Showing posts with label IMA மோசடி. Show all posts
Showing posts with label IMA மோசடி. Show all posts

Saturday, July 20, 2019

எது பொருளோ அதைப் பேசுவோம்! எப்போது பேசப்போகிறோம்?

ஒரு சினிமா நடிகன் சொல்ல முடியாத சொந்தக் காரணங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை விமரிசிப்பதை மிகவும் ஆவலோடு தேடிப் படிக்கிறோம்! ஆனால் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இசுடாலின் மாதிரி ஒரு வாடிக்கையாகிப்போன  டெம்பிளேட்டாகப்  பேசுகிறாரா  அல்லது விஷயத்தைப் புரிந்துகொண்டுன் பேசுகிறாரா என்று எப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்?  


கல்வியாளர் வெற்றி விடியல் சீனிவாசன் சூர்யா கிளப்பி விட்டுப் போன கேள்விகளுக்கு பொறுமையாக, சுருக்கமாகவே பேசுவதைக் கேட்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் எப்போது தயாராகப் போகிறோம்?  


இங்கே கர்நாடகாவில் 40000 இஸ்லாமியக் குடும்பங்களின் சேமிப்பை கர்நாடக காங்கிரஸ் அரசியல்வாதிகளுடைய துணையோடு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஹலால் செய்யப்பட்ட மோசடியாக சுருட்டிக் கொண்டு துபாய்க்கு ஓடிப்போன மொகமது மன்சூர்கான் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைதுசெய்யப்பட்டு பெங்களூரு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டிருக்கிறார். எத்தனை கர்நாடக அரசியல்வாதிகளுடைய பெயர்கள் சந்திக்கு வரப்போகிறதோ தெரியாது! ஆனால், இந்த மோசடிமன்னன் கைது விவகாரமோ, மோசடி நடந்தவிதம் எப்படி, ஏமாந்த ஜனங்களுக்கு அவர்களுடைய அசலாவது திரும்பக் கிடைக்குமா என்பதைப்  பற்றி காங்கிரசும் கூட்டாளிகளும் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை! சரி,  ஜனங்களோ ஊடகங்களோ  கொஞ்சமாவது அலட்டிக் கொண்டிருப்பதாக சிறிதளவு அசைவாவது தெரிகிறதா?


  • SIT arrested Umar Shariff, 42 yrs, running a school by name "Al Basheer" off Bannerughatta Road, Bengaluru. Accused was propagating for IMA & Mansoor Khan for last 5 yrs; sent to judicial custody till July 22
    12:48 PM · Jul 19, 2019 · Twitter for Android    

      
    இது ஆடிட்டர் குருமூர்த்தி இந்த ஆண்டு பட்ஜெட் பற்றி பேசியது. ஸ்ருதி டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும்தான்! ஆனால் அவர்கள் எந்த ஒரு நிகழ்வையும் ஆதி அந்தம் இரண்டும் இல்லாமல் Bitடு Bit ஆகப்  பதிவேற்றுவதில் என்ன சுகம் காண்கிறார்களோ? எனக்கந்த உண்மை தெரிஞ்சாகணும் ஜாமி!  

    மீண்டும் சந்திப்போம்.
            

    Thursday, June 13, 2019

    மமதையின் உச்சம்! IMA மோசடி! நாற வாய தொறக்காதே!

    மனநலம் பிறழ்ந்தவர் என்று சொல்வது கூட உண்மையில் மனநலம் பாதிக்கப் பட்டவர்களை இழிவ படுத்துகிற மாதிரி ஆகிவிடுமோ? மம்தா பானெர்ஜியின் சமீபகால ஆட்டங்கள் மமதையின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும். ஜெய்  ஸ்ரீராம் என்றால் தகராறு மாணவர்களுடன் தகராறு, வரிசை கட்டி எல்லாத்தரப்பினருடனும் தகராறு செய்வதற்காகவா ஒரு முதலமைச்சர்? இப்போது மருத்துவர்களுடன் தகராறு, 4 மணி நேரக்கெடு என்று எல்லைமீறிப்போய்க்கொண்டே இருப்பதைக் கவனிக்கிறீர்களா?


    முந்தாநாள் தொடங்கி, சகடாக்டரைத் தாக்கிவிட்டார்கள் என்று ஆரம்பித்த மருத்துவர்களின் வேலைநிறுத்தம், மாநிலம் முழுதும் பரவிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. மம்தா பானெர்ஜி 4 மணிநேரம் கெடுவிதித்து மருத்துவர்கள் வேலைக்குத் திரும்பவேண்டும், இல்லையென்றால்  ஹாஸ்டலைக் காலிசெய்துவிட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டி எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியிருக்கிறார். 

