Showing posts with label இடதுசாரி. Show all posts
Showing posts with label இடதுசாரி. Show all posts

Wednesday, February 13, 2019

மாற்று அரசியல்! இடதுசாரிகளை நம்பலாமா?

அருள்கூர்ந்து முந்தைய பதிவைப் படித்து விடுங்கள்! 
தேசத்துக்குக் கொள்கை தான் வேண்டும், தலைவர்கள் அல்ல என்று பிப்ரவரி 2 ஆம் தேதி முழங்குக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சீதாராம் யெச்சூரி!  மிகவும் சரி! சொல்கிறவரிடம் என்ன கொள்கை இருக்கிறதாம்? அவரே சொல்கிறார்!
ரொம்ப சிம்பிளாக இரண்டே இரண்டு! மோடியை ஒழிப்போம்! மம்தாவை ஒழிப்போம்! இது  சர்வரோக நிவாரணியாக மார்க்சிஸ்டுகளின் கண்டுபிடிப்பு! இதே மாதிரித்தான் எமெர்ஜென்சி நாட்களிலும் முன்பும்  இந்திரா முழக்கமும் இருந்தது என்பது நினைவுக்கு வருகிறது.  ஆக்கபூர்வமாக லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்றும் வாஜ்பாய் காலத்தில் ஜெய் விஞ்ஞான் என்பதையும் சேர்த்து ஒரு  பாசிடிவ் முழக்கமாக இருந்ததெல்லாம் பின்னுக்குப்போவிட்டது. 
கரீபி ஹடோ! வறுமையே வெளியேறு! 1971 முழக்கம்! வறுமை வெளியேறி விட்டதா? ஒரு சுவர், பஸ், பேப்பர் விடாமல் இந்த முழக்கம் அம்மணி முகத்தோடு அந்தநாள் அலப்பறைகள் தவிர சாதித்தது என்ன?

ஒரே ஒரு கோர்ட் தீர்ப்பு, அம்மணியுடைய கோரமுகம் எப்படியிருந்தது என்பதைக் காட்டிவிட்டதை மேலே! தொடர்ச்சி இங்கே  பார்த்துவிட்டு கொஞ்சம் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்!

1974 லிருந்தே இந்திராவின் சர்வாதிகாரப்போக்கை எதிர்த்த காந்தீயவாதி ஜெயப்ரகாஷ் நாராயணனே மனம் நொந்து இந்திரா ஹதாண்டவம் டோ தேஷ் பச்சாவோ என்று சொல்லியிருப்பாரானால், இந்திராவின் கோர தாண்டவம் எப்படியிருந்திருக்கும்? ஊகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அந்த நிகழ்வை bihar movement என்று கூகிளிட்டுத் தேடிப்பாருங்கள்!    

என்னவோ மார்க்சிஸ்டுகளுக்கு மட்டும்தான் இந்த ஒழிக கோஷம் சொந்தமா? விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் முதற்கொண்டு இங்கே அரசியல் சில்லுவண்டிகள் எல்லோர் வாயிலும் மோடி ஒழிக கோஷம் புறப்படுவதாலேயே, சரியாகி விடுமா? 

ஒழித்து விட்டு எதை, யாரை வைத்து என்னமாதிரி மாற்றப் போகிறார்களாம்? அவர்களுக்கு ஒரு தெளிவு அதிலாவது இருக்கிறதா? விடையைக் காணோம்! 

சந்தோஷத்துக்கு குறுக்குவழி! Shortcut to Happiness என்று எழுதியிருந்தது இங்கே நினைவுக்கு வருகிறது.  

 

சந்தர்ப்பம் கிடைத்தவுடன், சாத்தான், ஒரு அழகிய பெண்ணாக உள்ளே நுழைகிறது! வெறுப்பு, குற்றவுணர்வுடன் தவிக்கும் எழுத்தாளனோடு, பேரம் ஆரம்பிக்கிறது. நாம் இருவரும்  கூட்டு சேர்ந்து கொண்டால் புகழ், பணம் எல்லாம் கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறாள் அந்த அழகான ராட்சசி! பதிலுக்கு உன்னுடைய ஆத்மாவை எனக்கு விற்றுவிடு என்கிறாள்.

