Showing posts with label CAA எதிர்ப்பு அரசியல். Show all posts
Showing posts with label CAA எதிர்ப்பு அரசியல். Show all posts

Friday, February 28, 2020

எப்போது விஷமக்கார ஊடகங்களைக் கேள்வி கேட்கப் போகிறோம்?

டில்லி கலவரங்களை வைத்து ஒரு மிகப்பெரிய ஊடகப் பிரசாரம் இந்தியாவைக் குறிவைத்து, இந்தியாவைப் பற்றி  கொஞ்சமும் அறிந்திராதவர்களால், திட்டமிட்டே நடத்தப்பட்டு வருவதை அறிந்திருக்கிறீர்களா? நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற இந்திய வெறுப்பில் ஊறிய ஊடகங்களாகட்டும், டெமாக்ரட் லட்சிப் பிரமுகர்களாகட்டும். டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகையை ஒட்டி வன்மம் கக்கிக் கொண்டிருப்பதை அறிந்திருக்கிறீர்களா?


டில்லிப் போலீஸ், உளவுத்துறை மீதே பழியைச் சுமத்திவிட்டு, அதற்காக அமித்ஷா பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று குதித்துக் கொண்டிருக்கிற சோனியா காங்கிரசு என்ன உள்நோக்கத்தோடு செய்கிறது? ஹிந்து என் ராம் உள்ளிட்ட இடதுசாரிகள் எதற்காக காங்கிரசோடு கைகோர்த்து பொய்களைத் தொடர்ந்து அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சமாவது தெரிந்து கொண்டிருக்கிறீர்களா? இந்த 40 நிமிட விவாதம் உங்களுக்குப் பலவிஷயங்களைத் தெளிவுபடுத்தக்கூடும்!


IB அதிகாரி அங்கித் ஷர்மாவைக் கொலை செய்தது உட்பட  எறிவதற்கு கற்கள், எரிப்பதற்கு பெட்ரோல் குண்டுகள் என கலவரங்களுக்கு weapon supplier ஆம் ஆத்மி கட்சியின் அமைதி மார்க்க உறுப்பினர் தலை மறைவாகிவிட்டாராம்!


டெல்லிப் போலீஸ்காரர்கள் பொய்சொல்கிறார்களா என்றறிய அவர்கள் மீது நார்கோ அனாலிசிஸ் டெஸ்ட் நடத்தவேண்டும் என்று ஒரு AAP சமஉ டில்லி சட்டசபையில் பேசியிருக்கிறார்!

விஷமக்கார ஊடகங்களையும்,  அடிப்படை ஆதாரம் இல்லாத பொய்களையே  தொடர்ந்து பரப்பிவரும் திமுக உள்ளிட்ட அரசியல்கட்சிகளையும் எப்போது கேள்வி கேட்கப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.  

  

Thursday, February 27, 2020

எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்?

சென்னையில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு என்று ஒரு கூத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் தலைமையில். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற புதுப் பெயரில் நேற்றைக்கு அரங்கேற்றியிருக்கிறார்கள். பழைய கள் தான்! ஆனால் புது மொந்தையாம்!  அதில் இசுடாலின் வாய்ஸ் கொடுத்ததை முந்தைய பதிவில் சுட்டி கொடுத்திருந்தேன். இருந்தாலும் இங்கேயும் ஒரு தொடர்ச்சிக்காக. ஹிந்து என் ராம் பேசுவதை இந்த 25 நிமிட வீடியோவில் பார்க்கலாம்.


