Showing posts with label நாடகமே கருநாடகமே. Show all posts
Showing posts with label நாடகமே கருநாடகமே. Show all posts

Wednesday, July 24, 2019

ஆன்டி க்ளைமேக்சாக கரு "நாடகம்" முடிந்தது எப்படி?

கர்நாடக அரசியல் குழப்பங்களில் சில படிப்பினைகள் இருக்கத் தான் செய்கின்றன. என்னவென்று பார்க்கவோ, கற்றுக் கொள்ளவோ ஜனங்களாகிய நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்விதான் எல்லாக் குழப்பங்களிலும் முன்னுக்கு வந்துநிற்பதைப் பார்க்கவும் தவறுகிறோம். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில்  இப்போதைய குழப்பம் ஆரம்பித்தது எப்படி என்பதை 3 infographics / படங்களில் வெளியிட்டிருப்பது, புரிந்துகொள்ள உதவியாக இன்றைக்கு வெளியாகியிருக்கிறது.  TOI க்கு நன்றியுடன்!


    
அரசைக் காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ் பணப்பைகள் முயற்சி செய்யாமல் ஒன்றுமில்லை! இருக்கிற மந்திரிகள் ராஜினாமா செய்து, அதிருப்தி MLAக்களுக்கு இடம் கொடுப்பதாக DK சிவகுமார் பிளான் கூட அவர்களை அசைத்துப் பார்க்கவில்லை. பிந்தினநாட்களில் சிவகுமாரே BJP என்ன தருவதாகச் சொன்னார்களோ அதை நாங்களே தருகிறோம் என்று சொன்னதும் பொதுவெளியில் காணக் கிடைக்கிறது.


அதிருப்தி  MLAக்கள்  உச்சநீதிமன்றத்தை நாடியதில் இடைக் கால உத்தரவாக  ராஜினாமாக்கள் மீது சபாநாயகர் முடிவு எடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது என்றும், அவர்கள் மீண்டும் தங்கள் ராஜினாமாவை சபாநாயகரிடம் நேரில் சென்று அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஜூலை 12 அன்று தான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருப்பதாக அறிவித்த பிறகும்  கூட சபாநாயகர் ராஜினாமாக்கள் மீது  முடிவெடுக்கத் தனக்கு கால அவகாசம் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்ததோடு சரி! அதற்கப்புறமும் கூட முடிவெடுக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டேபோனதன் காரணம் என்ன? ஏற்றுக்கொண்டாலும் தகுதிநீக்கம் செய்தாலும் கூட்டணி அரசுக்கு ஒரு லாபமுமில்லை என்பதாலா? 

இடைத்தேர்தல் நடத்தினாலும் சாதகமாக இருக்குமா என்பது தெரியாமல் எவ்வளவுகாலம் சவ்வாக இழுக்க முடியுமோ அவ்வளவும் செய்துவிட்டு  ரெண்டுங்கெட்டானாக அந்தரத்தில் தொங்கிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தது யார்? இப்படி ரெண்டுங்கெட்டானாக காங்கிரஸ்-JDS  கூட்டணி முடிவெடுத்து விட்டு, BJP மீது மட்டும் பழிசுமத்தி சட்டசபை நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டால் போதுமா? 


பேசினார்கள் பேசினார்கள் அப்படிப் பேசினார்கள், கோஷம் எழுப்பினார்கள்! வேறுவழியே இல்லாமல் வாக்கெடுப்பு நடந்ததில், அவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தெரிந்த மாதிரியே கவிழ்ந்தும் போனார்கள்.  

இங்கே சித்தராமையாக்களும் இன்னும் காசுக்காக மட்டுமே கூவுகிற காங்கிரஸ் வக்கீல்களும் கட்சித்தாவல் தடைச்சட்டம் இப்படிச் சொல்கிறதே அப்படிச் சொல்கிறதே என்றெல்லாம் கூவினாலும், நம்மூர் அரசியல்வாதிகள் சட்டத்தை ஏய்ப்பது எப்படி என்பதில் கில்லாடிகளாக இருப்பதில் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் போதாமை  ஈயென்று இளித்து நிற்கிறது. இப்படி ஒரு சட்டம் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே மேல் என்றாகி இருக்கிறதா இல்லையா?

கர்நாடக சபாநாயகர் ஒரு புதுமையான முயற்சியைச்  செய்து பார்த்தார். கடந்த  நாடாளுமன்றத்தேர்தலில், ஒரு சட்டமன்ற உறுப்பினர், வேட்பாளராக நின்று ஜெயித்ததில், அவருடைய  ராஜினாமாவை  ஏற்பதற்கு முன்னால் அவரது சட்டசபைத் தொகுதி மக்களில் ஒரு சிலரை மட்டும் அழைத்துக்  கருத்துக் கேட்டார் என்று சொல்கிறார்கள். இப்போதும் கூட அதிருப்தி MLA க்கள் ராஜினாமா விஷயத்தில் கூட அதேபோலச் செய்வாரா என்றொரு எதிர்பார்ப்பும் இருந்திருக்கலாம்! அதைவிட தேர்தல் விதிகளில், ஏற்கெனெவே ஏதோ ஒரு அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருப்பவர், மற்றொரு பதவிக்கு வேட்பாளராகப் போட்டியிடக் கூடாது என்று திருத்தம் கொண்டு வந்தால் என்ன? தேர்தல் சீர்திருத்தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.

