Tuesday, February 4, 2020

வாலு போயிக் கத்தி வந்தது! டும்டும்டும்!!

புலி பசித்தால் பசும்புல்லை மட்டுமல்ல, வைக்கோல், புண்ணாக்கு இப்படி எதைவேண்டுமானாலும் தின்னும் என்பதற்கு நம்மூர் சிகுலர் அரசியல்வாதிகளே சாட்சி! தேர்தல் வரும்போதெல்லாம் அவர்களுக்கு ஹிந்து மத நம்பிக்கை. வந்துவிடுகிறது! சென்ற நாடாளுமன்றத் தேர்தல் சமயம் ராகுல் காண்டி தன்னை கவுல் பிராமணன், சிவபக்தன் என்று அறிவித்துக் கொண்டு கோவில் கோவிலாகப் போனது ஒரு நல்ல உதாரணம். பிரசாந்த் கிஷோர் தேர்தல் உத்தி வகுத்துக் கொடுக்கும் வேலையை ஒரு வியாபாரமாக வளர்த்துவருவதில், அவரது சேவையைப் பயன்படுத்தும் மம்தா பானெர்ஜியை சமீபநாட்களில் சிரித்த முகத்துடன் பார்க்க முடிவது ஒருவிதம்! டில்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் வேறுவிதம்! ஹனுமான் சாலிசா பாடியதோடு தன்னை ஆஞ்சநேய பக்தனாகக் காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது தேர்தல் படுத்தும் பாடு!


பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி செய்தாரோ தானாகவே ஜிந்தித்துப் பண்ணினாரோ, கேஜ்ரிவால்  என்ன கிறுக்குத்தனம் பண்ணினாலும் டில்லி மிடில் கிளாஸ் வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியை விடுவதாயில்லை! டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கேஜ்ரிவால் 54 முதல் 60 இடங்கள் வரை ஜெயித்து ஆட்சியைப் பிடிப்பார் என்று சொல்கிறது. ஆனால்  நம்மூர் முகநூல் போராளிகள்,  கேஜ்ரிவால் பாணியில் இசுடாலினை  முத்தைத் தருபத்தி என்ற திருப்புகழைப் பாடவைத்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் மிதக்க ஆரம்பித்து விட்டார்கள்! 

இந்த முட்டுக்கு 200₹யும் இரண்டு வேளை சோறும் போட்டாங்களோ!!
அதுசரி! 200 இடம் உறுதி போனஸுக்கு உழைக்கணும்ங்கிற போது கூட பிரசாந்த் கிஷோர் எதிர்த்தரப்பில் களமிறங்கினால் பின்னடைவு என்ற நிலை தான் உள்ளதா?
கிஷோர்ங்கிற பேரக் கேட்டாலே ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு ஒரு ப ப பயம் இருக்கோ 



ஆக வாலு போயிக் கத்தி வந்தது டும்டும்டும் என்ற குழந்தைப்பாடல் மாதிரி, ரஜனிகாந்த் பரபரப்பு போய் ராஜேந்திரபாலாஜி, அவரும்போய் பிரசாந்த் கிஷோர் என்று தமிழக ஊடகங்கள் வரிசைகட்டிப் பரபரப்புச் செய்திகளாக்கிக் கொண்டிருப்பதில் பேசப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள் எல்லாம் சீந்துவார் இல்லாமல் அப்படியே கிடக்கின்றன. ஆசியாநெட் தமிழில் தினத்தந்தியை மிஞ்சுகிற விதத்தில் குபீர் செய்திகளாகப் போட்டு நன்றாகச் சிரிக்க வைக்கிறார்கள். வெறுமனே சிரித்தால் மட்டும் போதுமா?


பிரசாந்த் கிஷோர் தன்னுடைய வேலைகளைத் தமிழ் நாட்டில் ஆரம்பித்துவிட்டாரா என்பது தெரியவில்லை. இசுடாலினுக்கு என்ன மாதிரி image makeover செய்யப் போகிறார் என்பதும் தெரியாது. இசுடாலின் யாரை எங்கே வைக்கவேண்டுமென்பதில் என்ன ஆலோசனை சொல்லப்போகிறார் என்பதும் தெரியாது. அதிமுகவின் ஐடி விங் திறமையாகச் சமாளிக்குமா, கோட்டை விடுமா என்பதுமே தெரியாது. இப்படிக்கு கள நிலவரம் தெளிவாகத் தெரிவதற்கு முன்னாலேயே மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா அதிமுக என்பது மட்டும் தெரிந்துவிடுமா? என்னமோ ஆவுடையப்பன் கேள்வி கேட்கிறார்! ரங்கராஜ் பாண்டேவும் பதில் சொல்கிறார்! வீடியோ 16 நிமிடம்! 

வாலுபோயி கத்திபோயி ....... போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்! முற்றுப்புள்ளி வைப்பது நம் கைகளில் தான் இருக்கிறதென்பதை அறியாமலேயே ஊடகங்களும் பிரசாந்த் கிஷோர்களும் முடிவு செய்ய விட்டு விடுவோமா?

மீண்டும் சந்திப்போம்.  
              

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)