறமை வேண்டும். இலக்குதான் வழிமுறை முக்கியம் இல்லை என்ற நினைப்பு எனக்கு இருப்பதால் நான் இதனை குறைகூறவில்லை. என்ன செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதி பாட்டுக்கே மூன்றாம் இடம்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று பரிசு பெற்ற முதலிரண்டு பாடல்களைக் காணவே இல்லை. எங்கள் படைப்பு காலத்தை வென்று நிற்கும், என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

இந்தப் போட்டிக்கு ஜோதிஜி ஐந்து முதலாளிகளின் கதை என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அவரது நீண்ட நெடிய தொழில் பயணத்தில் அவர் சந்தித்த அவர் பணிபுரிந்த தொழில் நிறுவங்களின் அதன் உரிமையாளர்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்த நூல் அளிக்கிறது. வெற்றி பெற்றவர்கள், வெற்றியை நழுவ விட்டவர்கள், பெற்ற வெற்றியை தக்க வைத்தவர்கள், தக்க வைக்காமல் போனவர்கள் என்று நாம் தினம்தோறும் பார்த்த, பார்த்துக்கொண்டு இருக்கும், பார்க்கப் போகும் மனிதர்களின் வாழ்க்கையைத்தான் எழுதியுள்ளார்.

ஓன்று வாங்கினால் இன்னொன்றும் கூடவே கிடைக்கவேண்டும் என்ற தமிழனின் தணியாத தாகத்தை தீர்க்கும் பொருட்டு, ஐந்து முதலாளிகளின் கதையை எழுதியது பற்றியும், அமேசான் நிறுவனம் நடத்திய போட்டி பற்றியும், அதில் நடந்த அரசியல் பற்றியும், அந்தப் போட்டியை எதிர்கொள்ள எப்படி தயாராக வேண்டும் என்பது பற்றியும் கிண்டில் மொழி என்ற அடுத்த புத்தகத்தையும் சுடச் சுட வெளியிட்டுளார்.

தன்னளவில் எந்தப் படைப்பும் மிகச் சிறந்தது என்று கூறிவிட முடியாது. அது அந்தப் படைப்பு வாசகனை எப்படி பாதிக்கிறது என்பதைப் பொறுத்துதான் அது  முடிவாகும். வெவ்வேறு பின்னணியில் இருக்கும் வாசகர்கள் ஒரு படைப்பை வெவ்வேறு விதமாகத்தான் எடை போடுவார்கள். அதன் படி முதலில் விமர்சித்தவர் இந்தப் புத்தகத்திற்கு மூன்று நட்சத்திர தரவரிசையைத்தான் அளித்தார். பாவம், அவருக்கு இந்தப் போட்டியைப் பற்றியோ அல்லது தனக்கு நெருக்கமானவர்களின் படைப்புக்கு ஐந்து நட்சத்திர தரவரிசையை அளிக்க வேண்டும் என்றோ தெரியவில்லை.

தனிப்பட்ட பழக்கம் என்பது வேறு, கட்சி சார்ந்த நிலைப்பாடு என்பது வேறு என்பதில் தெளிவாக இருந்த அவரின் நண்பர்கள் அவரின் புத்தகத்தைப் பற்றி பேசுவதை தெளிவாக தவிர்த்தார்கள். சொக்கா, அமேசான் கொடுக்கிற ஐந்து லட்ச ரூபாய் பரிசும் என் கட்சிக்காரருக்கே கிடைக்கணும் என்ற தருமியின் நிலைதான்.

இதுபோன்ற அரசியல் பற்றி, நாளை யாராவது இந்தப் போட்டியில் கலந்து கொள்ள நினைத்தால் எப்படி கூட்டம் சேர்த்து, இந்தப் புத்தகம் போன்ற ஓன்று இதுவரை வெளிவரவே இல்லை, மனிதகுலத்தை உய்விக்க இதுவே இறுதி புத்தகம் என்று எப்படி சந்தைப்படுத்துவது என்பது பற்றி இதில் ஜோதிஜி தெளிவாக எழுதியுள்ளார்.

கூடவே ஏற்கனவே எழுதியதை மின்புத்தகமாக மாற்றத் தெரிந்தவர்களுக்கு பணம் சம்பாதிக்க ஒரு புது வாய்ப்பு தயாராக உள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதைவிட முக்கியம் ஜோதிஜி எழுதிய திருப்பூர் பற்றிய பல்வேறு நூல்களை திரட்டி, கறாராக பிழை திருத்தி, நேர்த்தியாக எடிட் செய்து வெளியிட்டால், அது கடந்த ஐம்பதாண்டு கால திருப்பூரின், பின்னலாடைத் தொழிலின் வளர்ச்சியை, அதனால் ஏற்பட்ட பொருளாதார, சமூக, சுற்றுப்புறசூழல் மாறுபாட்டை விவரிக்கும் கண்ணாடியாக இருக்கும். அப்படியான முயற்சியை ஜோதிஜி முன்னெடுக்கட்டும். 
*******