கதாநாயகன் ஒத்துக் கொள்கிறான். கீழே லேப்டாப் விழுந்து தலையில் அடிபட்டு இறந்த பெண்மணி உட்பட, சிக்கல்கள், வேறு விதமாக மாறி, கதாசிரியனைத் தேடி, இது வரை அவன் பார்த்திருக்காத அங்கீகாரம், புகழ் பணம் எல்லாமே கிடைக்கிறது. அந்த அழகான ராட்சசி, அவனோடு சல்லாபித்துக் கொண்டே, வாக்களித்தபடி எல்லாவற்றையும் தந்தாலும், ஜாபெஸ் ஸ்டோன் ஒரு வெறுமையை உணர்கிறார். தான் எதிர்பார்த்தது இது இல்லை, இதிலிருந்து விடுபட்டால் தேவலை என்று தவிக்கிறார்!  இப்படி ஒரு திரைப்பட விமரிசனமாக அந்த நாட்களில் எழுதியிருந்தேன்!

அரசியல் மாற்றங்களுக்குமே கூட குறுக்குவழி எதுவும் இல்லை என்பதுதான் யதார்த்தம். ஒன்றை ஒழித்து வரும் வெற்றிடத்தை நிரப்ப இங்கே இடதுசாரிகள் உட்பட எந்த ஒரு அரசியல் கட்சியும் தகுதி உள்ளதாக இல்லை என்பது புரிகிறதா?

இவர்களில் எவராவது மோடி எதிர்ப்புக்குச் சரியான காரணம் சொல்கிறவரை, நம்புவதற்கு அவசரமா என்ன?  கூட்டத்தோடு சேர்ந்து கூவியே ஆகவேண்டிய அவசியம்தான் என்ன?

நமக்கு சொந்தமாக யோசித்து முடிவெடுக்கத் தெரியும் இல்லையா? மந்தைகள் அல்லவே நாம்!
        
            

Tuesday, February 12, 2019

லெப்ட் ரைட் லெப்ட் ரைட் கடைசியில் எதுதான் ரைட் ?

கடந்த ஜனவரி 19 அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானெர்ஜி, கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் மோடிக்கு எதிராய் நிற்கும்  எதிர்க் கட்சித்தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, தன்னுடைய பவர் என்னவென்று காண்பித்தார். அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 3 ஆம் தேதி அதே இடத்தில் இடதுசாரிகளின் பேரணியை இன்னும் கொஞ்சம் அதிகக் கூட்டத்துடன் நடத்திக் காண்பித்தது.
அங்கே சுற்றி இங்கே சுற்றி காம்ரேடுகள் என்ன முடிவு செய்திருக்கிறார்களாம்? கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பு எந்த முட்டுச் சந்துக்குள் டோலர்களைக் கொண்டு வந்து நிறுத்தும் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமானதில்லை. இந்தமாதம் 9ஆம் தேதி நடந்து முடிந்த பொலிட்பீரோ முடிவுகளை சீதாராம் யெச்சூரி பூசிமெழுகிச் சொல்வதை பார்க்க இங்கே. மார்ச் மத்தியக்குழு அங்கீகரித்தபிறகுதான் என்று சொல்லப்பட்டதை   இங்கே பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தாயிற்று.      

நீண்ட நாட்களுக்கு முன்னால் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா கொஞ்சம் வருத்தப்பட்டே சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரு வலதுசாரிக்கட்சியாக பிஜேபி இங்கே வலுவாக்க காலூன்றிக் கொண்டதற்கு, சமன் செய்கிற மாதிரி ஒரு  இடதுசாரி கட்சியும் வலுவாக இருக்கவேண்டும் என்பது அவர் சொன்னதன் சாராம்சம். இங்கே இடதுசாரிகள் என்ன செய்கிறார்கள்?  எதனோடோ சேர்ந்த கன்றுக்குட்டி எதையோ தின்னப்போன கதையாக  இங்கே கழகங்களோடும் அங்கே காங்கிரசோடும் உறவாடிச் சீரழிந்து கொண்டு வருவது மட்டும் கண்முன்னால் நிகழும் கள     யதார்த்தம். 

தொடர்புடைய இன்னொரு பதிவு   இங்கே ராமச்சந்திர குஹா என்ன சொன்னார் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிற பதிவு. 

ஒரு நல்ல மாற்றத்துக்கு இப்போதுள்ள கட்சிகளோ கூட்டணிகளோ வழிவகுக்கப்போவதில்லை. பழையதை உடைத்துப் புதியது பிறந்தாக வேண்டும். 

எங்கேயோ மழை பெய்கிறது என்றிருக்கும் ஜனங்கள் மாறுவதற்குத் தாயாராக வேண்டும். வழிநடத்த ஒரு நல்ல தலைமை, எங்கிருந்தோ அல்ல, நம்மிடமிருந்தே உருவாகவேண்டும்.

எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது? கொஞ்சம் சொல்லுங்களேன்!

                   

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)