Showing posts with label எழுத்தாளன் உருவாகும் விதம். Show all posts
Showing posts with label எழுத்தாளன் உருவாகும் விதம். Show all posts

Sunday, October 20, 2019

எழுத்தாளர் தொ மு சிதம்பர ரகுநாதன் பிறந்தநாள் இன்று!

கூகிள் ப்ளஸ் மூடப்பட்டபிறகு இங்கே நிறைய நண்பர்களைத் தொலைத்து விட்டமாதிரியான உணர்வு இன்னமும் என்னை விட்டுப் போகவில்லை என்பதை, BKR என்று அழைக்கப்படும் திரு.ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய வலைப் பக்கங்களில் இரண்டுநாட்களாக அவரது பதிவுகளை வாசித்த பிறகு இன்னும் அதிகமாக உணர முடிந்தது. நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுடைய பிற்ந்த நாள், இன்று அக்டோபர் 20 தொ மு சிதம்பர ரகுநாதனுடைய பிறந்த நாள் என்று அன்றன்றைய நாளின் சிறப்புச் செய்தியாக, அவருடைய பதிவுகளில் பகிர்ந்திருந்ததை இங்கேயும்!   


தோற்றம் 20/10/1923
மறைவு 31/12/2001

எழுத்தாளர் தொ மு சிதம்பர ரகுநாதன் பிறந்தநாள் - இன்று அக்டோபர் 20

தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுதுகிறவர்களானாலும் சரி, தமிழின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்துப் போடுகிறவர்களானாலும் சரி, இணையத்தில் சிறுகதைகளைப் பதிவேற்றம் செய்யும் இணையதளக்காரர்களானாலும் சரி, ஞாபகமாகத் தவிர்த்துவிடும் ஒரு பெயர் தொ.மு.சி. ரகுநாதன். சாகித்ய அகாடெமி விருது பெற்ற அந்தப் படைப்பாளியின் பிறந்தநாள் இன்று. 

இவருடைய தாத்தா சிதம்பரத் தொண்டைமான், புகழ்பெற்ற ஒரு தமிழறிஞர். `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' போன்ற நூல்களை எழுதியவர். ரகுநாதனின் அப்பா தொண்டைமான் முத்தையா, சிறந்த ஓவியர்; புகைப்படக் கலைஞர். அவருக்கும் அவருடைய இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக 1923 அக்டோபர் 20 அன்று  பிறந்தவர் ரகுநாதன். அவருக்கு ஓர் அண்ணன், மூன்று தமக்கையர், ஒரு தங்கை.


இந்திய ஆட்சிப்பணியில் இருந்த எழுத்தாளர் பாஸ்கர தொண்டைமான் இவரின் உடன்பிறந்த சகோதரர். சாகித்ய அகாடமி விருது பெற்ற பேராசிரியர் அ சீனிவாச ராகவன் தொ மு சியின் ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் அமைந்தார். தொமுசியின் முதல் சிறுகதை பிரசன்ன விகடன் என்ற பத்திரிகையில் வெளியானது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு தொமுசி சிறைத்தண்டனை அனுபவித்தார். பின்னர் தினமணி மற்றும் முல்லை என்ற இலக்கிய பத்திரிகைகளிலும் பணியாற்றினார். 

பத்திரிகைத் துறையில் சலிப்பேற்பட்டு சென்னையிலிருந்து மீண்டும் நெல்லைக்குத் திரும்பி, 1954-ல் `சாந்தி' என்ற இலக்கிய இதழை அவரே தொடங்குகிறார்.இரண்டு ஆண்டுகள் இலக்கியத்தில் சமரசமின்றி தரமான படைப்புகளுடன் அந்த இதழ் வெளிவருகிறது. தமிழ் ஒளி, ரகுநாதன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் உள்ளிட்ட பலரும் தங்கள் படைப்புகளை அதில் வெளியிட்டனர். பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே அந்த இதழ் நின்றுபோனது.

