Friday, May 7, 2021

அரசியல் இன்று! #துரைமுருகன் #கேசரிவாலு #கமல்காசர்

உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் நல்ல வேஷம் தான் வெளுத்து வாங்குறேன் இந்தத்திரைப் படப்பாட்டு சிவாஜி கணேசனுக்குப் பொருத்தமாக இருந்ததோ இல்லையோ இன்றைக்கு நீர்வளத்துறை அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் துரை முருகனுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்!  


திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் ஜெயிப்பதற்குள் நுரை தள்ளத்தள்ள ஓட விட்டுவிட்டார்கள்.
சரி உட்கட்சி துரோகங்கள், தானே ஏற்படுத்திக் கொண்ட ஆப்புகளில் இருந்து தப்பிப் பிழைத்து ஒருவழியாக வென்றாகி விட்டதால் புண்ணை மறைத்து மினிஸ்டர் ஆகலாம் என்றால் அதற்குள் நச்சென்று வெந்தும் வேகாத புண்ணிலே வேலைப் பாய்ச்சிவிட்டார்கள்!
எதிர்க்கட்சியில் இருந்தபோதும் கூட கெத்தாகச் சுற்றி வரக்கூடிய துரைமுருகன் தளர்ந்து காணப்படுகிறார்.
அவருக்கு பொதுப் பணித்துறை அல்லது நிதித்துறை பொறுப்பு கொடுக்கப்படும் என்றிருக்கையில் புதிதாக ஒன்றை உருவாக்கி accomodate செய்யப் பட்டிருக்கிறார்.
மூன்று பேர் அமரும் சீட்டில் நான்காவது ஆளுக்கு அரைசீட்டு கொடுப்பது போல்!
நீண்ட கால அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினை - ஒரே தொகுதியில் பல தசாப்தங்களாக சுற்றி வந்தால் கட்சிக்கரர்களே காலி செய்வார்கள். "அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்போ காலியாகும்" என்பது தானே அரசியலில் அடுத்த கட்ட நிர்வாகிகளுக்கு நம்பிக்கை தரும் நினைப்பு. அதுவும் திமுகவில் சும்மாவா?
மகனை உட்கட்சி ஆட்கள் மாட்டிவிட்ட போதே உஷாராகியிருக்க வேண்டாமா?
கருணாநிதி, ஸ்டாலின் இருவரும் எப்போதும் தொகுதிகளை மாற்றிக் கொண்டே இருந்தார்கள். அங்கிருந்தாவது பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
வட்டாச்சியராவது கொட்டாச்சியராவது... ?
எவ்வளவு எகத்தாளம், ஏடாசி, கேலி, கிண்டல், எடக்கு, மடக்கு, லந்து, நையாண்டி....???
தெக்க அடிக்கிற காத்து திரும்பி அடிக்காமலா போயிரும்?


2013 இல் டில்லியைப் பீடித்த பெருந்தொற்று அரவிந்த் கேசரிவாலு, விளம்பரப்பிரியர், யாரிடமாவது செருப்படி வாங்கினால் கூட அதையும் ஒரு சாதனை பப்ளிசிடியாக எடுத்துக் கொள்கிற கோமாளி என்று தான் தோன்றும். ஆனால் வெளியே கோமாளி ஆனால் உண்மையில் வில்லத்தனம் நிறைந்த அரசியல்வாதி. இந்த கொரோனா காலத்திலும் கூடக் கொடுமையான காமெடி செய்துகொண்டிருப்பவர்.