B K  ராமச்சந்திரன் புத்தகங்களை வாசித்துவிட்டு, அதன் மீது தன்னுடைய ஆலோசனையாகவும் எழுதி விட்டார்!  சரி! நீ வாசித்தாயா? புத்தகத்தின் மீது கருத்தாக எதையாவது சொன்னாயா என்று தானே கேட்கப்போகிறீர்கள்? 5 முதலாளிகளின் கதையை ஒரு வழியாக என்னுடைய லேப்டாப்பில் Kindle for PC யை நிறுவி புத்தகத்தைத் தரவிறக்கம் செய்து படித்ததை  இந்தப்பதிவில் சொன்னேன்.  ஆனாலும் விமரிசனமாக எதையும் எழுதவில்லை.

அங்கே நண்பர் ஜோதி ஜிக்குப் பின்னூட்டமாக, ஒரு பதிலை எழுதியிருந்தேன்.

வாருங்கள் ஜோதிஜி!

5 முதலாளிகளின் கதையை நேற்றே வாசித்து முடித்துவிட்டேன். எளிமையான வாக்கியங்கள், சிறிய பாராக்கள் என்று உங்கள் மகள்களுக்கு கதை சொல்கிற மாதிரியான மொழிநடையில் வாசகர்களுக்கு திருப்பூரின் கதையைக் கொஞ்சம் சொல்லியிருக்கிறீர்கள்! ஒரு நல்ல முயற்சி.

பனியன் தொழிலை திருப்பூர் அறிவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னாலேயே, நகரத்தார் அதை மதுரையில் ஆரம்பித்து, வாங்குவார் இல்லாததால் கைவிட்டுவிட்டு, நூற்பாலைகளை மட்டுமே நடத்தி வந்தார்கள் என்ற தகவல் சொல்ல விடுபட்டதாக, ஒரே ஒரு சிறுகுறை. .
.
1980 களிலேயே திருப்பூர் பக்கத்திலேயே Foreign Exchange லைசன்ஸ் பெற்ற ஒரு வங்கிக்கிளையில் பணியாற்றி ஜவுளி ஏற்றுமதி செய்துவந்த வாடிக்கையாளர்களையும், அவர்களுடைய தொழில் நிர்வாகத்தையும் நேரடியாகவே அறிந்தவன் என்கிற வகையில் 5 முதலாளிகளின் கதை எனக்குப் புதிய தகவல்களைச் சொல்லவில்லை. ஆனால் திருப்பூரின் அவலநிலையைச் சுட்டிக்காட்டுகிற ஒரு புதிய திறப்பாகவே எனக்கு உங்களுடைய புத்தகம் இருந்தது என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

எனக்குத் தெரிந்த முதலாளிகளுடைய தகிடுதத்தங்கள், மோசடியை என்னால் வெளியே சொல்ல முடியாதபடி ஒய்வு பெற்றுவிட்டாலும் கூட தொழில் தர்மம் தடையாக இருக்கிறது. ஆனால் அந்தத்தொழிலில் இருந்து கொண்டே, அதில் உள்ள குறைகளை சொல்வது உங்களுக்கிருக்கிற தைரியம்!

லேப்டாப்பில் கிண்டிலை நிறுவி புத்தகங்களைத் தரவிறக்கம் செய்வது கொஞ்சம் பாடாய்ப் படுத்தி எடுத்து விட்டது. வேடிக்கை என்னவென்றால் விமலாதித்த மாமல்லன் எழுதிய சின்மயி விவகாரம் எப்போதோ தரவிறக்கம் ஆனதைத் தெரிந்துகொள்ளக் கூட முடியவில்லை. உங்களுடைய புத்தகம் இலவசமாய்த் தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதி அளித்திருந்த தருணத்தில் தரவிறக்கம் ஆனதை வாசிக்க முடியவில்லை. மீண்டுமொரு இலவசத்தரவிறக்கம் செய்து பார்த்ததில் உங்கள் புத்தகமும் லிஸ்டில் இருப்பதைப் பார்த்துவிட்டு,, கையோடு வாசிக்க ஆரம்பித்தேன் ,
இந்த அவஸ்தைக்கு, ஒரு கிண்டில் ரீடரை வாங்கி விடலாமென்று இருக்கிறேன்.  

B K ராமச்சந்திரன் தன்னுடைய பகிர்வில் சொல்லி இருக்கிற மாதிரி, திருப்பூர் அனுபவங்களில் கற்றதும் பெற்றதுமாக உள்ள விஷயங்களை, இன்றைக்குப் புதிதாகத் தொழிலில் இறங்க முனைகிறவர்களுக்குப் பயன்படுகிற விதத்தில் விரிவாக எழுத வேண்டும். அதுவே திருப்பூருக்கு ஜோதிஜி செய்கிற  நல்லதொரு கைமாறாக இருக்கும் என்பதை ஒரு சுருக்கமான விமரிசனமாக இங்கே முன்வைக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.           
               