சுயேட்சைகள், 1% - 4% வாக்குகளைக்கூடத் தனித்து நின்று வாங்கமுடியாத உதிரிக்கட்சிகள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதித்தால் என்ன குடிமுழுகிப்போய்விடும்? 

கொஞ்சம் யோசித்து  இன்னும் என்னென்ன  செய்யவேண்டும் என்பதைக் கொஞ்சம் யோசிக்கவாவது செய்யுங்களேன்!

மாற்றம், முதலில் நம்மிடமிருந்தே  ஆரம்பிக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.
          

Tuesday, July 23, 2019

படங்களோடு கொஞ்சம் செய்தி! கொஞ்சம் விமரிசனம்!

வித்தியாசமான பலநேரங்களில் பத்திபத்தியாக எழுதிக் கொண்டிருப்பதை விட சில படங்களே செய்திகளின் அரசியலைத் தெளிவாகச் சொல்லிவிடுவதை வெகுவாக ரசித்திருக்கிறேன்! சிலநேரம் படத்தோடு ஒருசில வார்த்தைகள் சேரும்போது அங்கே ஒரு அருமையான காமெடியும் சேர்ந்துவிடுவதை உங்களில் எத்தனை பேர் அனுபவித்திருக்கிறீர்கள்?

   

இந்தப் படத்தை மட்டும் பார்த்தால், நம்மில்  பெரும்பாலும்  அப்படியே கடந்துபோய்விடுவோம்தான் இல்லையா? ஆனால்  இப்படி சில வார்த்தைகளோடு சேர்த்துப் பார்த்தால் எப்படி இருக்கிறது? கொஞ்சம் சொல்லுங்களேன்!

Narayanan R 
தேவரய்யாவையும், காமராஜரய்யாவையும் கும்பிடுகிறார் சரி. போட்டோக்கு போஸ் முடிஞ்சது.
அதென்ன மூக்குப்பொடிக்கு செருப்பு துடைக்கிறது கோப்ப்ப்பால்...?🤔
பார்த்தவுடன் பிபி எகிறிடுச்சோ ? தொப்புனு தல சுத்தி விழுந்துட்டீங்க ?  


The Accidental Chief Minister கேட்பதாக! சதீஷ் ஆசார்யா கார்டூன் போட்டதே தப்பு என்றொரு கருத்து இருப்பதை நானறிவேன்! அதற்காக?  The Accidental  Prime Minister,  The Accidental Party President  இப்படி எல்லாமே காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே நடக்கிறதே! அது ஏன்? எப்படி என்ற கேள்வி வரக்கூடாதா?  


  
சட்டமன்ற உறுப்பினர்களை சில்லறையாகவோ மொத்தமாகவோ பிஜேபியினரால்  விலைக்கு வாங்கப் பட்டிருப்பதாக சித்தராமையா இன்றைக்கு சட்டசபையில் பேசியிருக்கிறார், அவர்   சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றா நினைக்கிறீர்கள்? ஆதாயத்துக்காக சாத்தான் கூட வேதம் போதுமாம்!  என் முதுகில் குத்தியவர்கள், அமைச்சர்களாக வரவிடமாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் பணப்பெட்டி DK சிவகுமார் உணர்ச்சிவசப்பட்டு சபதம் செய்தது ஆகப்பெரிய காமெடி! இதே சிவகுமார் பிஜேபி என்ன தருவதாகச் சொன்னார்களோ அதை நாங்களே தருகிறோம் என்று பேசியதும் கூட பொதுவெளியில் உலவிக் கொண்டிருப்பதுதான்!

ஆனாலும் வித்தியாசமான கட்சி என்று சொல்லிக் கொண்டு பிஜேபி இப்படிச் செய்வது சரியா தவறா என்று கருத்துச் சொல்வதற்கு முன்னால், கடந்த இரண்டுவாரங்களாக என்ன நடந்தது, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக (??) காங்கிரசும் தேவே கவுடாவின் கட்சியும் என்னென்ன பேரங்களில் இறங்கி எப்படி எப்படியெல்லாம் உருக்கமாக சீன் போட்டார்கள் என்று பார்த்துவிட்டு அங்கே முதலில் காறித்துப்பிவிட்டு, இங்கே வந்து  சொல்லலாம்! 

இல்லையென்றால் அவரவர் இருப்பிடத்திலேயே #GoBackModi கருப்பு பலூன்களை பறக்கவிட்டு அமைதியாகலாம்!

மீண்டும் சந்திப்போம்.
         

Monday, July 22, 2019

குமாரசாமி இன்றிரவு ஆளுநரைச் சந்திக்கிறாராம்! லவ் லெட்டருக்குப் பதிலா?