1939-ம் ஆண்டிலிருந்தே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய ரகுநாதனின் கதைகள், 1949-ம் ஆண்டில் தொகுப்பாக வெளியானது. அந்தத் தொகுப்பில் இருந்த `நீயும் நானும்' என்ற கதை, வாத பிரதிவாதங்களை இலக்கிய உலகில் உருவாக்கிப் பரபரப்பாகப் பேசியது. படைப்புலகில் இப்படி நுழையும்போதே பரபரப்பாகவும் அதிர்வெடிகளுடனும் நுழைந்தவரான ரகுநாதன், சாகும்பரியந்தம் வலுக்குறையாமல் அப்படியே இயங்கினார் என்பது வியப்பான செய்தி. நீயும் நானும் (1949), ஷணப்பித்தம் (1952), சேற்றிலே மலர்ந்த செந்தாமரை (1955), ரகுநாதன் கதைகள் (1957) ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளில் அவருடைய சிறுகதைகள் வந்தன. ஆனால், சோகம் என்னவெனில் அவர் தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் நிறுத்திக்கொண்டார். 1957-க்குப் பிறகு அவர் சிறுகதைகள் எழுதவில்லை. ஆய்வுகளின் மீது கவனம் செலுத்தி அந்தத் துறையில் சாதனைகள் படைத்தார்.

அவரது `பாரதி:காலமும் கருத்தும்' நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. இளங்கோவடிகள் யார் என்னும் ஆய்வு நூல், அதுகாறும் சேரன் செங்குட்டுவனின் தம்பிதான் இளங்கோவடிகள் என திராவிட இயக்கத்தார் கட்டியெழுப்பியிருந்த கற்பிதங்களை உடைத்து நொறுக்கி `இளங்கோ, மன்னர் வம்சத்தைச்  சேர்ந்தவரே அல்ல. அவர் ஒரு தனவணிகச் செட்டியார்' என்ற ஆதாரங்களுடன் நிறுவினார். 


1951-ம் ஆண்டில் ரகுநாதன் எழுதிய `பஞ்சும் பசியும்' நாவல்தான் அயல்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல். செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நாவல் 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையானது. மாக்ஸிம் கார்க்கியின் படைப்பான தாய் என்ற புகழ்பெற்ற புதினத்தை தமிழில் இவர் மொழிபெயர்த்தார். 


தன் இறுதிக்காலத்தை அவர் திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் கழித்தார். 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் நாள் ரகுநாதன் காலமானார். 

தொ.மு.சி. ரகுநாதனுடைய படைப்புக்கள் அனைத்தும்  நாட்டுடைமை ஆக்கப்பட்டு இங்கே இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளவும்  கிடைக்கின்றன என்பது கூடுதல் தகவல். தமிழில் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரின் படைப்புக்களை கொஞ்சம் வாசித்துத் தான் பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம். 
  
  

Saturday, October 19, 2019

எது நல்ல எழுத்து? வாசிப்பின் படிநிலைகள்! கொஞ்சம் பார்க்கலாமா?

என்ன மாதிரி எழுத்தைக் கொண்டாடுவீர்கள்? எதற்காக?  என்ற கேள்விகளோடு நான்கு நாட்களுக்கு முன்னால் இந்தப்பக்கங்களில் ஆரம்பித்த ஒரு விஷயத்தை தினத்தந்தி கன்னித்தீவு படக்கதை மாதிரி இழுத்துக் கொண்டே போகாமல் ஒரு கட்டத்தோடு ஒன்றிரண்டு பதிவுகளோடு முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது! 

ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் கதையைத் தழுவி 1960 வாக்கில் கறுப்பு வெள்ளைப்படமாக 2வது பக்கத்தில் வெளியாக ஆரம்பித்த படக்கதை இன்னும் தொடர்கிறது என்று தான் நினைக்கிறேன்! தினத்தந்தி பேப்பர் படித்து இருபத்தைந்து முப்பதாண்டு காலத்துக்கும் மேலேயே ஆகி இருக்கும். நாடோடி மன்னனில் வருகிற கன்னித்தீவு பெயரையே இதற்கும் வைத்துவிடலாம் என்று சி பா ஆதித்தன் யோசனை சொன்னதாகத் தகவல் இருக்கிறது.   