Saturday, January 18, 2020

புத்தகக் கண்காட்சியும் பதிப்பகங்களும்! பின்னே நாட்டு நடப்பு!

புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுதுவதற்கு நிறைய நல்ல விஷயங்களும் இருக்கின்றன என்பதை எனக்கு நானே நினைவு படுத்திக்க கொள்கிற மாதிரி சிலபல காணொளிகளும் கிடைத்துவிடுகின்றன என்பதை இங்கே மன மகிழ்வோடு பகிர்ந்துதான் ஆகவேண்டும்!  கழக, இடதுசாரிக் குப்பைகளை அப்படியே புறந்தள்ளி விட்டுப்போக இதுபோன்ற பகிர்வுகளும் அவசியமே!

  
புத்தகங்களைப் பாதுகாக்க இங்கே அரசும் பல்கலைக் கழகங்களும் செய்யவேண்டிய பணிகள் நிறைய  இருக்கின்றன. இப்படியான பெரும்பணியை எப்படி ஒருசில பதிப்பகங்கள் (எல்லாப்பதிப்பகங்களையும் இதில் சேர்த்துச் சொல்ல முடியாது) என்பதை சந்தியா பதிப்பக நிறுவனர் M நடராஜன் இந்த 28 நிமிட வீடியோவில் கொஞ்சம் தெளிவாகவே சொல்கிறார். கேளுங்கள்! 


நண்பர்களுக்கு புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றியும், அதன் நிறுவனர் ஞானாலயா கிருஷ்ண மூர்த்தி ஐயாவைப் பற்றியும் கூகிள் பிளஸ்சில் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தது நினைவிருக்கும் என்றே நம்புகிறேன். ஏழாண்டுகளுக்கு முன்னால் ஞானாலயா நூலகத்தில் தஞ்சாவூர் கல்லூரி மாணவர்களிடையே நானும், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பேசியதன் ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம். சந்தியா நடராஜன் பேசும்போது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் குறித்தும், தனியார் நூலகங்கள் செய்த நல்ல பணிகள் பற்றியும் கொஞ்சம் பேசுகிறார். 

   

#UrbanNaxals  இதை சமீபகாலங்களில் மிகவும் கேலிக்கு ஆளான ஒரு வார்த்தையாகவாவது அறிந்திருப்பீர்கள்!  அந்தத்தலைப்பில் திரைப்படத் தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரி, ஒரு படமும் எடுத்து, அதன் மீது ஒரு புத்தகமும் எழுதி இருப்பது, பானு கோம்ஸின் இந்த வீடியோ விமரிசன உரையைப் பார்த்தபிறகுதான், இதைப்பற்றிய அறிவிப்பொன்றைப்பார்த்துவிட்டுக் கடந்துபோய்விட்டதே ஞாபகத்துக்கு வந்தது. 1967 இல் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உடைந்ததில் பிரிந்து போனவர்கள் நக்சல்பாரி என்ற கிராமத்தில் தான் தங்களுடைய கலகக் கொடியை உயர்த்தினார்கள் என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்று அவர்கள் பெயர் சொட்டிக் கொண்டாலும் நக்சல்பாரிகள் என்றும் காலப் போக்கில் நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்டு, பதினைந்து இருபதுக்கும் மேற்பட்ட குறுங் குழுக்களாகச் சிதறியும் போனார்கள். அர்பன் நக்சல்கள் என்ற வார்த்தை அவர்களைத்தான் குறிக்கிறதா? அப்படியும் சொல்ல முடியாது. இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லவும் முடியாதமாதிரி, கொஞ்சம் குழப்பமானது.  
                                                   


இந்தக்கேள்விக்கான விடை ஒருவிதத்தில் மிகவும் சிக்கலானது, இன்னொரு விதத்தில் மிகவும் எளிமையானதும் கூட! உதாரணத்துக்கு JNUவில் ஒரு பொருளாதாரப் பேராசிரியை. CAAவுக்கு எதிராக மாணவர்களைத் தூண்டிவிடுகிறவர். இவர் நடத்தும் NGO வுக்கு வெளிநாட்டிலிருந்து 14 கோடிரூபாய் வரவு வந்திருக்கி. றது. கம்யூனிச நாடுகளிலிருந்தா? இல்லை! அமெரிக்காவின் Ford Foundation தான் இத்தனை தாராளமாக நிதி கொடுத்திருக்கிறது. எதற்காக இவர்கள் நிதி அளிக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடையை கூகிளில் தேடிப்பார்த்தாலேயே ஏகப்பட்ட விஷயங்கள் கிடைக்கும். என்றாலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிவது கொஞ்சம் கடினமானதுதான்!