கரு "நாடக" அரசியல்  கோமாளித்தனங்களில் தலையிட  உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமையும் உறுதியாக மறுத்து விட்டது. அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்ட இரண்டு சுயேட்சை சமஉக்கள் H நாகேஷ், R சங்கர், இருவரும் கர்நாடக சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி மனுச்  செய்திருந்ததில், 'இம்பாசிபிள்  நாளைமறுநாள்  வழக்கு விசாரணைக்கு வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று முடித்துவிட்டதாக IndiaLegal தளச் செய்தி ஒன்று சொல்கிறது. 



இது குமாரசாமி அரசுக்கான நிவாரணமா என்றால் அப்படியும் சொல்ல முடியாது. சபாநாயகர், சட்டமன்றம் இரண்டினுடைய வானளாவிய அதிகாரம் எதுவரை போகிறது என்று உச்சநீதி மன்றம் பொறுத்திருந்து பார்க்க நினைத்து இருக்கலாம்  மத்திய அரசும் இதில் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதில், குமாரசாமிக்கு வேண்டிய அளவு கயிற்றைக் கொடுத்து அவராகவே தொங்கட்டும், நாங்கள் வேடிக்கை மட்டும் பார்க்கப்போகிறோம் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறதோ? முந்தைய காலங்களில் காலில் வெந்நீர் கொட்டிக்கொண்டதைப் போல அவசரப்பட்டுக் கொண்டிருந்த எடியூரப்பா கூட வாயை அதிகம் திறக்காமல் அமைதியாக இருப்பது அப்படித்தானோ என்று எண்ணவைக்கிறது.      



பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்தாம் பாகத்துக்கு கல்கி வைத்த தலைப்பு தியாக சிகரம் கடைசிநேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் குமாரசாமியைக்கூட  தியாகசிகரம் ஆக்கி காங்கிரஸ் முதலமைச்சருக்கு வழிவிடுகிறார் என்று சிவகுமார் சொன்னதில் எந்த அளவு உண்மை?


எந்தக் காங்கிரஸ்காரன் என்றைக்கு ஒற்றுமையாக ஒரேகுரலில் பேசியிருக்கிறான் சொல்லுங்கள்! DK சிவகுமார் ஒரு விதமாகவும்  கர்நாடகாக் காங்கிரஸ் தலைவர்  தினேஷ் குண்டுராவ்  வேறுவிதமாகவும் பேசுவதைப் பாருங்கள்!  


சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று மாலை 6மணிக்கு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும், இந்த விவகாரத்தில் என்னைப் பலிகடா  ஆக்கிவிடாதீர்கள் என்கிறார்! இவரும் கூட தியாகசிகரமாகக் காட்டிக் கொள்ள சரியான போட்டியாளர்தான்! மாலை  ஆறு மணி ஆனபின்னாலும் கூட அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை! இதுதான் கடைசி சான்ஸ் என்று ஒவ்வொருத்தராக பிஜேபியைத் தாளித்துப் பொடி சேர்த்துப் பேசுகிறார்கள் பேசுகிறார்கள், இன்னும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்! மாலை 6.20  நிலவரப்படி அவையில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறது. சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. கடைசிவரை வாக்கெடுப்பைச் சந்திக்காமலேயே தள்ளிப்போடுவதற்குக் காங்கிரஸ் JDS கூட்டணி மும்முரமாக இருப்பது மிகப் பரிதாபமான காட்சியாக நேரலையில் பார்க்க முடிகிறது. 

கர்நாடகம் எப்போதும் இந்திய ஜனநாயகத்தின் சீக்காளியாக இருந்து வருவதை ஒரு பட்டியலுடன் விளக்குகிற பதிவு ஒன்று. தெரிந்து கொள்வதில் தவறொன்றுமில்லையே! 

தியாக சிகரம் குமாரசாமி! சதீஷ் ஆசார்யா 
சொன்னாக்க அர்த்தமிருக்கும்!

இந்த நேரத்தில் முதல்வர் குமாரசாமி இன்றிரவு  7 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கவிருப்பதாகவும் ஒரு செய்தி வந்துபோய்க் கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தியுங்கள் என்று ஆளுநர் இரண்டாவது கடிதம் அனுப்பியதை இந்த லவ்லெட்டர் என்னைப் புண் படுத்துகிறது என்று சொன்னவர் குமாரசாமி. இப்போது சந்திப்பு  எதற்காகவாம்? 

நேரலையில் யார் யாரோ ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. முதல்வர் குமாரசாமி அல்லது troubleshooter DK சிவகுமார் இருவரும் அவையில்தான் இருந்தார்களா என்பதைப் பார்க்க முடியவில்லை.

ஜனநாயகத்தைப் பாழடித்ததில் காங்கிரஸ் கட்சி இன்றும் கூட முதலிடத்தில் குற்றவாளியாக நிற்கிறது. இப்படிப்பட்ட ஒரு கட்சி இருப்பதற்கு இல்லாமல் போவதே ஜனங்களுக்கும் நாட்டுக்கும்   நல்லது. 


மீண்டும் சந்திப்போம்.


இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)