Showing posts with label அடுத்தவீடு. Show all posts
Showing posts with label அடுத்தவீடு. Show all posts

Saturday, July 6, 2019

அடுத்த வீடு! கர்நாடகா!ஆந்திரா! அங்கேயும் அரசியல்தான்!

இசுடாலின் மகன் உதயநிதி தான் இங்கே அடுத்த வாரிசு என்று அறிவிக்கப்பட்ட அதே நாளில்தான் கர்நாடக முதல்வர் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமியை இளைஞர் அணித் தலைவராக தாத்தன் தேவே கவுடா அறிவித்தாராம்! அறிவித்த  ராசி சரியில்லையோ? குமாரசாமியின் நாற்காலி ஆட்டம் காண ஆரம்பித்திருப்பது இன்றைய பரபரப்பு!.குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது? பாடல் இந்த சிச்சுவேஷனுக்குப் பொருத்தமானதுதான்!  


இதுவரை 12 MLA க்கள் தங்கள் ராஜினாமாக் கடிதங்களுடன் சபாநாயகருக்காகக் காத்திருக்கிறார்கள். சபாநாயகர் தனது அலுவலகத்துக்கு வருவாரா அல்லது இவர்கள் அவரது இல்லம் தேடிப்போயே ராஜினாமாவைக் கொடுப்பார்களா என்கிற பரபரப்பு இன்னும் அடங்கிய பாடில்லை.  


காங்கிரஸ் கட்சி எப்படி அடித்தளம் வரை உளுத்துப்போய்க் கிடக்கிறது என்பதற்கு கர்நாடகா அரசியல்களமே ஒரு நல்ல உதாரணம்.காங்கிரஸ் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் மீள்வதற்கு அதன் எதிர்க்கட்சிகளே உதவியிருக்கின்றன. இந்திரா காலத்தில், ஜனதா கட்சியின் குழப்பங்களும் ராஜீவ் காலத்தில் ஜனதா தளத்தில் நடந்த குழாயடிச் சண்டைகளும் காங்கிரஸ் மீண்டுவர உதவின. சோனியா, ராகுல் காலத்தில் நிலைமை அப்படி இல்லை. காஷ்மீர் முதல் கர்நாடகம் வரை, குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்திய அளவில் வேரூன்றியிருக்கும் ஒரு தேசியக் கட்சியை முதல்முறையாகக் களத்தில் சந்தித்துத் தோற்றிருக்கிறது காங்கிரஸ். இதுபோன்ற சூழலை காங்கிரஸ் எப்போதும் எதிர்கொண்டதில்லை. என்று விகடன் தளத்தில் சொல்வது  உண்மைக்கு கொஞ்சம் நெருக்கமாக இருக்கிறது. சரண்சிங்கின் வெள்ளந்தித்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜனதா தளத்தை உடைத்து, பிரதமரான அவரையும் சிறிது நாட்களிலேயே கவிழ்த்த இந்திராவின் வஞ்சகத்தைச் செயல்படுத்த அன்றிருந்த தளபதிகள் யாரும் இன்றைக்குக் காங்கிரசில் இல்லை. பானாசீனா மாதிரிக் காசு எங்கே கிடைக்கும் என்று மோப்பம் பிடிக்கிறவர்களை மட்டும்  வைத்துக் கொண்டு என்ன செய்வது?


ராகுல் காண்டி மாதிரியே இந்தத் தேர்தல் தோல்வியில் சுருண்டு போய்க் காற்றில் அலைக்கழிக்கப்படுகிற சருகு போல ஆகிப்போனவர் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு. முன்பு ஜெயிக்கிற தரப்பின் பக்கம் இருந்தே தானும் ஜெயித்தவர், இன்று அரசியல் எதிர்காலம் என்னாகுமோ என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்கின்றன செய்திகள். ஊழல் வழக்குகளில் எப்போது கைது செய்யப்படுவார் என்கிற தேதி மட்டும் தான் தெரியவில்லையாம்!  "The MLAs are well aware that TDP boss Naidu will soon be in jail on (alleged) multiple charges relating to corruption. Several close aides and family members of Naidu are also involved in corruption. It is for this reason that MLAs are approaching us. They realise that TDP's image of a clean party has taken a beating," said Deodhar who is also BJP's state in-charge for Tripura. என்கிறது எகனாமிக் டைம்ஸ்  மூழ்கும் கப்பலில் இருந்து தப்பித் பிழைக்க விரும்புகிறவர்கள் அணிமாற நினைப்பது இயல்பே. 