படிப்பறிவு இல்லாத கிராமப்புறங்களில் மட்டுமே தன் செல்வாக்கை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் நக்சல்கள் நகர்ப்புறங்களிலும் ஊடுருவி விட்டார்களா? JNU மாதிரியான பல்கலைக்கழகங்கள் இடதுசாரிகளின் விளையாட்டு மைதானங்களாக ஆகி  இருப்பதை பலபதிவுகளிலும் பார்த்துவருகிறோம். தேசத்தை சீர்குலைக்க முனையும் அன்னிய சக்திகளும் இடதுசாரிகளும் கைகோர்க்கும் புள்ளியே அர்பன் நக்சல்கள் என்று கொஞ்சம் எளிமையாகப்புரிந்து கொள்ளலாமா? பானு கோம்ஸின் புத்தக அறிமுகம், விமரிசனம்  வீடியோ  44 நிமிடம். என்னுடைய வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் இதுவும் சேர்ந்து கொண்டு விட்டது. 

மீண்டும் சந்திப்போம்.                               

Wednesday, January 1, 2020

புத்தக அறிமுகம்! Blood Island : Oral History of Marichjapi massacre.

புத்தகங்கள், வாசிப்பு அனுபவத்தைப் பேசுவதற்காக ஆரம்பித்த வலைப்பூ இது. ஜோதிபாசு முதல்வராக இருந்த மேற்குவங்கம், கம்யூனிசத்தின் பொன்னுலகம் என்று வர்ணிக்கப்பட்ட காலத்தில் நடந்த கொடூரமான மரிச்சபி தீவுப் படுகொலைகளைப் பற்றி இதுநாள் வரை கள்ளமௌனம் சாதித்துவந்த மார்க்சிஸ்டுகளின் முகத்திரையைக் கிழிக்கும் ஒரு புத்தகம் வெளிவந்து இருக்கிறது.



In 1978, around 1.5 lakh Hindu refugees, mostly belonging to the lower castes, settled in Marichjhapi — an island in the Sundarbans, in West Bengal. By May 1979, the island was cleared of all refugees by Jyoti Basu’s Left Front government. Most of the refugees were sent back to the central India camps they came from, but there were many deaths: of diseases, malnutrition resulting from an economic blockade, as well as from violence unleashed by the police on the orders of the government. Some of the refugees who survived Marichjhapi say the number of those who lost their lives could be as high as 10,000, while the-then government officials maintain that there were less than ten victims. How does an entire island population disappear.? How does one unearth the truth and the details of one of the worst atrocities of post-Independent India?
There is very little literature available on Marichjhapi. This is the first major non-fiction book on the massacre என்று இந்தப்புத்தகத்தைப் பற்றிய அறிமுகக் குறிப்பை வாசித்ததுண்டு. இன்றைக்கு முகநூலில் திரு B R மகாதேவன் எழுதியிருக்கிற விமரிசனத்தை வாசித்த உடனேயே கூகிள் புக்சில் இந்தப்புத்தகத்தை எனது வாசிப்புக்கு எடுத்துக் கொண்டுவிட்டேன். 



