திராவிடப்புரட்டு, திராவிட மாயையாக தமிழ்நாட்டில் ஒரு விஷவிருட்சமாகவே வளர்த்துவிடப்பட்டிருப்பதை எதிர்த்து மாரிதாஸ் செய்து வந்த தொடர்முயற்சிகளின் பலனாக ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டதாக உலவ விடப்பட்ட ஒரு பொய்ச்செய்தி அம்பலமானது. ஈவெராவின் பிம்பத்தைக்கட்டமைக்க ஏதுவாக ஊரெங்கும் சிலைகள், அரசுநூலகங்களில் வரிப்பணத்தை வீணடித்து திக,திமுக வரலாறு புகழ் பாடும் புத்தகங்கள் இன்னபிறவற்றோடு, இந்தக் கருமத்தையெல்லாம் பள்ளிமாணவர்கள் பாடமாகவும் படித்தாகவேண்டும் என்றும் திணித்தார்களே, அந்தப் பாடத் திணிப்பு, நீதிமன்றத்தால் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவாகியிருக்கிறது. மாரிதாஸ் மற்றும் குழுவினரால் நல்லதொரு ஆரம்பம்!
வீடியோ 13 நிமிடம் ஈவெரா பெயருக்குப் பின்னால் நடந்து வரும் வேறுசில தகிடுதத்தங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே!
2021 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்கிற சர்வே / கருத்துக்கணிப்பை குமுதம் ரிபோர்ட்டர் வெளியிட்டிருக்கிறது. இதன்மீது தனியாக என்னுடைய கருத்து எதையும் சொல்லப்போவதில்லை. சாம்பிள் சைஸ் 58500 என்பது உண்மையிலேயே பெரியது தான்! அதேபோல 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்ததைவிட அதிமுகவின் எடப்பாடியார் தனது வலுவான இருப்பையும், அதிகரித்துவரும் செல்வாக்கையும் சொல்லியிருப்பதுமே கூட ஏற்றுக் கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது. என்னுடைய கடந்தகால கள அனுபவங்களிலிருந்து நான் கற்றுக் கொண்ட இரண்டு அடிப்படையான விஷயங்கள்:: 1)தமிழக வாக்காளர்கள் தங்களுடைய உண்மையான சாய்ஸ் இதுதான் என்று இப்படி சர்வே எடுப்பவர்களிடம் பகிர்ந்து கொள்வதே இல்லை 2) இன்னகட்சிக்கு வாக்கு என்று முடிவுசெய்து கொண்டு போகிறவர்களில் கணிசமானவர்கள் வாக்களிக்கும் போது உல்டாவாக வேறேதோ கட்சிக்கு வாக்களிப்பது!.இளைஞர்கள்தான் பெரும்பாலும் இப்படி கடைசிநொடியில் மாறுகிறவர்கள் என்பது கூடுதல் தகவல். கருத்துக்கணிப்புகள் தோற்கிற இடம் எது என்பதை இங்கும், அந்தப்பக்கங்களிலும் பலமுறை சொல்லியிருக்கிறேன்
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி சசிகலா நடராஜன் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.அவரால் செய்யப்பட்ட நியமனங்களும் ரத்து செய்யப்பட்டன.
பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு மாற்றாக ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர்
என்ற பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு அளிக்கப்பட்டன. அதிமுகவின் கட்சி விதிமுறை பிரிவு-20 இன் படி
நடந்து இருந்தால் இந்த நியமனங்கள் சரியானவை.பொதுச் செயலாளர் பதவி வகிப்பவர் இல்லாத போது மாற்று ஏற்பாட்டுக்கான வழிமுறையை இந்த பிரிவு தெளிவாக சொல்கிறது.ஏதாவது காரணங்களால் பொதுச் செயலாளர் பதவி காலியாக இருக்கும் போது,புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரை, முந்தைய பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்த கட்சியின் நிர்வாகிகள் பொதுச் செயலாளரின் பொறுப்புகளை ஏற்று நிர்வகிக்க இந்த விதிமுறை அனுமதிக்கிறது.இடைக்கால ஏற்பாடாக கூட தேர்ந்தெடுக்கப்படாத பொதுச் செயலாளரை நியமினம் செய்ய முடியாது என்பதே இதன் பொருள்.
