என் சுவாசக் காற்றே......!
உயிர் வாழ மூச்சு மிகவும் அவசியம்தான் இல்லையா?
அப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வாசிப்பு அனுபவம் தான்! சிலர் வாழ்க்கையைப் படித்தே அறிந்துகொள்கிறார்கள்! வேறுபலருக்கோ, புத்தகங்களை வாசித்தே வாழ்க்கையை அறிந்து கொள்கிற அனுபவம் வாய்க்கிறது.வாசிப்பதில் ஆழ்ந்து லயிக்கும்போது அதை யாருடனாவது பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும் என்ற தவிப்பு, மடி கனத்துப் போன பசுவைப் போல, எழுதத் தூண்டுகிறது.
வாசித்ததும், நேசித்ததுமான சில அனுபவங்கள் இந்தப்பக்கங்களில்!
புத்தகங்கள், கவிதைகள் என்று மட்டுமல்ல, மன வளம் பெருக உதவியாகக் கிடைக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் சுவாசக் காற்றாக!
புத்தகங்கள், கவிதை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எதில் வேண்டுமானாலும், படித்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இன்னும் அதிக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவுமான நுழைவாயில் இது!
வாருங்கள்! பேசுவோம்! இப்படி ஒரு முகவுரையோடு 2009 டிசம்பர் கடைசிவாரத்தில் துவங்கப்பட்ட வலைப்பதிவு இது. என்னவோ சில காரணங்களால் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு 2012 இல் இரு பதிவுகள், 2014 இல் இருபதிவுகள், அதற்குப்பிறகு 2018 டிசம்பரில் 6 பதிவுகள் என்று தொடங்கி இந்த வருடம் தான் தொடர்ச்சியாக, அனேகமாக தினசரியே
புத்தகங்கள், கவிதைகள் என்று மட்டுமல்ல, மன வளம் பெருக உதவியாகக் கிடைக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் சுவாசக் காற்றாக!
புத்தகங்கள், கவிதை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என்று எதில் வேண்டுமானாலும், படித்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இன்னும் அதிக விஷயங்களைத் தெரிந்துகொள்ளவுமான நுழைவாயில் இது!
வாருங்கள்! பேசுவோம்! இப்படி ஒரு முகவுரையோடு 2009 டிசம்பர் கடைசிவாரத்தில் துவங்கப்பட்ட வலைப்பதிவு இது. என்னவோ சில காரணங்களால் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு 2012 இல் இரு பதிவுகள், 2014 இல் இருபதிவுகள், அதற்குப்பிறகு 2018 டிசம்பரில் 6 பதிவுகள் என்று தொடங்கி இந்த வருடம் தான் தொடர்ச்சியாக, அனேகமாக தினசரியே
இந்தப்பக்கங்களில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்து, இந்தப்பதிவுடன்
223 பதிவுகள் என்று வளர்ந்திருக்கிறது.
விடுபட்டுப்போன நண்பர்கள் தொடர்பு மீண்டும் சீராக ஆரம்பித்ததும் பக்கங்களுக்கு வருகை களைகட்ட ஆரம்பித்ததும் இந்த வருட பிப்ரவரியில் இருந்துதான்! 2009 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரையே இந்தப் பக்கங்களுக்கு வந்தவர்கள் எண்ணிக்கை 39025 தான்! நண்பர்கள் வருகை கடந்த ஆறுமாதங்களில் இருமடங்குக்கும் கொஞ்சம் கூடுதலாக ஆகியிருப்பதில் எங்கள்Blog ஸ்ரீராம், தமிழ்மணம் திரட்டி, என்று வெளியே
இருந்து கிடைத்த referral ஆதரவு முக்கியப்பங்கு வகிக்கின்றன.
எங்கள்Blog ஸ்ரீராமுக்கும், தமிழ்மணம் திரட்டிக்கும் நன்றி.
இசைப் பிரியர் ஸ்ரீராமுக்காக ஒரு பாட்டு
எங்கள்Blog வெறுமனே referral ஆக மட்டுமல்ல தன்னுடைய வாசகர்களில் கொஞ்சம் பேரை இங்கே பதிவுகளுக்கு ரெகுலராக வந்து உரையாடுகிற
பங்காளிகளாகவும் அனுப்பிவைத்திருக்கிறது என்பதையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிற தருணத்தில் .........
நண்பர்களிடம் கேட்க விரும்புகிற ஒரு சிலகேள்விகளாக:
இந்தப்பக்கங்களின் உள்ளடக்கம் உங்களுக்குத் திருப்தியாக
இருக்கிறதா? கொஞ்சமாவது பயனுள்ளதாக இருக்கிறதா?
வேறேதாவது மாற்றங்கள் வேண்டியிருக்குமா? என்னென்ன
மாற்றங்கள் வேண்டுமென நினைக்கிறீர்கள்?
வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
உங்கள் பதில்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