Blood Island : Oral History of Marichjapi massacare.
கம்யூனிஸ பொன்னுலகம் : மரிச்சபி படுகொலையில் தப்பியவர்களின் பதைபதைக்கும் வாக்குமூலம்.
ஆசிரியர் : தீப் ஹல்தர் ஹார்ப்பர் காலின்ஸ் வெளியீடு.
பங்களாதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு விரட்டியடிக்கப்பட்ட இந்துக்கள் (பெரும்பாலும் பட்டியல் ஜாதியினர்) மேற்கு வங்காள கம்யூஸ வேட்டைநாய்களால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வரலாறின் ஆவணம்.
இப்போதைய அகதிகள் குடியுரிமை தொடர்பான கலவரங்களின் பின்னால் இடதுசாரிகளே இருப்பதாக பிரதமர் சொன்னபோது, நாங்கள் பின்னாலெல்லாம் இல்லை முன்னால் இருந்துதான் வழிநடத்துகிறோம் என்று தெனாவெட்டாக பதில் சொல்லியிருந்தனர்.
இதில் இருக்கும் உண்மையைவிட மரிச்சபி தீவில் பங்களாதேஷ இந்து அகதிகளை பாலியல் பலாத்காரம், சொத்துகளைச் சூறையாடுதல், படுகொலை செய்தல் என செய்ததில் உண்மையிலேயே இடதுசாரிகள்தான் முன்னணியில் இருந்தனர்.
மேற்கு வங்க இடதுசாரி அரசின் உத்தரவின் பேரிலேயே அவர்களுடைய காவல்துறையினர்தான் இந்தக் கோர நடனத்தைப் புரிந்திருந்தனர்.
சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியல் ஜாதியினர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான குடிசைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
பங்களாதேச முஸ்லீம் அடிப்படைவாதிகளால் அடித்து விரட்டப்பட்ட பட்டியல் ஜாதியினரில் இந்தியாவுக்கு உயிர் தப்பி வந்து மரிச்சபி தீவில் குடியேறியவர்களை கம்யூனிஸ அரசு கொன்று குவித்தது; விரட்டியடித்தது. அந்தத் தீவின் மரங்கள், செடிகள், மீன்கள், விலங்குகள் ஆகியவற்றைக் 'காப்பாற்றுவதற்காக' அங்கு வாழத் தொடங்கியிருந்த பட்டியல் ஜாதியினரின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியது கம்யூனிஸ அரசு.
அந்தப் படுகொலையில் தப்பியவர்களின் நேரடி வாக்குமூலங்கள், பேட்டிகளின் தொகுப்பே இந்த நூல்.இடதுசாரி எக்கோ சிஸ்டம் எவ்வளவு வலிமையானது என்பதற்கான முகத்தில் அறையும் படியான உதாரணம் இந்த மரிச்சபி – பட்டியல் ஜாதி மக்கள் படுகொலை.
இதைப் பற்றி இதுவரை ஒரு புத்தகமோ, ஆவணப்படமோ எந்தவொன்றும் வெளிவராமல் மிகத் தெளிவாக கொடூரமாக இதுவரை நடந்துகொண்டிருக்கிறார்கள். அறிவுஜீவிகளின் கள்ள மவுனம் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதன் உதாரணம் இது. நடுநிலையாளர்கள் கூட யாருமே இதுபற்றி எங்கும் பெரிதாகப் பேசிப் பார்த்திருக்க முடியாது.
அந்தப் படுகொலைகள் நடந்து 40க்கும் அதிகமான ஆண்டுகள் கழித்து முதன் முதலாக இந்தப் படுகொலை பற்றி ஒரு ஆவணப் புத்தகம் அதுவும் மிகக் குறைவான பக்கங்களே கொண்ட ஒரு புத்தகம் வெளிவர அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இத்தனைக்கும் மேற்குவங்கத்தில் இடதுசாரிக் கட்சிகள் எதிர்கட்சியாக இருந்த 1960-70களின் காலகட்டத்தில் பங்களாதேச இந்து அகதிகளுக்கு அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் அரசு வெகு தொலைவில் பிஹார்-ஒரிஸாவின் தண்டகாரண்ய பகுதியில் வாழிடம் அமைத்துக் கொடுத்தது. மேற்குவங்காளத்திலேயே அவர்களுக்கு வாழ வழி செய்து தரவேண்டும் என்று பேசியிருக்கிறார்கள் இடதுசாரிகள்.
ஐந்து லட்சம் வங்காளிகள் பத்து லட்சம் கரங்களுடன் உங்களை வரவேற்போம் என்று பேசியிருக்கிறார்கள். தொடர்ந்து வென்றுகொண்டே இருந்த ஜோதிபாசு பல பொதுக்கூட்டங்களில் மேற்கு வங்காளத்திலேயே இந்து பட்டியல் ஜாதி அகதிகளுக்கு வாழ வழி செய்துதரப்படும் என்று சொல்லியிருக்கிறார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் தண்டகாரண்யப் பகுதிக்குச் சென்று அங்கிருந்த அகதிகள் மத்தியில் அந்த வாக்குறுதியைத் தந்திருக்கிறார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் கம்யூனிஸ்ட்களின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது.
பங்களாதேசத்தில் இருந்து இஸ்லாமிய வன்முறையாளர்களால் விரட்டியடிக்கப்பட்ட பட்டியல் ஜாதியினருக்கு தண்டகாரண்யப் பகுதியில் வாழ்வது மிகவும் சிரமமாகவே இருந்திருக்கிறது. கடும் கோடை, வறண்ட நிலம், கடும் குளிர் போன்ற எதிர்மறை அம்சங்களையெல்லாம் விட அவர்களை மிகவும் வாட்டிய விஷயம் அவர்கள் மேற்குவங்காளத்தில் சக வங்காளிகளுடன் வசிக்க விரும்பினார்கள். என்ன இருந்தாலும் தாய் மொழி பேசுபவர்களுடன் வாழ்வதில் இருக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைக்காது அல்லவா.
1947-ல் பிரிவினை நடந்தபோதே கிழக்கு பாகிஸ்தானில் தங்கிவிட்ட இந்து பட்டியல் ஜாதியினர் பங்களாதேசம் என்று வங்காள மொழி அடிப்படையில் தேசம் அமைந்தபோது மிகுந்த நம்பிக்கையுடன்தான் அங்கு வாழ முடிவெடுத்திருந்தனர். பாகிஸ்தான் என்ற தேச உணர்வு கிழக்கு பாகிஸ்தானில் இருந்தவர்களுக்கு இல்லையே தவிர இஸ்லாமிய தேசக் கனவுகள் அப்போதே அவர்கள் மனதில் இருக்கத்தான் செய்தது.