ஒருங்கிணைப்பாளர் மற்றும.இணை ஒருங்கிணைப்பாளர் நியமனங்களில் தவறு இல்லை;ஆனால், அவை நிரந்தரமானவைகளாக ஆக முடியாது.( பொதுச் செயலாளர் பொறுப்புக்கு மட்டுமின்றி இடைக்கால நிர்வாக ஏற்பாட்டுக்கும் கட்சி விதிமுறைகள் படி திருமதி நடராஜன் தகுதியற்றவர்.ஏனெனில், அவர் முந்தைய பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் கட்சியின் எந்த பொறுப்புக்கும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.) ஆனால், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை கொண்ட ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் உருவாக்கியது மட்டுமின்றி பொதுச் செயலாளர் என்கிற பதவியையே நீக்கிவிட்டதாக ஓ.பன்னீர் செல்வம்,எடப்பாடி பழனிசாமி தரப்பு சொல்கிறது.அதிமுக அமைப்பு விதிமுறைகளில் மாற்றி அமைக்க பொது குழுவுக்கு அதிகாரம் உண்டு என விதிமுறை 43 கூறுகிறது.
அந்த அதிகாரத்தின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவிக்கு அவசியமில்லை என்ற திருத்தம் செய்யப்பட்டு இருக்குமால் அது தவறு.ஏன்எனில்,அதே விதி எண் 43 தான் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை அடிப்படை உறுப்பினர்களுக்கு மட்டுமே உண்டு என்ற விதிமுறையைத் தவிர மற்ற விதிமுறைகளை மாற்றி அமைக்க மட்டுமே பொதுக் குழுவுக்கு அதிகாரம் உண்டு என்கிறது.
அதாவது, பொதுச் செயலாளர் பதவி குறித்த எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் பொதுக் குழுவுக்கு இல்லை.மேலும்,பொதுச் செயலாளர் விஷயத்தில் திருத்தங்கள் செய்ய பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்ற விதி எண்-43 அதற்கான காரணத்தையும் தெளிவு படுத்துகிறது.அதாவது,பொதுச் செயலாளரே அதிமுக என்ற கட்சி அமைப்பின் அடித்தளம்;அதனால், அதில் திருத்தம் செய்ய பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்கிறது.அந்த அம்சத்தை கொண்டு பார்த்தால் பொதுச் செயலாளர் என்னும்பதவியையே நீக்கிவிட்டதாக சொல்வது அதிமுகவின் அடித்தளத்தை தகர்த்து விட்டதாக ஆகிவிடும்.எனவே, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தற்காலிக ஏற்பாடு.ஆனால், கட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டது. சரியானது.தேர்தல் ஆணையம் இந்த புதிய ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்து இருப்பதில் குறை காண முடியாது!
சாணக்யா சேனலில் கோலாகல ஸ்ரீனிவாஸ் சசிகலா புராணம் எடுபடாது என்று இன்றைக்குப்பேசும் வீடியோ முதல் 39 நிமிடம் வரை அடுத்த 16 நிமிடம் மேற்கு வங்க அரசியல் என மொத்தம் 55 நிமிடம். ஆர்வம் இருக்கிற நண்பர்கள் அவசியம் பார்க்கப் பரிந்துரை செய்கிறேன்,
தேர்தல் களம் வேகமாகத் தயாராகி வருகிறதோ, இல்லையோ ஊடகங்களும் ஊடகக்காரர்களும் தயாராகிக் கொண்டு வருவது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
ஆரம்பித்த நாட்களில் இருந்தே காங்கிரஸ் ஆதரவு வழவழா ஊடகமாகவே இருக்கும் குமுதம் இதழில் ரங்கராஜ் பாண்டே வாசகர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போகிறார் என்பது இந்தத் தேர்தல் நேரத்து வினோதம். பாண்டே தனியாக யூட்யூப் சேனலில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துவருகிறார்! தெரியும்தானே!