   
2013 இல் தான் கன்னித்தீவு வண்ணத்துக்கு மாறியதாம்! இதைக் கூட விடாமல் பார்த்தவர்கள் ஏராளம்! (வாசித்தவர்கள் என்று சொன்னால் அது நெம்ப ஓவரு!! வலைப் பூவுக்கு க்ளிக் செய்து வந்து சும்மா 20 செகண்ட் 30 செகண்ட் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுப் போவதை எல்லாம் வாசித்ததாக எடுத்துக் கொள்ள முடியுமா? தினத்தந்தி தான் தமிழில் வாசிக்கும் வழக்கத்தையே வளர்த்தது என்று சொல்வதுகூட அந்த ரகத்தில் சேர்க்கக் கூடிய ஒன்றுதான்! வாசிப்பு நிலையில்  LKG லெவல் என்று கூடச் சொல்ல முடியாது.

ராஜேஷ் குமாரோ, ரமணி சந்திரனோ இருவேறு பிரிவில் வரும் வாசகர்களுக்காக எழுதினார்கள் என்றால் பாலகுமாரன் வணிக எழுத்தின் உச்சம்! எண்பது தொண்ணூறுகளில் இளசுகளைக் கிறங்க அடித்த எழுத்து. காதலோடு, பெண்ணியமும் கலந்து பேசிய விசித்திரமான கலவை! இளம் பெண்களுடைய விடலைத்தனத்தைத் தட்டிக் கொடுத்து தைரியம் சொன்ன எழுத்தாகவே நிறையப் பெண் வாசகர்கள் பார்த்தார்கள் என்பது மறுக்க முடியாத விஷயம். ஊக்கம் தருகிற எழுத்தாக எழுதிக் கொண்டிருந்தவர் தன்னைத் தானே உலகின் புதிய ஆன்மீக குருவாகக் காட்டிக் கொள்ள ஆரம்பித்ததில் சறுக்க ஆரம்பித்ததாக ஒருதரப்பு சொல்லிக் கொண்டே இருக்கையில் இன்னொரு தரப்பு தேவனுடைய மகிமைக்கு சாட்சியம் சொல்ல முற்படும் கிறித்தவத்தைப் போலே, பாலகுமாரனுடைய பேச்சு எழுத்து கண்ணசைவு எல்லாவற்றுக்குமே சாட்சியம் சொல்கிறதாக இன்றும் இருக்கிறது. இப்படி ஏதோ ஒன்றில் மயங்கி அங்கேயே தேங்கிப் போய்விடுகிற வாசகர்களின் நிலையை என்னவென்று சொல்வீர்கள்? ஜெமோ கூட  அதுமாதிரி இல்லாத ஒளிவட்டத்துடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ளப் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும்  புரிந்து கொள்ள முடிகிறதா?

எது ஒரு நல்ல எழுத்தாளனை உருவாக்குகிறது? சராசரி வாசக மனநிலையிலிருந்து ஒரு தேர்ந்த வாசகனாக்கும் எழுத்து எது? இப்படி   முந்தைய பதிவில் சில  கேள்விகளோடு முடித்திருந்தேன் இல்லையா? 

கேள்வியிலேயே பதிலுக்கான திறவுகோலும் இருக்கிறதே! அது என்ன  என்பதைப் பேசுவதற்கு முன்னால்  ஒரு எழுத்தாளர் என்னென்ன செய்யக் கூடாது என்பதற்கொரு நல்ல உதாரணமாக Robin Cook எழுதிய Fever நாவலைப் பற்றி இங்கே எழுதியிருந்ததைப் படித்தீர்களா? அதே ஜானரில் ஒரு தேர்ந்த எழுத்தாளன் எழுதும்போது எப்படி வாசகர்கள் விரும்பும் கதைக்களமாக மாறுகிறதென்ற அதிசயத்தையும் பார்த்து விடலாமே!    
  
டிஸ்கி ! கீழே கௌதமன் சார் பின்னூட்டத்துக்குப் பதில் சொல்கிற மாதிரியும் இந்தப் பதிவை இதற்குமேலும் வளர்த்துக் கொண்டே போகாமல் முடிப்பதற்காகவும் முந்தைய பதிவில் தி ஜானகிராமன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை மறுபடியும் பார்த்துவிடலாம்! கௌதமன், எழுத்தாளர் தேவனை உதாரணமாகச் சொன்னது ஒருவகையில் பொருத்தம் தான்!  

"நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும் போது மனிதக் குரல்களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கேல்லாமோ ஆசைப் பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக் கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

மனித முகங்கள் வேறுபடுவதைப் போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும்.தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியோர்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் நிறைந்து கிடக்கும். தன்னுடைய முயற்சியில் நம்பிக்கையும்தான் கண்டது உண்மை என்ற திட நம்பிக்கையும் (பிறர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி) எழுத்துக்கும் அடிப்படையாக இருக்கும்பொழுது அது கட்டாயம் நல்ல சிருஷ்டி இலக்கியமாகத்  தான் இருக்கும்."   

தி.ஜா. சொல்கிற மாதிரி   , தான் கண்ட  உண்மையை    வாசகருக்கும் கடத்திவிடுகிறமாதிரியான எழுத்துடன் சில  நல்ல எழுத்தாளர்களும் இங்கே தமிழ்நாட்டில் இருக்கத் தான் செய்தார்கள். உதாரணத்துக்கு ஜெகசிற்பியன்! கல்கியில் தொடர்கதையாக வெளிவந்த ஜெகசிற்பியனுடைய  ஜீவ கீதம் நாவலைப் படித்திருக்கிறீர்களா? வாசகர்களுக்கு ஒரு நல்ல கருத்தை, தன்னுடைய நம்பிக்கையைச் சொன்ன வேறு எவராவது உங்கள் நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்!  
   
மீண்டும் சந்திப்போம்.             
       

Friday, October 18, 2019

எது ஒரு எழுத்தாளனை உருவாக்குகிறது?

எது ஒரு எழுத்தாளனை உருவாக்குகிறது? அப்படி எழுதுவதில் எது வாசகர்களால் கொண்டாடப்படும் எழுத்தாகிறது? இந்த மாதிரிக் கேள்விகளுக்கு,  ஒரு முறையல்ல, ஒவ்வொரு முறையும் எழுத்தாளர் பாலகுமாரன் நேர்மையாகவே  பதில் சொல்லியிருக்கிறார் என்பதாலேயே முந்தைய பதிவில் சில வீடியோக்களையும் கொடுத்தே சொல்லியிருந்தேன். ஆனால் வலைப்பதிவுககளில் வாசிக்க வருகிறவர்கள் பெரும்பாலும் ஒரு அவசரகதியிலேயே பார்த்து விட்டுப் போய்விடுகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட  விஷயம்! என் விஷயத்தில் இன்னும் அதிக அவசரத்துடனேயே எட்டிப்பார்த்து விட்டு ஓடி விடுகிறார்கள் என்பதும்! இதில் வீடியோக்களை எங்கே நின்று பார்ப்பார்களாம்? பத்ரி சேஷாத்திரியுடன் தந்திடிவிக்காக 2014 அக்டோபரில்  பாலகுமாரன் ராஜபாட்டையில் வருகிற 50 நிமிட வீடியோவில் ஆரம்பத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் சொல்கிறார்! கொஞ்சம் பாருங்கள்!    

 

ஆனால் எல்லா எழுத்தாளர்களும் இதே மாதிரித் தெளிவாக யோசித்துப் பதில் சொல்லியிருக்கிறார்களா? தேடிப் பார்த்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக, தான் எழுத வந்த கதையைச்  சொல்லியிருப்பார்கள். நீங்களாகக் கண்டுபிடித்தால் ஒழிய, முழு உண்மையும் சொன்னவர் எவருமில்லை!
                                                             

ரமணி சந்திரன்! பெயரை வைத்து ஆணா பெண்ணா என்று ஊகம் செய்யக் கூட விடாமல் ஆரம்பநாட்களில் தன் முகத்தைக் காட்டாமலேயே கதைகள் எழுதி வந்திருக்கிறார். 91 கதைகள் இதுவரை எழுதியிருப்பதாகத் தெரிகிறது. சத்தமே இல்லாமல், இவருக்கு ஒரு வாசகர் கூட்டம் இன்னமும் இங்கே இருக்கிறது. என் குடும்ப உறவுகளிலேயே ஒரு மூதாட்டி இவரது வாசகர். ஆனாலும் இவருடைய கதை ஒன்றைக் கூட நான் படித்ததில்லை என்பதையும்  இங்கே சொல்லியாகவேண்டும். 


