Saturday, December 26, 2020

சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் செய்திகள்! #அரசியல்களம்

அரசியல் செய்தியா அல்லது செய்தியே அரசியலா என்று குழம்பும் அளவுக்கு, தமிழக அரசியல் களத்தில் நிறையக்  காமெடி சமாசாரங்கள் நடந்து கொண்டே இருக்கும்தான்! அதைமட்டுமே நம்பி, ஆஹா, அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது என்று சொல்லிவிட முடியுமா என்ன?! நிகழ் நேர அரசியல் காமெடி அல்லது செய்திகளைக் கொஞ்சம் பார்த்துவிடலாமா?

#உதை_வாங்கிய_உதயநிதி கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!! 





இது நேற்றைக்கே தெரிந்த செய்திதான்! வீடியோ கிடைத்தால் போடலாமே என நினைத்தேன். அரியலூர் மாவட்டத்துக்கு இசுடாலின் மகன் உதயநிதி தேர்தல் பிரசாரம் செய்யப்போனார். G.K  மூப்பனார் தன தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிக்க கொடுத்த ஒரு பொது அரங்கத்தில் மூப்பனார் பெயரைத் திமுக ஆசாமிகள் மறைத்துவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில்  தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவாளர்கள் உதயநிதி பயணித்த வாகனத்தை மறித்து, தங்கள் கோபத்தை ஒரு காட்டு காட்டியிருக்கிறார்கள். இதையடுத்து ட்வீட்டரில்  

#உதை_வாங்கிய_உதயநிதி என்ற ஹேஷ்டாக் போட்டு பரவலாகக் கலாய்த்திருப்பதாக இங்கே செய்தி 


சமீபத்தில் இதேமாதிரி பாமகவினரிடம் வாங்கி கட்டிக் கொண்ட தயாநிதி மாறனுக்கு இந்தச் செய்தி எப்படி இருந்திருக்குமோ?  ஊகிக்க முடிந்தால் நீங்களும் அரசியலில் பிஸ்தா தான்! அடுத்த செய்தி முகநூலில் பார்த்தது: பேக்கேஜ் டூர்! இதுவரை கேள்விப்படாத ஒரு விஷயம்.    

இன்னிக்கி அவனவன் குடும்பத்தோட கொஞ்சம் Wine குடிச்சமா, கேக், மட்டன் சாப்பிட்டமான்னு இருக்க விடாம புதுசா புதுசா என்னதடா கிளப்புறீங்க.
இன்று நண்பர் ஒருவர் ஒரு சர்ச் போர்டில் கண்டது :
கிருஸ்மஸ் இன்று சென்னையில் ஏசுவின் நவ க்‌ஷேத்திர யாத்திரை டூர் பேக்கேஜ் ஆரம்பம்!
மவுண்ட், லிட்டில் மவுண்ட், பெஸண்ட் நகர், சாந்தோம், மேரி மாதா சர்ச் (கோட்டை), (அரண்மனைக்காரத் தெரு) உட்பட 9 இடம்! ஒரே நாளில்! தவற விடாதீர்!
எஸ்ரா சற்குணம் சமீபத்தில் புலம்பித்தள்ளிய மாதிரி முந்தைய நாட்களை போல காசு,காணிக்கை இல்லாது ரொம்பவுமே தவிக்கிறார்களோ? 

இசுடாலினாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை யாராவது யோசித்துப் பார்த்திருப்போமா? இசுடாலின் சந்தித்து வரும் பிரச்சினைகள் கொஞ்சமா நஞ்சமா? ஆளுக்காள் கட்சி ஆரம்பித்து பயமுறுத்துவது போதாது என்று உடன்பிறந்த அண்ணனும் தனிக்கட்சி தொடங்க இருக்கிறாராம்! ரஜனி தரப்பில் அறிவிப்பு வருகிறதோ இல்லையோ, மு.க.அழகிரி முந்திக்கொள்வார் போல இருக்கிறதே!

வைகுண்ட ஏகாதசியன்று ஏதும் உண்ணும் விரதம் போன்றவற்றை வீரமணி மற்றும் திராவிட கும்பல் தொடுக்கும் என எதிர்பார்த்தால் சத்தமில்லை
இதுபற்றி நம் திராவிட அன்பர்களிடம் விசாரித்தால் நீண்ட அமைதிக்கு பின் தாங்கள் கடுமையாக போராடுவதாக சொல்லிவிட்டு ஓடுகின்றார்கள்
அப்படி என்ன போராட்டம்? என ஒருவனை பிடித்து விசாரித்தால் அவன் இப்படி சொல்லிகொண்டிருகின்றான்
"அண்ணே, வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு இரவெல்லாம் தூங்காம இருக்கணுமாம், அது மூட நம்பிக்கை
இரவுல மட்டும் அல்ல, பகலிலும் தூங்கினால் ஒன்றும் ஆகாதுண்ணே, அதை நிரூபிக்க எல்லோரும் தூங்கிட்டு இருக்கோம்ணே, போராட்டத்தை கெடுக்காதீங்க..."  

சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் செய்திகள்! இவ்வளவு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? 

மீண்டும் சந்திப்போம்.    

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)