தராசு! தமிழில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட புலனாய்வு வார இதழ்! காலச் சூழ்நிலை தராசுக்குப் போட்டியாக ஏராளமான இதழ்கள் வெளிவந்தநிலையில் தராசு தன்னுடைய மவுசை இழந்தது. ஆனால் தராசு ஆசிரியர் ஷ்யாம் இப்போது தொலைக்காட்சி ஊடகங்களில் கருத்துச் சொல்கிறவராக மீண்டுவந்திருக்கிறார்.
முகம் தெரியாத செய்தியாளர்கள் எங்கெங்கிருந்தோ காப்பியடித்துப் போடப்படுகிற செய்திகள் மொழிக்கு ஒரு முகம் வைத்திருக்கிற ஒன் இந்தியா தமிழில் ஜெயலலிதா பார்முலா அதாவது விடுதலைச் சிறுத்தைகள், மதிமுகவுக்கு வழங்கும் இடங்களில் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க முடிவு செய்துள்ளதாம் திமுக தலைமை. தீர ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவாம் இது என்று முனகுகிறது!
மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் ஆக்கிரமிப்பையும் மீறி சில அதிகாரிகள் ஊடக வெளிச்சத்துக்கு அதிரடியாக வருவதும் கூட தேர்தல் நேரத்து வினோதம்தான்!
செயற்கையான ஊடக வெளிச்சமோ கைதூக்கி விடுவதோ இல்லாமல் தன்னுடைய தொடர்ச்சியான முகநூல் பகிர்வுகள், யூட்யூப் காணொளிகள் வழியே அறிமுகமான பிரபலம் மாரிதாஸ். சமீபத்தில் இவர் என்ன சொல்கிறார் என்று பார்த்தபோது ....
ஏன் நரேந்த மோதி அவர்கள் மீண்டும் பிரதமராக வரவேண்டும் அதற்கு எனது பிரச்சாரத்தை இன்னும் 3 தினங்களில் ஆரம்பிக்கிறேன். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக என் குழு செய்து வருகிறார்கள்.
ஆனந்த விகடன் ஆரம்பித்து தி இந்து வரை அனைவரும் குறிபிட்டக் கட்சிக்குச் சார்பாக நரேந்திர மோதி அவர்களுக்கு எதிராக வேலைகளை வரிந்து கட்டிகொண்டு செய்யத் தொடங்கிவிட்டனர். நக்கீரன் எல்லாம் முழு நேரம் தன் பத்திரிகை தொழிலை விட்டுவிட்டு வெறுப்புப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள்.. எனவே இவர்கள் தாண்டி இங்கே நரேந்திரமோதி அவர்கள் ஆட்சிக் காலத்தில் சாதித்தது என்ன என்ற விவரங்களை ஆதாரத்துடன் மக்களிடம் கொண்டு செல்ல அனைவரும் ஒன்று கூடி இணைந்து செயல்படக் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்த பிரதமராக நரேந்திர மோதி அவர்கள் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பும் கட்சிச் சார்பில்லாத தேசியவாதிகள் அனைவரும் எங்களுடன் இணைந்து கொள்ள மாவட்டவாரியாக அழைக்கிறோம். இதில் தனி நபர் துதி பாடி பிரச்சாரம் இருக்காது , நரேந்திர மோதி அவர்கள் என்ன என்ன இந்த 5 வருட ஆட்சியில் சாதித்தார் என்ற விவரங்களை ஆதாரத்துடன் மக்களிடம் கொண்டு செல்வது எமது முயற்சி.
பிரச்சாரம் இருவகையாகப் பிரித்துள்ளோம் ஆட்சிக்கு யார் வரவேண்டும் , யார் வரகூடாது என்பதாக.
