முந்தைய பதிவில் நெல்லைத்தமிழன் எழுப்பியிருந்த கேள்வி நிறையவே யோசிக்க வைத்தது! எவ்வளவு யோசித்தாலும் விடையென்னவோ இருகோடுகள் தத்துவம் தான்! இங்கே தங்கள் தரப்பு பலவீனங்களை மறைக்க எதிராளியின் பலவீனத்தை ஓங்கித் தம்பட்டம் அடிப்பது தமிழக அரசியலின் வாடிக்கையாகவே ஆகிவிட்டது. இந்த வீடியோவின் தலைப்புக்கும், உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லை!
//"விஜயகாந்த் வளர்த்த தேமுதிகவை ஏன் சுதீஷும், பிரேமலதாவும் அழிக்கிறார்கள்?" : ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்.// - இந்தக் கேள்வியே எனக்கு அபத்தமாகவும், ராதாகிருஷ்ணன் அவருடைய briefஐத் தாண்டிக் கேட்பதாகவும்தான் தோன்றுகிறது. ராதாகிருஷ்ணன் விருப்பத்துக்கு தேதிமுக கட்சி நடத்தமுடியுமா? அதுக்கு அவர்தான் புதுக் கட்சி துவங்கணும்.
பிரேமலதாவுக்கு க்ளேரிட்டி ஆஃப் தாட் இருக்கு. என்னைக் கேட்டால் ஸ்டாலினைவிட தெளிவாக பதில் சொல்றார். ஸ்டாலின் இன்னும் எழுதிக்கொடுப்பதை வாசிப்பவராகத்தான் இருக்கார்.
பிரேமலதாவுக்கு க்ளேரிட்டி ஆஃப் தாட் இருக்கு. என்னைக் கேட்டால் ஸ்டாலினைவிட தெளிவாக பதில் சொல்றார். ஸ்டாலின் இன்னும் எழுதிக்கொடுப்பதை வாசிப்பவராகத்தான் இருக்கார்.
நெல்லைத்தமிழனும் இதை வாசித்துக் கொண்டிருக்கிற நண்பர்களும் புரிந்துகொள்ளவேண்டியது மேலே உள்ள கேள்வியிலேயே பதிலாகவும் இருக்கிறது. வாலறுந்த நரி கதையில் அது மற்றநரிகளிடம் வாலறுந்து இருப்பது தான் அழகு என்று சொல்வதுபோல நேரடியாகச் சொல்லாமல், இப்படி வால் இருப்பதே அசிங்கம் என்று பழித்துச் சொல்வதற்கு, கைநீட்டி கவர் வாங்குகிற ஊடகங்கள் இங்கே பிராக்சியாகக் கூவுவது தான் கதைக்கும் நடப்புக்கும் உள்ள வித்தியாசம்!
இதற்கு மேல் இதைப்பற்றி எழுதிக்கொண்டே போனால் எனக்கு தேதிமுக முத்திரை குத்திவிடுவார்கள்!
அழகிரியால் மதுரையில் போட்டியிட தயங்கும் திமுக?
விருதுநகரில் நிறைந்த அமாவாசையில் தென்மண்டல மாநாடு நடத்திக் காட்டிய தி மு கழகம் அழகிரி என்ன செய்வாரோ என்ற கலக்கத்தில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உ வாசுகிக்கு தாரை வார்க்கவிருப்பதாக ஹிந்து நாளிதழ் செய்தி சொல்கிறது. சட்டசபைத் தேர்தலில் வாசுகி மதுரை தொகுதி ஒன்றில் ம ந கூட்டணி வேட்பாளராகப் போட்டி இட்டு 13000 சொச்சம் வாக்குகள் வாங்கினார் என்று ஞாபகம் வருகிறது.
திமுகவினர் சிலர் கூறியதாவது: மதுரையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஸ்டாலின் தயங்காமல் திமுக வேட்பாளரை நிறுத்தலாம். மதுரையை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவதாக பரவும் தகவலால் கட்சியினர் விரக்தியில் உள்ளனர். ஒருவேளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் கட்சியினரின் ஒத்துழைப்பு இருக்குமா என்பது சந்தேகமே என்றனர்.
ஆட்டம் பாட்டம் அவதூறுமழை மண்டல மாநாடு மெகாகூட்டணி.........
எல்லாமே பதவிக்குத்தாண்டா!