வங்காள தேசம் என்று மொழி அடிப்படையில் தேசத்தை உருவாக்குவதாக முதலில் அவர்கள் வேஷம் கட்டினார்கள். வங்காள இந்து பட்டியல் ஜாதியினர் அந்த இஸ்லாமியர்களை நம்பினார்கள். ஆனால், அதி விரைவிலேயே பங்களாதேசம் தன்னை இஸ்லாமியக் குடியரசாக அறிவித்துக் கொண்டது. முதல் வேலையாக இந்து பட்டியல் ஜாதியினரை விரட்டியடித்தது.
இந்துக்கள்தான் எங்கள் எதிரிகள். நீங்கள் இந்துக்கள் இல்லை; பட்டியல் ஜாதியினர்; எங்கள் நண்பர்கள் என்று பேசுவதெல்லாம், இஸ்லாமிய அரசு அமையும் வரைதானே. அது அமைந்த பின் இஸ்லாமியராக மாறு என்று சொல்வார்கள். மாறவில்லையென்றால் விரட்டியடிப்பார்கள். மாறியவர்களையும் அஹ்மதியாக்களைப் போல் அடக்கி ஒடுக்கவே செய்வார்கள் என்ற உண்மைகளின் ஒரு பாதிக்கான ஆதாரபூர்வ ஆவணமாக இந்த நூல் உருவாகியிருக்கிறது.
பங்களாதேச பட்டியல் ஜாதியினர் முதுகில் குத்தப்பட்ட முதல் துரோகக் கத்தி இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் குத்தப்பட்டது. மரிச்சபி படுகொலை என்பது அதே பட்டியல் ஜாதியினரின் மீது குத்தப்பட்ட இரண்டாவது துரோகக் கத்தி. இம்முறை அது இரு கரம் நீட்டி (இயேசு கிறிஸ்துபோல்?) அரவணைப்பதாகச் சொல்லி நேருக்கு நேர் நின்ற இடதுசாரிகளால், சொந்த வங்காளி தோழர்களால் நெஞ்சில் குத்தப்பட்டது.
பொதுவாக, பிரிவினைபற்றிப் பேசும்போது இந்தியாவின் மேற்குப் பகுதியில் நடந்த வன்முறை பற்றியே பேசுவார்கள். பாகிஸ்தானில் இந்து சீக்கியர்கள் மேல் வன்முறை கட்டவிழ்க்கப் பட்டதுபோலவே இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் மேல் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதாகச் சொல்வார்கள்.
இது உண்மை இல்லை; இந்தியாவின் மேற்கு எல்லை நீங்கலாக 80 சதவிகித இந்துப் பெரும்பான்மை இருந்த (நாக்பூர் உட்பட) மாநிலங்களில் இருந்த இஸ்லாமியர்களின் மேல் சிறு கீறல் கூட விழுந்திருக்கவில்லை என்பது வேறு விஷயம்.
அதோடு பாகிஸ்தானில் இப்போது இந்து சீக்கியர்களின் எண்ணிக்கை என்ன... இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை என்ன என்பதையெல்லாம் எடுத்துப் பார்த்தாலே உண்மை புரியும். ஆனாலும் பிரிவினை காலத்தில் இந்து-சீக்கியர்களுமே அதாவது இந்துத்துவர்களுமே இஸ்லாமியர்களைப் போல் வன்முறையில் ஈடுபட்டதாகவே இடதுசாரி எக்கோசிஸ்டம் ஒரு புனைவு வரலாற்றை உருவாக்கி வைத்திருக்கிறது.
ஆனால், இவர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் பங்களாதேசத்தில் நடந்தவைபற்றிப் பேசுவதே இல்லை. ஏனென்றால் அங்கு முழுக்க முழுக்க கொல்லப்பட்டது இந்துக்கள் மட்டுமே. பட்டியல் ஜாதி பாட்டாளிகள் மட்டுமே.
பங்களாதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டது பற்றி இடதுசாரிகள் பேசாமல் இருப்பதன் முக்கிய காரணம் அதே அளவுக்கு இவர்களும் அதே வன்முறையை பட்டியல் ஜாதியினர் மீது நிகழ்த்தக்கூடியவர்கள் என்பதுதான். மரிச்சபி அந்தக் கொடூரமான உண்மையின் மறந்துபோன, மறக்கடிக்கப்பட்ட வரலாற்று ஆவணம்.
கேரள அரசு இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல் செய்யமாட்டோம் என்று சொல்கிறது.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கனிஸ்தான் பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கி அதைச் செய்துகாட்டுவார்களா...
அல்லது இந்த மூன்று இஸ்லாமிய தேசங்களில் இருந்து அடைக்கலம் தேடி வரும் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, பார்ஸிக்களுக்கு இடம்கொடுக்க மாட்டோம் என்று சொல்வார்களா..?
அநேகமாக, இரண்டாவதைத்தான் செய்வார்கள். ஒருவேளை மத்திய அரசு அதையும் மீறி அடைக்கலம் தேடி வந்தவர்களை அங்கு குடியமர்த்தினால் இடதுசாரி அரசு என்ன செய்யும் என்பதற்கான எச்சரிக்கை வரலாறாக உயிர் தப்பிய மரிச்சபி மக்களின் வாக்குமூலம் திகழ்கிறது.
பத்து லட்சம் கரங்களை நீட்டி வரவேற்கிறோம் என்று சொன்னதை நம்பி வந்த அப்பாவி பட்டியல் ஜாதியினரையே அத்தனை கரத்திலும் ஆயுதத்தை ஏந்திச் சென்று கொன்று குவித்திருக்கிறார்கள். இப்போது அத்தனை கரங்கள் கொண்டு வராதே என்று கேரளத்தில் தடுக்கிறார்கள்.
இஸ்லாமிய நாடுகளின் அடக்குமுறையில் இருந்து தப்பி வந்த சிறுபான்மை அகதிகளுக்கு குடியுரிமை கொடுத்து அங்கு தங்க வைக்கும் திட்டம் இருந்தால் முதலில் எல்லாக் கைகளையும் மத்திய அரசு நன்கு கவனித்தாகவேண்டும்.
ஓரிடத்தில் கிடை அமைக்கும் முன் ஓநாய்களை அந்தப் பகுதியில் இருந்து விரட்டியடிப்பது மிகவும் அவசியம் என்ற எளிய உண்மையை இந்தப் புத்தகம் நமக்குத் தெரிவிக்கிறது.
(ஜோதிர்மய மண்டல், சஃபல் ஹல்தர், சுக்ராஞ்சன் சென் குப்தா, நிரஞ்சன் ஹல்தர், சாக்ய சென், மன கோல்தர், சந்தோஷ் சர்கார், காந்தி கங்குலி, மனோரஞ்சன் ப்யாபாரி ஆகியோ மரிச்சபி படுகொலையின், நேரடி சாட்சிகளின் சொந்த அனுபவங்களின் தொகுப்பாக இந்த நூல் உருவாகியிருக்கிறது.நூலாசிரியர் தீப் ஹல்தர் இந்தியா டுடே –எக்ஸிக்யூட்டிவ் எடிட்டராக இருக்கிறார்)
******
இது தமிழில் எழுதப்பட்ட சுருக்கமான விமரிசனம். விரிவான விமரிசனம் வேண்டுமென்றால் புத்தக அட்டைப் படத்தின் கீழே இருக்கிற சுட்டியைக் க்ளிக் செய்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட விமரிசனத்தைப் படிக்கலாம். 