ஒரு மாறுதலுக்காக 1977 இல் மொரார்ஜி தேசாய், ஜனதா தளம் என்று ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் குரலாக, இந்திரா தோற்கடிக்கப்பட்டது எப்படி என்று சொல்கிறார், கேளுங்கள்!

மீண்டும் சந்திப்போம்.
       

காங்கிரசுக்குத் தான் வெட்கம், சுரணை இல்லை! நமக்குமா....?  இந்தப்பதிவில் எங்கள் Blog ஸ்ரீராம் வந்து காங்கிரஸைப் பற்றி பதிவு போடாமல் ஒரு மாதம் இருக்க முடியுமா என்று கேட்டிருந்தார். என்னால் முடியாது என்று சொன்னேன்.

  

Sunday, June 2, 2019

அடுத்த வீடு! ஆந்திரா! சந்திரபாபு நாயுடு அவ்வளவுதானா?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹைடெக் பிரியர் என்பது தெரிந்த விஷயம்! மனிதர் ஹைதராபாத்தில் சைபர் சிடி, மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் அங்கே கடைவிரிக்கவேண்டுமென்று பாடுபட்டதும் (அவைகளில் ஆதாயம் பார்த்ததும்) சாதாரண ஏழை எளிய மக்களின் பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் இருந்ததைப் பயன்படுத்தித்தான் YS ராஜசேகர ரெட்டி 2003 இல் பாதயாத்திரை நடத்தி, தெலுகுதேசகட்சியின் ஆட்சியை  முடிவுக்குக் கொண்டு வந்த பழையகதையை ஒரு திரைப்பட விமரிசனமாகப் பார்த்திருக்கிறோம்! இப்படி எழுதியது மார்ச் 8 ஆம் தேதி. இந்த மூன்று மாத இடைவெளியில்  சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுகுதேசம் நாடாளுமன்றத்துக்கு 3/25 சட்ட சபைக்கு, 23/175 என்று மிகக் கேவலமாக தோல்வியை சந்தித்து இருக்கிறது. 

இது 2011 ஆகஸ்டில்  

More than anything, Naidu needs an honest appraisal of what went so hopelessly kaput with his party. He can be excused for taking comfort from the fact that even if he lost, he can't be accused of not trying. In fact, he was one of India's most hardworking chief ministers, though he gets his economics only half-right and politics fully wrong என்கிறார் ஸ்ரீனிவாச பிரசாத் FirstPost தளத்தில். சந்திரபாபு நாயுடு 2004 தோல்விக்குப் பிறகு தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொண்ட மாதிரித் தோற்றமளித்தாலும் உண்மையில் ஹைதராபாத் நகரை IT HUB ஆக மாற்ற முனைந்த மாதிரியே ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதில் காட்டிய அதீத அக்கறை, மகன்     நார லோகேஷை பட்டத்து இளவரசராக்க முயன்றது, (IT அமைச்சராக இருந்த லோகேஷ் இந்தத்தேர்தலில் YSRCP வேட்பாளரிடம் தோற்றும் போனார்), சொந்த  ஜாதியினருக்கே முதலிடம் கொடுத்தது என்று பலவிதத்திலும் நாயுடு ஜனங்களிடமிருந்து விலகிப்போனார், தோற்றார் என்பதோடு சந்திரபாபு நாயுடுவும் தெலுகு தேசக் கட்சியும் சாப்டர் க்ளோஸ் என்றாகிவிட்டார்களா? 

ஜெகன் மோகன் ரெட்டி தனக்களிக்கப்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத வரை, இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசியலில் அவ்வளவு சீக்கிரமாகக் கட்சிகளுடைய கதை முடிந்து விடுவதில்லை என்பது இங்கே கழகங்களுடைய கதை,       

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஜெகன் மோகன் ரெட்டியும், கே சந்திரசேகர ராவும் சந்திரபாபு நாயுடுவுக்கெதிராக ஒன்று சேர்ந்தார்கள்.  ஹைதராபாதில் இன்று இருமாநில முதல்வர்களும் ஆளுநர் நரசிம்மனைச் சந்தித்து, மாநிலப் பிரிவினைக்குப் பிறகு இன்னமும் தீர்க்கப் படாத பிரச்சனைகளை விரைந்து தீர்ப்பதற்காகப் பேசினார்கள் என்கிறது செய்தி. YSRCP தெலங்கானாவில் தனிக்கடை போடவில்லை என்பதால் ஜெகன் KCR இருவரும் நண்பர்களானது, மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும்  தொடருமா என்பது தெரியவில்லை.