இதை கட்சிச் சார்புகளைத் தாண்டி ஒரு உண்மையை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டி நாம் செய்கிறோம். முழு நேரம் அவசியம் இல்லை பகுதி நேரம் கடமையாக கருதி வேலை செய்யும் அர்பணிப்புள்ள நபர்கள் தேவை. மிக முக்கியமான விசயம் எந்த அளவிற்கு நாகரீகமாக நடந்துகொண்டோம், பிரச்சாரங்களை மேற்கொண்டோம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று என்பதால் ஆபாசமாகத் திட்டுவது , தனி நபர் விமர்சனங்கள் செய்வோர், தவறான தகவல்களைப் பரப்பும் நபர்கள் யாரையும் நாங்கள் இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.
திட்டம் மிக எளிது நாங்கள் கொடுக்கும் தகவல் ஒவ்வொரு மாவட்டத்தில் சுமார் 30,000குடும்பத்தில் ஒருவருக்காது கொண்டு சென்று சேர்க்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கீழ் கண்டத் தகவல்களை இந்த எண் +91 9789891491 வாட்சப் அல்லது imsi.maridhas@gmail.com ஈமெயில் செய்யவும்.
பெயர் :
உங்கள் தொலைபேசி எண் :
நகரம் :
மாவட்டம் :
வேலை :
{குறிப்பு :
அடிப்படையில் எந்த வேலைக்கு பொருளதாரம் அவசியம். ஒரு வீடியோ ஆரம்பித்து கூட்டங்கள் நடத்துவது வரை அனைத்திற்கும் இங்கே செலவுகள் இருக்கிறது. எங்களால் முடிந்த வரை சில நல்ல மனிதர்கள் உதவியுடன் பொருளாதாரத் தேவையை இழுத்துக் கொண்டு செல்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் தங்களால் முடிந்த உதவி தொகையை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
வீடியோக்களில் நாங்கள் விளம்பரம் செய்வது இல்லை. கட்சி ஆட்களிடம் நிதி பெறுவது இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
வங்கி விவரம் :
Bank : Axis
Name: Sudesi Awake & Arise Movement
A/C: 918020076356713
IFSC : UTIB0002986
Branch : KK Nagar, Madurai}
இறுதியாக ஒரு உறுதிமொழியை தருகிறேன் "நரேந்திர மோதி அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோரில் நாங்கள் முதல் இடத்தில் இருப்போம்". வந்தே மாதரம்.
முகநூல் பக்கத்தில் நேற்று எழுதியதும்! மாற்றுக் கருத்துக்கும் கொஞ்சம் காதுகொடுங்கள்!
"ரபேல் விமானம்" சார்ந்து தி இந்து பத்திரிக்கை & பத்திரிக்கையாளர் ராம் வெளியிடும் செய்திகள் முழுக்க தவறானது போலியாக ஜோடிக்கபட்டது என்று ஆதாரங்களுடன் தகவல்கள் வருகிறதே? தி இந்து பத்திரிக்கை வாங்கிப் படிக்கும் என் போன்றவர்களுக்கு தங்கள் பதில் என்ன மாரிதாஸ்? {கேள்வி: பிரியா}
எனக்குப் பிடித்த நிர்வாகியும், இந்தச் சமூகத்தினை சரியான எடைபோட்டவருமான பெஞ்சமின் பிராங்கிளின் ஒருமுறை இப்படிக் கூறுகிறார் "Half a Truth is often a great Lie". இன்று இந்த வாக்கியம் திஇந்து அதன் தலைவர் ராம் அவர்களின் பத்திரிக்கை தொழிலுக்குச் சரியாக பொருந்தும். {கட்டாயம் பெஞ்சமின் பிராங்கிளின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும். அதில் சூழ்நிலைகளை அவர் கையாளும் விதமும், தன் சக மனிதர்களை அவர் புரிந்து கொண்ட தெளிவும் மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கிய பாடம்.}
சரி விசயத்திற்குள் வருவோம்:
இன்று The Hindu & ராம் தங்களது முழு மதிப்பையும் இழந்து நிற்கிறார்கள். இந்தச் செய்தித்தாளினை வாங்குவதை, இதன் செய்தி படிப்பதையும் அனைவரும் நிறுத்திவிடுவது என்னைக் கேட்டால் வீட்டுக் குழந்தைகளுக்கு நல்லது. ராம் தன்னுடைய வழக்கமான உண்மையைத் திரிக்கும் வேலையை விட்டுவிட்டு ஒரு படி மேலே சென்று அவதூறு பரப்புவதைத் தாண்டி கூச்சம் இல்லாமல் முழு உண்மை மறைக்கும் வேலையைச் செய்துவிட்டு "உண்மை ஆராய வேண்டும்" என்று தந்திரமாக நழுவுகிறார்.
