Showing posts with label paid news. Show all posts
Showing posts with label paid news. Show all posts

Monday, April 6, 2020

எல்லாம் ஒரு தகவலுக்காகத்தான்! ஆனால் கற்றுக்கொள்வதில் ஏன் மந்தமாக இருக்கிறோம்?

இங்கே திராவிடங்கள் அடித்த கூத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி இன்னபிற வார்த்தைகளுக்கான சரியான பொருளே மாறிப்போய்விட்டதில், இந்தவார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தமென்ன என்பதை மீட்டெடுக்க, ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதைவிளக்க பெரிய அளவில் தீசிஸ் எல்லாம் எழுதிப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை! நடப்பு நிகழ்வுகளை, செய்திகளை சரியானமுறையில் புரிந்துகொண்டாலே போதுமானது. உதாரணமாக TOI நாளிதழில் வெளியான செய்தி இது.

படத்தைப் பெரிதாக்கிப் படிப்பது, செய்தி ஆங்கிலத்தில் இருக்கிறதே என்றெல்லாம் தட்டிக் கழிக்க முடியாதபடி எழுத்தாளர் மாலன் நாராயணன் தமிழ்ப்படுத்தி கொடுத்திருப்பதை கொஞ்சம் வாசித்துத்தான் பாருங்களேன்! அவரது முகநூல் பக்கங்களுக்கு நன்றியுடன்! 

கோவிட் -19 தொற்று உலகெங்கும் பரவிய நிலையில் மார்ச் மாதம் தில்லி நிஜாமுதீனில் கூட்டப்பட்ட மாநாட்டை ரத்து செய்யுமாறு முஸ்லீம் துறவிகள், முஸ்லீம் சிந்தனையாளர்கள், ஏன் அவரது நெருங்கிய உதவியாளர்கள் கேட்டுக் கொண்டும் கூட தப்லிகி ஜமாத் தலைவர் மெளலானா முகமது சாத் அதற்கு இணங்கவில்லை.என்று கூறப்படுகிறது.

அவரது பிடிவாதம் அவர் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அவரது சீடர்களின் வாழ்வை மட்டுமல்ல, முஸ்லீம்களின் இமேஜையும் சீர்குலைத்துவிட்டது என்று அந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் கூறுகிறார்கள்.

அவரது நிகழ்வில் (மார்கஜ்) கலந்து கொண்ட பலர் கொரானா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மெளலானா சாத் முஷீர்கள் எனப்படும் தனது ஆலோசகர்களுடன் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் கொரானா தொற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களில் 30% பேர் தப்லிகி ஜமாத்தோடு தொடர்புடையவர்கள். உத்தர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 50% ஆக உயர்ந்துள்ளது ( இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படாத செய்தி தமிழ்நாட்டில் இது ஏறத்தாழ 80-90%) தில்லி துர்க்மான் கேட்டில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் தப்லிகி ஜமாத்திலிருந்து பிரிந்த இன்னொரு அமைப்பான ஷுரா -இ- ஜமாத், தொறு நோய் பரவும் செய்தி கிடைத்ததுமே தனது எல்லா நிகழ்சிகளையும் ரத்து செய்து விட்டது. ஆனால் அந்தச் செய்தி குறித்துச் சற்றும் கவலைபடாத மெளலானா சாத் திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். வைரலாகப் பரவிய அவரது டேப் ஒன்றில் அவர் " மசூதியில் இறப்பது உயர்ந்த சாவு" என்று போதித்துள்ளார்.

மும்பையில் வசித்து வரும் தப்லிகி ஜமாத்தின் மூத்த உறுப்பினர் முகமது ஆலம் "சாத்திற்கு எல்லாம் தெரியும். அவரது பிடிவாதம் அப்பாவி தப்லிகிகளை (முஸ்லீம்களை) கொள்ளை நோயின் வாயில் தள்ளிவிட்டுவிட்டது" என்கிறார். "தன்னை முஸ்லீம் உலகின் அமீராக (அரசனாக்)க் கருதிக் கொள்ளும் ஒருவர். மெக்கா, மதீனாவிற்கு அடுத்தாற்போல் தப்லிகி மார்கஜ்தான் புனிதமான இடம் எனச் சொல்லும் ஒருவர் எப்படி கொள்ளை நோய் பற்றி அறியாதவராக இருந்திருக்க முடியும்?" எனக் கேட்கிறார் அவர்.

மாவைச் சேர்ந்த இன்னொரு மூத்த தப்லிகி உறுப்பினர் லியாகத் அலி கான், " பொறுப்புள்ள முஸ்லீம் சிந்தனையாளர்களின் அறிவுரைகளை ஏன் மெளலானா சாத் குப்பைத் தொட்டியில் போட்டார்? ஏன் தனனை வைரஸ் பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ளாமல் ஒளிந்த்திருக்கிறார்?" எனக் கேட்கிறார்.மெளலானா சாத்தின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய பெயரை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவர், நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதற்கு அவர் செவிமடுக்கவில்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்தார். "இப்போது அவர் தனது சீடர்களையே அபாயத்தின் விளிம்பிற்குத் தள்ளிவிட்டார்!" என்கிறார்

மீம் அஃப்சல் என்ற காங்கிரஸ் தலைவரும், ஜாபர் சரேஷ்வாலா என்ற முஸ்லீம் தலைவரும், மெளலானாவிற்குப் பல முறை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு தகவல் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்

"ஜனவரி -பிப்ரவரியில் கோவிட்-19 பற்றிய தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கியதும் நாங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தோம், இந்தியாவிற்கு வருகைதரயிருந்த அயல் நாட்டினரைத் தடுத்து நிறுத்தினோம். ஊரடங்கு இருக்கும் என எதிர்பார்த்தோம். அதனால் கூட்டங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டோம்" என்கிறார் மருத்துவரும் ஷுரா பிரிவின் மூத்த உறுப்பினருமான டாக்டர் எம்.எஸ் கித்வாய்

என்றாலும் மெளலானா சாத்தின் நெருங்கிய மற்றொரு உதவியாளர் மெளலானா ஹாரிஸ், " அயல்நாடுகளிலிருந்து வந்த ஜமாத் உறுப்பினர்கள் இந்தியாவில் நுழைய இந்திய அரசு அனுமதித்தது. அது எப்படி எங்கள் தவறாகும்?" என்று தனது தலைவருக்கு ஆதரவாக வாதிடுகிறார்.