கேஜ்ரி உருட்டல்கள்…
“கோவிட் நிலவரம் சரிவர கையாளப்படுகிறதா?” என்றறிய, பல மாநில உயர் நீதிமன்றங்கள், தானே முன்வந்து விசாரிக்க தொடங்கின. டில்லியில் கோவிட் நிலவரம் மிக மோசமாக இருந்ததால் அது பற்றி டில்லி கேஜ்ரி அரசிடம் டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்ப, “எங்களுக்கு உதவ மறுக்கிறது மத்திய அரசு” என்றது மத்திய அரசு மீது பழி போட்டது கேஜ்ரி அரசு.
மத்திய அரசு ஆஜராகி, “ஏற்கனவே இராணுவம் டில்லியில் கோவிட் மருத்துவமனைகள் அமைத்து மக்களுக்கு சேவை செய்கிறது. DRDOவும் களத்தில் இறங்கியுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உதவிவருகிறது” என்று பதிலளித்தது.
“அதெல்லாம் சரிதான், எங்களுக்கு ஆக்சிஜன் தர மறுக்கிறது மத்திய அரசு” என அடுத்த புகார். “மத்திய அரசு சென்ற வருடமே அறிவுறுத்தியும், டில்லி அரசு ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய தேவையான ஆலைகளை ஏன் அமைக்கவில்லை” என்பதை கண்டிக்காமல், “மற்ற மாநிலங்கள் தங்கள் தேவைகளை தாமே பூர்த்தி செய்யும் போது நீங்கள் ஏன் உங்களுக்கு தேவையான ஆக்சிஜனை பிற வழிகளில் பெற முயற்சிக்கவில்லை” என்று டில்லி அரசை கடிந்து கொள்ளாமல்… “டில்லிக்கு தேவையான ஆக்ஸிஜனை மத்திய அரசு தர வேண்டும்” என்று உத்தரவிட்டது டில்லி உயர்நீதிமன்றம்.
மத்திய அரசும், “மக்கள் உயிர் காக்க டில்லி அரசின் வேலையையும் நாங்களே செய்வோம்” என்று உற்சாகத்துடன் செய்தது. என்றாலும் டில்லி உயர்நீதிமன்றத்தில் கேஜ்ரி அரசு மீண்டும், “மத்திய அரசு உதவவில்லை” என்றது. நீதிமன்றம் மத்திய அரசை கடிந்து கொண்டது. மத்திய அரசோ, “சொன்னபடி ஆக்சிஜனை கொடுத்து விட்டோம்” என்றது.
“என்ன இது?” என்று கேட்ட நீதிமன்றத்திடம் கேஜ்ரி அரசு, “ஆக்சிஜன் தந்து என்ன பயன்? சிலிண்டர் தரவில்லை மத்திய அரசு” என்றது. “சிலிண்டர் கொடுங்கள்” என்ற நீதிமன்றத்திடம், “யுவர் ஆனர், பிற மாநிலங்களுக்கு நாங்கள் என்ன செய்கிறோமோ அதையே டில்லிக்கும் செய்கிறோம். மற்ற மாநிலங்கள் சிலிண்டர்களை அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் ஏன் எதுவும் செய்யாமல் பிறரை குறை கூறுகிறார்கள்?” என்றது மத்திய அரசு.
“என்ன இது?” என்று கேட்ட நீதிமன்றத்திடம் கேஜ்ரி அரசு, “சிலிண்டர் கிடைக்கவில்லை. மத்திய அரசு அதை ஏற்பாடு செய்து தர உத்தரவிடவும்” என்றது. “மத்திய அரசே சிலிண்டரையும் கொடு” என்ற நீதிமன்றத்திடம் மத்திய அரசு, “தயவு செய்து இப்படி உத்தரவிடாதீர்கள். சுகாதாரம் மாநில அரசின் கடமை. அதில் அரசியலமைப்பை மீறி நாங்கள் தலையிட்டால் ஒவ்வொரு மாநிலமும் இம்மாதிரி கேஜ்ரி அரசு போல ஆரம்பித்து விடுவார்கள் - ‘மத்திய அரசே செய்யட்டும். நாம் ஒன்றும் செய்யாமல் இருப்போம்’ என்று. தங்கள் பொறுப்பை மாநிலங்கள் தட்டிக்கழித்தால் மக்கள் அவதிப்படுவார்கள். மத்திய அரசு ஏற்று நடத்த தயாராக இருந்தாலும், தேவையான ஆள்பலம் மாநில அரசுகளிடமே உள்ளது - சுகாதார துறை, அரசு மருத்துவர்கள் - ஊழியர்கள்… சிலிண்டர்களை கேஜ்ரி அரசு ஏற்பாடு செய்வது முறை” என முறையிட,“ஏற்க முடியாது” என்றது நீதிமன்றம்.
வேறு வழியில்லாமல் சிலிண்டர்களையும் ஏற்பாடு செய்தது. இது அரசியலமைப்பின் படி விதி மீறல். அடுத்த நாள் நீதிமன்றத்தில் கேஜ்ரி அரசு, “யுவர் ஆனர்… இந்த அநியாயத்தை பாருங்கள். ஆக்ஸிஜன் தரவில்லை” என்று புகாரளிக்க, “கேட்டதை கொடுத்து விட்டோம். ஆனால் மற்ற மாநிலங்களை விட ஏன் டில்லி அரசு அதிக ஆக்சிஜன் கேட்கிறது என்று புரியவில்லை (மற்ற மாநிலங்களில் எடுத்துக்காட்டாக 100 நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால், டில்லியில் அதே 100 பேருக்கு நான்கு மடங்கு ஆக்சிஜன் தேவைப்படுவதேன்?” என்று மத்திய அரசு சொல்ல, “ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மீது கண்டெம்ப்ட் நடவடிக்கை. நேரில் ஆஜராக வேண்டும்” எனறு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
