ராகுல் தேறுவாரா? இப்படித் தலைப்பிட்டு நேற்றைக்கு தினமலர் செய்தி ஒன்றைப் பார்த்தேன்.ரசித்தேன், சிரித்தேன்! தலைப்பே தேறமாட்டார் என்பதைச் சொல்லி விட்ட பிறகு வேறென்ன செய்ய முடியும், நீங்களே சொல்லுங்கள்! அவர் போகிற இடங்களில் எல்லாம் கோஷ்டிப்பூசலும் தோல்வியும் சேர்ந்தே துரத்துகிறது! இதில் ராகுல் காண்டியை மட்டுமே குறைசொல்லிப் பிரயோசனமில்லை. தும்பை விட்டு வாலைப்பிடிக்கிற காங்கிரஸ் கலாசாரம் வேறு இருக்கிறதே!
மத்திய அரசில் ராஜாங்க மந்திரியாக இருந்த நாட்களில் கேள்வி கேட்பாரில்லாத கோட்டைவாயாக உளறித் திரிந்த நாராயணசாமி பாண்டிச்சேரி முதல்வரான பிறகு ஒப்பீட்டளவில் சற்று அடக்க ஒடுக்க, மாகவே இருந்தார் தான்! அவருடைய கர்மா, கிரண் பேடியை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக வரவழைத்து அவருடன் மோதுவதையே முழுநேர அரசியலாகவும், தொழிலாகவும் ஆக்கிவைத்தது. வாய்தான் பெரிதே தவிர காரியத்துக்கு ஆகாதவர் என்று தெரிந்த பிறகு அவருடன் சேர்ந்து அரசியலில் பயணித்து தற்கொலை செய்துகொள்வதற்கு யார் தான் தயாராக இருப்பார்? ஆக இதுவரை காங்கிரஸ் ஊழல் கோட்டையாகவே இருந்துவந்த பாண்டிச்சேரி முதன்முதலாக, அந்த கெட்ட சகவாசத்திலிருந்து விடுபடுகிற நேரமும் வந்துவிட்டது போல! நாளைக்கு ராகுல் காண்டி புதுச்சேரிக்குத் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வரப்போகிறாராம்! வந்து நாராயணசாமி ஒப்பாரி வைப்பதைக் கேட்கப் போகிறாரா? பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்குமா? கழுத்தைப்பிடித்துத் தள்ளுகிறவரை நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்குவது காங்கிரஸ்காரன் குணாதிசயம்! நாசாவும் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்! இதில் ராகுல் காண்டி வந்து என்ன செய்து விடமுடியும்?
கழுத்தைப்பிடித்துத் தள்ளுகிறவரை நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்குவது காங்கிரஸ்காரன் குணாதிசயம்! நாசாவும் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்! இதில் ராகுல் காண்டி வந்து என்ன செய்து விடமுடியும்?
அதீதக்கற்பனைகளினாலேயே இந்திய சரித்திரத்தை எழுதிவரும் ராமச்சந்திர குகா இன்றைக்கு NDTV தளத்தில் Why Modi And Shah Fear Young Activists என்ற தலைப்பில் மோடி அமித் ஷா இளைஞர்களைக் கண்டு பயப்படுவது ஏன் என்கிற மாதிரிப் பொருமித் தீர்த்து எழுதியிருக்கிறார்
பழைய பதிவுகளையும் சென்று படித்து வந்தேன். தெரிந்து கொண்டேன். அந்த மூன்று புத்தகங்கள் பி டி எப் பில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
ReplyDeleteஅரசியலோ வேறெதுவோ பிரபஞ்சத்தில் எதுவுமே இலவசம், பிறப்புரிமை இல்லை ஸ்ரீராம்!
DeleteAG கார்டினர் கட்டுரை On the Rule of the road அறுபதுகளில் ஆங்கிலப்பாடத்தில் படித்தது இன்றைக்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறது என்பதற்காகத்தான் பழைய பதிவின் லிங்க்
we cannot simply think “I have liberty, and therefore I may do whatever I want.” We have to realize that there are times when our actions can take away liberty from other people. என்று நச்சென்று சொல்லிவிடுகிறார்
கருத்து சுதந்திரம், சுதந்திரம் என்பவை சில பொறுப்புகளோடு வருபவை அதை நிறைவேற்றினால் மட்டுமே கிடைக்கக் கூடியது. அப்பன் பாட்டன் சேர்த்து வைத்த சொத்தை அழிப்பது மாதிரி செலவு செய்ய முடியாது.
