Showing posts with label மார்கெட்டிங். Show all posts
Showing posts with label மார்கெட்டிங். Show all posts

Wednesday, February 26, 2020

இட்லி தோசை மாவுதான்! அதுவே வெற்றிகரமான தொழிலாக!

ஒரு தொழிலை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக வளர்ச்சியுடன் நடத்துவது மிகவும் கஷ்டமா? தடங்கல்கள் வந்துகொண்டே தான் இருக்கும், அதையும் தாண்டி என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்கிறார் மணி கிருஷ்ணன். இட்லி தோசை மாவுதான் ப்ராடக்ட்! அதுவும் அமெரிக்காவில் எப்படி ஒரு வெற்றிகரமான வணிகமாக ஆனது என்பதை இந்த 27 நிமிட நேர்காணலில் சொல்கிறார் சாஸ்தா ஃபுட்ஸ் மணி கிருஷ்ணன்.


நம்மூர் யூட்யூப் சேனல்கள் வைக்கும் கொடூரமான தலைப்புக்களை மறந்துவிடுங்கள்! எங்களுக்கு போதிக்கப்பட்ட மார்கெட்டிங் கான்செப்ட் 4Ps product, price, promotion and place, அப்புறம் இன்னொரு 3Ps  people, processes and physical environment  என்று அடுக்கிக் கொண்டே போகிற விஷயங்களை மணி கிருஷ்ணன் மிக எளிமையாக I was in the right place, at the right time with the right population என்று சொல்வது மிக சுவாரசியம். அவர் சொன்னது #3Ps தான் என்பது வெறும் புத்தகப் புழுவாக மட்டுமே சந்தைப்படுத்துவதை படித்துக் கரைத்துக் குடித்த எனக்கு, கொஞ்சம் லேட்டாகத்தான் உறைத்தது. அனுபவமே சிறந்த ஆசான் என்று தெரியாமலா சொன்னார்கள்!! இன்று காலை கண்ணில் பட்ட நல்ல நேர்காணலாக இருந்தது. அதை நடத்திய நவநீத்துக்கு எப்படி என்ன கேட்பது என்று சரியாகப் புரியாவிட்டாலும் மணி கிருஷ்ணன் தெளிவாகப் புரிகிற மாதிரியும்  சொல்லவந்ததை முழுமையாகவும் சொன்னார் என்பது நேர்காணலின் நிறைவான விஷயம்.