தன் ஊழியர்களை கண்டெம்ப்டிலிருந்து காக்க உச்சநீதிமன்றம் சென்றது மத்திய அரசு. “கண்டெம்ப்ட் தேவையில்லை” என்று அவர்களை விடுவித்தது உ.நீ. என்றாலும், அங்கேயும் ஆக்சிஜன் டிராமா ஆடியது கேஜ்ரி அரசு. அதோடு, “போதுமான படுக்கைகள் இல்லை” என சொல்ல, “ஆயிரம் மொஹிலா கிளினிக்குகள் கட்டியிருப்பதாக கேஜ்ரி அரசு சொல்கிறது. அவற்றை உபயோகிக்கலாமே” என மத்திய அரசு கூற, “அவை அதற்கு பிரயோசனப் படாது. லேப் வேண்டுமானால் வைக்கலாம்” என்று கேஜ்ரி அரசு சொன்னதும் கடுப்பன உ.நீ, “பிறகு எதற்கு அதற்கு அவ்வளவு செலவழித்தீர்கள்?” என்று கேட்டதும் வாய் மூடி மௌனம்.
மத்திய அரசு அதோடு, “டில்லி அரசுக்கு உதவும் வகையில் ஒரு ஆடிட் கமிட்டி அமைக்க பெயர்களை மத்திய அரசு அமைக்க பரிந்துரைக்கிறது.” என்று கூற, உ.நீ, “அந்த கமிட்டி என்ன செய்யும்?” என்று கேட்டது. “டில்லி அரசில் ஆக்ஸிஜன் செலவையும் மற்ற மாநிலங்கள் ஆக்ஸிஜன் செலவையும் ஒப்பிட்டு தகுந்த பரிந்துரைகள் செய்யும்.. எங்கேயோ லீக் ஆகிறது ஆக்ஸிஜன். அதை அது கண்டுபிடிக்கும்” என்று மத்திய அரசு கூறியது.
அதுவரை , “700 டன் போதாது. 900 டன் வேண்டும். மத்திய அரசால் தான் டில்லியில் மக்கள் சாகிறார்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்த கேஜ்ரி அரசு, மத்திய அரசு ‘லீக்கேஜை’ கண்டு பிடிக்க கமிட்டி கொண்டுவர போகிறது என்றதும், “கமிட்டி தேவையில்லை யுவர் ஆனர். மத்திய அரசு தரும் ஆக்ஸிஜன் போதுமானது” என்று பல்டி அடித்தது!
சில நிமிடங்களில் கேஜ்ரிவால் டிவியில் தோன்றி, “இது நாள் வரை டில்லியில் மரணங்களுக்கு காரணமான மத்திய அரசு இப்போது தேவையான ஆக்ஸிஜனை தருகிறது” என்று மத்திய அரசு மீது பழி போட்டு, ஆக்ஸிஜன் போதும் என்று அறிக்கை விட்டார்! இதற்கு முன் ஒரு முறை விசாரணையின் போது, “எங்களுக்கு தேவையான ரெம்டெசிவிரை மத்திய அரசு தரவில்லை. அதனால் மக்கள் சாகிறார்கள்” என நீதிமன்றத்தில் கேஜ்ரி அரசு சொன்ன போது நீதிமன்றம், “மத்திய அரசு பதிவேட்டில் உங்களுக்கு 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரெம்டெசிவிர் தந்துள்ளதாக உள்ளது. நீங்களோ வெறும் 2,500 தான் தந்தது என்கிறீர்கள். தவறு எங்கே?” என்றதும் நழுவியது கேஜ்ரி அரசு!
ஒரு ரெம்டெசிவிர் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கருப்பு சந்தையில் விலைபோகிறது. 90 ஆயிரத்தை 30 ஆயிரம் ரூபாயால் பெருக்கி, எவ்வளவு அடித்திருப்பார்கள் கேஜ்ரி அரசு என்று கணக்கிட்டுக் கொள்ளவும். (மகாராஷ்டிர , ராஜஸ்தான் அரசுகளும் இதே கதை தான்).
“டில்லியில் வேண்டுமென்றே பலரும் சாகடிக்கப் பட்டார்கள். சிதைகள் எரியூட்டப்படுவதை வேண்டுமென்றே படமெடுத்து வெளிநாடுகளில் பரப்பினர். பர்க்கா, ரானா அயூப் போன்ற இந்து விரோதிகளை கொண்டு வெளிநாட்டு பத்திரிகைகளில் மோடி அரசை அவதூறு செய்து கட்டுரைகள். ‘உலகுக்கே மருந்து கொடுக்கும் இந்தியா. உலக நலனில் அக்கறை கொண்ட இந்தியா’ என மோடி அரசு சம்பாதித்த நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது. ‘ப்ரௌன் தோல் இந்தியனை நம்பாதே. வெள்ளைத்தோல் அமெரிக்க ஐரோப்பியனை நம்பு’ என இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பரப்புரை செய்து இந்தியாவுக்கும் மோடி ஜிக்கும் அவப்பெயர் தேடித்தருவது. மோடி அரசை பலவீனப்படுத்துவது எல்லாம் புதிய டூல்கிட் திட்டம்” என்கிறது கான்ஸ்பிரசி தியரி.



இது கேசரிவாலுவின் நண்பர் கமல் காசர் டராஜி காமெடி.

மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)