    Explained: Why the health care logjam in Bengal was waiting to happen

    While doctors and medical staff highlight a lack of security in state hospitals and medical colleges, relatives of patients complain of bad behaviour and lack of proper service.


    The public health care system across West Bengal has come to a halt after doctors and support staff across the state started an indefinite cease work after an incident of violence at NRS Medical College Hospital in Kolkata. Trouble started when family members of a patient who died on Monday evening at state-run hospital assaulted junior doctors, leaving one of them with a critical head injury that had to be operated on. என்று சொல்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் மேலும் சொல்வது இது: இந்த வருடத்தின் முதல் ஆறுமாதங்களில் மட்டும் மருத்துவர்கள் மீது தாக்குதல் என்பது நூறைத்தாண்டிவிட்டது. இடது முன்னணி ஆட்சிக்காலம் தொடங்கி இப்போது திரிணாமுல் வரை நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களைத் தாக்குவதும், மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிப்பதில்லை, பரிந்துரைக்கப்பட்ட சோதனைகளுக்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்று வெதும்புவதும் வாடிக்கையாகிவிட்டது. மருத்துவர்கள் தங்களுக்குப் பாதுகாப்புவேண்டும் என்று வேலைநிறுத்தம் செய்வதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், பேசித்தீர்க்க வேண்டிய பிரச்சினையை மம்தா பானெர்ஜி மமதையோடு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினையாக்கி இருக்கிறார்.  மருத்துவர்கள் இன்றைக்கு மாநில ஆளுநரைச் சந்தித்து முறையிட்டிருக்கிறார்கள்.

    *******  
    பெங்களூரு சிவாஜிநகரில் ஷரியா பேங்கிங் என்று சொல்லிக் கொண்டு ஒரு மோசடித்திட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் முதலீயீட்டாளர்களை ஏமாற்றி விட்டு கத்தாருக்கு ஓடிப்போய்விட்ட மன்சூர்  கான் பற்றி வருகிற தகவல்கள் தலை சுற்ற வைக்கிறது. அரசியல்வாதிகளின்  அலட்சியம் உறுத்தலாக இருக்கிறது. 


    முதலில் வந்த செய்திகளில்  மோசடிசெய்யப்பட்ட தொகை 2000 கோடி ரூபாய் என்றார்கள். இப்போது அது 5000 கோடி என்று சொல்லப்படுகிறது. நம்மூர்  அரசியல்வாதிகள் எவருக்கும் மனசாட்சியோ உறுத்தலோ கொஞ்சமும் கிடையாது என்று மீண்டுமொரு முறை மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தேவே கவுடா கூட்டணியில் நல்லது நடக்கும் என்று நான் ஒருநாளும் நம்பியதில்லை.2019 தேர்தல் தோல்விக்குப் பின்னால் தள்ளுபடி செய்யப்பட்டதாக 14000 விவசாயக்கடன் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட தொகையை reverse transaction செய்து அரசே மோசடி செய்கிற கர்நாடக மாநிலத்தில், ஏமாந்தவர்களுக்கு நியாயம் கிடைக்கப்போகிறதா என்ன?  


    13 பேருடன் காணாமல்போன   AN 32 ரக ராணுவவிமானம் விபத்துக்குள்ளாகி அருணாசல பிரதேசத்தில் விழுந்ததைத் தேடும் பணி முடிந்துவிட்டது. 13 பேர்களுடைய உடல்களும்  மீட்கப் பட்டதாக தற்போதைய செய்தி சொல்கிறது. 

    விமானப்படையும் கடற்படையின் P 81I ரக விமானமும் முழு மூச்சாகக் காணாமல் போன விமானம், பயணிகளைத் தேடிக்  கொண்டிருக்கும்போது அதைப்பற்றி  குஜராத்தின் கலகக்காரர் காங்கிரசின் கூட்டாளி ஹர்திக் படேல் படுஅபத்தமாக நாற வாய் திறந்திருக்கிறார். 


    தெரியாத விஷயங்களில் தலையிடாமல் நாற வாயை மூடிக்கிட்டு இருங்கடே என்று சொல்லத் தோன்றுகிறதா?

    மீண்டும் சந்திப்போம் 

    இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

    #கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

    செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

    முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

    இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

    அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)