இந்தப் புத்தகம் இந்தப்புது ஆண்டில் நான் வாசிக்க எடுத்துக் கொண்டிருக்கிற முதல் புத்தகம். வாசித்த பிறகு எனக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பதிவு செய்ய வேண்டிவரலாம்! ஒரு முன்னாள் மார்க்சிஸ்டாக, டோளர்களின் கொலைவெறி எப்படிப்பட்டது என்பதை பக்கத்து வீடான கேரளாவில் கண்ணூர்ப்பகுதியில் நடந்த, இன்னும் நடந்து கொண்டே இருக்கிற  கொலை வெறித் தாண்டவங்களில் இருந்து நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறேன்.

கிண்டில் வாசிப்பில் எனக்கிருக்கும் மனத்தடைகளை ஒதுக்கிவைத்து விட்டு ஒரு கிண்டிலை விரைவிலேயே வாங்கிவிடுவேன் என்றே இந்தப்புத்தகத்தை வாசிக்க எடுத்துக் கொண்டதிலிருந்து தோன்றுகிறது.

மீண்டும் வேறொரு புத்தகத்துடன் இந்தப்பக்கங்களில் சந்திப்போம்.

Sunday, September 15, 2019

புத்தகங்கள்! படிக்க விரும்புகிறவை!

புத்தக வாசிப்பு என்பது என்னைப்  பொறுத்தவரை,  கட்டுப் பெட்டியாக ஒரு கூட்டுக்குள் இருந்து விடாமல் சிறகு விரித்துப் பறக்கிற மாதிரியானதொரு அனுபவம்! ஒரு குறிப்பிட்ட எல்லை,  ரசனை என்பதைத் தாண்டி ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாய் சிறகுகளுக்குக் கீழே தெரிகிற நிலப்பரப்பும் கண்முன்னே விரிந்து பறந்து கிடக்கிற வான்வெளியுமாக, வாசிப்பு என்பது நம்மையும் விரிவடையச் செய்கிற ஒரு அற்புதமான அனுபவம்.



