Thursday, April 15, 2021

#கர்ணன் படத்துக்கு #CSகர்ணன் என வைத்திருந்தால் இன்னும் கனப் பொருத்தம்!

கர்ணன் திரைப்படத்தைக் குறித்து உதயநி!தி தெரிவித்த கருத்தை ஏற்று திரைப்படக்குழுவினர் திருத்தம் செய்து இருக்கிறார்களாம்! ஏனடா திருத்தச் சொன்னோம் என்று உதயநிதியே தலையிலடித்துக் கொண்டு ஜகா வாங்கிய மாதிரி ஆகியிருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறது பிபிசி தமிழ்.


1997 என்று முதலில் சொன்னதை இப்போது இப்படி மாற்றி சொன்னதால் என்ன ஆகிவிட்டது? எதனால் உதயநிதி இதை இனிமேலும் பெரிதுபடுத்தவேண்டாம் என்கிறரீதியில் அறிக்கை விட்டாராம்? 

 Murali Seetharaman  மதிப்பீட்டாளர்

 39 நி 
"கர்ணன்" படத்தில் மாரி.செல்வராஜ் - 1990 களின் பிற்பகுதியில் என்று ஒரு கார்டு போட்டாராம்! அதாவது அந்தக் கலவரம் எல்லாம் நடந்தது கலைஞர் ஆட்சியில் என்று அர்த்தம் வருதாம்!
நான் படம் பார்க்கவில்லை -
ஆனால் 1996 ல் கலைஞர் ஒரு மாபெரும் Sweep ல் - தமாகா கூட்டணி, ரஜனிகாந்த் ஆதரவு எல்லாம் பெற்று - ஆட்சிக்கு வந்த அந்த Tenure ல் பல கலவரங்கள் நடந்தன. (1996 - 2001) தென்மாவட்டங்கள் ரத்தக் காடாகக் காட்சியளித்தன.
கலைஞர் ஒவ்வொரு ஜாதியையும், மதத்தாரையும் திருப்தி செய்ய மாவட்டத்துக்கு எல்லாம் தலைவர் பெயரை வைப்பார். ராஜாஜி பார்ப்பனர் என்பதால் அவர் பிறந்த அன்றைய தருமபுரி மாவட்டத்துக்கு மட்டும், எத்தனையோ கோரிக்கை வைத்தும் மறுத்துவிட்டார் என்பது வேறு விஷயம்!
1989 ல் ஆட்சிக்கு வந்தவுடன் திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டம் என்றார். அதற்கு முன்பு MGR திண்டுக்கல்லை அண்ணா மாவட்டம் என்றார் - அதிமுக தோன்றியவுடன் போட்டியிட்டு ஜெயித்த முதல் தேர்தல் திண்டுக்கல் பார்லிமெண்ட் தொகுதி இடைத்தேர்தல் என்பதால்!
கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் அண்ணாதுரையை திண்டுக்கல்லில் இருந்து பிருஷ்டத்தில் ஒரு உதை விட்டு விரட்டி அவரை - அப்போது காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த - செங்கல்பட்டுக்கு அனுப்பி - "செங்கை அண்ணா மாவட்டம்"- என்றார்! திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் - புதுக்கோட்டை பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் ... இப்படி எல்லாம் ஆனது!
இதன் க்ளைமேக்சாக வீரன் அழகுமுத்துக் கோன் மாவட்டம் என்று தென்காசியைத் தலைநகராகக் கொண்டு கருணாநிதி உருவாக்க முயன்ற போது பெரும் கலவரங்கள் உருவாயின.
பிறகு இனி எந்த மாவட்டத்துக்கும்...
எந்தப் போக்குவரத்துக் கழகத்துக்கும்...
