மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி என்பதை இந்தப் பக்கங்களில் #change management என்ற தலைப்பின் கீழ் பார்த்திருக்கிறோம்! மாற்றங்களுக்குத் தயாராக இல்லாத எதுவும் பாழ்பட்டுப் போகும் என்பதையும் காலம் நமக்குப் படிப்பித்துக் கொண்டே வருகிறது இல்லையா?!
பாங்க் ஆப் பரோடா, தேனா பாங்க், விஜயா பாங்க் மூன்றையும் இணைப்பதென மத்திய அரசு உறுதியான முடிவெடுத்துவிட்டது. நேற்றைக்கு ஒவ்வொரு வங்கியின் பங்குகளும் எப்படி swap செய்யப் படுமென்கிற அறிவிப்பும் வந்தாயிற்று. விஜயா வங்கியின் 1000 பங்குகளுக்கு 402 என்றும் தேனா வங்கியின் 1000 பங்குகளுக்கு 110 என்றும் பாங்க் ஆப் பரோடா பங்குகளாக மாற்றப்படும் என்கிற அறிவிப்பும் நேற்றே வந்தாயிற்று.
#வங்கிஊழியர்சங்கங்கள் நிலைமை பாடுதான் திண்டாட்டம்! என்னமாவது செய்தாகவேண்டுமே! #வேலைநிறுத்தம் தான்! வேறென்ன தெரியும் பாவம்?! வருகிற 8.9 இருநாட்கள் #bankstrike
ஸ்டேட் வங்கி, HDFC வங்கி இரண்டுக்கும் அடுத்து மூன்றாவது பெரிய வங்கியாக இந்த மூன்று வங்கிகள் இணைந்த பிறகு ஏப்ரல் முதல் தேதி முதல் இருக்கும். மூன்றாவது இடத்தில் இப்போது இருக்கும் ஐசிஐசிஐ வங்கி பின்னுக்குத் தள்ளப்படும்
இணைப்புக்குப் பின் எழக்கூடிய முக்கியமான பிரச்சினை, #workculture மற்றும் புறக்கணிக்கப் படுவதாக ஊழியர்களிடம் இருந்து எழுவது என்பதுபோக #வராக்கடன்வசூல் செய்வதும், மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தலைமையும் தான்! முந்தைய நாட்களில் வங்கிகளை இணைப்பது என்பது சரியான திட்டமிடல், சரியான தலைமை, சரியான தொடர்நடவடிக்கைகள் என்றெதுவுமே இல்லாமல் செய்யப்பட்டதில் பிரச்சினைகள் எழுந்தது உண்மை. அதற்காக, மறுபடி முயற்சி செய்யவே கூடாது என்று வங்கி ஊழியர்கள் குதிப்பதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? இப்படிச் செய்து தானே சோவியத் யூனியன் மீட்கமுடியாமல் சிதறுண்டு போனது? காம்ரேடுகளுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை என்றால், காம்ரேடுகளும் காணாமல் போய்விடுகிற நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது என்பதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?
இங்கே கீழே சுட்டியில் பங்கு முதலீட்டாளர்களின் ஏமாற்றத்தை மட்டும் முன்னிறுத்திப் பேசுவதும் கூடப் பிரச்சினையைத் தீர்க்க உதவாது. நமக்கு உண்மையில் பிரச்சினை எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை என்பதுதான்!
no comments
2 plus ones