அதுவும் இதைத் தேர்தல் நேரத்தில் உள்நோக்கத்துடனே வெளியிட்டுள்ளார். இவர் நரேந்திர மோதி எதிர்ப்பில் செய்வதாக சிலர் நினைக்கலாம். அப்படி அல்ல. தி இந்து ராம் பொதுவாக இந்த இந்தியாவை விடச் சீனாவுக்கு நல்ல விசுவாசி என்பது என் கருத்து. அவருக்கு இங்கே தி இந்து என்ற பத்திரிக்கை வியாபாரம் இருக்கு அவ்வளவு தான் மற்றபடி இந்த நாட்டை உடைக்க இந்த நாட்டின் ஒற்றுமையைக் கெடுக்க என்ன செய்யலாம் என்ற சீனாவின் எண்ணம் தான் ஓய்வில்லாத சிந்தனையாக உள்ளது பலகாலமாக. அதை நான் நன்கு பல நேரம் உணர்ந்தவன். சர்வதேச ஊடகங்கள் பலவற்றுடன் இணைந்து இதைச் செய்துகொண்டுள்ளார்.
இன்று அதன் உட்சபட்ச முகத்தைக் காட்டியுள்ளார் ராம் அவ்வளவு தான். அவருக்கு இந்தியா பிடிக்கவில்லை, இந்தியன் பிடிக்கவில்லை, இந்து பிடிக்கவில்லை அதனை நேசிக்கும் எவரையும் பிடிக்கவில்லை. அந்த இந்தியன் இந்து என்ற சிந்தனையை முழுமையாக உடைக்க வேண்டும் என்று கஷ்டப்படுகிறார்.
தி இந்து பத்திரிக்கையை மக்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று என்னைக் கேட்டால் சில எடுத்துக்காட்டு உங்களுக்கு:
1) சுவாதி படுகொலை செய்யப்பட்ட நேரம். பெரும் விவாதமாகிக் கொண்டிருந்த நேரம். ஒரு கட்டத்தில் அது பட்டியலினத்து சமூகம் ராம் என்றும் சுவாதி ஜாதியும் பிடித்து சாதிய விசயமாக உருமாறிக் கொண்டிருந்தது. அப்போது "35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரபரப்பில் மீனாட்சிபுரம்" என்ற கட்டுரையை தி இந்து வெளியிட்டது. நாள்: 03-07- 2016.
அந்தக் கட்டுரையில்
மதம் மாறிய சுலைமான் கூறும்போது, “மேல் வர்க்கத்தினரின் அடக்குமுறை காரணமாக ஒட்டுமொத்தமாக மதம் மாறினோம். மதம் மாறிய பிறகு எங்களது மரியாதை உயர்ந்துள்ளது. முன்பு எங்களை மேல்வர்க்கத்தினர் வா, போ என மரியாதை இல்லாமல் நடத்துவார்கள். இப்போது வாங்கள், போங்கள் என மரியாதையாகப் பேசுகிறார்கள். எங்களது வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது. பலர் வெளிநாடுகளுக்குச் சென்று நல்ல வருமானம் ஈட்டுகின்றனர்."
இந்தப் பகுதி திட்டமிட்டு சொருகப்பட்டிருக்கும். கொலை நடந்ததிற்கும் - கொலைக்குக் காரணமான ராம் மீனாட்சிபுரம் சார்ந்தவர் - அந்தக் கிராமம் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த முக்கிய நிகழ்வுக்கும் தொடர்பு படுத்தலாம். தவறல்ல ஆனால் அந்தச் செய்தியை அந்த அதிர்வைப் பயன்படுத்தி மதம் மாறியதால் தான் நாங்கள் மரியாதையாக நடத்தப்படுகிறோம் என்ற சொருகல் எதற்கு???