இங்கே CAA குறித்து எதிர்க்கட்சிகள்,உதிரி அமைப்புக்கள், இடதுசாரிக் குறுங்குழுக்கள் எல்லாமாகச் சேர்ந்து திரும்பத்  திரும்ப ஒரே பல்லவி,  பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். CAA  என்பது அண்டைநாடுகளில் இருந்து கொடுமைக்குள்ளாகி இங்கே வந்த அகதிகளுக்கு, சுமார் 38000 பேருக்குக் குடியுரிமை வழங்குவதைப் பற்றி மட்டுமே. எந்த ஒரு இந்தியக்குடிமகனுக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிற போதிலும் இங்கே திமுக, காங்கிரஸ் மற்றும் உதிரிகள் தொடர்ந்து பொய்யான பரப்புரை செய்து கொண்டே இருக்கின்றன. அரசியல் சாசனத்துக்கு எதிரானது, அடிப்படை உரிமைகளில் கைவைக்கிற மாதிரி இருக்கிறது, சட்ட விரோதம் என்று முதலில் இருந்து என் ராம் ஆரம்பிப்பதன் உள்நோக்கம் என்ன? நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, மூன்றில் இருபங்குக்கும் அதிகமான மெஜாரிட்டியில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை சட்டவிரோதம் அரசியல் சாசனத்துக்கு  முரணானது என்றால் அதைக் கேள்விக்குள்ளாக்கவேண்டிய இடம், தங்களுடைய அச்சம் நியாயமானது என்பதைஎடுத்து வைக்க வேண்டிய இடம் நீதிமன்றம். தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துவதில் அல்ல என்பது என் ராம் மாதிரியான இடடதுசாரித் தறுதலைகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும், அரசுக்கு எதிராக எதையாவது கிளப்பிக் கலவரத்தைத் தூண்டுவது ஒன்று தான் அவர்களுடைய புரட்சிகரமான நடவடிக்கை! பாமரனுக்கும் புரிகிற மாதிரி ஒரே வார்த்தையில் சொல்வதானால் அராஜகம்! வன்முறைக் கலவரம்!

சரி, அரசியல் கட்சிகள், சார்புநிலை எடுக்கும் உதிரிகள் இவர்கள்தான் இப்படியென்றால், இவர்கள் சொல்கிற திகில் சித்திரத்தை அப்படியே நம்பித்தான் இஸ்லாமியர்கள் ஷாஹீன் பாக், வண்ணாரப்பேட்டை இப்படிப்பல இடங்களிலும் கலவரத்தீ உண்டாகிற அளவுக்குப் போராட்டங்களில் இறங்கி இருக்கிறார்களா? இல்லை என்பது தெளிவு. அவர்கள் ஒரு தெளிவான அஜெண்டாவுடன் இயங்குகிற மதக் குழுக்களின் பின்னால் அணி திரள்கிறார்கள். பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் சூத்திரதாரிகளுடைய முகங்கள் வெளியே அவ்வளவாகத் தெரிவதில்லை.  

கழகங்களுக்கு  இஸ்லாமியர்கள், கிறித்தவர்களுடைய ஆதரவை அப்படியே பெறவேண்டும் என்கிற நோக்கம் அப்பட்டமானது. பெரும்பான்மையினரை  ஜாதி ரீதியாகப் பிரித்து வாக்குகளைப்பெற்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை, இப்படி வெளிப்படையாக ஆதரவுக் கரம்  நீட்டப்படுகிறது.

இங்கே தேசநலன், ஜனநாயகம், உண்மை பேசுவது,மக்கள் நலன் சார்ந்து செயல்படுவது  இவையெல்லாம் காற்றில் பறக்கவிடப்படுவது தொடர்ச்சியாக இந்த தேசத்தை அரித்துக் கொண்டே வருகிறது. இங்கே ஜனங்களுடைய குரலை எதிரொலிக்கப் பிரதிநிதிகளும் இல்லை! ஜனங்களே நேரடியாகப் பங்குகொள்ளும் விதமும் ஆரம்பத்தில் இருந்தே இல்லை. ஜனங்கள் சும்மா இருக்கிறார்களே என்று அலுத்துக்கொள்வகிலும் பொருளில்லை.

எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்?  மீண்டும் சந்திப்போம்.        
  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)