Showing posts with label ஓடவும் வேண்டாம். Show all posts
Showing posts with label ஓடவும் வேண்டாம். Show all posts

Monday, March 9, 2020

கரோனா தொற்று! ஓடவும் வேண்டாம், ஒளியவும் வேண்டாம்!

கரோனா வைரஸ் தொற்று அங்கே இங்கேயென்று ஆட்டம் காட்டிவிட்டு இந்தியாவுக்குள்ளும் நுழைந்து விட்டது. அலட்சியமாக இருப்பது தனக்கும் சுற்றி உள்ளவர்களுக்கும் பெரும் கேடு என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய தருணம் இது . மத்திய மாநில அரசுகள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து இந்த விஷயத்தில் செயல்படுகிறார்கள் என்றே நான் நம்புகிறேன்.


உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கிற ஒன்றரை நிமிட வீடியோவில் மிக எளிமையான முன்னெச்சரிக்கைகள் என்னென்ன என்று சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். இப்போது அலைபேசிகளில் சுகாதாரத்துறை சில குறிப்புக்களை ஆங்கிலத்தில் சொல்வதைக் கேட்டாலும் போதும். வரும்நாட்களில் பிராந்திய மொழிகளிலும் வரும் என்று நம்புகிறேன்.    

1. கைகளை சுத்தமாக  வைத்துக்கொள்வது முக்கியம்.  சோம்பல் கொள்ளாமல் பலமுறை சுத்தம் செய்து கொள்வது முக்கியம். Hand Sanitisers கைவசம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.சானிடைசர் இல்லையா? இருக்கவே இருக்கிறது லைஃபாய்  சோப், நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்துகொண்டால் போதும்.  

2. இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டை அல்லது துண்டால் பொத்திக்கொண்டு செய்வது அவசியம்.  இருமல் தும்மலோடு கைகளை கண் மூக்கு பகுதிகளைத் தொடாதீர்கள்! கைகளை மறுபடி சுத்தம் செய்துகொள்வதும் அவசியம்! இதோடு காய்ச்சலோ, மூச்சுவிட சிரமமாக இருப்பதாகவோ  உணர்ந்தால் தயங்காமல் மருத்துவரிடம் காண்பித்து தகுந்த ஆலோசனையை பெறவும். வீட்டிலேயே காய்ச்சலை அறிய கருவிகள் நிறையக் கிடைக்கின்றன. வெறும் காய்ச்சல் என்றாலும் ஒருநாளைக்கு இருமுறை டெம்பெரேச்சர் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

3. அதிகக் கூட்டம் உள்ள இடங்கயக் ள்,  பயணங்களைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.

4. அரசு சுகாதாரத்துறை வெளியிடும் எச்சரிக்கைகளைத் தவறாமல் பின்பற்றுவது நல்லது. அரசின் முயற்சிகளை ஏளனம் செய்யாமல், வதந்தி பரப்பாமல் இருப்பது மிகமிக நல்லது.

5. மாஸ்க் அணிவது சாதாரண நிலைகளில் அவசியம் இல்லை. இருமல் தும்மல் தொடர்ந்து இருந்தால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்தாமல் இருக்க அணிவது நல்லது. பானு கோம்ஸ் கொஞ்சம் வருத்தப் பட்டு ஒரு முகநூல் பகிர்வில், மாஸ்க் அணிந்த ஒருவர் கர்மசிரத்தையாகக் கழற்றித் தும்மிவிட்டு மறுபடி அணிந்து கொண்டது போலாகி செய்வதற்கு மாஸ்க் அணியாமலேயே இருந்துவிடலாம். 

நீண்டபட்டியலாக இதை வளர்த்துக் கொண்டு போக வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். மருத்துவ மனைகளில், இணையதளங்களில் வேண்டிய அளவு முன்னெச்சரிக்கைகள், தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் எழும்போது செய்யவேண்டியவைகள் என்று கிடைக்கின்றன. பதற வேண்டியதில்லை தான்! அதற்காக  அலட்சியமாக இருந்துவிடவும் வேண்டாமே!

கொஞ்சம் சுதாரிப்புடன் இருந்தாலே போதுமானது எங்கே தொற்றிக்கொள்ளுமோ, சீரியல் பார்க்க விடாமல் சோஷியம் மீடியாவில் அரட்டையடிக்க விடாமல் தனிமைப்படுத்திவிடுவார்களோ என்று ஓடவும் வேண்டாம்! ஒளியவும் வேண்டாம்!

மீண்டும் சந்திப்போம்.                    

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)