Showing posts with label சண்டேன்னா பாட்டு. Show all posts
Showing posts with label சண்டேன்னா பாட்டு. Show all posts

Sunday, April 19, 2020

#மோடிவெறுப்பை போணியாக்குவது எப்படி? சண்டேன்னா சுகமான பாட்டு!

நரேந்திர மோடியை வெறுப்பதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கிற மூன்று தொழில்முறை நபர்கள் கூடிப்பேசினால் என்ன நடக்கும்?  அந்த மூன்று பேர்களில் ஒருவர் ஹிந்துவிலிருந்து வெளியேறி The Wire தளத்தை நடத்துகிற சித்தார்த் வரதராஜனாக இருந்தால் முகத்தை வெளியே காட்ட வேண்டியது இல்லை. அவருக்காக மோடிவெறுப்பைக் கக்குவதற்கு இரண்டு பேர் இருந்தாலே போதும். கக்குவதற்குத் தளம் அமைத்துக் கொடுத்து வெளியே பரவவிட்டால் போதாதா? மோடி வெறுப்பில் பிரபலமான ஊடகக்காரர் கரண் தாப்பர் நேர்காணலை நடத்துகிறவராகவும், பெயர் வெளியே தெரியாத நாட்களில் பிஜேபி கட்சிக்காக வேலை செய்தவராகவும், பிஜேபியுடனான உறவு முறிந்தபிறகு தனிக்கடை ஆரம்பித்து தேர்தல் உத்திவகுப்பவராக பிரபலமான பிரசாந்த் கிஷோர் பேட்டி கொடுப்பவராகவும் இருந்தால் எப்படியிருக்கும்? பாருங்கள்.

 
இந்த 49 நிமிட நேர்காணலில் கரண் தாப்பர், பிரசாந்த் கிஷோர், The Wire சித்தார்த் வரதராஜன் மூவரும் மோடிவெறுப்பு என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்திருப்பதைப் புரிந்துகொள்ள பெரிய அளவுக்கு அரசியல் ஞானம்  வேண்டியதே இல்லை. Modi is Not Caring Enough, It’s His Greatest Weakness’: இப்படி பிரசாந்த் கிஷோர் சொல்வதாக வீடியோவுக்குத் தலைப்பு வைத்தாயிற்று. என்ன முக்கிப்பார்த்தும் கூட நேர்காணலின் தலைப்பில் சொன்னதை நியாயப்படுத்த முடியவில்லை! மோடியுடன் பழகிய அனுபவத்தில் அவருடைய வலிமை என்ன என்பதைக் கரண் தாப்பர் கேள்விகேட்டு பிரசாந்த் கிஷோர் சுற்றிவளைத்துப் பதில் சொல்வதற்குள்ளாகவே முதல் இருபது நிமிடம் ஓடிவிடுகிறது. அப்படி என்ன வலுவான விஷயங்களை மோடியிடம் பார்த்தாராம்? RSS பிரசாரகராக 15 வருடம், பிஜேபி கட்சிப் பணியில் 15 வருடம், அப்புறம் அரசியல் தலைவராக 15! வருடம் என்று 45 வருட அனுபவம், அடுத்தவர் சொல்வதைக் கவனமாகக் கேட்பவர் என்று நிறுத்தி நிறுத்தி சொல்லும்போதே பிரசாந்த் கிஷோருக்கு நரேந்திர மோடியைப் பற்றி விசேஷமாகச் சொல்கிற அளவுக்குப் பரிச்சயம் இருந்ததில்லை என்பதான குட்டு உடைபடுவது தான் மிச்சம்! கொஞ்சம் பொறுமையாக இந்தத் தமாஷாவைப் பார்க்க முடிந்தால் பிரசாந்த் கிஷோர் எப்படி வெற்றிகரமான தேர்தல் உத்தி வகுப்பாளராக ஆனார் என்கிற கேள்விக்கும் கூட விடை புரிய வரலாம்! 

இதை இன்னொரு விதத்திலிருந்து பார்க்கலாம்! ஜனங்களிடமிருந்து கற்றுக்கொள்வது ஜனங்களுக்கு கற்றுக் கொடுப்பது என்ற இரண்டு விஷயங்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சொல்லப்படுவதுண்டு. கம்யூனிஸ்ட் கட்சியில் நரேந்திர மோடியை விட அதிக கால அனுபவம் உள்ளவர்களுண்டு. ஆனால் ஏன் நல்லகண்ணு போன்றவர்களால் தங்களுடைய கட்சியில் உள்ளவர்களுக்கே ஒரு தெளிவான அரசியல் பார்வையைக் கற்றுக் கொடுக்க முடியவில்லை என்ற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள்! இன்னும் தெளிவான விடை கிடைக்கலாம்!  