இன்று கண்ணில் பட்ட புத்தக விமரிசனம் 

அரசியலையும் திரைப்படங்களையும் தவிர்த்துவிட்டு தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை. கருப்பு வெள்ளை திரைப்படக் காலம் முதல் இணையத் தொடர் காலம் வரை, அறிவியல் தொழில்நுட்பங்கள் அறியாதவர்கள் மற்றும் அன்றாடங்காய்ச்சிகள் முதல், மெத்தப்படித்தவர்கள், பெருந்தனக்காரர்கள் வரை எல்லா காலத்திலும் எல்லா மக்களிடையேயும் இந்த இரண்டு துறைகளும் நீக்கமற ஊடுருவி இருக்கின்றன.
இதில் திரைத்துறை என்பது கேளிக்கைக்கு உரியது என்பதால் அதிகம் பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை என்றாலும் அரசியல் மீதான அதீத ஆர்வம் என்பது சற்றுத் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். இதைக் கருப்பொருளாக வைத்துத் தான் பா.ராகவனின் "கொசு" நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த அரசியல் மற்றும் அதன் மீது உள்ள மோகம் எத்தனை தூரம் சராசரி மனிதர்களுடைய வாழ்வாதாரத்தை பாதித்து விடுகின்றது என்பதை நினைக்கையில் வேதனையாகத்தான் இருக்கிறது
இரண்டு தலைமுறைகளாக அரசியலில் தொண்டர்களாகவே இருந்து விட்ட ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாம் தலைமுறை இளைஞன் ஒருவன் எப்படியாவது தொண்டன் என்னும் நிலையிலிருந்து மேலே எழுந்துவிடுவது என்று ஒரு வைராக்கியத்தோடு முயல்கிறான். இந்த இலட்சியப்பாதையில் கானல் நீராக வந்து போய்விடுகின்ற மாயங்களும் மாயைகளும், அவற்றுக்குச் சமாந்தரமாக இலை மறை காயாகப் பயணிக்கும் அரசியலுக்குள் அரசியல் என்கின்ற தாய விளையாட்டும் தான் இந்தக் கதை.
வாழ்க்கை விழுமியங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு, இந்த அழுக்கடைந்த சாகரத்திற்குள் போராடி நீந்தி, வாழத் தக்கனவாய் பிழைத்துக் கொள்வதே குதிரைக் கொம்பாய் இருக்கின்றது. இதில் கரை சேர்வதென்பது ஒரு சராசரி மனிதனுக்கு தன்னளவில் ஒரு மிகப் பெரிய யுத்தம் தான்.
அரசியலில் முகஸ்துதியும் புறம் பேசுதலும் இரண்டாம் நுழைவாயில். எல்லாத் தொண்டனும் இதைத் தான் செய்வான் என்பது எல்லா அரசியல் தலைவனுக்கும் தெரிந்து தான் இருக்கும். ஆனால் அப்படி அவன் தெரிந்து தான் இருப்பான் என்னும் பால பாடம் கூடத் தெரியாமல் தொண்டர்கள் இருப்பது தான் வருத்தத்திற்குரியது.
ஓர் அளவுக்கு வழக்கொழிந்து போய்விட்ட மிகவும் பழையதான இதே உத்தியை தான் இந்த கதையின் நாயகனும் பயன்படுத்துகிறான். ஆனால் எதார்த்தம் வேறு என்பதை உணர்ந்த வாசகனையும் நாயகனின் நம்பிக்கையோடும் நப்பாசையோடும் காத்திருக்கத் தூண்டுவது தான் இந்தக் கதையும் பெரும் பலம்.
கோப்புகளுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட கடிதத்தை கண்டு பிடிக்க முடியாத போதே, நாயகனின் இயலாமை வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடுகிறது. கதையும் முடிவையும் ஊகிக்க முடிகிறது. ஆனாலும் நம்பிக்கை தான் வாழ்க்கை, தோல்வி வெற்றிக்கான முதல்படி போன்ற கல்லறை வாசகங்களால் ஆனது தானே மனித வாழ்வு? நாயகனும் தன் அடுத்த அடியை இன்னும் சற்று நிதானமாகவும் கவனமாகவும் எடுத்து வைக்க எத்தனிக்கிறான்.
முதல் அத்தியாயம் மட்டும் ஏன் சம்பந்தமே இல்லாமல் கதையில் செருகப்பட்டது என்று புரியவில்லை. அதில் வரும் கதாபாத்திரங்களோ சம்பவங்களோ எந்த வகையிலும் கதைக்குப் பயன்படவில்லை.
ஒரு அரசியல் தலைவர் வீட்டு மருமகளின் பெயரை துர்கா என்பதிலிருந்து சாந்தா என்று மாற்றி வைத்ததாக ஒரு வார இதழில் படித்த ஞாபகம். ( அதாவது எதை மூட நம்பிக்கை என்று சொல்லி அரசியல் செய்கிறார்களோ அதை அடிப்படையாகக் கொண்டு).
அதே போல இந்தக் கதையிலும், மணமகளின் பெயரை சாந்தி என்பதிலிருந்து தூய தமிழ்ப் பெயராக வள்ளி மயில் என்று மாற்றுவதாக முடிவு செய்கிறார்கள். ஆனால் இறுதிவரை அவள் சாந்தி என்றே அழைக்கப்படுகிறாள்.🤣
எத்தனை அபத்தம். இப்படித்தான் அரசியல் கட்சிகளும், அவர் தம் கொள்கைகளும் கூட பெரும்பாலும் அபத்தமாக இருக்கின்றன. அரசியல் கோட்பாட்டு நூலின் முதல் விதி "தன்னலம்" தான். மீதமெல்லாம், இசைவாக்கம் அடைதலும், தக்கன பிழைத்தலும் துளியளவு அதிர்ஷ்டமும் தான்.


 கிழக்கு வெளியீடு விலை ரூ.110/- என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமோ?

மீண்டும் சந்திப்போம்.  

Monday, July 15, 2019

ரங்கராஜ் பாண்டே! மார்கெட்டிங் மன்னன்! ப்ராண்ட் வால்யூ!