தனிநபர்களின் பெயரைச் சூட்டுவதில்லை என்று அரசாங்கமே ஒரு கொள்கை முடிவு எடுத்து...
அதுவரை வைத்த அத்தனை பெயர்களையும் அழிக்கும் அளவுக்கு... தென்மாவட்டக் கலவரங்கள் பெரும் வீச்சை ஏற்படுத்தின. இது கலைஞர் ஆட்சியில் - அதாவது மாரி செல்வராஜ் 'பாஷை'யில் சொல்வதானால்...
1990 களின் பிற்பகுதியில் என்பதை மறுப்பதற்கில்லை!
எனக்கு இந்த மாரி செல்வராஜ், வெற்றிமாறன், பா.ரஞ்சித், அமீர் வகையறா ஆசாமிகளின் மீதெல்லாம் -அவர்களுடைய கலைப்படைப்புகளை வைத்து - பெரிய மரியாதை கிடையாது!
ஆனால் திமுகவினர் இப்போது அவர்கள் மீது பாய ஆரம்பித்து இருப்பது தமாஷாக இருக்கிறது! அதாவது மாரி செல்வராஜ் "நீல" சங்கியாம்!
திமுக ஆட்சியில் கலவரங்கள் நடந்ததாக காட்டிவிட்டாராம்! தலித் இயக்கத்தவரின் அடையாளம் நீலசட்டை - எனவே "நீல" சங்கி! ஆனால் திமுகவினரின் வரையறைப்படி இன்னும் பல நிறங்களில் "சங்கி" கள் உள்ளனர்!
CPM கட்சி - அதன் ராஜ்ய சபா உறுப்பினர் - "சிகப்பு" சங்கி! ஏனென்றால் பாஜக அரசு கொண்டு வந்த
"ஏழைகளுக்கான 10% ஒதுக்கீடு" (EWS) மசோதாவை CPM ஆதரித்தது அல்லவா? அதை ஆதரித்து 'பார்ப்பனர்' T.K.ரங்கராஜன் பேசியபோது - கனிமொழி குறுக்கே வந்து - "என்னங்க இது அநியாயம்?" - என்று கத்திவிட்டும் போனார் அல்லவா? எனவே திமுக வரையறைப்படி CPM - "சிவப்பு" சங்கி!
வேலூர் இப்ராஹீம் போன்ற முஸ்லீம்கள், இந்துக்களின் நியாயத்தை உணர்ந்து பேசுவதால் அவர் "பச்சை" சங்கி!
கேரளாவில் P.C.ஜார்ஜ் என்ற காங்கிரஸ்காரர்-
"லவ் ஜிகாத் என்பது நிச்சயம் பெருமளவில் நடக்கிறது; இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்"- என்று பேசியதால் அவர் கிறிஸ்தவ 'வெள்ளை' சங்கி!
"அம்பேத்கர் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க முன்மொழிந்தார்"- என்று முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி போப்டே பேசியுள்ளார்! எனவே அவர் நீதிபதி கவுன் நிறத்தால் "கறுப்பு" சங்கி!
இன்னும் சீமான் -"தமிழ் தேசிய" சங்கி!
கமல் - "மய்ய"- சங்கி!
ஆக... ஆக... ஆக...
திமுகவினர் பார்வையில்....



நீல சங்கி, சிகப்பு சங்கி, கதர் சங்கி, கறுப்பு சங்கி, பச்சை சங்கி, தமிழ் தேசிய சங்கி, மய்ய சங்கி...
இப்படிப் பலரும் உண்டு!
உண்மையான RSS சங்கியைத் தவிர இப்படிப்பட்ட கலர் கலரான "சங்கி" கள்தான் அதிகம் போல!
ஆனால் திமுகவினர் வசதியாக ஒன்றை மறந்து விடுகின்றனர்! 1999 - 2004 வாஜ்பாய் மந்திரிசபையிலேயே பங்கேற்று காபினெட் மந்திரியாகவே இருந்தாரே - முரசொலி மாறன் - அவர் எந்தவகை "சங்கி"?
ஒருவேளை "திராவிட" சிங்கியோ?