நம் நீதிமன்றங்கள் மிக நேர்மையானவை. நல்ல தீர்ப்பையும் விரைந்து அளிப்பார்கள். நேர்மை என்பதை நிச்சயமாக கடைபிடிப்பார்கள். பசி தேர்தல் வழக்கு தீர்ப்பு
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்தில் இருக்கிற குத்தல், எள்ளல் இரண்டையும் ரசித்தேன் நெல்லைத்தமிழன் சார்! நன்றி
Deleteகாங்கிரசின் ஆதரவுத்தளம் கிறித்துவ இஸ்லாமிய சமூகங்களுடன் சுருங்கிவிட்டது பரிதாபம்தான்
ReplyDeleteஅப்படி உறுதியாகச் சொல்லிவிட முடியாது. கேரளாவில் கிறித்தவ வாக்குகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டுமானால் இஸ்லாமிய வாக்குகளை இழக்கும் நிலையில் காங்கிரஸ் இப்போது இருக்கிறது உம்மன் சாந்தி மறுபடியும் முன்னுக்குக் கொண்டு வரப்படுவது ஏனென்று கொஞ்சம் கவனியுங்களேன்! இதர மாநிலங்களில் கூட கிட்டத்தட்ட இதே நிலைமைதான்.
Deleteஉம்மன் சாண்டி எனது திருத்தி வாசித்துக் கொள்ளவும்.
Deleteஎப்போதுமே 'சிறுபான்மையினர்' என்று வாக்குகளைக் குறிவைத்து காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகள் நடந்துகொள்ளும்போது, இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் அது அவர்களைத் தாக்கும் என்று நினைத்தது உண்மையாகிக்கொண்டுவருகிறது. அதனால்தான் சோனியா பிரியங்கா போன்றவர்கள் பெரியதாக குங்குமம் தீட்டிக்கொள்வதும், ராகுல் காண்டி தான் பிராமணன் என்று வெளிப்படையாக விளம்பரம் தேடுவதும், மற்றவர்கள் அலகு குத்திக்கொள்வதைத் தவிர மற்றவற்றைச் செய்ய முனைவதும் நடக்கிறது
Deleteகாங்கிரஸ் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி அதுவும் தேய்ந்து சித்தெறும்பாக ......வேறென்ன நடக்கும் என்று நினைத்தீர்கள் நெல்லைத்தமிழன் சார்?
Deleteதேசிய உணர்வு ஒன்றே அந்தநாளைய காங்கிரசை உயிர்ப்புடன் வைத்திருந்தது. நேருவின் கற்பனாவாத சோஷலிசத்தில் அது குன்ற ஆரம்பித்தது இந்திரா தனது சுயநலத்துக்காக கட்சியை இரண்டாக உடைத்தார் pseudo seculars என்றானதில் CPI வலது கம்யூனிஸ்ட் கட்சி வந்து ஒட்டிக்கொண்டது சோனியா கைக்கு காங்கிரஸ் வந்தபிறகு இன்னும் சீரழிந்ததில் CPI, CPI M CPI ML என்று கம்யூனிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக பிஹாரில், மேற்கு வங்கத்தில் வந்து ஒட்டிக் கொண்டாயிற்று யார் யாரை முதலில் ஒழித்துக்கட்டப்போகிறார்கள் என்பதைப் பொறுமையாகப் பார்க்க வேண்டியதுதான் பாக்கி.
தன்னுடைய ஒரிஜினல் அடையாளம் சித்த்தாந்தங்களை ஒவ்வொன்றாக உதிர்த்து விட்டு சோனியா காங்கிரஸ் எப்படி?யாவது ஆட்சியைப் பிடித்து விடமாட்டோமா என்று கண்ட கண்ட கட்சிகளுடன் சேர்ந்து போராடிப்பார்க்கிறது..அவ்வளவுதான்! இதில் ஜானேதாரி ராகுல் கண்டியை மட்டும் குறைசொல்வானேன்?