இது எதனால் செய்தார்கள்? அதற்கு பதில் வேண்டும் என்றால் அடுத்த 20 நாட்களில் வந்த இன்னொரு செய்தியை பார்க்க வேண்டும் அது "வேதாரண்யம் அருகே கோவில் வழிபாட்டு பிரச்சனையில் 250 தலித் குடும்பத்தினர் இஸ்லாம் மதம் மாற முடிவு" என்று செய்தி. இதை தான் தூண்டிவிட நினைத்தார் ராம் அதை செய்தார்.
இது இதான் தி இந்து செய்யும் வேலை.... எந்தப் பரபரப்பு செய்தியில் எதைத் திணிக்கலாம் என்று கொஞ்சம் கூடக் கூசாமல் தந்திரம் செய்யும் கூட்டம் இது.
2) பக்கத்து நாடுகளின் ஆதரவை இழக்கிறோமா? அப்படி ஒரு ஆர்டிக்கல். நாள்: 30-08-2017, இதை எழுதியவர் சுஹாசினி ஹைதர். {எனக்குத் தெரிந்து ஒரு நாளு இல்லை ஐந்து விசயங்களை வைத்துக் கொண்டு 50,60 கட்டுரைகள் அதைச் சுற்றியே விதவிதமாக எழுதி பத்திரிக்கையாளராக சொல்லி இந்திய அரசு நடவடிக்கைகளை எழுதும் நபர்.}
அதில் விசயம் என்னவென்றால் "இலங்கை ஹம்பனதோட்டத் துறைமுகக் கட்டுமானத் திட்டத்தைச் சீனா கைபற்றிவிட்டது. இது நரேந்திர மோதி அரசு தவறாக செல்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கி இருப்பர்". இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த projects எடுத்துச் செய்ய ஆகும் செலவு குறைந்தது 28,000கோடி. அது அல்ல பிரச்சனை. ஆனால், அதை எடுத்தால் இங்கே செய்தி என்னவாக இருக்கும்? இலங்கை தமிழர்களைக் கொலை செய்கிறார்கள் - மோடி அரசு இலங்கைக்குத் துறைமுகம் கட்ட 28,000கோடி கொட்டி செலவு செய்கிறது? இது தமிழர்களின் மனதைக் காயப்படுத்துகிறது - என்று செய்தியை அப்படியே திரித்திருப்பர்.... ஆனந்த விகடன் எல்லாம் நான்கு பக்கத்துக்குச் சிறப்பு தொகுப்பே போட்டுவிடுவார்கள். அதில் விசேசம் என்னவென்றால் "அடுத்து சீனாவை ராஜதந்திரரீதியில் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதையும் இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று அப்பட்டமாகச் சீனாவுக்கு பல்லக்கு தூக்கும் வேலையை வெளிப்படையாக தி இந்து எழுதியிருக்கும்.
மக்கள் மத்தியில் எப்படி தவறாக பிம்பத்தை உருவாக்குவது என்று தி இந்து அதன் கம்யுனிஸ்ட் கட்சி கூட்டம், சீனாவின் அடிமைகள் கூட்டம் எப்படியாவது இந்த மோடி அரசைக் கலங்கப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதுகிறார்கள் என்பதற்கும் இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
3) நரேந்திர மோடி தலைமையிலான அரசு விளம்பரத்திற்கு ₹1,285 கோடி செலவு செய்துள்ளது RTI மூலம் வெளியாகியுள்ளது. இது 2017ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான செய்தி. இதே செய்தி அதே ஆண்டு டிசம்பரில், அடுத்து 2018 ஆம் ஆண்டு இரு முறை, "3,755 கோடி செலவு" , "4,300 கோடி செலவு" என்று செய்தி கிடைக்காத தகவல் கிடைத்தது போல் வெளியிட்டது. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் இதே செய்தியை Business Daily, தமிழ் இந்து, Frontline என்று தனது பிற செய்தி நிறுவனங்கள் வழியாகவும் வெளியிடப்பட்டது.
