2010 ஜூனில் அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் லட்லம், இன்னொரு எழுத்தாளரோடு சேர்ந்து எழுதிய The Hades Factor புதினத்தை அறிமுகப்படுத்துகிற மாதிரி என்று கூடச் சொல்லமுடியாது, முழுக்கதையையும் பதிவில் சொல்லியாயிற்று.
Obamadasan Chennai Cho Fans Club
திடீரென்று பன்னாட்டு ஊடகங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் கொரோனா விவகாரத்தில் ஒரே குரலில் மோடி மீது சேற்றை வாரி இரைப்பதன் பின்னணி?
கிட்டதட்ட ஒரு வருடம் முன்பே ஃபைசர், மாடர்னா ஆகிய இரு அமெரிக்க கம்பெனிகளும் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்துவிட்டன.
ஏறக்குறைய அதே காலகட்டத்தில் இந்திய தயாரிப்பான கோவாக்ஸினும் இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலை கழக கண்டுபிடிப்பான இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டும் பரிசோதனைகள் முடியும் நிலைக்கு வந்தன.
பொதுவாக மருத்துவ துறையில் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேடண்ட் செய்யப்பட்டு கொள்ளை லாபத்தில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பின்னரே இந்தியா போன்ற நாடுகளுக்கு தயாரிக்கும் உரிமை வழங்கப்படும்.
அப்படி இருக்கும்போது சம காலத்தில் இந்தியா தயாரானதை மேற்கத்திய உலகம் ஏற்குமா?
இங்கிருக்கும் அவர்கள் கைக்கூலிகள் மூலம் இந்திய வாக்ஸின் எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய தொடங்கினார்கள்.
முதலில் மேற்கத்திய உலகிற்கே முன்னுரிமை கொடுக்க நினைத்த அமெரிக்க கம்பெனிகளுக்கு இடியாக இறங்கியது ஐரோப்பிய தயாரிப்பான ஜான்சன் அண்ட் ஜான்சனின் சிங்கிள் டோஸ் வாக்ஸின்.
அமெரிக்கா தொடங்கி அத்தனை வளர்ந்த நாடுகளும் இந்த புதிய வாக்ஸின் பக்கம் பார்வையை திருப்ப பல நாடுகளில் தன் ஆக்டோபஸ் கரங்களை பரப்பியிருந்த அமெரிக்க நிறுவனங்கள் அதிர்ந்தன.
132 கோடி மக்கள் தொகை கொண்ட நம் இந்திய நாட்டின் சந்தை அவர்கள் கண்களை உறுத்தியது.
ஒரு வாக்ஸின் ₹500/- என்று வைத்தாலும் இரண்டு டோஸ் மருந்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சத்தி முப்பத்திரெண்டு ஆயிரம் கோடி!
விடுவார்களா?
ஃபைசர் நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சனின் தயாரிப்பால் ஏற்பட்ட நெருக்கடியினால் பெரிய மனதுடன் இந்தியாவிற்கு தன் மருந்தை தர இந்த ஆண்டின் தொடக்கத்தில் அணுகியது.
பொதுவாகவே சுதேசி எண்ணம் கொண்ட மோடி அரசு இந்திய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதத்தில் ஃபைசர் நிறுவனத்திற்கு சில நிபந்தனைகள் விதித்தது.
அவ்வளவுதான்! மோடி அரசு மீது தங்கள் முழு பலத்துடன் சேற்றை வாரி இறைக்கத் தொடங்கின இந்த பன்னாட்டு நிறுவனங்கள்.
இதற்கு ஒரு தெளிவான சான்று, இன்று வந்திருக்கும் லான்செட் என்கிற மருத்துவ சஞ்சிகை வெளியிட்டிருக்கும் கட்டுரை.
இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இந்த கொடூர நிலைக்கு மோடி மட்டுமே காரணம் என்பதோடு நிறுத்தாமல் இந்தியா உடனடியாக வாக்ஸினை இறக்குமதி செய்து நிலமையை சீராக்க வேண்டும் என்றும் யோசனையை முன்வைக்கிறது.
மேற்கத்திய நாடுகள் சீனாவை கட்டுப்படுத்த மோடியை ஆதரித்ததும், மோடியின் பாய்ச்சலினால் தங்கள் பொருளாதாரத்திற்கே பாதகம் ஏற்படும் நிலையில் அதே மோடியை வீழ்த்த முனைவதும் மருந்து கம்பெனிகளின் lobbying சக்தியை அறிந்தவர்களுக்கு வியப்பளிக்காது.
சுருக்கமாகத்தான் சொல்லியிருக்கிறார் என்றாலும் விஷயத்தின் ஆணிவேரை மிகவும் சரியாகவே பிடித்திருக்கிறார். கொஞ்சம் மசாலா சேர்த்துத்தான் செய்தியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் பதிவின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கிற இணைப்பில் உள்ள கதைச்சுருக்கத்தை படிப்பதொன்றுதான் வழி!
உயிர்காக்கும் மருந்தைத் தயாரிப்பவர்கள் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்? கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக, போட்டியாளர்களை ஒழிப்பது முதல் படுகொலைகளைச் செய்வதிலும் கூட வல்லவர்கள் என்பது பொய்யல்ல! யாரோ ஒரு எழுத்தாளனின் கற்பனை, அல்லது எத்தனையோ கான்ஸ்பிரசி தியரி, அதில் இதுவும் ஒன்று என்று புறந்தள்ளிவிட்டுப்போவது உங்களுடைய சாய்ஸ்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் குஜராத் சூரத் நகரில் Plague நோய் செயற்கையாகப் பரப்பப்பட்டதில் அமெரிக்கர்களுடைய கரங்கள் பின்னணியில் இருந்ததாகச் செய்தி வந்ததே, நினைவிருக்கிறதா?
மீண்டும் சந்திப்போம்.