காரணம் சாம்பிளாக நாலைந்து கதைகளை புரட்டிப் பார்த்து எல்லாம் ஒரேமாதிரியான டெம்ப்லேட்டில் எழுதப் பட்டவை என்பதால்! ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் இவரைப் படிப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்!  அந்த நாட்களில் லக்ஷ்மி (எ) டாக்டர் திரிபுரசுந்தரி பெண்களை மையமாக வைத்து தொடர் கதைகளாக நாவல்களை எழுதினார். அவர் மட்டுமல்ல அநுத்தமா, ஆர் சூடாமணி என்று அந்தநாளைய பெண் எழுத்தாளர்கள் எல்லோருக்குமே ஆகி வந்ததாக குடும்ப உறவுகளை வைத்துக் கதை பின்னுகிற டெம்பிளேட், அத்தனை ராசியானது. ராணியில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து, அப்படியே கலைமகள், குமுதம், கல்கியிலும் எழுதியிருக்கிறார்.

''சொன்னா நம்பமாட்டீங்க... நான் என் தங்கைக்கு எழுதின கடிதங்கள்தான் என்னை எழுத்தாளராகவே ஆக்கியிருக்கு தெரியுமா?'' இப்படி ரமணி சந்திரன் தான் எழுத்தாளரான விதத்தைச் சொல்கிறார் ''அப்போ நாங்க தஞ்சாவூர்ல இருந்தோம்... இவருக்கு தினத்தந்தியில விளம்பரம் பிரிவில் உத்தியோகம்... மெட்ராஸ்ல இருந்த என் தங்கை சந்திராவுக்கு, வீட்ல நானும் என் இரண்டு குழந்தைகளும் என்ன செஞ்சோம், ஏது செஞ்சோம்னு ஆரம்பிச்சு,எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மரம் ஏன் பூ பூக்கலேங்கிற கவலை வரைக்கும் விலாவரியா லெட்டர் எழுதுவேன்! அதை என் தங்கை படிச்சுட்டு அவளோட வீட்டுக்காரர்கிட்டேயும் காட்டி வாசிப்பாளாம்... 'அடடா... நேர்ல பார்க்கிற மாதிரி என்ன அழகா விவரிச்சு எழுதியிருக்காங்க.. உங்க அக்காகிட்டே நல்ல எழுத்துத் திறமையிருக்கு. நான் எடிட்டரா இருக்கிற பத்திரிகைக்கு கதை எழுதச் சொல்லு’னு அவர் சொல்லியிருக்கார். எழுதிப் பார்த்தப்போ எனக்கும் கோர்வையாக எழுத வந்தது. சரின்னு எழுதி அனுப்பிட்டேன்..''  அந்த எடிட்டர் ராணி வார இதழின் ஆசிரியர் அ,மா,சாமி! (அ.மாரிசாமி)  தினத்தந்தி சி பா ஆதித்தன் இவருடைய தாய் மாமன் என்பது உபரித்தகவல்.  

1968 இல் தி  ஜானகிராமன் கல்கியில் எழுதியிருந்ததன் ஒரு பகுதியாக   என்னிடம் இருக்கும் அம்மா வந்தாள் நாவலின் பின் அட்டையில் எடுத்துப் போட்டிருந்தது கீழே: 


"நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும் போது மனிதக் குரல்களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கேல்லாமோ ஆசைப் பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக் கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

மனித முகங்கள் வேறுபடுவதைப் போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும்.தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியோர்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் நிறைந்து கிடக்கும். தன்னுடைய முயற்சியில் நம்பிக்கையும்தான் கண்டது உண்மை என்ற திட நம்பிக்கையும் (பிறர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி) எழுத்துக்கும் அடிப்படையாக இருக்கும்பொழுது அது கட்டாயம் நல்ல சிருஷ்டி இலக்கியமாகத்  தான் இருக்கும்."   

எது ஒரு நல்ல எழுத்தாளனை உருவாக்குகிறது? சராசரி வாசக மனநிலையிலிருந்து ஒரு தேர்ந்த வாசகனாக்கும் எழுத்து எது? நீங்கள் படித்ததில் இருந்து கண்டுகொண்ட விதம் எப்படி என்பதை பகிர்ந்து கொள்ளுங்களேன்!

வாசிப்பின் சுகத்தைப் பகிர்ந்து கொள்ள வாருங்கள்! மீண்டும் சந்திப்போம்.                

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)