இதன் இடையே இதே செய்தியை NDTV போன்ற இன்னும் சில இடதுசாரி பத்திரிக்கைகள் சுமார் 20க்கும் மேற்பட்டவை வித விதமாக அடுத்த அடுத்த மாதங்கள் சரியான இடைவெளியில் வெளியிட்டன. ஆகக் கடந்த 3 வருடமாக இந்தச் செய்தி 2.3 மாதம் ஒருமுறை இல்லை விவாதம் ஆக்கவேண்டும் என்ற விதமாக வெளியிட்டுவந்தன. இதில் தவறு இல்லை. ஆனால் இவர்கள் வெளியிட மறுத்த உண்மை என்னவென்றால்... எதற்காக செலவிடப்பட்டது? எப்படிச் செலவிடப்பட்டது என்பது தான். பலமுறை நான் இதைத் தீவிரமாக எதிர்த்துள்ளேன்.
எந்த டீவி மீடியா மக்கள் நலத்திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த இலவசமாக வேலை செய்யும்? தி இந்து ராம் இலவசமாக விளம்பரம் செய்வாரா அரசின் திட்டத்தை? இல்லை அவர் மகள் லண்டன் Global Markets பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு இங்கே இந்தியாவில் வந்து சேவை செய்வாரா இலவசமாக? ஆக மக்களுக்குத் திட்ட விவரங்களைக் கொண்டு செல்ல அரசு விளம்பரம் செய்வது ஆக அவசியமான தேவை. அது முறையாக நடக்கிறதா என்று விரிவாக ஒரு ஆய்வு அல்லவா ஒரு பத்திரிக்கை செய்தியாக இருக்க வேண்டும்? தி இந்து ராம், NDTV இவை எல்லாம் இதைச் செய்ய விரும்பவில்லை. ஏன் என்றால் இது பத்திரிக்கைகளே கிடையாது, குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தம் மனதில் வைத்துக் கொண்டு செய்யும் உள்ளடிவேலைகள் தவிர வேறு இல்லை.
கொடுமை என்னவென்றால் அரசு விளம்பரத்தில் லாபம் ஈட்டுவதே இவர்கள் தான். அரசு விளம்பரத்தையும் வாங்கிக்கொண்டு அதன் லாபத்தையும் திண்றுவிட்டு - அந்த விளம்பரத்தைச் செய்ததையே ஒரு செய்தியாக எதிர்மறையாகக் கொண்டு சேர்க்கும் அந்த கீழ்த்தரமான செய்தி திரிக்கும் புத்தி இருக்கே அது தான் தி இந்து.
எப்ரல் 2017ல் இந்திய ராணுவம் பாக்கிஸ்தான் எல்லையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றிக் கொண்டிருந்த நேரம் - போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும் போது தி இந்து அந்தச் செய்தியின் இடையே வழக்கம் போல இரு பகுதியை இணைத்தார்கள். அதில் சொல்லப்பட்ட செய்தி "பொதுமக்கள் வெளியேற்றிய ராணுவம் அவர்கள் அன்றாட வேலைவாய்ப்பும் வருமானத்தையும் கணக்கில் கொள்வது இல்லை" என்ற ரீதியில் அந்த பகுதியைக் கோர்த்துவிட்டிருந்தது. ராணுவம் பாக்கிஸ்தான் இந்தியா என்று நாட்டு பற்று எங்கே வருமோ அந்த இடத்தில் இந்தவிதமான இடைச்செய்திகளை இணைத்து அழகாக மட்டப்படுத்தி அந்த இடத்தில் ராணுவத்தினைக் கேள்வி எழுப்பும் வேலையை திஇந்து அழகாக இழுத்துவிட்டுச் செய்யும் எப்போதுமே.