ஒரிஜினலாக இந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு பழைய பாக்கியராஜ் படமான தூறல் நின்னுபோச்சுக்குத் தான் திரைப்பட விமரிசனமாக ச்சும்மா ஜாலிக்கு எழுத உத்தேசித்திருந்தேன். கரண் தாப்பரும் பிரசாந்த் கிஷோரும் குறுக்கே வந்து 49 நிமிடங்களை எடுத்துக்கொண்டுவிட்டார்கள் என்பதால் பார்த்து ரசிக்க அந்தப்படத்திலிருந்து இளையராஜாவின் இசையில் இரண்டு அருமையான பாடல்கள்! 

         
 தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி!
   

ஏரிக்கரைப் பூங்காற்றே! நீ போற வழி தென்கிழக்கோ?  
 


மீண்டும் சந்திப்போம்! 

Sunday, July 14, 2019

ச்சும்மா ஜாலிக்கு! திரை இசைப் பாடல்கள்!

என்னதான் தினசரி புதுசுபுதுசாக எத்தனையோ வந்து கொண்டே இருந்தாலும் பழசுக்கென்று ஒரு தனிமரியாதை, நேயர் விருப்பம் என்று இருந்து கொண்டே இருக்கிறது வாஸ்தவம் தான்! இல்லையா பின்னே? இந்தப் பாடலைக் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்! 

 

குலேபகாவலி! 1955 இல் வந்த படம். எம்ஜியார், TR ராஜகுமாரி, G வரலட்சுமி ராஜசுலோசனா நடித்து வெளிவந்த  படம். இந்தப் பாட்டில்  ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்திலே ஏங்குவதைப் பாராயடா என்று உருகுகிறதே ஒரு பின்னணிக் குரல் யாருடையது என்று நினைவுக்கு வருகிறதா? இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் என்றிருந்த நாட்களில் பழைய பாடல்கள், பாடியவர், இசையமைத்தவர்  யாரென்ற விவரங்களோடு தினசரி கேட்டுக் கொண்டிருக்கிற வாய்ப்பு இருந்தது. முகம் தெரியாது ஆனால் பெயர் மட்டும் மறந்து போகாமல் இருக்கச்செய்ததில் இலங்கை வானொலிக்கு ஒரு முக்கியப்பங்கு இருந்தது.


ஆணாக பிறந்து எல்லாம் அழகென்று தெரிந்த பின்னும் வீனான ஜம்பம் ஏனடி?. என்று சபாஷ்மீனா (1958) படத்தில் சரோஜாதேவிக்காக ஒரு துள்ளல் இசைப்பாடல் பாடியவரும்  கீழே படத்தில் இருப்பவர்தான்! K ஜமுனா ராணி!  


கே ஜமுனா ராணி! இன்றைக்கு 81 வயதாகும் ஜமுனா ராணி தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் சேர்த்து 6000 பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது, இன்றைக்கு வெறும் 25, 50 பாடல்கள் பாடியதோடு காணாமல் போய்விடுகிற, பெரும்பாலான நேரங்களில் பெயர்கூட ஞாபகமில்லாமல் போய்விடுகிற இளம்பாடகர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எவ்வளவு காலம் தாக்குப்பிடித்த  குரல் என்பதும்  புரியும். 


குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே! இது 1959 இல் மரகதம்  படத்துக்காக சந்திரபாவுவோடு  பாடிய கலக்கல் பாடல்.மறந்துவிட முடியுமா? 


பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதைப் பாடவில்லை என்று பாசமலர் (1961) படத்தில், குழைவாகப் பாடியவர்  கே ஜமுனா ராணிதான்!  


ஒரு பத்துப் பதினைந்து வருட இடைவெளிக்குப் பிறகு நான் சிரித்தால் தீபாவளி என்று நாயகன் படத்துக்காக MS ராஜேஸ்வரியுடன் 1987 இல்  பாடியதற்கு அப்புறம் 1992 இல் அண்ணன் என்னடா தம்பி  என்னடா படத்தில் பாடியிருக்கிறார்!


மாமா மாமா மாமா என்று ஆரம்பித்து ஜமுனாராணி பாடிய பாடல்களின் தொகுப்பாக ஒரு இரண்டேகால் மணிநேரம்!

ரசனை உள்ளவர்கள் அனுபவித்துக்  கேட்பதற்காக!  

மீண்டும் சந்திப்போம்.

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)