இன்றைக்கு இணையத்தில் புதிய விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில், இந்தப் புத்தகத்தைப் பற்றிய வீடியோக்கள் சில கிடைத்தன. கூடவே Google Books தளத்தில் இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு எல்லைக்குட்பட்ட பக்கங்களைப் படிக்க முடிந்தது. முன்னுரை முடிவுரை தவிர்த்து 14 அத்தியாயம் மொத்தம் 368 பக்கம்! இந்தியாவில் விலை 1657 ரூபாய் என்பது மட்டும்தான் மிகவும் நெருடலாக இருக்கிறது. இங்கே  நண்பர்கள் பலர் அமேசான் கிண்டில் வாங்கி விட்டுப் பயன் படுத்தாமலோ பயன்படுத்தத் தெரியாமலோ வைத்திருப்பதை பார்த்ததனாலோ என்னவோ இதுவரை எனக்கு  கிண்டில் வாங்கும் யோசனை கூட வரவில்லை. முன்னர்  டெஸ்க் டாப் என்றிருந்தது ஆறேழு வருடங்களாக லேப்டாப் என்றானது மட்டும் தான் முன்னேற்றம். 


எதற்காக இந்தப்பல்லவி என்கிறீர்களா? இந்தமாதிரி கொஞ்சம் உருப்படியான விஷயங்களைப் படிப்பதற்கு கிண்டில் அன்லிமிட்டட்  உபயோகமாக இருக்குமே என்கிற ஒரே ஆதங்கம், யோசனைதான்!  


இங்கே ஒரு 9 நிமிட வீடியோவில், புத்தக ஆசிரியர் லாரி டயமண்ட் , புத்தகத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறார்.  ஒரு 77 நிமிட ஆசிரியரின் அறிமுக உரையைப் பார்க்க கேட்க  

“In earlier reverse waves, military coups were the main method of the democraic recession. Not today. The death of democracy is now typically administered in a thousand cuts. In one country after another, elected leaders have gradually attacked the deep tissues of democracy—the political independence of the courts, the business community, the media, civil society, universities, and sensitive state institutions like the civil service, the intelligence agencies, the military, and the police.” 

“Ultimately, what sustains democracy is a deep and unconditional belief in its legitimacy. Unless a country’s people and politicians are unconditionally committed to democracy as the best form of government—one worth obeying and defending even when their preferred parties, candidates, and policies lose out—democracy will rest on tenuous footing. Then, any crisis could topple it.” 

1. Begin to demonize the opposition as illegitimate and unpatriotic
2. Undermine the independence of the courts
3. Attack the independence of the media (recall Trump’s tweet that America’s biggest enemy is not Russia, ISIS, or North Korea, but our own news media)
4. Gain control of any public broadcasting
5. Impose stricter control of the internet
6. Subdue other elements of civil society
7. Intimidate the business community
8. Enrich a new class of crony capitalists
9. Assert political control over the civil service and the security apparatus
10. Gerrymander districts and rig the electoral rules
11. Gain control over the body that runs elections
12. Repeat steps 1 to 11

என்று நூலாசிரியர் புத்தகத்தில்  சொல்வதாக Good Reads தளத்தில் வந்திருக்கும் ஒரு விமரிசனத்தைப் படித்தபிறகு இந்தப் புத்தகத்தை நான் படிக்க விரும்புகிற பட்டியலில் சேர்த்தாயிற்று! ப்பூ! இதெல்லாம் மேட்டரா? 2014 தேர்தலில் நரேந்திர மோடி ஜெயிப்பதற்கு முன்னாடி இருந்தே காங்கிரசும் மற்றவர்களும் சொல்லிவருகிற அதே பல்லவி தானே என்று கேட்கிறீர்களா? முழுசாய்ப் படித்துவிட்டு வந்து பதில் சொல்கிறேன்!!  

எப்போது நேரம் வாய்க்கும் என்பது அடுத்த கேள்வி .

**இது இந்தப்பக்கங்களில் 400வது பதிவு. இந்த வருடத்தில் எழுதிய 314வது பதிவு என்பது வெறும் தகவல் மட்டுமே. இந்தப் பக்கங்களில் எழுத ஆரம்பித்து டிசம்பர் 2018 எழுதிய 6 பதிவுகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், 2009 டிசம்பரில் இருந்து 2018 நவம்பர் முடிய உள்ள பத்தாண்டுகளில் எழுதிய மொத்தப் பதிவுகளே 80 தான் என்பதும், 2019 பிப்ரவரிக்குப் பிறகே இந்தப் பக்கங்களுக்கு வாசகர்களுடைய வருகை அதிகரித்தது என்பதும் தான் முக்கியமான விஷயம்!  

நன்றி நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்.     

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)