தி இந்து எந்த அளவிற்கு இந்தச் சமூகத்தில் தன் தந்திரமான வெக்கம்கெட்ட நரிதனத்தை காட்டுகிறது என்று, இப்படி என்னால் பல நூறு ஆதாரங்களைக் கொண்டு வர முடியும். அது பத்திரிக்கை சுதந்திரம் என்று ஏன் எடுக்கமுடியவில்லை என்றால் - தனிநாடு கோரும் (ஸ்பெயின்) கேட்டலோனியா விவகாரம் பற்றி வக்காலத்து வாங்கும் விதமாகக் கட்டுரைகள் பல எழுதியுள்ள இதே தி இந்து என்றாவது சீனா ஆக்கரமிப்பில்லுள்ள திபத் பற்றி வாய் திறக்குமா? கிடையாது!! வாய்ப்பே இல்லை. தி இந்து இல்லை ராம் இல்லை அதன் எந்த பிற செய்தி ஊடகவாயிலாகவும் திபத் மக்கள் குரல் வெளியிடப்படாது.
திபத் மட்டும் அல்ல மன்கோலியா, தைவான், ஜிங்ஜியாங் என்று எதைபற்றியுமே தி இந்து எழுதுவதில்லை. ஜிங்ஜியாங் இஸ்லாமியர்களுக்குச் சீனாவின் கம்யுனிஸ்ட் அரசு கொடுக்கும் மனித உரிமை மீறல்கள் சார்ந்து வாயைத் திறக்க கூறுங்கள் இந்த NDTV முதல் தி இந்து வரை? மாட்டார்கள்!
இறுதியாக :
தி இந்து, The Hindu (English), Business Daily, Frontline, Indian Express, NDTV இப்படி ஒரு கூட்டமே இங்கே உள்ளது. அதே போல் தமிழகத்தில் பெரும்பாலான செய்து ஊடகங்களில் இடதுசாரி சிந்தனையாளர்கள் தான் பொறுப்பில் இருப்பர். இந்த பெரும் கூட்டமே இன்று நேற்று அல்ல காலம் காலமாகச் செய்தி துறையைக் கையில் வைத்திருக்கிறார்கள். இதன் பலத்துடன் அரசு பொது துறை நிறுவனங்களை நாசம் செய்தது போதாதென்று நாட்டின் பிரிவினைக்கும் மறைமுகமாக வேலை செய்வர்.
ஆகச் செய்தி நிறுவனங்களில் வேலை செய்யும் பத்திரிக்கையாளர்களையும் சராசரி மீம்ஸ் கிரியேட்டர்களையும் பெரிய வித்தியாசம் பார்க்க தேவை இல்லை. உணர்வைத் தூண்டும் விதமாகச் செய்தி இருக்க வேண்டும் அவ்வளவு தான். அதை ஆராயும் அளவுக்கு எல்லாம் 99% பத்திரிக்கையாளர்களுக்கு நேரம் இல்லை என்பதை விட ஆர்வமோ அக்கறையோ இல்லை என்பது தான் உண்மை. அதை விட அசைக்க முடியாத உண்மை அவர்கள் பெரும்பாலும் சில அரசியல் கட்சிக்கு வேலை செய்கிறார்கள் எனவே தாங்கள் செய்தி வெளியிடுவதை விட தங்கள் எண்ணத்தை மக்களிடம் பரப்ப விரும்புகிறார்கள் என்று தான் கூறவேண்டும்.
கம்யுனிஸ்ட்களுக்கு உத்தரவுகள் இந்த நாட்டின் வெளியில் இருந்து வருகிறது அது நாட்டிற்கு நல்லதல்ல எனவே கம்யுனிஸ்ட் நம்பகமானவர்கள் அல்ல இது காந்தி இவர்களைப் பற்றி கூறிய அசைக்க முடியாத உண்மை. இது இன்றும் 100% பொருந்தும். படித்த நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஊடக சுதந்தரம் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் - தனிச் சட்டம் இயற்றி இந்தச் செய்தி ஊடகங்களைக் கொஞ்சம் ஒடுக்குவது நல்லது.