While NOTA with a 1.5% vote share outnumbered the BJP, which got 0.95%, and the Congress, which got 1.29% for the Lok Sabha seats, both national parties performed equally badly in the Assembly as well, with the BJP getting a mere 0.84% vote share and Congress 1.17% while NOTA managing to get 1.28%.Political analysts feel that the YSRCP’s triumph has become an obvious threat to the existence of the TDP, while believing the same also provides certain political opportunities to the two national parties. இப்படி ஒரு செய்தியை உங்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியுமானால், அரசியலில் நீங்களும் பிஸ்தா.

NOTAவை விடக்  குறைவாக ஓட்டு வாங்கிய பிஜேபி என்று மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தால் நீங்களும் ஒரு இணையதள திமுக என்று சொல்ல மாட்டேன். #ஊடகப்பொய்கள் எவ்வளவு வலிமையானவை என்று ஆச்சரியப்படுவதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?

மீண்டும் சந்திப்போம்.   

      

Thursday, April 4, 2019

அடுத்த வீடு! கேரளா தெலங்கானா ஆந்திரா!

சும்மா சும்மா தமிழ்நாட்டு அபத்தங்களையே பார்த்துக் கொண்டிருக்காமல் நமக்கு அடுத்த வீடுகளாக இருக்கும் கேரளா, ஆந்திரா, தெலங்கானா செய்திகளையும் கொஞ்சம் பார்த்தால் என்ன?     அமாவாசை நிறைந்த நல்லநாளாகப் பார்த்து ராகுல் காண்டி கேரளாவில் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். பப்புவோடு பப்பியும் கூட வந்திருக்கிறார்  என்கிறது செய்தி.  


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் VS அச்சுதானந்தன் அமுல் பேபி என்று ராகுலை 2011 இல் சொன்னது இன்றைக்கும் பொருந்துகிறது என்றார் இல்லையா?

Topical : Congress President to contest from two seats in Lok Sabha 2019!
5:38 PM - 2 Apr 2019 

அமுல் இதையும் சாமர்த்தியமாக ஒரு  விளம்பரமாக்கி விட்டது ஒன்றுதான் வயநாடு வேட்புமனு தாக்கலில் இருக்கும் ஒரே சுவாரசியம்! 



லட்சுமியின் NTR ராம் கோபால் வர்மாவின் படம் ஒரு வழியாக ஆந்திரா தவிர்த்து மற்ற பகுதிகளில் ரிலீசாகி டீசண்டான வசூலையும் தந்திருப்பதில் டைரக்டர் சந்தோஷமாகி விட்டார். ஆந்திராவில் ரிலீஸ் குறித்து ஏப்ரல் 9ஆம் தேதி  ஆந்திர உயர்நீதிமன்றம் முடிவெடுக்கப் போகிறதாம்! அதாவது 11 ஆம் தேதி தேர்தல் என்கிற நிலையில், தேர்தலுக்கு முன்னால் அங்கே படம் ரிலீசாகப் போவதில்லை என்பது சந்திர பாபு நாயுடுவுக்கு கொஞ்சம் நிம்மதி!  ஆனால் RGV விடுவாரா? 
All truly real and realistic honest fans of NTR and should cast their vote only after seeing in .. is a false heir to and only true heir is the fantastic who should be the only true honest future of TDP
10:45 PM - 2 Apr 2019  

ராம் கோபால்வர்மாவின் இந்த ட்வீட் ஆந்திர அரசியலில் கொஞ்சம் கொளுத்திப் போட்டிருக்கிறது. அரசியல் கலக்காமல் வெறும் சினிமா மட்டும்  என்பது இல்லை! இல்லவே இல்லை என்பது நமக்கு அடுத்தவீடு ஆந்திரா காட்டும் ஒரு பாடம்!  

இன்னொரு அடுத்த வீடு கர்நாடகா பற்றி சொல்வதற்கு ஏதும் இல்லையா? இருக்கிறது! முன்னாள் முதல்வர் சித்தராமையா செல்வாக்கும் பிடியும் கொஞ்சம் அதிகமாகிக் கொண்டிருக்கிறதாம்! இன்றைக்கு மாண்டயாவில் காங்கிரஸ் மாவட்டப் புள்ளி ஒருவர் வீட்டில் வருமானவரிச் சோதனை என்று வழக்கமான செய்திகள் தான்! பதிவெழுதிச் சிறப்பிக்க என்ன இருக்கிறது? !!

மீண்டும் சந்திப்போம்!

தொடர்புடைய பதிவுகள்  ஒன்று   இரண்டு    மூன்று       

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)