மற்றொரு முஸ்லீம் அமைப்பான தியோபந்த் துறவி அப்துல் காசிம், " தியோபந்த் இஸ்லாமிக் செமினரி மூன்றாண்டுகளுக்கு முன்னரே தப்லிகி ஜமாத்தைத் தடை செய்து விட்டது" என்கிறார்

[ இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தியின் தமிழாக்கம்]

இங்கே ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஊடகக்காரருக்கும் ஏதோவொரு சார்புநிலை இருக்கிறது. அதையும் தாண்டிக் காசுக்கு கூவுவது ஊடகங்களுடைய இன்னொருபக்கமாகவும் இருக்கிறது. செய்திகளைத் தவிர்ப்பதால் ஊடகப்பொய்களிலிருந்து தப்பித்துவிடுவோம் என்பதுகூடத் தவறான அனுமானம் தான்! வருகிற செய்திகளிலிருந்து உண்மையைப் பகுத்து அறிய முடிவதுதான் உண்மையிலேயே பகுத்தறிவு! செய்திகள் உண்மையா பொய்யா என்பதை அதன் வேரைப் பிடித்துப் பார்க்கப்பழக வேண்டும். தொடர்ந்து பழகினால் எவராலும் முடிகிற விஷயம்தான்!

மீண்டும் சந்திப்போம்.           

Monday, February 25, 2019

மீண்டும் ரங்கராஜ் பாண்டே! எல்லைமீறும் ஊடகங்கள்!

அரசியலைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பது கூட ஒருவகையில் வியாதிதான்! அவர்கள் மாறலியே என்று குறை சொல்வதற்கு முன்னால், நம்முடைய யோக்கியதை என்ன? சில கேள்விகளுக்கு ரங்கராஜ் பாண்டே அழகாகப் பதில் சொல்கிறார், கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள்!

கொஞ்சம் மென்மையாக, இந்தப்பக்கங்களில் அரசியல் பதிவுகளையும் எழுத ஆரம்பித்ததில், மையக்கருத்தாக மாற்றம் முதலில் நம்மிடமிருந்தே ஆரம்பித்தாக வேண்டும் என்பதைச் சொல்லிவருவது தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்! வாக்குச்சீட்டு நம்மிடம் இருக்கும் வலிமையான ஆயுதம்! ஒருமுறைக்குப் பலமுறை நன்கு யோசித்துப் பயன்படுத்த வேண்டிய ஒன்றாகவும் அது இருக்கிறது. 

அன்புமணியும் அந்தப் பத்துக் கேள்விகளும் என்ற தலைப்பே ஊடகங்கள் எத்தனை வக்கிரத்துடன் செய்தி சேகரிக்கின்றன, அவதூறுகளையே கேள்விகளாக எழுப்புகின்றன என்பதைச் சொல்லும். ஊடகங்கள் முழு உண்மையைச் சொல்வதில்லை என்பதற்காக மட்டுமே இந்த வீடியோவைப் பகிர்கிறேன்! அன்புமணிக்கு வக்காலத்து வாங்குவதற்காக அல்ல! பாமகவையும் நிராகரிக்கவேண்டிய உதிரிகள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
தலித் எழில்மலை என்ற பெயர் ஞாபகம் வருகிறதா?

கே பொன்னுசாமி என்ற பெயர் நினைவுக்கு வருகிறதா? விடுதலைச் சிறுத்தைகளோடு கூடிக் குலாவியதாவது நினைவுக்கு வருகிறதா? சௌகரியப் படுகிற போது வன்னியருக்கு மட்டுமே ஆன கட்சியாகவும் சௌகரியம் மாறும்போது அய்யங்காருக்கும் இடம் கொடுத்து எல்லோருக்கும் பொதுவானகட்சியாகவும்  இருந்து பார்த்து அதுவும் எடுபடாதபோது, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் என்பதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன தான்!

ஆனால் அன்புமணியையோ, ராமதாசையோ மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? 

மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற catchy  கோஷத்தோடு ஒரு மாற்றத்துக்கான அரசியலை அன்புமணி, எல்லா சமூகங்களுக்கும் பொதுவானவராக, தமிழ்நாடு முழுவதும் கட்சியைக் கொண்டுசெல்ல மருத்துவர் அன்புமணி எடுத்த முயற்சிக்கு என்ன வரவேற்பு இருந்தது? அவருடைய ஆதங்கம், எதிர்க்கேள்வி நியாயமானதுதான்! 

என்னமோ அன்புமணியை வறுத்தெடுத்து விட்டதாக மீடியா ஹைப் இங்கே கிளப்பிவிடப்பட்டிருக்கிறது! உச்ச பட்ச டென்ஷனில் அன்புமணி என்று பீற்றிக் கொள்கிறது நக்கீரன்!

விஜயகாந்த் தெம்பாக இருந்த நாட்களில் இதுமாதிரி ஊடகங்களைக் காறித்துப்பியது நியாயம்தான் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது!

வேறென்ன?


   

           

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)