கர்ணன் திரைப்படத்தைவைத்து அதிமுகவை மட்டம் தட்ட நினைத்த திமுகவினரின் சாயம் வெளுத்துப் போனது மட்டும்தான் மிச்சம்! மான்சோலை தேயிலைத் தொட்டது தொழிலாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது , திமுக ஆட்சியில்தான் என்பதை மட்டுமல்ல, ஒவ்வொரு சாதியையும் திருப்திப்படுத்த கருணாநிதி என்னென்ன செய்தார், பிரச்சினை பெரிதானதும் எப்படியெல்லாம் ஜகா வாங்கினார் என்பதையும் இந்த முகநூல் பகிர்வு கொஞ்சம் சுருக்கமாகச் சொல்கிறது.

பாரதத்துக் கர்ணன் கொடையாளி! அர்ஜுனனுடன் கொண்ட பகைமை, துரியோதனனுடன் கூட்டாளி ஆக்கி வைத்தது. அவ்வளவுதான்.ஆனால் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் வகையறா கர்ணன் பெயரைவைத்துத் தங்களுடைய வன்ம அரசியலை மட்டுமே முன்னெடுத்து வருகின்றனர் என்ற முந்தைய கருத்தில் மாற்றமில்லை.

பதிவின் தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? C S கர்ணன் என்று கூகிளிட்டு தேடிப்பாருங்கள்!

மீண்டும் சந்திப்போம்.

4 comments:

  1. சுவாரஸ்யமான சண்டைகள்...    வேறென்ன சொல்ல!

    ReplyDelete
    Replies
    1. இது சுவாரசியமா? குறுகிய அரசியல் உள்நோக்கங்களில் தமிழகமே ஜாதிக்கலவரங்களில் பற்றியெரிந்த காலத்தின் சுவடுகள் அவை. இதில் இருபத்தைந்து வருடங்களுக்குப்பின்னால் ஆறியவடுவைக் கீறிப்பார்க்கிற வேலைக்குப்பின்னால் இருப்பதென்ன என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் ஸ்ரீராம்?

      Delete
  2. இதில் ஒரு வேடிக்கை..
    அப்போது தஞ்சை மாவட்டம் கீழத்தஞ்சை மேலத் தஞ்சை என்று இயங்கிக் கொண்டிருக்க அதை உடைத்து நாகை காயிதே மில்லத் மாவட்டம் என்றார்களே!...

    காங்கிரசைப் பிளக்கும் முயற்சின் போது மட்டும் ராசாசி (ராஜாஜி) மூதறிஞர்.. அதுக்கு அப்புறம் குல்லுகப் பட்டர்...

    நல்லவேளை அப்போதைய நாம கரண - ஞான ஸ்நான சாம்பிராணிச் சடங்குகளில் இருந்து கன்னியா குமரி மாவட்டம் மட்டும் தப்பிப் பிழைத்தது...

    கன்யா குமரிக்கு - அன்னை மேரி என்று புது நாமகரணம் ஆகாமல் போயிற்றே.. என்கிற ஏக்கம் இன்னமும் உண்டு...

    அவள் பண்டாசுரனை வீழ்த்தியவள் என்பது அந்தக் கூட்டத்துக்குத் தெரியாமல் போனது தான் விசித்திரம்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      இந்தத்திரைப்படம் பழைய விவகாரங்களாய்க் கிளறியதில்,அதிமுக மீது சேறுபூச திமுக ரொம்பவே மெனெக்கெட்டதில் கருணாநிதியின் சாதனைகளே பெரும் சோதனைகளாக மாறி ஜகா வாங்கியது மீண்டும் ஜனங்களுடைய ஞாபகத்துக்கு கொண்டுவரப் பட்டிருக்கிறது. பாவம் உதயநிதி! திருத்தம் சொல்லப்போய் தாத்தாவின் சாதனைகளை ஜனங்கள் தெரிந்துகொள்ள உதவியிருக்கிறார்.

      முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், திமுகவை யார் கேள்விகேட்டாலும் அவர்களை சங்கியாக்கிவிடுகிற பெருநோய்த்தொற்றுக்கு உபிக்கள் ஆளாகியிருப்பதுதான்.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)