ம்முடைய ஊடகச் செல்லம் ரங்கராஜ் பாண்டேவை கொஞ்ச நாளாக இந்தப்பக்கங்களில் மறந்து போய்விட்டேனா என்ன?! இந்த வீடியோவில் நரேந்திர மோடியை மார்கெட்டிங் மன்னன் என்கிறார்! மார்கெட்டிங் மன்னன் என்றால் எப்படி? பாண்டே சொல்கிற மாதிரி எதைவேண்டுமானாலும் விற்றுவிடுவார் என்பது எந்த அளவுக்கு உண்மை? எதற்கும் முந்தைய பதிவை ஒரு முறைக்கிரு முறை   வாசித்து விடுங்கள் இங்கே பாண்டே மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருப்பது வேறு சப்ஜெக்ட். போகிற போக்கில் நரேந்திர மோடியைப் பற்றி ஒரு passing comment ஆகச் சொல்லிவிட்டு, தான் எடுத்துக் கொண்ட  சப்ஜெக்டைத் தொடர்கிறார் என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.


ன்னதான் மார்கெட்டிங் மன்னன்,  வித்தகர் என்று சொன்னாலும், மார்கெட் செய்யப்படுகிற பொருள் தரமாக இல்லாவிட்டால் எத்தனை நாள் வண்டி ஓடும்? இதுதான் அந்தப் பதிவில் வெளிப்படையாக சொல்லப்படாத மையப் பொருளாக இருந்தது. ஒரு brand  உருவாகிற விதம் வேறு, அதை brand positioning  என்று நிலை நிறுத்துவது வேறு.என்பதை இங்கே சுருக்கமாகச் சொல்லியிருந்ததை நினைவு படுத்திக் கொள்ள வேண்டியும் இருந்தது. நம்மூரில்  அரசியலும் சரி, மார்கெட்டிங், வணிகம் இவைகளும் சரி,  கொள்கை கோட்பாடு என்று uptodate ஆகத் தங்களை வைத்துக்கொள்வதும்  இல்லை,  வளர்த்துக் கொள்வதும் இல்லை! விடுதலையடைந்து 72  ஆண்டுகள் ஆனபின்னாலும் கூட நமக்கும் சரி நம்மையாளுகிற மக்கள் பிரதிநிதிகளுக்கும் சரி, ஜனநாயகம், நாடாளுமன்ற நடைமுறைகள் எதுவும் தெரியவே இல்லை!  சட்டத்துக்கு உட்பட்டு நடப்பது என்பது நம்மூர் அரசியல்வாதிகளுக்குப் பழக்கமே இல்லாமல் போனதில் நம்முடைய பங்கு ஒன்றுமே இல்லையா? 

" A brand is the set of expectations, memories, stories and relationships that, taken together, account for a consumer’s decision to choose one product or service over another."

பிராண்ட் என்றால் என்னவென்று  இப்படித் தன்னுடைய  கருத்தாக சேத் கோடின் சொல்கிறார்!

இந்த அம்சத்தை முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். சேத் கோடினுடைய இந்தப்பதிவு, பிராண்ட், பிராண்ட் இமேஜ், அப்புறம் சந்தைப் படுத்தும் உத்திகள் குறித்து கொஞ்சம் யோசனைகளைக் கிளப்பி விட்டது.

சேத் கோடின் இந்தப் பதிவில் சுருக்கமாக சொல்வது இது தான்! மார்கெடிங் உத்தியில், நம்மிடம் ஏற்கெனெவே இருப்பதைப் பற்றி, அல்லது உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளைப் பற்றிய அதிருப்தியை எழுப்புவதன் மூலம் தங்களுடைய பொருட்களைத் தள்ளி விடுகிறார்கள்! நாம் உபயோகித்துக் கொண்டிருப்பதில், நாம் சந்தோஷப் படக் கூடியது அனேகமாக இல்லை என்று சொல்லும் போது, மறைமுகமாகத் தங்களுடைய தயாரிப்பு அப்படி சந்தோஷத்தைத் தரும் என்று சொல்கிறார்கள். இப்படிப் பட்ட விளம்பரங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? 

வாடிக்கையாளருடைய திருப்தி என்பது இங்கே, பெயருக்கு மட்டுமே என்பது தான் உண்மை! இப்படி எழுதியது அக்டோபர் 2010 இல்! இங்கே வாடிக்கையாளர் என்ற இடத்தில் வாக்காளர் என்று வைத்துப்பார்த்தால் இதுவும் அரசியல் பதிவு ஆகிவிடும்.

மீண்டும் சந்திப்போம்.
   

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)